பக்கங்கள்

புதன், 13 மார்ச், 2024

முசுலிமாக மாறுபவருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

 


 Published March 13, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 13- ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை என்றும், இவர்களுக்கும் முசுலிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் பேசினார்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இசுலாத்தை தழுவும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், ‘அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஜாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத் தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மராட்டிய சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

 



மும்பை, பிப். 22- மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு நாளன்று மும்பைக்கு பேரணியாக வந்த அவர், பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.

கோரிக்கைகள் தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படா விட்டால், காலவரையற்ற பட்டின் போராட்டத்தை மேற்கொள்வேன் என கூறினார். இதற்காக தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதா னத்தை தேர்வு செய்திருந்தார். ஆனால் அங்கு செல்வதற்கு முன் பாகவே, அவரது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கைவிட்டார். மனோஜ் ஜரங்கேவுக்கு முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட் டத்தை முடித்து வைத்தார். இட ஒதுக்கீடு குறித்த அரசுத் தீர்மா னத்தை மாநில அரசு வெளியிட் டது.

ஆனால் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்ட மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனோஜ் ஜரங்கே கடந்த 10ஆம் தேதி பட் டினிப் போராட்டத்தை தொடங் கினார்.
இந்நிலையில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. இடஒதுக்கீடு அம லுக்கு வந்ததும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

  

 * சென்னை மாநகரில் வி.பி. சிங் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது

* சமூக நீதிக்காக பிரதமர் பதவியை விலையாகக் கொடுத்தவர் 

* திராவிடர் கழகத்தின் மீது வி.பி.சிங் கொண்ட பாசம் - நேசம் பெரியது!

சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்குக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட்ட சிலை தி.மு.க. ஆட்சி மகுடத்தில் ஒளிரும் முத்து

2

சென்னையில் தமிழ்நாடு அரசால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது. தி.மு.க. அரசின் மகுடத்தில் ஒளிரும் முத்து என்றும், மண்டல் பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதி காப்பாளர் வி.பி.சிங்கின் சிலையைத் திறந்தமைக்காக முதல் அமைச்சருக்கு கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதிக் காவலர்  மாண்புமிகு வி.பி.சிங் அவர்களது முழு உருவச் சிலை சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  மானமிகு மாண்புமிகு  முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் அவர்களால்  இன்று காலை (27.11.2023) திறந்து வைக்கப்பட்டு தமிழ்நாடு வரலாற்றுச் சாதனை புரிந்த பெருமை பெற்றுள்ளது!

சென்னை தியாகராயர் நகரில் நமது வேண்டுகோளும், கலைஞரின் வாக்குறுதியும்

சில ஆண்டுகளுக்கு (2008) முன் வி.பி.சிங் அவர்களது புகழ் வணக்கம் செலுத்திய கூட்டத்தில் தியாகராயர் நகரில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது முன்னிலையில், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுக்கு சிலை எழுப்பப்பட வேண்டும் என்று கூறியதை கேட்ட கலைஞர் - அதனை நிச்சயம் செய்வோம் என்று கூறி ஒடுக்கப்பட்டோரின் நன்றிக் குரலாய் மாறினார்!

அதனை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் மகிழ்ச்சிகரமான கால கட்டத்தில் அவரது தனயனும் நமது 'திராவிட நாயகரு'மான நமது முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்து இன்று திறந்து வைத்துள்ளார்.

வி.பி. சிங் அவர்களது வாழ்விணையர் திருமதி சீதாதேவி மற்றும் அவரது இரு மகன்கள் அஜயா சிங், அபய் சிங்  ஆகியோர் முன்னிலையிலும் உ.பி.  எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை சிறப்பு விருந்தினராகவும் வரவழைத்து நடத்தியுள்ளார்!

தி.மு.க. அரசின் மணி மகுடத்தில் ஒளிரும் முத்து!

தமிழ்நாடு (தி.மு.க.) அரசின் மணிமகுடத்தில்  அற்புதமாகப் பதிக்கப்பட்ட சமூகநீதிக்கான ஒளி வீசும் முத்து ஆகும் இது!

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஒரு மாமனிதர் பண்பட்ட, அரசியல் ஞானி! எடுத்துக்காட்டான லட்சிய வீரர்.

பிரதமர் பதவி காரணமாக பெருமை பெற்றவர் பலர்; பிரதமர் பதவியை கொள்கைக்காக இழந்து, அதனால் பெருமை பெற்றவர் - பெறுபவர் அது என்றும் இழக்க முடியாத பெருமை; இறவாப் புகழ் ஆகும்!

அவரது தமிழ்நாட்டு நேசிப்பு வியக்கத்தக்கது! எளிதில் எவராலும் மறக்கத்தக்கதன்று.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட்டதுடன், தமிழ்நாட்டை மிக சக உறவுக்காரர்களின் உன்னத பூமியாகக் கருதி திராவிட இயக்கத்திடம் மாறா பாசமும் மரியாதையும் வைத்திருந்தவர்!

மண்டல் பரிந்துரையை நிறைவேற்றி அதற்காக பிரதமர் பதவியை இழந்தவர்

மண்டல் அறிக்கையின் பரிந்துரையை (வேலை வாய்ப்பை)  செயல்படுத்திய அவரது துணிச்சல் அசாதாரணமானது. அவருடன் இருந்த அமைச்சரவை சகாக்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்பட பலரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது "எதிர்நீச்சல் அடித்து" அதைச் சாதித்துக் காட்டியவர்!

"சிறந்த பொருளை பெற நல்ல விலை கொடுத்தாக வேண்டும்" அல்லவா?  அதற்காக ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார்" என்று அவர் கூறியது பொன் எழுத்துக்கள் ஆகும். 

"இது" கமண்டலுக்கும் மண்டலுக்கும் நடக்கும் கருத்துப் போர்; இதில் மண்டல் வெற்றி பெற்று வருங்காலத்தில் "மண்டல் காற்று" தனி வாசனையுடன் நாடெங்கும் வீசும் என்று முன்னோக்கோடு அவர் முழங்கினார்!  இன்று நாடெங்கும் சமூகநீதிக் குரல் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்தின்மீது 

வி.பி.சிங் கொண்ட பாசம்!

திராவிடர் கழகத்தோடும் நம்மீதும், தி.மு.க.வுடனும், கலைஞரோடும் அவர் கொண்ட பாசமும் நேசமும் என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமே!

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, பெயர்களைக் கூறி மரியாதை செலுத்திய பிறகே மண்டல் ஆணையை நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒப்பற்ற சமூகநீதியாளர். 

அவரது சிலை போதிக்கும் சீலம், சமூகநீதி அரசியலில்  கொள்கைக்காக பதவி துறப்பு மூலம் கொள்கை உயிர்ப்பு என்ற புதுத்தத்துவம் - ஒரு அரசியல் புத்தொளி - புதிய பரிமாணம் ஆகும்! அவரால் துவக்கி வைக்கப்பட்ட மண்டல் புயல் இன்று நாடு தழுவிய சுனாமியாகி, ஆதிக்கவாதிகளின் ஏகபோகத்தையும், எகத்தாள ஏதேச்சதிகாரத்தையும் வீழ்த்த சூறாவளியாக சுழன்றடிக்கத் தொடங்கி விட்டதால் சுயமரியாதை உலகுக்குப் புதிய வெற்றி முளைக்கின்றது!

3

வி.பி.சிங் சிலையை நிறுவிய முதல் அமைச்சருக்கு ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

புதிய நம்பிக்கை சிறகடிக்கிறது! சமூகநீதிக் காவலர்

வி.பி. சிங் சிலை வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுக்கும் கோடானு கோடி ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

இது பெரியார் மண்; சமூகநீதி மண்!

திராவிட இயக்கம் அதன் காவல் அரண் - அதனை நாளும் கட்டிக் காப்பது திராவிடர் ஆட்சி. அதுவே என்றும் எம்மாட்சி - வி.பி. சிங் சிலையே அதற்கான சாட்சி.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2023

மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச்சிலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  

சென்னை, நவ. 27- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.11.2023) காலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 52 இலட் சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர். உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் அவர்களின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற் றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திறந்து வைத் தார்.

புகழ்சால் பெருந்தகையாளர் கள், தமிழ்மொழியின் வளர்ச் சிக்கு அரும்பாடுபட்டு தமிழ் நாட்டிற்குப் பெருமைத் தேடித் தந்த அறிஞர் பெருமக்கள், சமூக நீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத் திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையி லும்,  செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங் கள், உருவச் சிலைகள், அரங் கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந் தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர் வோதய சமாஜில் இணைந்தார், பூமிதான இயக்கத்தில் பங்கெ டுத்தார், தனது நிலங்களையே கொடையாக வழங்கினார். 

1969-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளி யுறவுத் துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும், பாதுகாப் புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  

தேசிய முன்னணியை உரு வாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தி யாவின் பிரதமராக பதவி வகித் தார். 

27 விழுக்காடு இடஒதுக்கீடு

இந்திய அரசமைப்புச் சட் டம் உருவாக்கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்பட வில்லை. இதனை வழங்குவதற் காக அமைக்கப்பட்ட இரண்டா வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி. மண்டல் தலைமையிலான ஆணையம்.  சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப் படும் சமூகத்துக்கு, பி.பி. மண் டல் பரிந்துரையின் கீழ் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தியவர் வி.பி.சிங் ஆவார்.

வி.பி. சிங் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது, தேர் தல் சீர்திருத்தங்கள்,  மாநிலங்க ளுக்கிடையிலான கவுன்சில்,  தேசியப் பாதுகாப்புக் குழு, உழ வர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்,  டில்லி குடி சைப் பகுதி மக்களுக்கு வாழ் விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி) அச்சிடு தல் போன்றவற்றை செயல்படுத் திய மாபெரும் சாதனையாளர் ஆவார். 

விமான நிலையத்துக்குப் 

பெயர்

தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணை யத்தை அமைத்துத் தந்த்தோடு, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத் திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட் டிய பெருமைக்குரியவர் வி.பி. சிங். 

உயர்வர்க்கத்தில் பிறந்தா லும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கா கச் சிந்தித்தவர், எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராதவர் வி.பி. சிங். 

இத்தகைய ஒப்பற்ற தலை வரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையி லும், அவருக்குத் தமிழ்ச் சமுதா யத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 20.4.2023 அன்று சட்டப்பேரவை விதி 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமூகநீதிக் காவலர், மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்  அவர்களின் நினை வைப் போற்றும் வகையில், சென் னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப் பட்டுள்ள மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உரு வச் சிலையை சிறப்பு விருந்தி னரான உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகி லேஷ் யாதவ்,  வி.பி. சிங் அவர்க ளின் துணைவியார் சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் அவ ரது குடும்பத்தினர் முன்னிலை யில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். 

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  அமைச் சர் மு.பெ. சாமிநாதன், அமைச் சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், செய்தி மக் கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண் டனர்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!

   

சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

17

சென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர் களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்”   என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,  இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக் களின் பிதாமகர், மறைந்த வி.பி.சிங் அவர் களுக்கு, இந்த 'திராவிட மாடல்' அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார்; பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார்; தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 

1969-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் நின்று வென்றார்.   உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; ஒன்றிய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.  தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.  வி.பி.சிங் பிரதமராக இருந்தது பதி னோரு மாதங்கள்தான் என்றாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.  அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம்தான் ஙி.றி. மண்டல் தலைமையிலான ஆணையம்.  சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, ஙி.றி. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள். 

அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல; ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.    மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, 'முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது' என்று அமைச்சர் ஒருவரே சொன்னபோது, 'இதோ, இப்போதே தேதியைச் சொல்கிறேன்' என்ற கம்பீரத்துக்குச் சொந்தக்காரர் வி.பி.சிங் அவர்கள்.   அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. 

'சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது' என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் 'சுயமரியாதைச் சுடரொளி' வி.பி.சிங் அவர்கள்.   'வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள்' என்று கூறும் அளவிற்கு சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.  பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தொடக்கப் புள்ளி; தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி; வேலை உரி மையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது; தேர்தல் சீர்திருத்தங்கள்;  மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில்;  தேசியப் பாதுகாப்புக் குழு; உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்;  டில்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்; அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி)  அச்சிட வேண்டும்;  நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் வி.பி. சிங் அவர்கள்.  

தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்.  தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார்.  'ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமை யானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் 'சுய மரியாதை' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.   தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.   ''எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என் னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்'' என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.  

அதற்கேற்றாற்போல், 21-8-1990 அன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இந்தப் பேரவையில் உரையாற்றியபோது, “இந்திய வரலாற்றிலேயே, புதியதொரு சகாப்தமாக சமூகநீதி வழங்கிடும், இந்தப் புரட்சிகரமான முடிவை எடுத்துள்ள தேசிய முன்னணி அரசுக்கும், பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கும், இந்தப் பேரவை தனது இதயமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது”  என வாழ்த்தி, இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, வி.பி. சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன்.  பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங் அவர்கள். அவர் பிரதமர் ஆனபின்னர், டில்லி சென்றோம்; சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறி முகப்படுத்தினார்கள்.  “இவரை எனக்கு அறிமுகப்படுத்து கிறீர்களா?  இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தி னீர்கள்!" என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.  

அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூகநீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் தி.மு.க. போராடியதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது, தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.   அதனை மனதில் வைத்துத்தான், அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உரு வாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூல மாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும் பாலான கட்சிகள் அதில் பங் கெடுத்தன. அகில இந்தியா வுக்கே தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று அக் கட்சிகள் அழைப்பு விடுத் துள்ளன.  தமிழ்நாட்டின் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மட்டு மல்ல; இந்தியா முழுமைக் குமான அனைத்து மக்களுக் காகவும் குரல் கொடுத்து வருகிறோம். சி.ஆர்.பி.எப். தேர்வானது இந்தி, ஆங்கி லத்தில் மட்டும்தான் நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச் சருக்கு நான் கடிதம் அனுப்பி வைத்தேன். தி.மு.க. மாணவ ரணியும், இளைஞரணியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட அறிவிப்பைச் செய்தார்கள். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளும் நடைபெறும் என்ற வெற்றிச் செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.  

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.  தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக் காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள்.  இலங்கைப் பிரச்சி னைக்குத் தீர்வுகாண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங் அவர்களது புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க என்று கூறி அமைகிறேன். 

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.


வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிப் பேருரை

  

 👉 தந்தை பெரியாரை உயிரினும் மேலாக மதித்தவர் வி.பி.சிங் 

👉 வி.பி.சிங் குடும்பம் என்று தனியே இல்லை-நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தவர்தான்

👉 சமூகநீதியின் இன்றைய நிலைப்பாடு என்ன?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 604 பேரில் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 72 பேர் மட்டுமே!  மீதி அத்தனை பேரும் உயர் ஜாதியினரே!

1
சென்னை, நவ. 28- சமூக நீதியின் காவலர் வி.பி.சிங் அவர்கள், அவர் பிரதமராக இருந்தபோதுதான் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பு, 27 விழுக்காடு இடஒதுக்கீடு வந்தது. இன்றைய நிலையில் நீதித்துறையில் 604 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர் என்றால் பிற்படுத்தப்பட்டோர் வெறும் 72 பேர்களே - மற்ற அனைவரும் உயர்ஜாதியினரே என்று குறிப்பிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (27.11.2023) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச்சிலையை திறந்து வைத்து, சென்னை, கலை வாணர் அரங்கில் நடைபெற்ற மேனாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் சிலை திறப்பு விழாவில் ஆற்றிய விழாப் பேருரை வருமாறு,.

‘இந்தியா முழுமைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிதா மகர்’ - இந்திய நாட்டின் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர் களுடைய உருவச் சிலையை, மாநிலக் கல்லூரியில் திறந்து வைத்துவிட்டு நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். 

மகிழ்ச்சி-மனநிறைவு

வி.பி.சிங் அவர்களுக்குச் சிலை அமைக்கின்ற மகத்தான வாய்ப்பு கிடைத்ததை எண்ணி இன்றைக்கு நான் மகிழ்ச்சி யோடும், மனநிறைவோடும் இருக்கிறேன்! 150 ஆண்டு பழைமை வாய்ந்த மாநிலக் கல்லூரி வளாகத்தில், வி.பி.சிங் அவர்களின் அருமை நண்பர், தலைவர் கலைஞர் அவர்கள் நீடுதுயில் கொண்டிருக்கின்ற கடற்கரை சாலையில் சமூகநீதி யின் சின்னமாம் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப் பட்டுள்ளது. எண்ணிப் பார்க்கிறேன்...  மண்டல் ஆணையத் தின் பரிந் துரைகளை பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத் தியபோது,  சில ஆதிக்க சக்திகள் அதை எதிர்த்தார்கள். வன் முறை போராட்டங்களையும் நடத்தினார்கள்.

கலைஞர் தலைமையில் கவியரங்கம்

அதேநேரத்தில், தலைவர் கலைஞர் தலைமையில் இதே கலைவாணர் அரங்கத்தில் ஒரு கவிய ரங்கம் நடந்தது. மிகுந்த கோபத்துடன் அன்றைய நாள் கவிதை கர்ஜனை செய்தார் தலைவர் கலைஞர் அவர்கள்... அந்தக் கவிதையின் சில வரிகளை மட்டும் இங்கே நினை வூட்ட விரும்புகிறேன்...

”மண்டல் குழு பரிந்துரையை மய்ய அரசு ஏற்றமைக்கு மகத்தான வெற்றி விழா! மனிதாபிமானி வி.பி.சிங்கிற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் திருவிழா!” என்று தொடங்கி, சமூகநீதிக்கான குரலாக தலைவர் கலைஞருடைய கவிதை வரிகள் அனல் தெறித்தது!

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் அவன் உயர்ஜாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக் குள்ளே வைத்தானா? மற்ற ஜாதிக்கெல்லாம் மண்டைக் குள் இருப்பதென்ன? களிமண்ணா? சுண்ணாம்பா? கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக - இந்நாளில் எவரும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவர் கட்டை வேகும்" என்று தலைவர் கலைஞருடைய பேச்சில், உணர்ச்சி கொந்தளித்தது! இப்போதுகூட இந்தக் கலைவாணர் அரங் கத்தில் அந்தக் கவிதை வரிகளின் வெப்பத்தை என்னால் உணர முடிகிறது!

வி.பி.சிங் அவர்கள் பிறந்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் Former Chief Minister - Present Leader of Opposition - My dear brother Future Chief Minister  அகிலேஷ் அவர்கள், இங்கு வருகை தந்துள்ளார். வி.பி.சிங் அவர்களுக்கு பிடித்த தலைவரான, ராம் மனோகர் லோகியா அவர்களால் உருவாக்கப்பட்ட முலாயம் சிங் அவர்களின் மகனான அகிலேஷ் அவர்கள், வி.பி.சிங் அவர்களுடைய சிலை திறப்பு விழாவுக்கு வந்திருக்கிறார். வி.பி. சிங் அவர்களுக்கு தாய் வீடு, உத்தரப்பிரதேசம் என்றால், தமிழ்நாடுதான், தந்தை வீடு! தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் அவருடைய பேச்சு இருக்காது. அதனால்தான் அப்படிப்பட்ட தந்தை பெரியாரு டைய சமூகநீதி மண்ணில் வி.பி.சிங் அவர்களுக்கு முதன்முத லாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. நானும், மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்களும் ரெண்டு முறை சந்தித்து இருக்கிறோம்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு, 1988-ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது! அப்போது இளைஞர் அணி சார்பில், மாபெரும் ஊர்வலத்தை நான் தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இளை ஞர்கள் பங்கெடுத்த அந்த ஊர்வலத்தை,  இதே அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி, அன்றைக்கு Arts College என்று பெயர். அந்த கல்லூரிக்கு அருகில் மேடை அமைத்து மாலை தொடங்கி இரவு வரை மேடையில் இருந்தபடி, வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங் அவர்கள். அப்போது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. அடுத்த சந்திப்பு, அவர் பிரதமராக ஆனபோது, டில்லிக்கு சென்ற எம்.எல்.ஏ. குழுவில் நான் இருந்தேன். சட்டமன்றத்தில் எல்லாக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் பல குழுக்கள் அமைத்தார்கள். அதில் ஒரு குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்போது டில்லிக்கு சென்றபோது, ஒவ்வொ ருவராக அவருக்கு அறிமுகம் செய்தார்கள். என்னிடம் வந்தபோது, என்னை அறிமுகம் செய்து வைத்தபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். “இவரை எப்படி மறக்க முடியும். இவர் தான் சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து நடத்தினார்!" என்று மறக்காமல் பாராட்டினார் பிரதமர் வி.பி.சிங்.

அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு! இன்றைக்கு நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்திருக்கிறேன் என்றால், இதைவிட என்ன பெருமை எனக்கு வேண்டும்? எங்களுடைய அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்துள்ள வி.பி.சிங் அவர்களின் மனைவி சீதா குமாரி அவர்களுக்கும், அவருடைய மகன் அஜயா சிங் அவர்களுக்கும் உங்களுடைய அனைவரின் சார்பில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக நீதி குடும்பம்

வி.பி.சிங் குடும்பத்தினர் என்று உங்களை நான் அழைக்க விரும்பவில்லை. நீங்கள் வி.பி.சிங் குடும்பத்தினர் என்றால் நாங்கள் யார்? நாங்களும் வி.பி.சிங் குடும்பத்தினர்தான்!

இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கின்ற சமூகநீதிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்! வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைப்பது மூலமாக அவருடைய புகழ் உயருகிறது என்று பொருள் இல்லை; நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம்!

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங் அவர்கள். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவருக்கு சிலை அமைப்பதை இந்த திராவிட மாடல் அரசு தன்னுடைய கடமையாக கருதுகிறது.

சமூகநீதியை காக்கின்ற கடமையில் இருந்து இம்மியளவும் வழுவாமல் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

வி.பி.சிங் அவர்களைப் பற்றியும், அவரது தியாக வாழ்க் கைப் பற்றியும் இந்திய மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்கு அவருடைய வாழ்வு திரும்ப திரும்ப சொல்லப்படவேண்டும். அதனால்தான் மாநில கல்லூரியில் அவருடைய சிலையை அமைத்திருக்கிறோம்.

வி.பி.சிங் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய ஜமீன்தாருக்கு மகனாக பிறந்து, ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனது ஒட்டாமல் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். வினோபா அவர்களிடம் தன்னுடைய நிலங்களையே தானமாக வழங்கினார்.

1969-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்த லில் நின்று வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர், இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார். தேசிய முன்னணியை உருவாக்கி 1989-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.

வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது பதினோரு மாதம்தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை! இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டப்போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு தரப்படவில்லை. அதை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி.மண்டல் தலை மையிலான ஆணையம்!

சமூகரீதியாவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுகின்ற சமூகத்துக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள்.

11 மாத கால சாதனைகள்

வி.பி.சிங் அவர்கள் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர் அல்ல! ஏன், ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல! ஆனாலும் ஏழை - எளிய, பிற்படுத்தப் பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர்! அப்போது நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் -  புரட்சியாளர் அம்பேத்கர் - ராம் மனோகர் லோகியா ஆகிய மூவருடைய பெயரைத்தான் வி.பி.சிங் அவர்கள் குறிப்பிட்டார். தந்தை பெரியாருக்குத் தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். பதவியில் இருந்த பதினோரு மாத காலத்தில், 

· பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு

· தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தொடக்கப்புள்ளி

· தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி

· வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது

· லோக்பால் சட்டத்துக்கு தொடக்க முயற்சிகள்

· தேர்தல் சீர்திருத்தங்கள்

· அண்ணல்  அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது

· நாடாளுமன்றத்தின் நடுவே அண்ணல் அம்பேத்கர் படம்

· மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்

· உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்

· டில்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்

· அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி) அச்சிட உத்திரவு

· நுகர்வோர் பாதுகாப்பு

- இன்னும் பட்டியல் நிறைய இருக்கிறது!

இப்படி பல சாதனைகளை செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் நம்முடைய வி.பி.சிங் அவர்கள். 

பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னேற்றம்

மதிப்பிற்குரிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் முயற்சியால்தான் இன்றைக்குப் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறியிருக்கிறார்கள். நாம் இன்னும் பல உயரங்களுக்குச் செல்லவேண்டும்.

நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமையாக கிடைக்காத - கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது! குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப்பிரிவு! ஒன்றிய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்ஜாதியினர். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர், பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டும் தான்! பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது! ஒன்றிய அரசு துறைகளின் கூடுதல் செயலா ளர்கள் 93 பேரில்,  82 பேர் உயர்ஜாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது! ஒன்றிய அரசு துறைகளின் இணைச் செயலா ளர்கள் 275 பேரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்! அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது.

45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான்! இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது. 

நீதிமன்றங்களில் சமூக நீதியின் நிலை

சரி, நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசுத் துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்கவேண்டும். அதுதான் வி.பி.சிங் போன்றோருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான புகழ் வணக்கம்!

அந்தப் பணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் சோர்ந்து போகாது. அதற்கு எடுத்துக்காட்டுதான், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்றிலிருந்து  இன்றைக்கு வரை நாம் முன்னெடுக்கின்ற சட்ட முயற்சிகள்!

இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இல்லாமல் இருந்த ஓபிசி இடஒதுக்கீட்டை 29.7.2021 அன்று உச்சநீதிமன்றம் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்தியாவிற்கே பெற்றுத் தந்தது! அதுமட்டுமா! தமிழ்நாட்டில் சமூகநீதியைக் கண்காணிக்க குழு அமைத்திருக்கிறோம்.

வி.பி.சிங்-கலைஞர் நட்பு

வி.பி.சிங் அவர்களுக்கும், கலைஞருக்கும் இருந்த நட்பு எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சென்னை கடற்கரையை நோக்கி பிரதமர் வி.பி.சிங் அவர்களுடைய கார் செல்கிறது. முதலமைச்சர் கலைஞரும் கூட இருந்தார். வி.பி.சிங் அவர்கள், “உங்களுடைய வீட்டுக் குப் போகவேண்டும், காரை அங்கே போகச் சொல்லுங்கள்' என்று சொல்கிறார். ஆனால் அவருடன் இருந்த பிரதமரு டைய செயலாளர் அவர்கள், புரோட்டகால்-படி கடற்கரையில் பொதுகூட்டம், ஆளுநர் மாளிகையில் தங்குவது, இது இரண்டைத் தவிர வேறு இடத்திற்கு செல்லக்கூடாது” என்று தடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் வி.பி.சிங் அவர்கள், அதை கோபமாக மறுத்து, “நிச்சயமாக முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும்” என்று சொல்லி, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றுவிட்டுதான் கடற்கரை பொதுக்கூட்டத்திற்குப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் சென்றார்.

தலைவர் கலைஞர் மேல் எத்தகைய மதிப்பையும், அன் பையும் பிரதமர் வி.பி.சிங் வைத்திருந்தார் என்பதற்கு இது ஒரு பெரிய எடுத்துக்காட்டு!

அந்தக் கடற்கரை கூட்டத்தில்தான், சென்னையில் இருக் கின்ற இரண்டு விமான முனையங்களுக்கு அறிஞர் அண்ணா பெயரையும், பெருந்தலைவர் காமராசர் பெயரையும் வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோரிக்கை வைத்தார். அப்போதெல்லாம் செல்ஃபோன் கிடையாது. அவருக்கென்று ஒரு பிரைவேட் ரூம் இருக்கும், அதில் லைட்டினிங் கால் இருந்தது, அதிலிருந்துதான் ஃபோன் பேச முடியும். பிரதமர் வி.பி.சிங் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து, டெல்லிக்கு Lightning call செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி, இப்படி ஒரு கோரிக்கை இருக்கிறது, இதை நிறைவேற்றவேண்டும் என்று கலந்துபேசி அதை அந்த மேடையில் அறிவித்தார்.  அதே மேடையில் கலைஞர் அவர்கள் கேட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அறிவித்தார். இன்றைக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது

இங்கே அண்ணன் துரைமுருகன் அவர்கள் இருக்கிறார், காவிரி பிரச்சினை பற்றி அவருக்கு முழுமையாக தெரியும், முழுமையாக அறிந்தவர். அவர் அதில் பிண்ணிப் பிணைந்தவர்.  தமிழ்நாட்டு மக்களுடைய உயிர் பிரச்சினையான காவிரி நீருக்காக பல ஆண்டுக்கு பிறகு, பல போராட்டத்திற்கு பிறகு, தலைவர் கலைஞருடைய கோரிக்கை ஏற்று, வி.பி.சிங் அவர்கள் ஆட்சியில் தான் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்துத் தந்தார்.

கலைஞர்-தமிழினத்தின்மீது பாசம்

அதேபோல், இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் எவ்வளவு அக்கறையோடு நடந்துகொண்டார் என்றால், தன்னுடைய வீட்டிலேயே அகில இந்தியத் தலைவர்களையும் - மாநில முதலமைச்சர்களையும் 1990-ஆம் ஆண்டு கூட்டினார்.

9 மாநில முதலமைச்சர்கள் - 7 ஒன்றிய அமைச்சர்கள் - 5 அகில இந்தியக் கட்சித் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். எல்லோரையும் வரவழைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரைத்தான் பேசச் சொன்னார் பிரதமர் வி.பி.சிங். பேசச் சொன்னதற்கு பிறகு சொல்கிறார், ‘இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என்னுடைய கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

கலைஞர் அவர்கள் மீதும், தமிழினத்தின் மீதும் வி.பி.சிங் அவர்கள் எந்தளவுக்கு பாசம் வைத்திருந்தார் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு தேவையில்லை!

இன்னொரு சம்பவத்தை சொல்கிறேன்.

“தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் டெல்லியில்தான் கூட்டணுமா? மாநிலங்களில் கூட்டலாமே?” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோரிக்கை வைத்தார். 'அப்படியென்றால், தமிழ்நாட்டில் நடத்துவீர்களா?' என்று பிரதமர் வி.பி.சிங் கேட்டார். உடனே, சரி என்று சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

முதன்முதலாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது என்பது வரலாறு! நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் அடிக்கடி பிரதமர் வி.பி.சிங் சொல்வது, “நீங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு வரக்கூடாது, சென்னையில் இருந்து சொன்னால் போதும்” என்று சொன்னவர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். எத்தகைய வசந்த காலங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது.

அதேபோன்ற காலம் இனியும் வரவேண்டும். அது நாம் ஒன்றிணைந்து உழைத்தால் முடியும்! வி.பி.சிங் அவர்கள் உடல்நலிந்த நிலையில்கூட டெல்லி மக்களுடைய குடியிருப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்! ‘அரசியல் நாட்காட்டியில் கடைசி நாள் என்பதே இல்ல’ என்று கம்பீரமாக சொன்னவர். ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த வி.பி.சிங் அவர்கள், உடல்நலக்குறைவால் 2008-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் நாள் மறைந்தார்.

வி.பி.சிங் அவர்களுடைய மறைவு இந்தியாவுக்கே ஏற்பட்ட பெரும் இழப்பு! சமூகநீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களுக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்றைக்கு பெருமை அடைகிறது. சமூகநீதிப் பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்!

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்சினை! ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி - வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சினை ஒன்றுதான்! அதுதான், புறக்கணிப்பு! எங்கெல்லாம் புறக்கணிப்பு - ஒதுக்குதல் - தீண்டாமை -அடிமைத்தனம் - அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி! அந்த சமூகநீதி தழைக்க வேண்டுமானால், நாம் முன்னெடுக்க வேண்டிய சில முக்கிய பணிகளை சொல்லி, நிறைவு செய்ய விரும்புகிறேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அந்தக் கணக்கெடுப்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்தவேண்டும். பிற்படுத்தப்பட்டோர்  இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்படவேண்டும். பட்டியலின - பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்படவேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழி; “இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின - சிறுபான்மை - விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான “அரசியல் செயல்திட்டங்கள்” “அரசின் செயல்திட்டங்களாக” மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்! உறுதி ஏற்போம்!” என்று கூறி,

“வி.பி.சிங் அவர்கள் மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. அவரை யார் மறந்தாலும், தமிழ்நாடு மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது! மறக்காது!” என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில்குறிப்பிட்டார்.


தன் உயிரினும் மேலாக தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்டவர் வி.பி.சிங்

தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும் - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும் கொண்டாடி வருகிறோம். சமூகநீதிக்குத் தடையாக அமைந் துள்ள நீட் தேர்வை அகற்றும் சட்டப்போராட்டத்திலும், அறப் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கி றோம். இப்படிப்பட்ட நம் முடைய தமிழ்நாட்டைதான் தன்னுடைய ரத்த சொந்தங்கள் வாழுகிற மாநிலமாக நினைத்தார் வி.பி.சிங் அவர்கள். தந்தை பெரியாரை தன்னுடைய உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் அவர்கள் ஏற்றுக்கொண்டார். 

“ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கின்ற மருந்து தான் பெரியாரின் “சுயமரியாதை” என்று சொன்னவர் வி.பி. சிங் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.

“காலம் மாறினாலும் தான் மட்டும் மாறாமல் இருக்கிற ஒரு தலைவர் உண்டென்றால் அது கலைஞர் அவர்கள்தான். பதவியைக் காப்பாற்றிக் கொள்ள என்னுடைய கட்சி முதல மைச்சர்களே என்னை விட்டு ஓடிய நேரத்தில் என்னுடன் இருந்தவர் கலைஞர் அவர்கள்" என்று பாராட்டியவர் வி.பி. சிங் அவர்கள்.