பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2020

69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய சட்ட முன்வடிவு

 69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய அரசியல் சட்டம் 31(சி) விதியைப் பயன்படுத்தி 9ஆவது செட்டியூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் அதற்கான ஒரு தனிச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் இதை தமிழக முதல்வர் செய்து வரலாற்றச் சாதனையைப் படைத்து, சமூக நீதி வரலாற்றினுள் நிரந்தர இடத்தைப் பெற வேண்டும் என நாம் கேட்டுக் கொண்டோம்.

ந்நூ.ந்நூபுயூடுஷிட்

30.12.1993 தமிழக சட்ட மன்றத்தில்  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க - தமிழ்நாடு அரசே தனிச்சட்டம் இயற்ற முன்வந்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான மசோதாவை தமிழக முதல்வர் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

 காலை 10 மணிக்கு சட்டப் பேரவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தனிச் சட்டத்துக்கான மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகம் செய்தார்.(இது ஒரு தமிழக வரலாற்றுப் பொன்னாள்.)

மசோதா அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு - ஆரவாரத்துக்கிடையே முதலமைச்சர் அறிமுகப்படுததினார். மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு அவையில் ஓர் உறுப்பினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! இந்த மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும். சட்டப் பேரவையில் மசோதா நிறைவேறிய பிறகு - குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையெழுத்திட்டவுடன் அது சட்டமாகும். நகல் மசோதாவின் முன்னுரையில் “இந்தச் சட்டமானது அரசமைப்பின் IV---ம் பகுதியில், அதிலும் குறிப்பாக 38ஆம் உறுப்பிலும், 34ஆம் உறுப்பின் (b) மற்றும் (c) எனும் கூறுகளிலும், மற்றம் 69ம் உறுப்பிலும் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிற வகையில், அரசின் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக இயற்றப்படுகிறது என்று இதன் மூலம் விளம்பப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவை முன்மொழிந்து தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பேசியதாவது:

1. “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஷெட்யூல்டு ஜாதியினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி நிலையங்களில் இடங்களை ஒதுக்குங்கள் மற்றும் அரசுப் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல் என்னும் கொள்கையானது. 1921ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் நீண்டதொரு வரலாற்றினைப் பெற்று வந்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அளவானது பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கிணங்கிய வகையில், நிலையாக மேல் நோக்கி வளர்த்துவந்து, தற்போது அது 69 சதவீதம் என்னும் அளவினை எட்டியுள்ளது.

2. உச்சநீதிமன்றமானது, இந்திரா சஹானி-க்கும், இந்திய அரசுக்குமிடையேயான (AIR 1993 5C பக்கம் 477) வழக்கில், அரசமைப்புச் சட்த்தின் 14(4) எனும் உறுப்பினர் படியான மொத்த இடஒதுக்கீடுகள், 50 சதவிதத்திற்கு மேற்படுதல் ஆகாது என்று கூறி 24.11.1982 அன்று தன் தீர்ப்புரையினை வழங்கியது. நடப்புக் கல்வியாண்டிற்குக் கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னர் வந்தபோது, இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தன் இடஒதுக்கீட்டுக் கொள்கையினை தமிழ்நாடு அரசு நடப்புக் கல்வி ஆண்டின்போது தொடர்ந்து கடைப்பிடித்து வரலாம் என்றும், அந்த இடஒதுக்கீட்டு அளவானது அடுத்த

1994-95ஆம் கல்வி ஆண்டின்போது, தற்போதுள்ளதைக் குறைத்து 50 சதவீதத்திற்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொடர்ந்து முன்னேற்றத்தை உறுதி செய்ய மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையானது மீண்டும் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதற்காக வேண்டி, தமிழ்நாடு அரசானது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்சொன்ன தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனி அனுமதி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றமானது, கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் பொறுத்த அளவில் இட ஒதுக்கீடானது 80 சதவிதத்திற்கு மேற்படுதல் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி இடைக்கால ஆணையொன்றைப் பிறப்பித்துள்ளது.

69% இடஒதுக்கீட்டு தீர்மானம் நிறைவேற்றிய பின் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர்

3. இம்மாநிலத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீத அளவினர் குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் ஷெட்யூல்டு சாதியும், ஷெட்யூல்டு பழங்குடிகளையும் சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதிலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒன்றுதான், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் தொடர்ந்த முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்பதோடு, மாறி வருகின்ற சூழ்நிலைகளுக்கும் அது வகை செய்யும் என்பதால், மேற்சொன்ன இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வர இயலும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 9ஆம் நாளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையினர் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையில், 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 24ஆம் நாளில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் 69 சதவீத இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் எந்தவிதமான அய்யப்பாடோ, காலத் தாழ்வோ இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தியது. அந்தக் கூட்டத்தில், அரசமைப்புச் சட்டத் திருத்தமொன்று கொண்டு வரப்பட வேண்டும், அல்லது இம்மாநில அரசு தனிச்சட்டமொன்றை இயற்றுதல் வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் சமூக அமைப்புகளும் இம்மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கிணங்கிய வகையில், சமூக நீதி என்னும் குறிக்கோளை எய்துவதற்காக வேண்டி, தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் பெருவிழைவிற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத் தனிச் சட்டமொன்றை ஒரு முன் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருகின்ற வகையிலும், ஏற்கெனவே இது குறித்துச் செய்யப்பட்ட செயல்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செல்லத் தக்கனவாக்குவதற்குத் தேவையான வகை முறைகளுடன் சேர்த்தும், கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. இச்சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது.’’

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த மசோதாவை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.

அன்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

நான் “தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்ததற்காக முதல்வரைப் பாராட்டி நன்றி’’ தெரிவித்தேன்.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நமது வேண்டுகோளை, வழிகாட்டுதலை ஏற்று சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த தீர்மான நிறைவேற்றம் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாய், ஆந்திர ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் 90 வயது நிரம்பிய சுதந்திரப்போராட்ட வீரர் சர்தார் கோது லட்சண்ணா எனக்குத் தந்தி அனுப்பி பாராட்டினார்.

கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கும், முயற்சிக்கும் இது ஒரு மாபெரும் வெற்றியாகும். சமூக நீதிக்குக் கிடைத்த அசைக்க முடியாத நிரந்தர பாதுகாப்புக்கு அடிப்படையாகவும் இது அமைந்தது. கழகம் தந்தை பெரியாருக்குப்பிறகு இப்படி ஒரு வரலாறு படைத்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் ஜூன் 16 ஜூலை 15.2020


செவ்வாய், 24 நவம்பர், 2020

கருநாடகாவில் தலைவிரித்தாடும் ஜாதியக் கொடுமை கீழ்ஜாதிக்காரர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

 

November 22, 2020 • Viduthalai • இந்தியா

புகார் கொடுத்தும் கருநாடகா பா.ஜ.க. ஆட்சியில் நடவடிக்கை இல்லை

மைசூரு, நவ.22 கருநாடகத்தில்,  உயர் ஜாதியினர் அல்லாதவர்களுக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லி கார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ ருக்கு ரூ.50000 அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.

47 வயதாகும் அந்த முடிதிருத்துநர், மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவில், ஹல்லாரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முடிதிருத்தம் செய் யும் நிலையத்தில் அனைத்து ஜாதி யினருக்கும் முடிதிருத்தம் செய்து வந்தார்.

அந்த ஊரில் உள்ள உயர்ஜாதியி னர் இவரை வீட்டிற்கு அழைத்து முடிவெட்டி வந்தார்கள். கரோனா பொது முடக்கம் முடிந்த பிறகு இவர் கடையில் முடிவெட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கவே இவருக்கு உயர் ஜாதி யினரின் வீட்டிற்குச் சென்று முடி வெட்ட நேரம் இல்லை. இதனால் நீங்கள்கடைக்கு வாருங்கள்என்று உயர்ஜாதியினரிடம் கேட்டுக்கொண் டார்.இதனால்ஆத்திரமடைந்த  உயர்ஜாதியினர், இனிமேல்உயர்ஜாதி யினருக்குமட்டுமே கடையில்முடி வெட்டவேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.  இவரின் கடைக் குச் சென்ற, இவரது கிராமத்தின் உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த மகா தேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜு உள்ளிட்டோர், இனி மேல் தங்களைத் தவிர வேறு யாருக்கும் முடிவெட்டக் கூடாது, அப்படி வெட்டினால் ஊரை விட்டு விரட்டிவிடுவோம் என்று மிரட்டி யுள்ளனர்.

அதற்கு அவர் நான்  யாருக்கும் ஜாதி பார்ப்பதில்லை என்பதாகப் பதிலளித்தார். இதனை அடுத்து தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடு என்று கூறி அவர் ரூ.50000அபராதம் செலுத்த வேண்டு மெனவும் கூறினர்.  ஆனால், இதற்கு உடன்பட மறுத்துவிட்டார் மல்லிகார்ஜூன். எனவே, அவர்மீது ஊர்விலக்க நடவடிக்கையை அறிவித் ததோடு, அவரின் கடைக்கு யாரும் முடிதிருத்தச்செல்லக்கூடாதுஎன் றும் ஊருக்குள் பிரச்சாரம் செய்தனர்

கடந்த 3 மாதங்களாகவே உயர் ஜாதியினர் மிரட்டி வருவதால், காவல்துறையில் புகார் அளித்தார்.  காவல்துறையினர், புகாரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். காவல் துறையினரிடம் தங்கள் மீது புகார் அளித்ததை அறிந்த உயர்ஜாதியினர் மல்லிகார்ஜூனின் 21 வயது மகனை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து  நாயக் சமூகத்தைப் பற்றிகேவலமாகப் பேசுமாறுசெய்து, அதை காணொலியில் படம் பிடித்த னர். இதன்மூலம், காவல் துறையிடம் சென்றால், அந்தக் காணொலியை வெளியிட்டு விடுவதாகவும் மிரட் டியுள்ளனர்.

மல்லிகார்ஜூன் தன்மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்துவருவதை அடுத்து அப்பகுதி வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், வட்டாட்சியர் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகப்பேசி அவரைசமாதா னப் படுத்த முயன்றார். இதனை அடுத்து அவர் உள்ளூர் ஊடகவி யலாளர்களைச் சந்தித்து தனது குறையைக்கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித் துள்ளார்.