பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

திருவிதாங்கூர் முற்போக்கு



திருவனந்தபுரத்திலுள்ள இந்து மக்கள் எவ்வகுப்பின ராயினும், எச்சாதியினராயினும், வித்தியாசமின்றி இனி சமஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கோயில்களிற் சென்று வழிபடலா மென நேற்று நடைபெற்ற தமது 25ஆவது பிறந்த தினக்கொண்டாட்டத்தின் போது திருவரங்கூர் மகாராஜா ஒரு உத்திரவு பிறப்பித்திருக்கிறார்.
மகாராஜாவின் இவ்வுத்திரவு திருவாங்கூர் மக்களிடை மிகுந்த குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஜாவைப் பாராட்டி பல விடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்தியாவின் இதர பாகங்களுக்கும் திருவாங்கூர் ஓர் வழிக்காட்டியாயிருக்குமென கருதப்படுகிறது.
தோழர் ஈ.வெ.ரா. விதைத்த வித்து மரமாகி பலன் பழுத்து விட்டது.
(குடிஅரசு, 15-11-1936)

திருவிதாங்கூர் ஆலயப்பிரவேச உரிமை

15.11.36ஆம் தேதி சுதேசமித்திரனில் திருவிதாங்கூர் ராஜீயத்தின் உதாரகுணத்தின் மேன்மையைப் பற்றித் தெரிந்தோம். சுதேசமித்திரனில் ஒரு சூழ்ச்சியாகக் குறிக்கப் பட்டிருப்பதைப் பற்றி ஆச்சரியப்படுகிறோம்.
இதற்காக தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் முன்னமே ஜெயிலுக்கும் போய் சத்தியாக்கிரகம், பட்டினி, முதலான எவ்வளவோ சொல்லொணாத கஷ்டங்களும் பட்டு உழைத்ததின் பயன்தான் இன்றையத்தினம் இந்த ஆலயவழிபாடு, ஏற்பட்டதென்று எழுத பிராமணப் பத்திரிகைகளுக்கு மனம் வராததினால் இவர்கள் சூழ்ச்சி தெற்றன விளங்குகிறது.
இந்த  ஆலயப்பிரவேச ஒப்பற்ற பெருமை வைக்கம் வீரராகிய தோழர் ஈ.வெ.ரா.அவர்களைச் சாருமே ஒழிய மற்றையோரைச் சாராதென தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் பிராமணரல்லாதாருடைய ஒவ்வொருவருள்ளத் திலும் பதிந்திருக்குமென உறுதி கூறுகிறோம்.
நிற்க, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் இன்றில்லாவிடினும் இன்னும் கொஞ்சகாலத்தற்குள்ளாக விரோதிகளே ஒப்புக் கொள்ள முன்வருவார்களென பூர்ணமாய் நம்புகிறோம்.
நம் பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஆலயபிரவேச உரிமைக்கு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் சென்ற 10 ஆண்டுகளாக போராடிவருவது நாங்கள் அறியாததல்ல.
தோழர் ஈ.வெ.ரா அவர்கள் இன்னும் தீவிரமாக உழைத்து தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவாரென்று எதிர் பார்க்கிறோம் என சென்னிமலை வாசிகள் எழுதுகிறார்கள்.
(குடிஅரசு, 22-11-1936)
-விடுதலை,15.8.15

கோயிலுக்குள் போகலாம்- அய்க்கோர்ட்டுத் தீர்ப்பு

திருச்செந்தூர் கோவில் பிரவேச வழக்கில் அய்க்கோர்ட்டுத் தீர்ப்பு
19.3.1935இல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டான்ஸ், இருவர்களும் திருச்செந்தூர் ஆலயப்பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்மந்தமானவியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவியூ கவுன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திரு நெல்வேலி ஜில்லாவிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் எண்ணெய் வாணியர் என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு.
வழக்கின் வரலாறு
திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பி னருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்ம கர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதி களாக்கி, அந்த ஆலையத்தின் மற்ற மேல் ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப் கோர்ட்டில் நடந்தது.
ஆட்சேபம்
பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப்பிரகாரத்தில் கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877 இல் இதைப்பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர்களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டிருப்பதால் இப்போது கொண்டு வரப்படும் வழக்கு முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் விவாதித்தார்கள்.
சப்கோர்ட் தீர்ப்பு
வாணியர்கள் வைசியர்கள் என்று ருசுவாகா விட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்கு குறைவானவர்களல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல.
ஆகையால் இப்போது வரும் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்கோர்ட்டு கருதியது, வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தீர்ப்புக் கூறப்பட்டது.
பிரதிவாதிகள் ஹைகோர்ட்டில் அப்பீல்
இதன்மீது ஹைக்கோர்ட்டில் தர்மகர்த்தாக்களும், ஸ்தலத்தாரும், அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம் தான் என்று சொல்லி, ஹைக்கோர்ட்டு வாணியர்களுக்கு விரோதமாக தீர்ப்பு கொடுத்தது.
பிரிவி கவுன்சிலில் மாறியது
முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவியூ கவுன்சில் சொல்லிவிட்டதோடு, இந்த வழக்கின் உள் விஷயங்களையும் கவனித்து தீர்ப்புக் கூறும்படி உத்தரவிட்டது.
கடைசியாக இப்பொழுது
ஹைக்கோர்ட்டில் வழக்கு வந்தது
வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்க வில்லையென்பதை ருசுச்செய்வது பிரதிநிதிகள் பொறுப்பு, ஏனென்றால் வாணியர்கள் வைசியர்களை விட தாழ்ந்தபடியிலிருப்பவர்களல்ல. பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ருசுச் செய்யவில்லை 1862க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்கவில்லையென்று ருசுவாகவில்லை.
ஆகையால் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது சப்கோர்ட்டின் தீர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தீர்ப்பு.
இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.எல்.வெங்கடராமய்யர் வி.சம்பந்தம் செட்டி ஆகியோர் வாணியர் கட்சிக்கும், டி.ஆர் வெங்கடராமய்யர் கே.எஸ். சங்கரய்யர் டி.நல்லசிவம் பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள் (தினமணி)
குறிப்பு: பிரிட்டிஷ் ஆட்சி நம்நாட்டில் இல்லாமல், பார்ப்பனர்களுடைய வருணாச்சிரம தர்ம சுயராஜ்ய ஆட்சி இருந்திருக்குமானால், இத்தகைய தீர்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வழக்குத் தொடர்ந்ததையே அதிகப்பிரசங்கித்தனமானதென்று கருதி அதற்காக வாதிகளுக்கு கடுந்தண்டனை கொடுத்திருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம், வருணாச்சிரம தரும ஆட்சிக்காரப் பார்ப்பனர்களின் வாலைப்பிடித்துக் கொண்டு திரிபவர்கள் இதைக்கவனிப்பார்களா?
(குடிஅரசு, 1935)
-விடுதலை,15.8.15

வியாழன், 29 அக்டோபர், 2015

கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?


தந்தை பெரியார்
தந்தை பெரியாரவர்கள் நன்றியுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது:-
இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே, இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக் கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி- பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; மனதறிந்து, நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன், என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்;  நம் இயக்கம்  நாச இயக்கம்- ஆக்க இயக்கமல்ல, அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலை யாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாசவேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப் பட்டு இருக்கின்றார்கள். நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக் காரர்கள் ஆக்கிவிட்டார்கள். அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால், நாசவேலை செய்பவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக் கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின் படி நடப்பவர்கள் ஆவார்கள்.
மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என் றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வர வில்லை; மக்களை ஏமாற்றி வரவில்லை; எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை,  சாதி இல்லை. இவை யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டு களைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.
நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள்,  இராமாயணத்தைக் கொளுத்தியவர்; புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்த கம் எழுதியவராவார். பத்திரிகைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால், நம் கொள்கைகளை - செயல்களை வெளி யிடாமல் அதற்கு மாறானவற்றை விளம் பரம் செய்கின்றார்கள். என்றாலும், அப் படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30 லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை- வெளியிடாமல் இருக்க முடியவில்லை.  இந்த 30 இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே!  அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?
அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால், கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை, தேவையில்லை; ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே! இது இந்த ஆட்சிக்குக் கடவுள்-மதம்-சாஸ்தி ரங்களில், சாதி, பழமைகளில் நம்பிக்கைக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த சாமி படங்களை எல்லாம் நீக்க வேண்டும் என்று உத்தரவுப் போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!
இந்த ஊரில் எனக்குச் சிலை வைத் தார்கள் என்றால், இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை, என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை- கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழு கிறவன் காட்டுமிராண்டி என்று சொல்ப வனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந் தால் கோயில்களை எல்லாம் அவர்களா கவே இடித்து விடுவார்கள்.
நாம் இந்த ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின் றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக் கைக்காரன் ஆட்சிதான்- பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது. பார்ப் பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடை பெற்றிருக்கிறது.
பார்ப்பானுக்கு ஆட்சியில்- இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சி யிலிருப்பார்கள். நம்முடைய தொண்டின் காரணமாக, பிரச்சாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும் படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை; அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரசாரம் செய்ததாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறையனை எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம்.  பல பெரும் உத்தியோகங் களில் நம்மவர் இருக்கும் படியாயிற்று. இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள்- தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.
காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண் டாமையைக் காப்பாற்றும் வகையில்  தான் நடந்து கொண்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக்  கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
கடவுள், மதம், கோயில் இவற்றை எல் லாம் இன்னமும் கட்டிக்கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழி படுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம்; மதமும் வேண்டாம்; என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன், என் கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.
இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான், தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.
நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர் காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடி களை எல்லாம் நுழையவிட்டான்.
நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக் கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும், மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர்; கலவரம் ஏற்பட்டது; அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட் டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது; இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம் பித்து விட்டது; எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று. இதைப் பார்த்துப் பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது  இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும், எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு, என்று திறந்து விட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள்- தீண்டப் படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர். அப்போது நான் காந்தி யிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறை யனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில் லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போகவேண்டும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு, நடைமுறை யில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டி ருந்த இடம்வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான்; அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.
நாட்டின் சகல துறைகளிலும் பார்ப் பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல் துறை, மதத்துறை, எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்தி லிருந்து வந்தான்.
எனக்குத் தெரிய முதன் முதல் அய்க் கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார், முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என் றால், அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும்.  இன்று அய்க்கோர்ட்டில் இருக் கின்ற 14 ஜட்ஜூகளில் 10 பேர்கள் தமி ழர்கள். மீதி 4 பேர்கள் தான் பார்ப்பனர்கள், இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை  12 ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்களுக்கும் அத னால் நல்ல வாய்ப்புக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன். நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக் கிறார்கள்.
நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ள, அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்ப வனாகத்தான் இருப்பான்; பார்ப்பான் சொல் கிறபடி நடப்பவனாகத் தான் இருப்பான்.
நம் பத்திரிகை என்பவை ஆரம்பிக் கும் போது நம் படங்களைப் போட்டு- கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.
இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது, உத்தியோகம் வேண்டும் என்று தான் கேட்கும்; நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ, அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையே. நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.
நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தர மான நிலையில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  கையை விட்டால் கீழே விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிற வரை, நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது போன்ற இவை எல்லாம் பிரசார காரியமே தவிர இது பெருமையல்ல; ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர் தான் கடவுள் இல்லை என்று சொன்ன வராவார் என்று சொல்லுவான். இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலை யாகும். நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல் கிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார் கள், அதனால் தான் சொல்கிறார்கள்.
வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?
நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும்; நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.
24. 5. 1969 அன்று தர்மபுரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
(விடுதலை, 9.6.1969)
-விடுதலை,25.10.15

ஜாதியப் பாகுபாடுகளைக் கண்டித்து பவுத்தத்தைத் தழுவிய 90 தாழ்த்தப்பட்டவர்கள்


அகமதாபாத்தில் அதிரடி, இந்துத்துவாவுக்கு சவுக்கடி
அகமதாபாத், அக்.25_  அகமதாபாத்தில் அதிரடி யாக, இந்துத்துவாவுக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில், இந்து மதத்தில் நிலவிவருகின்ற ஜாதிய பாகுபாடுகளைக் கண் டித்து   தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 90 பேர் பவுத்தத்தைத் தழுவி யுள்ளார்கள்.
பாரதீய ஜனதா கட்சி ஆண்டு வரும் அரியானா மாநிலத்தில் தொடர்ச்சி யாக தாழ்த்தப்பட்டவர் களை உயிருடன் கொளுத்தி கொன்றுவரும் நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் பவுத்தத்தைத் தழுவியுள் ளார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி பொறுப்பேற்றதி லிருந்து தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிரான வன் முறைகள் வாயிலாக நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட வர்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்பட்டுவருகின்றனர் என்பதை எடுத்துக்காட் டும் விதமாக பல்வேறு கவலைக்குரிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல பகுதி களில் இன்னமும் தங் களின் வாழ்வாதாரத்துக் காக போராடவேண்டிய வகுப்பினராகவே தாழ்த் தப்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். பிற மதங் களில் மாறியவர்கள் அகதி களாகவே பார்க்கப்படுகின்றனர்.
குஜராத்தில் ஜுனாகத் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 5000 பேர் பவுத்தத்தைத் தழுவி னார்கள். அகமதாபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தோல்காவை அடுத்த சோனார் குய் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அரங்கில் 22.10.2015 அன்று குஜராத் புத்திஸ்ட் அகாடமி சார் பில் ஏற்பாடு செய்யப் பட்ட மதமாற்ற விழாவில்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 90 பேர் பவுத்த மதத்தைத் தழுவினார்கள்.
மதம் மாறியவர்களில் பெரும்பாலும் 20 வயது முதல் 35 வயது உள்ள இளை ஞர்கள் பவுத்தத்தைத் தழுவியுள்ளார்கள்.
குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் உள்ள  தி கிரேட் அசோகா புத்த விகாரைச் சேர்ந்த புத்த பிக்குவும், (தம்ம பிரச்சாரக்) புத்த நெறி பரப்புநரும், அகில பாரதிய பிக்ஷு மகா சங்கத்தின் குஜராத் மண் டல பொதுச் செயலாள ருமான பிக்ஷு பிரக்ன்யா ரத்னா என்பவர் மூலமாக பவுத்தத்தைத் தழுவியவர் கள்    அனைவரும் தீக்ஷை பெற்றனர். அவ்விழாவில் சுமார் 500_க்கும் மேற்பட் டவர்கள் கலந்துகொண் டனர்.
மதம் மாறியவர்களில் ஒருவரான 27 வயது இளைஞர் பாமினி தெல் வாடியா எனும் எம்பிஏ பட்டதாரிப் பெண் கூறும் போது, “நான் எல்லோரும் சமம் என்றே கருதுகிறேன். ஆனால், இந்து மதத்தில் அதுபோன்ற சமத்து வத்தைக் காண முடிய வில்லை. மேலும், டாக்டர் அம்பேத்கர் கொள்கை களை, நான் ஏற்றுக் கொண்டவள். அம்பேத் கர், தாமாகவே இந்து மதத¢தைவிட்டு வெளி யேறி பவுத்தத்தைத் தழு வினார். அவருடைய வழி யைப் பின்பற்றி நாங்களும்  பவுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பாமினியின் கணவ ரான அய்.அய்.எம். முது நிலை பட்டதாரி குணால், அவருடைய பெற்றோர் அபிலேஷ் மற்றும் ஹிரா பென், குணாலின் சகோ தரர் ராகுல் ஆகியோரும் அவ்விழாவில் பங்கேற்று பவுத்தத்தைத் தழுவி னார்கள்.
குஜராத் புத்திஸ்ட் அகாடமியின் செயலாளர் ரமேஷ் பாங்கர் கூறு கையில், “பவுத்தத்தால் ஈர்க்கப்பட்டு பவுத்தத் தைத் தழுவ விரும்பியவர் கள் 90 பேரைக்கொண்டு மதமாற்ற விழாவை நடத்தி உள்ளோம்.  இந்து மதம், முற்றிலும் மூட நம்பிக் கைகளைக் கொண்டுள் ளது. மேலும், ஜாதி அமைப்பு முறைகளைக் கொண்டு காலகாலமாக குறிப்பிட்ட வகுப்பினத்த வர்களைத் தீண்டத்தகாத வர்களாகவே நடத்தி வருவதாகும்’’ என்று குறிப் பிட்டார்.

.-விடுதலை,25.10.15

பார்ப்பனிய ஒழிப்புத் திருநாள்

சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின் பயனாய் பார்ப்பனியம் ஒரு அளவுக்காவது ஆட்டம் கொடுத்துவிட்ட விஷயம். நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.
ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனியம் எவ்வளவு பகிஷ்கரிக்கப் பட்டிருக்கின்றதோ, அதில் 8இல் ஒரு பங்கு கூட அரசியல் விஷயத்தில் பகிஷ்கரிக்கப் பட்டதாகச் சொல்ல முடியாது.
அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமாய் வேலை செய்வது என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் தலைவர்கள் என்பவர்களில் பலர், தனிப்பட்ட முறையில் தங்கள் சுயநலத்திற்காக எதையும் விற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தோழர் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் திட்டம் அரசாங்க உத்தரவு மூலம் போட்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் அவரை ஒழிக்கச் செய்த சதியில் சில ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களும் உள்உளவாய் இருந்ததோடு,
பார்ப்பனரல்லாதார் கட்சியின் பயனாய் முதல் மந்திரி தானம் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருந்து வந்ததுடன் தனது தானத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையையும் அடைந்தார்,  அதன் பயனையும் அடைந்தார். என்றாலும், இப்போது ஜடி கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறது.
இது எப்படியோ இருக்கட்டும். தோழர் முத்தையா முதலியார் அவர்கள் ஏற்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவை ஜடி கட்சி அரசாங்கம் இப்போது மறுபடியும் பிரசுரித்திருப்பது போற்றத்தக்கதேயாகும்.
இன்றைய தினம் எந்த ஊரில், டவுனில் எடுத்துக் கொண்டாலும் வாசல்கூட்டி, பியூன் ஆகியவர்கள் போன்ற உத்தியோகம் போக பாக்கி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள் தான் 100க்கு 80பேர், 90 பேர்கள் இருந்து வருகிறார்கள்.
அதிலும் நீதி இலாகாவாகிய முன்சீப்பு, சப் ஜட்ஜு, ஜில்லா ஜட்ஜு முதலியவைகளும், நிர்வாக இலாகாவாகிய போலீ டிப்டி சூப்பிரண்டெண்ட், சர்க்கிள் இன்பெக்டர், சப் இன்பெக்டர் ஆகியவற்றிலும் பார்ப்பன ஆதிக்கமே தலைசிறந்து நிற்பதுடன் பார்ப்பனரல்லா தார் முயற்சியையும், முன்னேற்றத் தையும் ஒழிக்கவும், தடுக்கவும் அவைகளின் மூலம் எவ்வளவு காரியம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காரியங்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் வன்னெஞ்சத் துடன் ஆங் காங்கு செய்யப்பட்டும் வருகின்றதானது எவரும் அறியாததல்ல.
அரசாங்கத்தார் ஒவ்வொரு இடத்திலும் உத்தியோ கங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமை சரிவரக் காக்கப் படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளைக் குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட இடமிருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு ஊரில் டிப்டி கலெக்டர் பார்ப்பனரா யிருந்தால் தாசில்தார் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும்படியும், சப்இன்பெக்டர் பார்ப்பனராயிருந்தால் சர்க்கிள் இன்பெக்டர் பார்ப்பனரல்லாதாராயும், ஜில்லா ஜட்ஜ் பார்ப்பனராயிருந்தால் சப் ஜட்ஜ் பார்ப்பனரல்லாதாராயும் மற்றும் இதுபோல் அதிகாரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி இல்லாதவரை, அரசியலினாலும், தேசியத்திலினாலும், வகுப்பு உணர்ச்சி தாண்டவமாடும் இக்காலத்தில் பல வகுப்பு மக்களுக்கு பந்தோபது இருக்குமென்று கருதமுடியாது.
அரசாங்கம் சம்பந்தமில்லாத வேறு பல விஷயங்களில் கூடியவரை பார்ப்பனரல்லா தார்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.
உதாரணமாக இப்போது நடைபெற்று வரும் முனிசிபல் எலக்ஷன்களில் பார்ப்பனக் கோட்டைகளாயிருந்த சேலம், திருப்பூர் முதலிய இடங்களில் ஒரு பார்ப்பனர் கூட வரமுடியாமல் போனதைப் பார்த்தால் அங்குள்ள காங்கிர ஆதிக்கமும், பார்ப்பன ஆதிக்கமும் எவ்வளவு என்பது விளங்கும்.
பெண்களும், ஆதிதிராவிடர்களும் ஒவ்வொரு முனிசிபாலிட்டியிலும் தானம் பெற்றார்கள் என்றால், அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பெருமையாலேயே அல்லாமல் ஜனங்களுக்குச் சமரச உணர்ச்சி ஏற்பட்டதாலல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஈரோடு அர்பன் பாங்கி சமீபகாலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தது என்றாலும் இந்த வருஷம் மேற்படி பாங்கு தேர்தலில் ஒரு பார்ப்பனருக்குக் கூட இடம் இல்லாமல் போய்விட்டது என்பதோடு ஒரு பெண் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கின்றதானது மகிழ்ச்சிக்குரியதாகும்.
இவ்வளவு இருந்தாலும் சில இடங்களில் தானங்கள் பெறப் பார்ப்பனர்கள் கையில் ஆகவில்லையென்றாலும் சிலர் சில பார்ப்பனரல்லாதாரைப் பல வழிகளில் தாங்கள் வழிப்படுத்திக் கொண்டு கட்சிகள் தகராறுகள் உற்பத்தி செய்து தாங்கள் தானத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதுபோல் செய்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.
நாட்டில் வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப் பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக் கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிறவர்களி டத்தில், தாழ்ந்த ஜாதிக்காரர்களாய் கருதப்படு கிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமானது.
உதாரணமாக ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்பவன் துவேஷமாயிருக்கிறான் என்பது ஒரு நாளும் ஆச்சரியமான காரியம் ஆகாது. மற்றது ஆச்சரியமான காரியமென்றால் ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்று அழைக்கப்படுகிறவன், தீண்டப்படாதவன் என்று அழைக்கப்படுகிறவன் துவேஷ மில்லாமல், வெறுப்பு இல்லாமல் இருந்து வருவதுதான் ஆச்சரியப்படத்தக்கதாகும்.
ஆதலால் ஜாதிப் பிரிவு சம்பந்தமான உயர்வு, தாழ்வு இருக்கும் வரை நாட்டில் துவேஷமும், வெறுப்பு வகுப்பு உணர்ச்சி ஆகிய காரியங்களும் ஒரு வகுப்பாரால் ஒரு வகுப்பு கஷ்டமடையும் காரியங்களும் எதிர்பார்த்துதான் இருக்க வேண்டும்.
உதாரணம்
இதற்கும் ஒரு உதாரணம் கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.
தோழர் எ. குஞ்சிதம் குருசாமி அம்மாளை யாவருக்கும் தெரியும். அந்தம்மாள் பி.ஏ. எல்.டி. பா செய்தவர்கள். அதிலும் யோக்கியதா பட்சத்தோடு உயர்ந்த வகுப்பில் பா செய்தவர்கள். அவர்களின் கல்வித் திறமை, போதிக்கும் திறமை, பிள்ளைகளிடம் அன்பாயிருக்கும் திறமை சரீரப்பிரயாச விளையாட்டுகளில் உள்ள திறமை முதலிய வற்றை அந்தம்மாள் வேலை செய்த பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரின் நற்சாட்சிப் பத்திரத்தில் காணலாம்.
இப்படிப்பட்ட அம்மாள் மைலாப்பூரில் ஒரு பார்ப்பன ஆதிக்கமுள்ள பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக மாதம் 70 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தார்.
அந்தம்மாள் யாதொரு தப்பிதமும் செய்துவிடவில்லை. இரண்டொரு இடங்களில் பகுத்தறிவு பிரசங்கங்கள் செய்தது தவிர யாதொரு பாவத்தையும் அறியார். அப்படிப்பட்டவர் களைத் தோழர் பி.எ. சிவசாமி அய்யர், டி.ஆர், வெங்கிட்டராம சாதிரி, சி.பி. ராமசாமி அய்யர்,
அல்லாடிக் கிருஷ்ணசாமி அய்யர் போன்றவர்கள் நிர்வாகக் கமிட்டியாய் இருக்கும் பள்ளிக் கூடத்தில், அந்தம்மாளுக்கு இனி வேலை இல்லை என்று நோட்டீ கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றால், வகுப்பு உணர்ச்சியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தப்படி ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள தாபனங்களில் இருந்து, தகுந்த ஒழுக்கக் குறைவுள்ள ஒரு குற்றத்துக்காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால் அக்கிரகாரம் முதல் கொண்டு சர்க்கார் அதிகாரிகள் - ஹைகோர்ட்டு வரை அந்த தாபனத்தின் மீது பழி வாங்க நினைக்கிறார்கள். பிராமணத் துவேஷம் பிராமணத் துவேஷமென்று கூப்பாடு போடு கிறார்கள்.
பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற எந்த தாபனங்களிலாவது 100க்கு 10 வீதமாவது பார்ப்பனரல்லாதார் களுக்கு வேலை கொடுக்கிறார்களா எனப் பார்த்தால் வகுப்பு துவேஷம் யாரிடத்தில் இருக்கிறது என்பது விளங்கும்.
ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இனியாகிலும் இவ்விஷயங்களை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள முயற்சிப்பதுடன், காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள், ஏகாதிபத்திய ஒழிப்பு நாள்,
மே நாள் என்பன போன்ற நாள்களை வருஷத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது போல் பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள் என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதை அடுத்து வரும் தீபாவளிக்கு அடுத்த நாளோ, அல்லது முந்திய நாளோ வைத்துக் கொள்வது நல்லது என்றும் அபிப்பிராயப்படுகிறோம்.
இத்தினங்களில் ஆங்காங்கு கூட்டம் போட்டு பார்ப்பன ஆதிக்கக் கொடுமை, சமுதாயத்திலும், அரசியலிலும் இருப்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டித் தீர்மானங்களை நிறைவேற்றி, அரசாங்கத்துக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டிய வேலையை அத்திருநாள் கொண்டாட்ட வேலையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படுகின்றோம். இன்னநாள் என்பதைப் பின்னால் உறுதிபடுத்துகிறோம்.
- பகுத்தறிவு - துணைத்தலையங்கம் - 30.09.1934
-விடுதலை,24.10.15

சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும்

சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலமுதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடைய ஆதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கட்சியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.
செங்கல்பட்டில் கூடின முதல் சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள் பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத் திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.
மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமுகம் சமுகத் துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மை யாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும் அதை அமலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்,
இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதியது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.
எனவே பார்ப்பனரல்லாதார் சமுக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதை செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ வருத்தப்படவோ அவசியமில்லை என்பதைச் சுயமரியாதை இயக்க இளைஞர் களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934


தந்தை பெரியார் பொன்மொழிகள்
  • மனிதன் தன் வாழ்வில் புகழைத் தேடுவதற்கு விரும்புவது என்பது இயற்கையே. புகழைத் தேடுவதற்கு விரும்பாதவன் ஒருவன்கூட இருக்க மாட்டான். ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் முயற்சி செய்து புகழடைய விரும்புகிறான்... ஆனால், மனிதன் புகழைத் தேடுகிற வழியைப் பின் பற்றுகையில் மிகவும் தவறான முறையைப் பின்பற்றுகிறான். மனிதன் தன்னலத்திற்கென்று புகழைத் தேடுவதற்கு முயற்சிக்கும் அத்தனையும் உண்மையில் புகழைக் கொடுப்பது இல்லை. பிறர் நலத்துக்கென்று வைத்துச் செல்லும் பொருளே அவனுடைய பெயரை நிலைத்து நிற்கச் செய்யும்.
  • புகழும் இன்பமும்தான் மனித ஜீவனின் லட்சியம். புகழ் என்றால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதல்ல; ஒருவர் செய்த நன்மையால் பயனடைந்து மற்றவர் அவனைப் புகழும் புகழ். மனிதன் மற்றவனுக்குச் சேவை செய்ய ஏற்பட்டவனே தவிர தனக்குத்தானே வாழ்பவன் அல்ல.
  • -விடுதலை,24.10.15

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

களப் பலியாகும் சமூகநீதி!


பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் செல்லும் பொழுது ஏற்படும் இழப்புகள், இடர்ப்பாடுகள் பற்றி ஒரு பக்கத்தில் பெரும் அளவில் பேசப்படுவது நியாயமே!
அதில் இன்னொரு பேராபத்து இடஒதுக்கீடு - சமூகநீதி - சவக் குழியில் தள்ளப்படுவதாகும். ஆனால் இதைப்பற்றி இடதுசாரிகள் உட்பட யாரும் பேசுவதில்லையே.
பார்ப்பனர்கள், பார்ப்பனர்களின் ஊடகங்கள், பொதுத்துறை குன்றி, தனியார்த்துறை வளர வேண்டும் என்பதில் வானம் வரை வாயைக் கிழித்துப் பேசுவதற்கு முக்கிய காரணம் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு இல்லை என்பதால் தான்.
2012ஆம் ஆண்டு கணக்கின்படி தனியார்த் துறைகளில் இயக்குநர்களுள் பார்ப்பனர்கள் மட்டும் 92.6 சதவீதமாகும் பிற்படுத்தப்பட்டோர் 3.8 சதவீதமாகும். தாழ்த்தப்பட்டோர் 3.5 சதவீதமாகும். (Economic and Political Weekly 11.8.2012).
இந்த இயக்குநர்கள்தாம் பணி நியமனம் செய்யும் இடத்தில் குளிர்சாதன அறைகளில் அட்டாணிக்கால்  போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் முதுகில் பூணூலைத் தடவிப் பார்த்து நியமனம் செய்யும் இயல்பினர் என்பதற்கு ஆய்வுகள் ஏதும் தேவைப்படாது; கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல், புனியா மிகவும் கவலையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், கடமையுணர்ச்சியுடனும் கூறியது  -கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.
தனியார் துறைகளில் ஒரு திடமான ஒழுங்குமுறைச் சட்டங்கள் இல்லை; தற்போது பெருகி வரும் தனியார்த் துறை நிறுவனங்களை இடஒதுக்கீட்டு விதியின்கீழ் கொண்டு வந்து கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி நிலைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.
இனி சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதை பொருத்ததே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அழுத்தமாகவே சொல்லி வருகிறார்கள். அதற்காகத் திராவிடர் கழகம் களத்தில் இறங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவர் கூறியதாவது,  தனியார் துறையில் இடஒதுக்கீடு தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆனால் தனியார் துறைகள் இடஒதுக்கீட்டை வழங்க மறுத்துவருகின்றன. இதன் காரணமாக தனியார் துறையில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.  இதை முக்கிய பிரச்சினையாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணையம் எடுத்துக்கொள்ளவேண்டும். தனியார் அமைப்புகள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளிலும் அரசு மானியம் பெறும் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறினார்.
அரசுத்துறை பல்வேறு பிரிவுகளை தனியார் மயமாக்கி வருவதால், இட ஒதுக்கீட்டின் பலன் குறைந்துகொண்டு வருகிறது. சில மாநிலங்கள் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை வைத்திருந்தாலும், அங்குள்ள தனியார் நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு விதியை விரிவுபடுத்தி, தனியார் துறையிலும்  கொண்டுவரும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் காரணமாக ஏற்பட்ட மாற்றம் மிகவும் மெதுவாகத்தான் இருந்து வந்தது, தற்போது பொருளாதார மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணிகளால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பொருளாதார சமநிலை உருவாக வேண்டுமென்றால் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். இல்லையென்றால்  இனிவரும் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு சமூகப்பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்றார் பி.எல். புனியா.
-விடுதலை,8.11.14

அய்தராபாத் சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும்

அய்தராபாத் சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் நெறி வார்ப்பு

பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும்

தொகுப்பு
வீ.குமரேசன்
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் சமூகநீதிக்கான உணர்வுகள், பல்வேறு தளங்களிலும் போற்றிப் பேணப்பட்டு வருவது ஒரு தனிச்சிறப்பாகும். அரசி யல் கட்சி எல்லைகளைத் தாண்டி சமூகநீதிச் சுடரை தூக்கிப் பிடிப்பதில் அனைத்துத் தரப்பினரும் இணக்க மாக, ஒருங்கிணைந்து செயல்படுவது நாட்டின் மற்ற பகுதியிலும் பின்பற்றத் தக்கதாக விளங்கி வருகிறது. பிற் படுத்தப்பட்ட மக்களிடையே விழிப் புணர்வினை ஊட்டி, அவர்களது மேம்பாட்டிற்கு பாடுபடும் நோக்கத் தில் தெலுங்கு தேசக் கட்சியின் முன்னணித் தலைவரும், ஒன்று பட்ட ஆந்திர பிரதேசத்தில் உள்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்ச ராகப் பணியாற்றியவரும், தற்சமயம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டி.தேவேந்தர் கவுடு சமூகநீதி உரிமையினை வலியுறுத் திடப் பிற்படுத்தப்பட் டோர் அதிகாரத் துவ மய்யத்தினை (Backward Class Centre for Empowerment - BCCE) 2014-ஆம் ஆண்டில் துவக் கினார். சமூகநீதிக்கான நிறுவனத்தின் துவக்க விழாவில் தமிழர் தலைவர் பங்கேற் றிட பெரிதும் விரும்பினார்.
அந்த சமயம் ஏற்கெனவே ஒத்துக்கொள்ளப் பட்ட சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி காரணமாக தமிழர் தலைவர் அந்த துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிட வில்லை. இந்த ஆண்டு 2015-இல் பிசிசிஇ (BCCE) நிறுவனத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் அவசியம் தமிழர் தலைவர் பங் கேற்றுச் சிறப்பித்திட வேண்டும் என்ற டி.ஓ.தேவந்தர் கவுடு அவர்களது அழைப்பிற்கிணங்க தமிழர் தலைவர் செப்டம்பர் திங்கள் 6-ஆம் நாள் அய்தராபாத் நகரத்திற்குப் பயண மானார். உடன் திராவிடர் கழக வழக் கறிஞர் அணியின் தலைவர் த.வீர சேகரன் மற்றும் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் சென்றிருந்தனர்.
அதிகாலை 4 மணிக்குக் கிளம்பி சென்னை விமான நிலையம் வந்த தமிழர் தலைவர், பாதுகாப்புச் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்ததும், விமானத்தில் வழங்கப் பட்ட நாளிதழ்களைப் படிக்க முனைந் தார். தி இந்து ஆங்கில நாளி தழைப் புரட்டியதும் தமிழர் தலைவர் பார்வையில் பட்டது பகுத்தறிவாளர் - தோழர் ஆசிரியர் இராஜேந்திரன் நடத்தி வரும் சிறைக் கைதிகளுக்கான பாட வகுப்புகள் பற்றி படத்துடன் கூடிய செய்தி.  இராஜேந்திரன், புழல் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகளுக்கு, சிறைச்சாலைக்குச் சென்று வகுப்பு எடுத்து வருகிறார். இதன் மூலம் பயின்று பள்ளி இறுதித்தேர்வில் வெற்றி பெற்ற கைதிகள் ஏராளம். சிறைத்துறையின் அனுமதியுடன் ஆசிரியர் இராஜேந் திரன் கல்வி கற்பிக்கும் பணியினை ஆற்றி வருகிறார் என குறிப்பிடும் செய்தியோடு ஆசிரியர் இராஜேந் திரன் பெரியாரியலார் (Periyarist) எனும் குறிப்பும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. செய்தியோடு, கருப்புடை அணிந்து கைதிகளுக்கு வகுப்பு எடுத்து, அவர்கள் தேர்வெழுது வதை பள்ளி ஆசிரியர் இராசேந்திரன் பார்வையிடும்  ஒளிப்படமும் பிரசுரமாகி இருந்தது. செய்தியுடன், ஒளிப்படத் தினையும் படித்து பார்த்த தமிழர் தலைவர் பெரியாரியலார் கல்விப்பணி ஆற்றி வருவது பற்றியும் அது செய்தியாக நாளிதழில் வெளியிடப்பட்டதும் குறித்தும் மகிழ்ச்சி அடைந்தார்.
ஒரு மணி 10 நிமிட நேரப்  பயணத்தில் தமிழர் தலைவர் அய்தராபாத் இராஜீவ் காந்தி விமான நிலையம் வந்தடைந்தார். விமானத்திலிருந்து இறங்கி, பயணிகள் சுமைக்காக காத்திருந்தோம். வந்திறங்கிய பயணிகள் அனைவரும் தங்களது உடை மைகளைப் பெற்றுச் சென்றுவிட்டனர். தமிழர் தலைவரது பயணத்தில் பதிவு செய்யப்பட்ட உடைமைகளுள் ஒன்று, நகர்த்தும் வார்பட்டையில்  வந்து சேரவே இல்லை. நகர்த்தும் பட்டையும் பயணச் சுமைகளை வழங்கி முடித்துவிட்ட நிலை யில் நிறுத்தப்பட்டு விட்டது. உடைமை வராத நிலவரத்தினை அங்கிருந்து விமான நிறுவன ஊழியரிடம் தெரிவித்தோம்.
பயணச்சீட்டு, பயண உடைமை பற்றி விமான நிறுவனம் அளித்த விவரங் களையும் அந்த ஊழியரிடம் அளித்தோம். உடனே விமானத்தைத் தொடர்பு கொண்டு, விடுபட்ட பயண உடைமை எதுவும் உள்ளதா என அந்த ஊழியர் விசாரித்தார். சென்னை என பதில் வந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள பயணச் சீட்டு வழங்கிய அவர்களது நிறுவன அலுவலகத்திற்கும் செல்பேசியில் தொடர்பு கொண்டு பயண உடைமை சரியாக விமானத்தில் அனுப்பப்பட்டுள் ளதா எனவும் கேட்டறிந்தார். உடைமை கள் பதிவு செய்யப்பட்டு முறையாக விமானத்தில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட் டுள்ளதாக செய்தி வந்தது. இப்படி முயற் சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, அந்த ஊழியர் தமிழர் தலைவரிடம் வந்து எப்படியும் உடைமையினை கண்டுபிடித்து அளித்துவிடுவோம். நீங்கள் அவசரமாக கிளம்ப வேண்டியிருந்தால், கிளம்புங்கள்; அய்தராபாத்தில் எங்கு தங்குவீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். பயண உடை மையினை தேடி நேரில் கொண்டு வந்து அளித்து விடுகிறோம் என உறுதியளித் தார். பரவாயில்லை சற்று நேரம் விமான நிலையத்திலேயே இருக்கிறோம், உடை மையினைத் தேடும், உங்களது முயற்சி யினைத் தொடருங்கள் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
சற்று நேரம் யோசித்த அந்த ஊழியர் சற்று பொறுங்கள் எனக் கூறிவிட்டு சென்னையிலிருந்து பயணப்பட்ட விமானத்திற்கே சென்று உடமையினை தேட ஆரம்பித்தார். விடுபட்ட பயண உடைமை ஒரு ஓரத்தில் இருந்ததைக் கண்டுபிடித்து, அய்ந்து நிமிடங்களில்  வந்து தமிழர் தலைவரிடம் கொடுத்து விட்டார், ஹமீது எனும் அந்த விமான நிறுவன ஊழியர். அந்த ஊழியர் விமானத்தில் சென்று தேடுவதற்கு சற்று தாமதித்து இருந்தாலும் தமிழர் தலைவர் பயணம் செய்த விமானம் ராய்பூர் பறந் திருக்கும். சரியான நேரத்தில் விரைவாகச் செயல்பட்டு, சேவை ஆற்றிய ஊழியர் ஹமீதைப் பாராட்டிய தமிழர் தலைவர் சென்னை திரும்பியதும் சிறப்பாகச் செயல் பட்ட அந்த ஊழியரைப் பாராட்டி அந்த விமான நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதிட வேண்டும் எனவும் எங்களைப் பணித்தார்.
அய்தராபாத் விமான நிலையத்தில் வரவேற்பு
விடுபட்ட பயணச்சுமையினை கண் டறிவதற்கு முயற்சிகள் நடந்து கொண்டி ருக்கும் பொழுதே, தமிழர் தலைவரை வரவேற்க வந்திருந்த தேவேந்தர் கவுடு அவர்களின் மைந்தர் டாக்டர் டி.வின யேந்தர் செல்பேசியில் தொடர்பு கொண்டு பயணிகள் அனைவரும் வெளிவந்துவிட் டனர், தாமதத்திற்கு காரணம் என்ன என ஆவலுடன் கேட்டு, விவரங்கள் அறிந்த பின்னர் தாம் விமானநிலையத்திற்கு வெளியில் காத்திருப்பதையும் தெரிவித் தார். ஏறக்குறைய 45 நிமிட தாமதத்துடன் விமான நிலைய வெளிவாயிலுக்கு வந்த தமிழர் தலைவரை பூங்கொத்து கொடுத்து டாக்டர் டி.வினயேந்தர் வரவேற்றார்.
விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்கு தமிழர் தலைவர் கிளம்பினார். வரும் வழியில் டாக்டர் டி.வினயேந்தரிடம் அவரது தந்தையார் உடல்நிலைப்பற்றி தமிழர் தலைவர் கேட்டறிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை மிகவும் குன்றி, அமெரிக்க நாட்டிற்குச் சென்று தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் தேவேந்திர் கவுடு இருந்தார். இப்பொழுது உடல்நலம் தேறி தாம் ஏற்றுக்கொண்ட அரசியல் பணியில் சமூகநீதிக்கான அர்ப் பணிப்பு உணர்வுடன் கவுடு அவர்கள் பணியாற்றி வருகிறார். பேச்சினூடே கவுடு அவர்களின் மைந்தர், தான் சென்னை இராமச்சந்திரா மருத்துக கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு மேற்கொண்டதை தமிழர் தலைவருக்குத் தெரிவித்தார். விடுதிக்கு வரும் வழிப் பயணம், பெரும்பான்மையான நேரம் மேம்பாலப் பயணமாகவே இருந்தது. ஆம், உலகிலேயே அதிக நீளமான மேம்பாலமான நரசிம்மராவ் பெயரி லான அந்த மேம்பாலத்தைக் கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வருபவர்கள் அய்தராபாத் பெரு நகருக்குள் நுழைய முடியும். நரசிம்ம ராவ் மேம் பாலத்தின் மொத்த நீளம் 31.6 கி.மீ ஆகும்.
30 நிமிடப் பயணத்திற்குப் பின்பு அய்தராபாத் நகரின் மய்யப்பகுதியில் அமைந்திருந்த விடுதிக்கு தமிழர் தலைவர் வந்தடைந்தார். விடுதிக்கு தமிழர் தலைவர் வருவதற்கு முன் னரே, சமூகநீதிக்காக ஆந்திர மாநிலத்தில் அரும் பணியாற்றிய மறைந்த நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் மருமகன் (மகளின் கணவர்) பொறியாளர் சுதாகர் விடுதிக்கு வந்து காத்திருந்தார். அய்ந்து நட்சத்திர விடுதி யில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அறையினுள் நுழைந்ததும் இவ்வளவு பெரியது தேவை யில்லையே, எளிமையாக இருந்திருக்க லாமே எனத் தமிழர் தலைவர் டாக்டரிடம் கூறினார். காலை உணவு நேரம் நெருங் கிய நிலையில் உணவருந்திட தரைத்தளத் திற்கு செல்லலாமா அல்லது அறைக்கு உணவினை தருவிக்கலாமா என டாக்டர் கேட்டதற்கு தரைத்தளத்திற் குச் சென்று உணவருந்தலாம் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
வரிசை யாக, வகையாக அடுக்கி வைக்கப் பட்ட உணவை நாமே எடுத்து நாமே பரிமாறிக்கொள்ளும் பஃபே (Buffet) முறை. சூடாக தேவைப்படும் உண வினை மட்டும் தெரிவித்தால் நாம் அமர்ந்து சாப்பிடும் இடத்திற்கு வந்து பரி மாறுவார்கள்.
அனைவரும் உரையாடிய வாறு உணவருந்திய பின்னர் தமிழர் தலைவர் அறைக்கு திரும்பினார். தேவேந் திர கவுடு அவர்களின் இளைய மகன் வீரேந்தர் தமிழர் தலைவரைச் சந்தித்தார். முழுநேர அரசியல் பணியில் உள்ள அவர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசக் கட்சியின் சார்பில் அய்தராபாத் நகரில் போட்டி யிட்டார். இன்றைய தெலுங்கானா முதல்வர் டி.எஸ்.சந்திரசேகரராவ் அவர்களின் மகள் கவிதா அவர் களுடன் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார்.
மிகவும் சுறுசுறுப்பாக ஆர்வ மிகுதியுடன் தமிழர் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந் தார். சற்று நேரத்தில் தேவேந்தர் கௌடு அவர்களின் மூத்த மகன் விஜயேந்திரும் தமிழர் தலைவரைச் சந்திக்க வந்தார். பின்னர் மைந்தர்கள் மூவரும் 11 மணி யளவில், தமது தந்தையார் தேவேந்தர் கவுடு விடுதிக்கு வந்து தமிழர் தலைவரைச் சந்தித்து பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத் துவ மய்யத்தினை பார்வையிட அழைத் துச் செல்வார் என்ற தகவலையும் தெரிவித்துச் சென்றனர்.
(தொடரும்)


பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும் 

தொகுப்பு
வீ.குமரேசன்
ஆந்திர மாநிலம் உயர்நீதி மன்ற மூத்த நீதிபதி நீதியரசர் ஜி.சந்திரய்யாவுடன் சந்திப்பு
மறைந்த நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் மருமகன், இந்நாள் மற்றும் மேனாள் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்ற நீதியரசர்களுடன் சுவாமி அவர்கள் ஏற்படுத்திய உறவை சமூக நீதிப்பணி களுக்கான தொடர்புப் பாலமாக பரா மரித்து வருகிறார். நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளையினை வல்லம் - பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தில் ஏற்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதிக்காகப் பாடுபட்டு வரும் அறிஞர் பெருமக்களை அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றிட வைத் திடும்  பணியினை தொடர்ந்து வருகிறார். நடப்பு ஆண்டு அறக்கட்டளை சொற் பொழிவினை ஆற்றிட ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி நீதியரசர் ஜி.சந்திரய்யா அவர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என தமிழர் தலைவரிடம் பரிந்துரைத்தார். நீதியரசர் ஜி.சந்திரய்யா அவர்களும் தமிழர் தலைவரைச் சந்திக்க ஆவல் கொண்டுள்ள செய்தியினையும் தெரிவித்த பொழுது, நாம் நேரில் சென்று நீதியரசர் சந்திரய்யா அவர்களை சந்தித்து வேண்டிக் கொள்ளலாம் என தமிழர் தலைவர் விருப்பத்தினைத் தெரிவித்தார். நீதியரசர் அவர்கள் அவரது இல்லத்தில் இருப்பதை உறுதி செய்தபின் தமிழர் தலைவர் உடனே நீதியரசர் சந்திரய்யா அவர்களைச் சந்தித்திட கிளம்பினார்.
தமிழர் தலைவர் வருவதை எதிர் நோக்கி இல்லத்தின் வாசலில் நின்று தமிழர் தலைவரை நீதியரசர் சந்திரய்யா வரவேற்றார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின்னர் நாட்டு நடப்புகளை பற்றி தமிழர் தலைவரது கருத்தினை அறிந்திட ஆர்வமுடன் பல்வேறு வினாக் களை எழுப்பினார். இளைய தலைமுறை யினர், சமூகக் கண்ணோட்டம் பற்றிய அக் கறையின்றி உள்ளதைக் குறித்து மிகவும் ஆதங்கப்பட்டார்.
சமூகநீதிக் களத்தில் அடுத்த கட்ட நடைமுறைகள் குறித்து தமிழர் தலைவரின் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்த்தார். சந்தித்த அரைமணி நேரமும் தமிழர் தலைவர் என்ன நினைக்கிறார் என்பதி லேயே அக்கறை கொண்டவராக நீதியரசர் சந்திரய்யா இருந்தார். நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளைச் சொற் பொழிவினை நீதியரசர் சந்திரய்யா ஆற்றிட வேண்டும் என தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று கூடிய விரைவில் வருவதற்கு நாள் ஒதுக்கித் தருவதாக உறுதியளித்தார்.
தமிழர் தலைவர் விடைபெறுவதற்கு முன்பாக, சற்று பொறுத்தருள வேண்டி னார். அவரே இல்லத்தின் உள்ளே சென்று சால்வை ஒன்றை எடுத்து வரப்பணித்தார். முதல் முறையாக தமது இல்லம் வந்த தமிழர் தலைவரைப் பெருமைப்படுத்து வதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்து தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து மகிழ்ந்தார். வீட்டு வாசல் வரை வந்து தமிழர் தலைவரை வழி அனுப்பி வைத்தார்.
நீதியரசரைச் சந்தித்துவிட்டு விடுதி அறைக்கு வருவதற்கும், தேவேந்தர் கவுடு எம்.பி. அவர்கள் தமிழர் தலைவரைச் சந்திக்க வருவதற்கும் சரியாக இருந்தது, அய்ந்து நிமிட இடைவெளி. தாம் நிறுவிய சமூகநீதி அமைப்பின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள தமிழர் தலைவரை பூங்கொத்து கொடுத்து தேவேந்தர் கவுடு வரவேற்றார். உடன் சமூகநீதி ஆர்வலர்கள்  பெரும் திரளாக வந்திருந்தனர். தேவேந்திர கவுடு அவர் களின் உடல்நலம் குறித்து மிகவும் அக் கறையுடன் தமிழர் தலைவர் விசாரித்தார். பின் மருத்துவ சிகிச்சை சோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுமாறு தமிழர் தலைவர் வேண்டிக்கொண்டார். தேவேந் திர கவுடு அவர்களது சமூகநீதிக்கான பணி மேலும் அழுத்தத்துடன் தொடர வேண் டும் என்ற விருப்பத்தினைத் தமிழர் தலைவர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய சமூக நீதி முழுமையாகக் கிடைத்திட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் தாம் கலந்துகொண்டதை தேவேந்தர் கவுடு நினைவு கூர்ந்தார். அடுத்த கட்டமாக சமூகநீதித் தளத்தில் ஆற்றிட வேண்டிய பணிகள் பற்றி தமிழர் தலைவருடன் கலந்து உரையாடி அவரது வழிகாட்டுதலை விரும்பி வேண்டினார். ஏறக்குறைய அரைமணி நேர உரையாட லுக்குப் பின்னர் தாம் நிறுவியுள்ள  பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தினை பார்வையிட வரும்படி வேண்டி அழைத்துச் சென்றார்.
பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தில் தமிழர் தலைவர்
செகந்திராபாத் வழியாக அரை மணிநேரப் பயணத்தில் அய்தராபாத் - ஹிமாயத்நகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சமூகநீதிக்கான மய்யத்தினை வந் தடைந்தோம். அங்கு திரளாகக் கூடி யிருந்த சமூகநீதி அமைப்பின் பொறுப் பாளர்கள் மற்றும் சமூகநீதி ஆர்வலர்கள் தமிழர் தலைவரை மகிழ்ச்சியுடன் வர வேற்றனர். சமூகநீதி மய்யம் - அலுவலகம், நூலகம், பயிற்சி உரைக்கூடங்கள், கலந் துரையாடல் கூடம் என பல்வேறு கட்ட மைப்பு வசதி வாய்ப்புகளுடன் அமைக் கப்பட்டிருந்தது. உரைக்கூடங்கள் முழு வதும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளிலிருந்து  பல்வேறு பிரிவு  ஒடுக்கப்பட்ட மக்கள் - ஆண்களும் பெண்களுமாய் பயிற்சி எடுத்த வண்ணம் குழுமியிருந்தனர். ஆண்டு முழுவதும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கு கின்ற வகையிலும், அவர்களிடம் சமூக எழுச்சிக்கான விழிப்புணர்வு மற்றும் உரிமை வேட்கையினை ஊட்டுகின்ற வகையில் தொய்வில்லாமல் பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன எனும் செய்தியினை தேவேந்தர் கவுடு தமிழர் தலைவரிடம் தெரிவித்தார். நூலகத்தினைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் சமூகநீதி பற்றிய நூல்கள் இன்னும் அதிகமாக இருந்திடல் வேண்டும் என விரும்பி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீட்டு நூல்களை குறிப்பாக சமூகநீதி பற்றிய நூல்களை நன்கொடையாக அந்த மய்யத்திற்கு வழங்கினார். மேலும் ஆங்கில மாத இதழான The Modern Rationalist, தொடர்ந்து நூலகத்திற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். சமூகநீதி மய்யத் தின் செயல்பாடுகள் மிகவும் செம்மை யாக, மற்ற சமூகநீதி அமைப்புகள் பின் பற்றக் கூடிய முன்மாதிரியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் தேவேந்தர் கவுடு அவர்களைப் பாராட்டினார். சமூக நீதி மய்யத்தின் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் தமிழர் தலைவரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஏறக் குறைய ஒரு மணிநேரம் மய்யத்தினை பார்வையிட்ட தமிழர் தலைவர் தங்கும் விடுதிக்கு திரும்ப வந்தார். நண்பகல் உண வினை அறையிலேயே தருவிக்க ஏற்பாடு செய்திருந்தனர். உணவு அருந்திய பின் சற்று நேரம் இளைப்பாறினார். பின்னர் 3 மணியிலிருந்து தமிழர் தலைவரை பார்க்க சமூகநீதி ஆர்வலர்கள் வருகை தர ஆரம்பித்தனர்.
தமிழர் தலைவருடன் சமூகநீதி ஆர்வலர்கள் சந்திப்பு
ஆந்திர பிரதேச அரசில் காவல்துறை உயரதிகாரியாய் பணியாற்றிய டி.டி.நாயக் அவர்கள் தமிழர் தலைவரைச் சந்திக்க வந்தார். சென்ற ஆண்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவினை நாயக் அவர்கள் ஆற்றினார். பல்வேறு சமூகநீதி மாநாடு களில் பங்கேற்றவர். தமிழர் தலைவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள பெருமகனார் ஆவார். சில தளங்களில் சமூகநீதி நடை முறைக்கான வழிமுறைகள் குறித்து தமிழர் தலைவரிடம் ஆலோசனைகளைப் பெற் றார். மாலைக் கூட்டத்தில் சந்திப்பதாகக் கூறி விடை பெற்றார்.
தெலுங்கு மொழியில் தந்தை பெரியார் புத்தகம்
அடுத்து தெலுங்கு மொழியில் பெரியார் ராமசாமி எனும் தலைப்பி லான 124 பக்க நூலினை எழுதிய எழுத் தாளர் துர்கம் ரவிந்தர் புத்தகத்தினை தமிழர் தலைவரிடம் அளித்திட வந்தார். தந்தை பெரியாரின் வாழ்க்கைச் சுருக்க மாக, அவர் நடத்திய சமூகநீதிக்கான போராட்டங்களின் தொகுப்பாக நூல் இருந்தது. தந்தை பெரியாரின் வாழ்க்கை யில் ஒவ்வொரு ஆண்டும் அவர் ஆற்றிய அரிய பணி பற்றியும் நூலின் இறுதியில் ஆண்டு வரிசையில் வழங்கப்பட்டு இருந்தது. மாலை விழா தொடங்கும் நேரம் நெருங்கிவிட்டதால் தமிழர் தலைவரை கூட்டத்தில் சந்திப்பதாகத் தெரிவித்துச் சென்றார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா - தமிழர் தலைவர் சந்திப்பு
விழாவிற்குச் செல்ல தமிழர் தலைவர் அணியமாகி இருந்த வேளையில் விழா வில் பங்கேற்க வந்த சிறப்பு விருந்தினர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா, தமிழர் தலைவரைச் சந்திக்க அறைக்கு வந்தார். சென்ற முறை குண்டூரில் நடை பெற்ற சமூகநீதி மாநாட்டிலும், தமிழர் தலைவருடன் கலந்து கொண்டார்.
சமூகநீதியின் நடைமுறைக்கு - குறிப் பாக பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட் டுக்கான சட்ட ரீதியான வழிமுறைக்கு தமிழர் தலைவரின் கருத்தினை ஆலோ சனையினைப் பெற்றார். கிரீமிலேயர் பற் றிய சில நுணுக்கங்களையும் அவைகளை நேர்கொள்வதற்கான வழிமுறைகளையும் தமிழர் தலைவரிடம் கேட்டறிந்தார்.
விழா அரங்கத்திற்கு தமிழர் தலை வரை அழைத்துச் செல்ல ஏற்பாட்டாளர் கள் வந்த நிலையில், தமிழர் தலைவரும், நீதியரசர் ஈசுவரய்யா அவர்களும் ஒன்றாக விழாக் கூட்டத்திற்கு கிளம்பினர். நீதியரசர் வருகை தந்த கார் தேசியக் கொடியுடன் விடுதியில் காத்திருந்தது. இருவரும் சேர்ந்து அரசு வாகனத்தில் செல்லலாமே என நீதியரசர் தமிழர் தலைவரை வேண் டினார். அரசு அளித்த வாகனத்தில் நீங் கள் வருவது முறையாக இருக்கும்; நான் விழா ஏற்பாட்டாளர்களின் காரில் வந்து விடுகிறேன் என கூறி தமிழர் தலைவர் விழா அரங்கத்திற்கு கிளம்பினார்.

அய்தராபாத்- சமூக நீதிப் போராளிகளின் சங்கமத்தில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் நெறி வார்ப்பு (3)

பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா - தமிழர் தலைவரின் பங்கேற்பும் - பயன்பாடும்

தொகுப்பு
வீ.குமரேசன்


பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா
அய்தராபாத், பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் பல்வேறு சமூகநீதி அமைப்பினரின் பங்கேற்புடன் மாலை 6 மணிக்குத் துவங்கியது. நகரின் மய்யப்பகுதியில் அமைந்துள்ள ரவீந் திர பாரதி அரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆடல், பாடல் நிகழ்ச் சிகள் வருகை தந்தோரை மகிழ்ச்சிப் படுத்தின; சமூக நீதி உணர்வினை ஊட்டின. சமூகத்தில் நிலவிடும் பரம் பரைத் தொழில்களை - தந்தை செய்த தொழிலை மகன் செய்திடும் - காட்சி வடிவில் மேடையில் நடித்துக்காட்டினர். பெண் அடிமைத்தனத்தை  மேடையில் காட்சிப்படுத்தினர். இதற்குப் பின்னணி யில், எழுச்சி மிகு சமூகநீதிப் பாடல் களை தெலுங்கு மொழிக்குரிய சிறப் பான - இனிமையும் உணர்வும் கலந்து சமூகநீதி ஆர்வலர்கள் பாடினர். கலை நிகழ்ச்சி முழுவதும் அரங்கத்தில் அமர்ந்திருந்தோரை கொள்கை வயப் படுத்தி எழுச்சியுறச் செய்தன.
கலை நிகழ்ச்சி முடிந்ததும், ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. மேடையில் பின்பதாகையில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜோதி ராவ் பூலே, சிறீநாராயணகுரு, சாகு மகராஜ் ஆகியோரது படங்கள் பதிக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சியின் தொடக்க மாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த சமூகநீதி முன்னோடிகள் ஜோதிராவ் பூலே மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த சமூக நீதித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரையும் மய்யத்தின் நிறு வனர் தலைவர் டி.தேவேந்தர் கவுடு வரவேற்று உரையாற்றினார். கடந்த ஓராண்டு காலத்தில், மய்யம் ஆற்றிய சமூகநீதிக்கான பணிகளைப் பட்டிய லிட்டு பேசினார். விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர் அனைவருக் கும் சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்யப்பட்டது. பின்னர் பிற்படுத்தப் பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு மலரை தமிழர் தலைவர் மேடையில் வெளியிட்டார். (மலரில், மய்யத்தின் பணிகளைப் பாராட்டி, தமிழர் தலைவர் முன்னமே அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருந்தது).
ஆந்திர மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த பெரிய தலைவர்கள், கட்சிக் கண்ணோட்டம் இன்றி சமூகநீதித் தளத்தில் ஒன்றாக மேடையில் அமர்ந்திருந்தனர். காங் கிரசுக் கட்சியினைச் சார்ந்த வி.அனுமந் தராவ், நாடாளுமன்ற உறுப்பினர் ராபோல் ஆனந்த பாஸ்கர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன் னம் பிரபாகர், மது யாசகி,  மற்றும் தலித் சேனா தலைவர் ஜே.பி.ராஜூ உரை யாற்றிய பின்னர் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா உரையாற்றி னார். சமூகநீதி நடைமுறைக்கு ஆணை யம் அரசுக்கு அளித்து வரும் அறிவுரை சார்ந்த ஆலோசனைகளையும், அவை நடைமுறை ஆக்கம் ஆனதையும் விரிவாகக் கூறினார்.
நிறைவாக தமிழர் தலைவர் நீண்ட தொரு சொற்பொழிவினை ஆங்கிலத் தில் வழங்கினார். சமூகநீதிப் பயணத்தில் நடந்து வந்த பாதை, நடப்பு நிலை, எதிர்காலச் சவால்கள் என வரலாற்று விளக்கமாக அளித்தார். பெரியார்தம் இயக்கம், இந்திய நாட்டளவில் ஆற்றிய சமூகநீதிக்கான பணிகளை, தமிழ்நாட் டளவில் சமூகநீதியில் முன்மாதிரியாக எடுத்த முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அரங்கம் முழுவதும் அமைதியும் ஆர்வமும் கலந்த பிணைப் பில் தமிழர் தலைவரது பேச்சினை மிகவும் உன்னிப்பாகக் கேட்டனர். உரைச்சிறப்பு மற்றும் உரை ஆற்றிய பாங்கின் பாராட்டு வெளிப்பாடாக தமிழர் தலைவர் பேசி முடித்ததும் அரங்கத்தில் அமர்ந்திருந்தோர் கூட்ட நன்றியுரை கூறி முடிவு பெறுவதற்கு முன்பாகவே மேடையில் ஏறி தமிழர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ஒலி பெருக்கியில் பாராட் டுவோர் பற்றி அறிவித்தும், அறிவிக்கா மலும் தமிழர் தலைவருக்கு மாலையும், சால்வையும் அணிவித்தனர். (தமிழர் தலைவரது பேச்சு 8.9.2015 நாளிட்ட விடுதலையில் வெளிவந்துள்ளது) விழா ஏற்பாட்டாளர்கள், மக்கள் வெள்ளத்தி லிருந்து தமிழர் தலைவரை மீட்டெடுக்க மிகவும் இன்னல்பட்டனர்.
அய்தராபாத் தமிழ்ச் சங்கத்தினர் சந்திப்பு
சமூகநீதி விழாவில் அய்தராபாத் நகர் தமிழ்ச்சங்கத்தினர் திரு. சாய்காந்த் தலைமையில் தமிழர் தலைவரைச் சந்தித்து, பாராட்டி மகிழ்ந்தனர். பல தலைமுறைகளாக அய்தராபாத் நகரில் தமிழர்கள் வாழ்ந்து வருவதையும் எடுத்துக்கூறினர். தமிழ்ச்சங்கத்தினரை தேவேந்தர் கவுடு அவர்களிடம் தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தி, அவருட னான தொடர்பினை தொடர்ந்திடப் பரிந்துரைத்தார். விழா முடிந்தும், தமிழர் தலைவர் அரங்கத்திலிருந்து கிளம்புவ தற்கு அரைமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது.
சமூகநீதிச் சுடரொளி நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமியின் இல்லத்தில் தமிழர் தலைவர்
விழா அரங்கத்திலிருந்து அனை வரிடமும் விடைபெற்ற தமிழர் தலை வரை சமூகநீதிச் சுடரொளி நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் இல்லத் திற்கு அவரது மருமகன் கணினிப் பொறியாளர் சுதாகர் அழைத்து சென்றார். நீதியரசரின் துணைவியார், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் தமிழர் தலைவரை பெரிதும் மகிழ்ந்து வர வேற்றனர். குடும்பத்தினர் அனைவரிட மும் தமிழர் தலைவர் நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் சமூகநீதி நிகழ் வுகள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களை நினைத்துப் பார்க்காமல் நடந்திட முடியாது. சமூகநீதி அமைப் புகள் ஆந்திராவில் சீரிய செயல் பாட்டுடன் இருப்பதற்கு அடித்தள மிட்டவர் நீதியரசர் சுவாமி அவர்கள். இரவு உணவினை சுவாமி அவர்களின் இல்லத்திலேயே தமிழர் தலைவர் அருந்தினார். சுவாமி அவர்கள் காலத் தில் நிலவிய அதே விருந்தோம்பல் அவரது குடும்பத்தினரிடம் இன்றும் நீடித்துவருகிறது. கொள்கை உறவு களுக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடைவெளி இல்லாத நிலையே நிலவியது. இரவு நேரமாகிவிட்டதால், குடும்பத்தினர் அனைவரிடமும் தமிழர் தலைவர் விடைபெற்று விடுதிக்குத் திரும்பினார். தமிழர் தலைவர் ஒவ் வொரு முறையும் அய்தராபாத் வருகை தரும்பொழுது, முழுமையும் தமிழர் தலைவருடன் இருப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் நீதியரசர் சுவாமியின் மருமகன் சுதாகர் அவர்கள். பெங்க ளூரில் பணி ஆற்றி வந்தாலும் தமிழர் தலைவரின் அய்தராபாத் நகர் வருகை, அவரது  நிகழ்ச்சி பங்கேற்பினை ஏற் பாட்டாளர்களுக்கு இயல்பாக்குவதில் சுதாகர் அவர்களின் பங்கு உறுதுணை யாக இருந்தது.
விடுதிக்குத் திரும்பியதும் பயண உடைமைகளை சரி செய்துவிட்டு தமிழர் தலைவர் தூங்கச் சென்றார். காலையில் 6 மணிக்கு எழுநது காலைக் கடன்களை முடித்து விட்டு 7.30 மணிக்கெல்லாம் காலை உணவினை முடித்துக் கொண்டார். தேவேந்திர கவுடு அவர்களின் மகன் விஜயேந்தர் சரியாக 8 மணிக்கு விடுதிக்கு வந்து தமிழர் தலைவரை விமான நிலையத் திற்கு அழைத்துச்சென்றார். அன்று காலை வந்த நாளிதழ்களில்  முதல் நாள் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி பற்றிய செய்திகள் ஒளிப்படத்துடன் வெளியிடப்பட்டு இருந்ததை தமிழர் தலைவரிடம் காண்பித்தனர். விமான நிலையம் வரும் வரை ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று ஆற்றிய உரை பற்றியே வருகை தந்தோர் பேசிக் கொண்டிருந்தனர் எனக்கூறி நன்றி தெரிவித்தார். விமான நிலையத்தில் வழியனுப்பிட வந்தோ ரிடம் தமிழர் தலைவர் விடை பெற்றார். பயணச்சீட்டு, பாதுகாப்பு சோதனை முடித்து பின்னர் விமானத்தில் சரியாக 9.45 மணிக்கு அமர்ந்து, 10 மணிக்கு கிளம்பிய விமானம் சரியாக 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
பொதுவாக முற்பகல் அலுவலக நேரத்தின்பொழுது, வெளியூரிலிருந்து தமிழர் தலைவர் சென்னைக்கு திரும்பி னால் நேராக பெரியார் திடலுக்கு வருவதுதான் அவர் வழக்கம். அன்று காலை அய்தராபாத்தில் இருக்கும் பொழுதே பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் தாம் டில்லிக்கு பயணமாகச் செல் வதைத் தெரிவித்திருந்தார். மோகனா அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவலைத் தெரிவித்திருந்த நிலையிலும், விமான நிலையத்தி லிருந்து நேராக பெரியார் திடலுக்கு கிளம்பிட முனைந்த தமிழர் தலைவர், அடையாறு வீட்டுக்குச் செல்ல கேட்டுக் கொண்டார்கள். அம்மா உடல்நலமின்றி  வீட்டில் தனியாக உள்ளார். நாளை பெரியார் திடலுக்கு வருகை தரலாம். அவசர வேலைகள் மற்றும் தமிழர் தலைவரின் நேரடிப் பார்வையில் நடை பெற எதுவும் இல்லை என எடுத்துச் சொல்லப்பட்டு விமான நிலையத்திலி ருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட் டார். வீட்டிற்குச் செல்ல முற்படும் பொழுது, அய்தராபாத் விமான நிலைய ஊழியரின் சேவை பற்றி உடன் கடிதம் எழுதிவிடுங்கள் எனப் பணித்து இல்லத் திற்கு கிளம்பினார்.
(அடுத்த நாளே அய்தராபாத் விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர் அளித்த சேவை பற்றிய கடிதம், விமான நிறுவனத்தின் தலைவருக்கு அனுப்பப் பட்டது. தமிழர் தலைவரின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து தங்களது விமானத் திலேயே வரும் நாள்களில் தமிழர் தலைவர் தம் பயணத்தை தொடர்ந்திட வேண்டும் என விமான நிறுவனத்தினர் வேண்டி கடிதம் அனுப்பினர
(நிறைவு)
விடுதலை,22-24.10.15
தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை வற்புறுத்தி மாபெரும் சமூகநீதி மாநாட்டினை திராவிடர் கழகம் நடத்திடும்!
அய்தராபாத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்ய ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்து மய்யத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசினை மய்யத்தின் தலைவர் டி.தேவேந்திர கவுடு வழங்கினார். மாண்பமை விருந்தினர் நீதியரசர் வி.ஈசுவரய்யா அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மய்யத்தின் தலைவர் டிதேவேந்திர கவுடு அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் (அய்தராபாத், 6.9.2015)
அய்தராபாத், செப்.8- மாறிவரும் உலகமயமாக்கல் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் முழுமையான அதிகாரத் துவம் என்பது அரசுத் துறைகளில் மட்டுமன்றி, வளர்ந்து வரும் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்படுவதில்தான் சாத்தியப்படும் என அய்தராபாத் நகரில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சமூகநீதி எழுச்சிக்கு அறைகூவல் விடுத்தார்.
அய்தராபாத்தில் சமூகநீதி விழா!
தெலங்கானா மாநிலம் அய்தராபாத் நகரில் பிற்படுத்தப் பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் (Backward Class Centre for Empowerment) முதலாம் ஆண்டு விழா செப்டம்பர் 6 ஆம் நாள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று சமூகநீதி நிலைமை பற்றி பேருரை ஆற்றினார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு:
தமிழர் தலைவர் எழுச்சியுரை
சமூகநீதி என்பது வெறும் சொல்லாடல் அல்ல; ஏட்டுக் கோட்பாடும் அல்ல; ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் விடியலுக்கு, அவர்தம் மேம்பாட்டுக்கான கொள்கைக் கோட்பாடே சமூகநீதி. சமூகநீதியினை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட கடைப்பிடிக்கப்படும் ஒரு வழிமுறையே இட ஒதுக்கீடு. இந்திய நாடு அரசியல் விடுதலை அடைவதற்கு முன்பே சென்னை இராஜதானியில் (அன்றைய ஆந்திர, கருநாடக மற்றும் கேரளப் பகுதிகளை உள்ளடக்கியது) சமூகநீதிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. 1920-களில் அரசு அதிகாரத்திற்கு வந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென் இந்திய நல உரிமைச் சங்கம் (பின்னாளில் நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது) ஒடுக்கப் பட்ட மக்களுக்கான சமூகநீதியினை வழங்குவதில் முனைப் பாக இருந்து பலவித முன் முயற்சிகளை எடுத்தது. அம் முயற்சிகளின் அடிப்படையில் 1928 ஆம் ஆண்டு முதல் வகுப்புரிமை ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) பிறப்பிக்கப்பட்டது. விடுதலை அடைந்து, அரசமைப்புச் சட்டம் அமல்படுத் தப்பட்ட நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் அதுவரை பெற்றுவந்த இட ஒதுக்கீடு (கல்வியில்) செல்லாது என 1950 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உடனே சென்னை இராஜதானியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மாபெரும் போராட்டத்தினை தந்தை பெரியார் நடத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையினை, காத்திட தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து அரச மைப்புச் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது. வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் மட்டுமே செயல்படுத்தி வந்த நிலையில், 1980 இல் மண்டல் குழுப் பரிந்துரையின்பேரில்  முதன்முதலாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மய்ய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட் டினை வழங்கிட அன்றைய பிரதமர் வி.பி.சிங் ஆணை பிறப்பித்தார்.
பின் மய்ய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
இப்படி படிப்படியாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் எண் ணிக்கை அளவில் இட ஒதுக்கீடு முழு விழுக்காடு அளிக்கப் படவில்லை. அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடும் முழுமையாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்காத வகையில் உயர் ஜாதியினர், பல்வேறு தடைகளை அன்றும் ஏற்படுத்தினர்; இன்றும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல் - அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது
இட ஒதுக்கீட்டிற்கான தகுதி என்பது சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கிய நிலையே அடிப்படை என்பது அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் புறம்பாக பொருளாதார அளவுகோலை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக கிரிமிலேயர் எனும் விதியையும் உருவாக்கி விட்டனர். பொருளாதார அளவுகோல் என்பது நடைமுறையில் சாத்தி யப்படாது என அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்கியபொழுது அரசமைப்பு சட்ட அவையில் ஜவகர்லால் நேரு தெரிவித்து, பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. நேரு அவர்கள் பொருளாதார அளவுகோல் என்பது நீட்சியுள்ள அளவுகோல் (Elastic Scale); நிலையான அளவுகோல் அல்ல; மாறும் தன்மை வாய்ந்தது தெளிவாகவே அறிவித்தார்.
அவ்வப்போது சமூகநீதிக்கு, நேரடியான பொருளாதார அளவுகோல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றங்கள் அதனை தள்ளுபடி செய்ததும் உண்டு. 1980 இல் தமிழ்நாட்டில் அன்றைய முதலமைச்சர்  எம்.ஜி.ஆர். அவர்கள் ரூ.9000/- ஆண்டு வருமானத்திற்கும் குறைவாக உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகம், பிற அரசியல் கட்சிகளின் துணையுடன் பிற்படுத்தப்பட்ட அமைப்பின ருடன் நடத்திய  பொருளாதார அளவுகோல் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக அப்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியை எம்.ஜி.ஆர். சந்தித்தார். இட ஒதுக்கீட்டிற்கான பொருளாதார வரம்பு ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் மொத்த இட ஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு என எதுவும் அரசமைப்புச் சட்டத்தில் இல்லை. இருந்தும் உச்சநீதிமன்றம் வழக்கிற்கு தொடர்பில்லாமல் தெரிவித்த கருத்தின் (Obiter Dictum) அடிப்படையில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50 விழுக்காட்டிற்குமேல் செல்லக்கூடாது என புதிய நடை முறையினை சமூகநீதி எதிர்ப்பாளர்கள் மேற்கொண்டு விட்டனர்.
தமிழ்நாடு சமூகநீதித் தளத்தில் முன்னேறிய மாநிலமாக மொத்த இட ஒதுக்கீடு விழுக்காடு 69 என நடைமுறைப்படுத்தி வந்த நிலையில், மொத்த இட ஒதுக்கீடு விழுக்காடு 50-க்குமேல் அளிக்கக்கூடாது என சமூகநீதி எதிர்ப்பாளர்கள் நீதிமன்றம் சென்ற வேளையில், திராவிடர் கழகம் அளித்த ஆலோசனையின் பேரில் இட ஒதுக்கீட்டிற்கு என ஒரு தனிச் சட்டம் (அரசமைப்புச் சட்டம் விதி 31-சியின்படி) மாநில சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. மேலும் அந்த சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலோடு அரசமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அட்டவணையிலும் இடம்பிடித்தது. இதற்காக 76 ஆம் முறையாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இதனால் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு நீதிமன்ற ஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் மொத்த இட ஒதுக்கீடு 69 விழுக்காடு என நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டு விதிமுறை (Tamil Nadu Formula) என பிற மாநில சமூகநீதியாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.
உலகமயமாக்கல் நடைமுறையில் -
இட ஒதுக்கீடு சுருங்குகிறது
இதுநாள்வரை ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்று வரும் இட ஒதுக்கீடு நடைமுறைகள் மய்ய, மாநில அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படு வதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய விகிதாசார அளவில் இட ஒதுக்கீட்டினை அரசுத் துறைகளில் பெறாத சூழலில், உலக மயமாக்கல் நடவடிக்கைகளால் அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகின்றன. சமூகநீதித் தத்துவத்தின் நடைமுறைக்கு மறைமுகமான எதிர்ப்பு நடவடிக்கை இது. தனியார் துறை என்றாலும், அரசு உதவியில்லாமல், மக்களின் வரிப் பணத்திலிருந்து பயன் பெறாமல் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் செயல்பட முடியாது. தனியார் நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை வலியுறுத்திட மாபெரும் சமூகநீதி மாநாடு
ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையான அதிகாரத்துவம் பெறுவது, தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில்தான் சாத்தியப்படும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த - தனிச் சட்டம் உருவாக்கப்படவேண்டும். இதற்காக அரசினரை வலியுறுத்தி, திராவிடர் கழகம் சமூகநீதியில் ஒத்த கருத்துள்ள அனைத்து தேசிய மாநில, அரசியல் கட்சிகள், நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத் தப்பட்ட அமைப்புகள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெகுவிரைவில் சமூகநீதி மாநாட்டினை நடத்திடும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்துவம் என்பது தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்தான் ஏற்படும். இதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, ஒருங்கிணைத்து, சமூகநீதித் தளத்தில் ஒருமுகப்படுத்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களை வென்றேடுப்போம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டார்.
அய்தராபாத் சமூகநீதி விழா
அய்தராபாத் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள ரவிந்திர பாரதி அரங்கத்தில் மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது. சமூக நீதியின் தற்போதைய நிலவரம் குறித்து தோழர்கள் உணர்ச்சிமிகு பாடலுடன் கூடிய ஓரங்க காட்சி விளக்கங்களுடன் கலை நிகழ்ச்சி நடந்திட விழா துவங்கியது. தெலுங்குதேச கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத் துவ மய்யத்தின் நிறுவனத் (Backward Classes Centre for Empowerments) தலைவர் டி.தேவேந்தர் கௌடு, பிற்படுத் தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் (National Commission for Backward Classes) தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா, பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமைப்பின் மேனாள் தலைவர் அனுமந்தராவ், காங்கிரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராபோல் ஆனந்த பாஸ்கர், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் பொன்னம் பிரபாகர் மற்றும் மதுயாசகி, தலித் சேனா தலைவர் ஜே.பி.ராஜு, உருது எழுத்தாளர் ஜாகித் அலிகான் மற்றும் ஏராளமான சமூக நீதி அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சமூக நீதி முன்னணித் தலைவர்கள் சிலைக்கு மரியாதை
விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த சமூக நீதித் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மராட்டிய மாநில ஜோதிபா பூலே சிலைக்கும்,  பாபா சாகிப் அம்பேத்கர் சிலைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மய்யத்தின் தலைவர் டி.தேவேந்தர் கவுடு
விழாவிற்கு வருகை தந்த தலைவர்களை, சமூக நீதி அமைப்பின் உறுப்பினர்களை, வருகை தந்தோரை வரவேற்று மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கௌடு உரையாற்றினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாளில் தொடங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் ஓராண்டு பணிகளைப் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். பல்வேறு நிலைகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத் திடும் வகையில் மய்யம் ஆற்றிவரும் பயிற்சி முகாம்கள், சிறப்புக் கூட்டங்கள் பற்றி விளக்கியதோடு வரும் காலங்களில் இத்தகைய ஒருங்கிணைப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டு விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தமிழர் தலைவருக்கு மரியாதை, பாராட்டு, நினைவுப் பரிசு
சமூக நீதி மய்யத்தின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்று சிறப்பானதொரு கருத்துரை ஆற்றிய தமிழர் தலைவருக்கு, மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கௌடு சால்வை அணிவித்துப் பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கினார்.
நீதியரசர் வி.ஈசுவரய்யா
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.ஈசுவரய்யா தமது உரையில் குறிப்பிட்டதாவது:
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. விடுதலைப் போராட்டத்தின் பொழுது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் சமூக நீதி உரிமைகள் பற்றி வலியுறுத்தப் படவில்லை.
விடுதலை பெற்ற பின்பு அரசமைப்புச் சட்டத்திலேயே முகவுரையில் சமூக நீதி வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு சமூக நீதி என்பது பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளுக்கு முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மரபினர் பற்றி அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட அளவிற்கு பிற்படுத் தப்பட்ட சமுதாய வகையினர் பற்றி தெளிவு படுத்தப்பட வில்லை. ஆனால் விதி 340இன்படி, தேசிய பிற்படுத்தப்பட் டோர் மேம்பாட்டுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர் களுக்கான அதிகாரத்துவம் அளித்திட வகை ஏற்படுத்தப் பட்டுள்ளது. மற்றும் விதி 16(4)இன்படி வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மக்களுடன் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யப் பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு உரிமைகள் சமூக ரீதியில், கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்ட நிலையினருக்குத்தான் என அரசமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. இந்நிலையில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய நிலை வலியுறுத்தப்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது. தற்சமயம் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்படும் கிரீமி தளம் (Creamy layer)
ஒருவகையில் பொருளாதார அளவுகோல் சார்ந்ததே. இது அரசமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீடு அளவுகோலுக்கு புறம்பானதே. பிற்படுத்தப்பட்டோருக்கான இடதுக்கீட்டில் மய்ய அரசு வலியுறுத்தும் கிரீமி தளத்திலுள்ள வருமான உச்ச வரம்பினை அதிகப்படுத்தி, பெரும் அளவில் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினர் இடஒதுக்கீடு பெறுகின்ற வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தொடர்ந்து அறிவுரை வழங்கி அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பதை 10 லட்சம் வரை உயர்த்தி ஆணையம் பரிந்துரைத் துள்ளது. இன்றைய நடைமுறையில் 6 லட்சம் என வருமான வரம்பு உள்ளது. இந்த வருமான வரம்பு கணக்கீட்டில் மாத சம்பளம் சேர்க்கப்படக் கூடாது என்று ஆணையம் தெளிவாக வலியுறுத்தி அதற்கான அரசு உத்தரவுகளும் பிறப்பிக்கப் பட்டுள்ளன.
தற்பொழுது பல முன்னேறிய சமுதாயத்தினர் இடஒதுக் கீடு பெற வேண்டி, தம்மை பிற்படுத்தப்பட்டோராக அறிவித் திட வேண்டுகின்றனர். அதற்காகப் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். சமூக, கல்வி நிலைகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வாய்ப்புகள் அளிக்கப்படும்.
இட ஒதுக்கீட்டிற்காக பிற்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் தலைகீழ் இடஒதுக்கீடு (reverse reservation)
என்பது சட்டத்திற்குப் புறம்பானது. பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் தமக்குள்ள சட்டம் அளித்திடும் உரிமைகளைப் பெற கவனமாக விழிப்புணர்வுடன் இருந்து பலனடைய வேண்டும்.
- இவ்வாறு நீதியரசர் வி.ஈசுவரய்யா பேசினார்.
அனுமந்த ராவ்
நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினர் அமைப் பின் மேனாள் தலைவர் அனுமந்தராவ் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
மண்டல் குழு பரிந்துரைத்து பல ஆண்டுகள் கழித்தே மய்ய அரசுப் பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27 விழுக்காடு என்னும் உத்தரவு நடைமுறைக்கு வந்தது. பின்னர் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் (IIITs, IIMs & IIMs)
கல்வி பயில பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 27 விழுக்காடு இடஒதுக்கீடு என உத்தரவு இருந்தாலும், நடைமுறையில் ஒட்டுமொத்தமாக 7 முதல் 8 விழுக்காடு அளவில்தான் பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற்றுள்ளனர்.
இதற்கு அடிப்படைக் காரணம் கிரீமிலேயர் அளவுகோல் தான். பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயர் அளவுகோல் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதே. இந்நிலையினைப் போக்கிட பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் தனித்தனியாக போராட்டம் நடத்திவருவதை விடுத்து ஒன்றுபட்ட அளவில் செயல்பட வேண்டும்; போராட வேண்டும். பிற்படுத்தப்பட்டோரிடம் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வு பெருகிப் பரவிட வேண்டும். பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு 27 விழுக்காடு என்பது மக்கள் தொகை அடிப்படையில் மிகவும் குறைவு. இந்த 27 விழுக்காடு அளவும் முழுமையாகக் கிடைக்காத வகையில் பிற்படுத்தப்பட்டோர் நிலை உள்ளது. இந்த நிலைமைகள் மாற வேண்டும். சமூக நீதி உரிய அளவில் உரிய மக்களுக்குக் கிடைத்திட வேண்டும்.
- இவ்வாறு அனுமந்தராவ் பேசும்பொழுது குறிப்பிட்டார்.
தலித் சேனா ஜே.பி.ராஜூ
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபினர் மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினர், அரசியல் கட்சிகளின் அடிப்படையில் பிரிந்து உள்ளனர். அரசியல் கட்சி எனும் கூண்டு ஒடுக்கப்பட்ட மக்களை அதன் தலைவர்களைப் பிரித்து வைத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் அரசியல் கட்சி எனும் கூண்டில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே தளம் சமூகநீதித் தளம். எனவே சமூக நீதித் தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து செயல்படும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வு, உறுதிநிலை ஒடுக்கப் பட்ட மக்களிடமும், தலைவர்களிடமும் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் தந்தை பெரியார்தம் சமூக நீதிக்கான கொள்கை வழித்தடத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பெரியாரது சமூக நீதிக் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்திட எடுத்துவரும் முயற்சிகளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஒரு வழிகாட்டும் ஒளி விளக்காகவே விளங்கி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூகநீதித் தளத்தில் பல சாதனைகளை வென்றெடுப்போம்.
இவ்வாறு தலித் சேனா அமைப்பின் தலைவர் ஜே.பி. ராஜூ அவரது உரையில் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவருக்கு வருகை தந்தோரது அன்பான வெளிப்பாடு
தலைவர்கள் அனைவரும் உரையாற்றிய பின்னர், தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார். சமூக நீதித் தளத்தின் ஆரம்பக்கால நிலைமைகள், கடந்து வந்த பாதைகள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், இவற்றுக்கிடையே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைத்து செயல்படுவதனால் கிடைத்திடும் ஆக்கம் ஆகியன பற்றி எழுச்சியுடன் ஆங்கிலத்தில் ஆசிரியர் உரை ஆற்றி முடித்தவுடன் உரையாற்றியதை செவிமடுத்த வருகையாளர்கள் மேடைக்கு பெரும்திரளாக வந்து மகிழ்ச்சியினையும், ஆதரவினையும் தெரிவிக்கும் வகையில் சூழ்ந்து கொண்டனர். பல்வேறு பிற்படுத்தப்பட்ட அமைப்பினர் மற்றும் அய்தராபாத் மாநகர தமிழ்ச் சங்கத்தினர் தமிழர் தலைவருக்கு மாலை, சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். விழா நிகழ்ச்சிகளை பிற்படுத்தப் பட்டோருக்கான மய்யத்தின் பொறுப்பாளர் டி.ஜெயப் பிரகாஷ் தொகுத்து வழங்கினார்.
விழா நாளன்று முற்பகலில் அய்தராபாத் - பிற்படுத்தப் பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார். மய்யத்தின் செயல்பாடுகள் பற்றி அதன் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கவுடு எடுத்துரைத் தார். பிற்படுத்தப்பட்ட அமைப்பினர், பொறுப்பாளர்கள் மிகப் பலர் அவ்வமயம் வருகை தந்திருந்தனர்.
சமூகநீதிக்கான விழாவிற்கு பெரும் திரளாக வருகை தந்து  சிறப்பித்தோர்.

1. நாடாளுமன்ற உறுப்பினர் - பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மேனாள் தலைவர் வி.அனுமந்தராவ் அவர்களுடன் மகிழ்ச்சித் திளைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர். உடன் பிற்படுத்தப்பட்டேர் தேசிய ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வி.ஈஸ்வரய்யா, விழா மேடையில் நிறுவப்பட்ட சமூக நீதித் தலைவர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
2. அய்தராபாத் - பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா மலரினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிடுகின்றார். உடன் சமூக நீதித் தலைவர்கள் (இடமிருந்து வலம்) பொன்னம் பிரபாகர் (மேனாள் எம்.பி.), வி.அனுமந்தராவ் (நாடாளுமன்ற உறுப்பினர் -பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மேனாள் தலைவர்), மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்தர் கவுடு (எம்.பி.),
தமிழர் தலைவர் ஆசிரியர், நீதியரசர் வி.ஈசுவரய்யா, ராபோல் ஆனந்த பாஸ்கர் (நாடாளுமன்ற உறுப்பினர்). அய்தராபாத் - பிற்படுத்தப்பட்டோருக்கான அதிகாரத்துவ மய்யத்தின் நூலகத்திற்கு திராவிடர் கழகம் வெளியிட்ட நூல்களை நன்கொடையாக தமிழர் தலைவர் வழங்கினார். மய்யத்தின் நிறுவனத் தலைவர் டி.தேவேந்திர கவுடு பெற்றுக் கொள்கிறார்.
3. அய்தராபாத் விமான நிலையத்தில் தமிழர் தலைவரை மய்யத்தின் சார்பாக டாக்டர் வினையேந்தர் பூங்கொத்து அளித்து வரவேற்கிறார். பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தினை தமிழர் தலைவர் பார்வையிடுகிறார்.
4. ஆண்டு விழாவில் நடைபெற்ற சமூக நீதிப் பாடல் நிகழ்ச்சிகள், சமூக நீதி வேண்டி குலத்தொழிலை எதிர்த்து வடிவமைக்கப்பட்ட ஓரங்க காட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி.
5. அய்தராபாத் - பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துவ மய்யத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் எழுச்சி உரை ஆற்றுகிறார்.
விடுதலை,8.9.15