ஞாயிறு, 5 மே, 2019
அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு-உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன், 13 மார்ச், 2019
அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு
உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 9 தமிழக அரசின் அனைத்து துறைகளி லும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட் டுள்ளது. கோவையில் உள்ள பள் ளியின் இளநிலை உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டின்படி பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள் ளிக்கல்வித்துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசா ரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதி, தாக்கல் செய்யப்பட்ட அறிக் கையில் போதுமான தகவல்கள் இல்லை.மேலும் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி அரசின் பிற துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுவ தில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு 8 வார காலத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங் குவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து துறை களுக்கும், பொதுத்துறை நிறு வனங்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 9.3.19