பக்கங்கள்

திங்கள், 15 மார்ச், 2021

தாகத்திற்கு தண்ணீர் அருந்திய இஸ்லாமிய சிறுவனை அடித்து கையை உடைத்த ஹிந்து ஏக்தாசங் அமைப்பினர்

 

 காசியாபாத்(உபி) மார்ச். 14  தாகத்திற்கு தண்ணீர் குடித்த சிறுவனின் கையை உடைத்த ஹிந்து ஏக்தா அமைப்பினர் இந்துக்கள் அனைவரும் இதே போன்று செய்யவேண்டும் என்று சமூகவலை தளத்தில் எழுதியுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியா பாத் திற்கு அருகில் உள்ள தவுசா என்ற கிராமத்தில் தாகத்திற்காக இஸ்லமிய சிறுவன் கோவிலில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்தார்.  அப்போது அங்கு இருந்த அஸ்வினி குமார் என்ற 'ஹிந்து ஏக்தா சங்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர் இந்து கோவில் தண்ணீரை ஏன் குடித்தாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர் நான் அருகில் உள்ள ஊரில் இருந்து வேலைக்காக நடந்து வந்தேன் தண்ணீர் தாகம் எடுத்தது ஆகையால் குடி நீர் குழாயில் இருந்து தண்ணீர் குடித்தேன் என்று கூறினார். அதற்கு அவர் உன் பெயர் என்ன என்று கேட்க சிறுவன் பெயரைக் கூறியதும் ஒரு இஸ்லாமியர் எப்படி இந்து கோவிலுக்குச் சொந்தமான குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் குடிக்கலாம் என்று கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதை அருகில் உள்ள அந்த அமைப் பைச் சேர்ந்த ஒருவர் காணொலியாக எடுத்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் கையை முறுக்கியதில் அந்தச் சிறுவனின் வலது கை மூட்டு பிசகி விட்டது, வலியில் துடித்த அந்தச் சிறு வனை அவர்கள் அருகில் உள்ள வயல் வெளியில் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.  அதன் பிறகு அங்கு சாலையில் சென்று கொண்டு இருந்த சிலர் அந்தச்சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் சிறுவனின் உறவினர்கள் புகார் அளித்தும் புகாரை எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் மேலும் சிறுவனின் மீது திருட்டுவழக்கு போடுவ தாக கூறி மிரட்டவும் காசியாபாத் காவல் ஆணையரிடம் இது தொடர் பாக சிறுவன் வசிக்கும் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சென்று புகார் மனுவைக் கொடுத்தனர். இதனை அடுத்து உள்ளூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யுமாறு காசியாபாத் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதனை அடுத்து தாக் குதல் நடத்திய ஹிந்து ஏக்தா சங் அமைப்பினர் தப்பி அருகில் உள்ள பீகார் மாநிலத்திற்கு ஓடி விட்டனர்.

காவல்துறை ஆணையரின் உத்தர விற்கு இணங்க தனிப்பிரிவு அமைத்து பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரா பாகல்பூர் பகுதியில் பதுங்கி இருந்த அஷ்வினி குமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரை காவல்துறை கைது செய்து காசியாபாத் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகிறது,

ஆனால் இந்த நிகழ்வை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஹிந்து ஏக்தா சங் அமைப்பினர் ஒரு இஸ்லாமியனின் கையை உடைத்து இந்து சக்தியை உலகிற்கு உணர்த்திய துணிச்சலை அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறி கையை உடைத்த அஷ்வினி குமாருக்கு பாராட்டு தெரிவித்து நாட்டைகலவரத்துக்கு உள் ளாக்க பார்க்கின்றனர்.

புதன், 3 மார்ச், 2021

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பா?


சட்டமாதீர்ப்பாஆர்.எஸ்.எஸ்கொள்கையா?

பா..அரசு முன்னிறுத்துவது எதை?

சமூகநீதியில் கை வைத்தால் கடும் விளைவு!!

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில்இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டால்பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராடும் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும்  என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு தாரை வார்க்கும் இடங்கள்!

தமிழ்நாட்டில் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 1758. இத்தனை இடங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளனஇந்த இடங்களில் 50 விழுக்காடு மத்திய தொகுப்புக்குத் தாரை வார்க்க வேண்டும்அதாவது நம் வரிப்பணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட மொத்த இடங்களில் 879 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்குச் சென்று விடு கின்றன. (அரசியல் சட்ட விதிப்படி இப்போது ஏற்பட்ட  மாறுபட்ட சூழல்படி தரவேண்டியதே இல்லைஇதை ஜஸ்டிஸ் .கே.ராஜன் எழுதிய நூலில் விளக்கியுள்ளார்).

இந்த இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாதாம்தமிழ்நாட்டிலோ பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 30 விழுக்காடும்மிகவும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 20 விழுக்காடு இடங்களும் சட்ட ரீதியாக உள்ளன.

ஆனால்தமிழ்நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் 879 இடங்களில் இவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது எத்தகைய மோசடிஇதன் காரணமாக 440 பட்ட மேற்படிப்பு இடங்களை ஆண்டுதோறும் நாம் இழந்து வருகிறோம். 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.

அகில இந்திய அளவில் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் 13,237 இந்த இடங்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:

அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 8833 இடங்கள் (ஒவ்வொரு கல்லூரியிலிருந்து 50 விழுக்காடுமற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 717 இடங்கள்தனியார் கல்லூரிகளிலிருந்து 3688.

ஆனால்கிடைக்கும் இடங்களோ!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 9550 இடங்களில் 7125 இடங்கள்பொதுப் பிரிவிற்கு (74.6 விழுக்காடுசென்றுள்ளதுஇதர பிற்படுத்தப்பட்டோ ருக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 371 - விழுக்காடு அளவில் சொல்லவேண்டுமானால்வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே!

தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.,) கிடைத்த இடங்கள் 1385 (விழுக்காட்டில் 14.5), பழங்குடியினருக்கு (எஸ்.டி.,) 669 இடங்கள் (விழுக்காடு அளவில் 7) ஒதுக்கப் பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் இந்த அளவுக்காவது இடங்கள் கிடைத்தனபிற்படுத் தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் வெறும் 3.8 விழுக்காடு என்னும் அளவுக்கு அடி மட்டத்துக்கு ஒதுக்கித்தள்ளப்பட்டுள்ள பரிதாப நிலை!

உயர்ஜாதியினருக்கே முன்னுரிமை!

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWSஎன்பவர் களுக்கு - சட்ட விரோதமாகஅவசர அவசரமாக ஒரு வாரத்திற்குள் சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலை வரின் ஒப்புதலும் பெறப் பட்டதே - அந்த உயர்ஜாதி மக்களுக்கான இடங்கள் எத்தனைத் தெரியுமா? 653. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங் களைவிட கூடுதலாக 282 இடங்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த முன்னேறிய வகுப்பினர் என்றால் யார் தெரியுமாமாதம் ஒன்றுக்கு 66 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டக் கூடிய ‘‘ஏழைகள்.''

உயர்ஜாதி என்றால்வர்க்கத்தில் கூட வருணம் எப்படி கொடிகட்டி வண்ண வண்ணமாகப் பறக்கிறது-

சட்டம் எப்படி வளைகிறது பார்த்தீர்களா?

மண்டல் குழுப் பரிந்துரையின்படி மத்திய அரசுத் துறைகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக் காடு உண்டு என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும்இந்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற் படிப்பில் அவர் களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பது பச்சைப் பார்ப்பன மனுவாதி வருணதர்மம் என்பதல்லாமல் வேறு என்ன?

பிற்படுத்தப்பட்டோர் மட்டும்

வஞ்சிக்கப்படுவது ஏன்?

இட ஒதுக்கீடுப் பிரிவினர் அனைவருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில்பிற்படுத்தப்பட் டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது எந்த வகையில் சட்டப்படியானது - சரியானது - நியாயமானது?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.உள்ளிட்ட பல கட்சிகளும் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த நிலையில்இதன் சட்டப்படியான நியாயத்தை உணர்ந்து குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று கூறியது சென்னை உயர்நீதிமன்றம்.

மருத்துவப் பட்ட மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் (மாநில அரசுக்கு உட்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்படும் 50 விழுக்காடு இடங்கள்உள்ள சுமார் 15,000 மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களில் மத்திய அரசு தொடர்ந்து ஆறாவது ஆண் டாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சட்டப்படி யான இட ஒதுக்கீட்டை அளிக்காமல்வஞ்சனை செய்து வருகிறது.

இதன் காரணமாக இதுவரை சுமார் 40 ஆயிரம் இடங்களை அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர்.

அதிக மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில்தான்!

இந்தியாவிலேயே மிக அதிகமாக அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்ஒவ்வொரு ஆண்டும் 960 இடங்களை மத்திய தொகுப்பிற்கு தமிழ்நாடு வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஆண்டுதோறும் 480 இடங்களை பிற்படுத்தப்பட்டோர்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக் காடு அடிப்படையில்இழந்து வரும் கொடுமை தொடர் கிறதுஇதன் காரணமாக 3,000 தமிழகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்கள் பறிபோயிருக்கின்றன.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த சட்ட விரோத - நியாய விரோத மத்திய அரசின் போக்கினை எதிர்த்து தி.மு.மற்றும் சில கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தன.

இதன் நியாயத்தை உணர்ந்த சென்னை உயர்நீதி மன்றம் அய்வர் கொண்ட ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் மருத்துவ சேவைகளுக்கான இயக்கத்தின் முதன்மை ஆலோசகர் (DGHSடாக்டர் பி.டி.தானி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தமிழக மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர் பி.உமாநாத்இந்திய மருத்துவக் கவுன்சில் பொதுச் செயலாளர் டாக்டர் ஆர்.கே.வியாஸ்டாக்டர் சபியா சாச்சிசஹாஇந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் செயலாளர் மற்றும் டாக்டர் பி.சீனிவாஸ்ஏடிஜி (எம்..) ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றனர்.

அந்தக் குழு தனது அறிக்கையை 2020 நவம்பர் மாதமே மத்திய அரசிடம் அளித்துவிட்டது.

மத்திய அரசு எடுத்த முடிவு என்ன?

அழுத்தம் கொடுத்ததா .தி.மு.அரசு?

மத்திய அரசு எடுத்த முடிவு என்னமாநில அரசு கொடுத்த அழுத்தம் என்னஎன்பது ஒரு புதிராகவே உள்ளது என்றாலும்கடந்த 23 ஆம் தேதி - அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான (நீட்முன் அறிக்கை ஒன்று (Prospectus) வெளியிடப்பட்டுள்ளதுஇட ஒதுக்கீடு குறித்து எந்தத் தெளிவான அம்சமும் இதில் இடம்பெறவில்லை.

கடந்தாண்டு சொன்னது என்ன?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்தாண்டு அளிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கடந்த ஆண்டு கூறியது.

அப்படியென்றால்இந்த ஆண்டு (2021-2022) நிச்சயம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருக்கிறது.

நீட்தேர்வு அறிக்கையில்

உத்தரவாதம் இல்லையே!

ஆனால், ‘நீட்தொடர்பான அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவாதமும் காணப்படாமையால் இவ்வாண்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப் படுமோ என்ற அச்சமும்ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

கூறுவது என்ன?

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:

தீர்ப்பு அளித்தநாள்: 27.7.2020

1. மாநில சட்டங்களின் அடிப்படையில் இடஒதுக் கீட்டை அளித்திடஇந்திய மருத்துவக்குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீட்டை மறுக்கவில்லை. (பாரா 85).

2. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதுபிற்படுத்தப்பட்டோர்க்கு அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்படு வதற்கு இந்திய மருத்துவக்குழுஎந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை. (பாரா 86).

3. ஓபிசி பிரிவினர்க்கான இடஒதுக்கீடு கொள்கையை சட்டமாக்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளனஅதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை. (பாரா 87)

4. யுஜி / பிஜி மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு வழங்க எந்த சட்டமோ அல்லது அரசமைப்பும் தடையாக இல்லை. (பாரா 90).

5. அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீடு இல்லை என்பதை மாநில அரசுகள் அறிந்திருப்பதாக MCI-இன் வாதம் செய்கிறது.  ஆனால்,  தமிழக அரசு இட ஒதுக்கீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதன்மூலம் MCI-இன் வாதம்  மறுக்கப்பட்டதாகி விடுகிறது.. (பாரா 95).

6. இந்திய மருத்துவக் குழுமாணவர் சேர்க்கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும்ஆனால்இடஒதுக்கீடு கொள்கை அரசாங்கத்தின் சட்டத்தின்மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவு மூலமாகவோ செய்யப்படவேண்டும். (பாரா 97)

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைப்

புறக்கணிக்க முடியாது!

7. தமிழக மனுதாரர்களின் மனுவில் ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்டுள்ளது.இதுமத்திய அரசின் யோசனைக்கு மாறாக உள்ளது. (பாரா 98)

8. சமூகநீதிசமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப் பதற்கான முந்தைய வழக்குகளில் உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை MCI மற்றும் மத்திய அரசு புறக்கணிக்க முடியாது. (பாரா 102)

9. இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அரசமைப்பு கடமைஉள்ளதுஇது இப்போது அவசியமாக உள்ளது. (பாரா 104)

10. மத்திய அரசின் சுகாதாரச் செயலாளர்எம்.சி.அய்மற்றும் தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர்இட ஒதுக்கீடு சதவீதத்தை முடிவு செய்யக் குழு அமைக் கப்படவேண்டும்.

11. செயல்படுத்துதல் தற்போதைய கல்வியாண்டில் அல்லஎதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105)

12. இடஒதுக்கீடு சதவீதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழிமுறைகளை மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்கவேண்டும். (பாரா 106)

அரசமைப்புச் சட்டப்படியும்உயர்நீதிமன்றத் தீர்ப்புப் படியும் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது திட்டவட்டமாக - தெளிவாக இருக் கும் நிலையில், 2021-2022  ஆம் ஆண்டிலும்கூட பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படு மானால்அதன் விளைவு கடுமையாகவே இருக்கும்.

.தி.மு.அரசின் மவுனம் ஏன்?

மக்கள் தொகையில் பெரும்பாலானோரான பிற் படுத்தப்பட்டோரை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதும்தமிழ்நாட்டில் உள்ள அரசு கண்டும் காணாமல் மவுனமாக இருப்பதும் (கடந்த 23 ஆம் தேதியே அறிவிப்பு வந்த நிலையில்கூடஎந்த வகையிலும் சகித்துக் கொள்ளவே முடியாத சமூக அநீதியாகும்.

சட்டமாதீர்ப்பாஆர்.எஸ்.எஸ்கொள்கையா?

சட்டத்தையும்நீதிமன்றத் தீர்ப்பையும் புறந்தள்ளிமத்திய  பா..அரசு சமூகநீதிக்கு எதிரான தனது ஆர்.எஸ்.எஸ்கொள்கைக்கே முதன்மையான இடம் கொடுத்து அதன் சித்தாந்தத்தை மட்டும் மதிக்கிறது என்பதாகவே இதனை எடுத்துக் கொள்ளவேண்டும்.

சட்டமாதீர்ப்பாஆர்.எஸ்.எஸ்கொள்கையாஎன்பதுதான் மக்கள்முன் இப்போது இருக்கும் பிரச்சினை.

விவசாயிகளின் போராட்டம்போல்

கிளர்ந்து எழுவீர்!

வேளாண் சட்டத்தை எதிர்த்து உழைப்பாளிகள் களத்தில் நிற்பதுபோலசமூகநீதிக்கு எதிரான மத்திய பா..அரசின் போக்கை எதிர்த்து மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் இந்தியா முழுவதும் பொங்கி எழுவர் என்பதில் அய்யமில்லை.

நாடாளுமன்றத்தில் உள்ள சமூகநீதியாளர்கள் கட்சிகளைப் புறந்தள்ளி மிகப்பெரிய அளவில் உரத்த குரல் எழுப்பிடுவது அவர்களின் இன்றியமையாத கடமையாகும்.

பெரும்பாலான பிற்படுத்தப்பட்டஒடுக்கப்பட்ட மக்களின் 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுதான் இவர்கள் உறுப்பினர்களாகியுள்ளனர் என்பதை மறக்கவேண்டாம்!

வாக்குச் சீட்டு என்னும் ஆயுதம்!

வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தின்மூலமும் கடுமையாகத் தண்டிக்கக் காத்து நிற்கின்றனர் ஒடுக்கப்பட்ட சமூக வாக்காளர்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

26.2.2021

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரம் மத்திய, மாநில செயலர்கள் உட்பட 9 பேர் பதில் அளிக்க தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னைமார்ச் 2- மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய விவகாரத்தில் மத்தியமாநில சுகாதாரத் துறை செயலர்கள் உள்ளிட்ட 9 பேர் பதில் அளிக்க சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு மற் றும்திமுகஅதிமுகபாமக உள் ளிட்டகட்சிகள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுஅதன்படிஇதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2021-2022 கல்வி ஆண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கு வது தொடர்பாக மத் திய பொது சுகாதாரப் பணிகள் இயக் குநர்தமிழக சுகாதாரத் துறை செயலர்பல் மருத்துவ கவுன்சில் செயலர் உள் ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை யில் உத்தர விட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசுஅமைத்துள்ள குழுஉயர் நீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவுப்படி இல்லை’ என்று கூறிமத்திய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவமதிப்பு வழக்கு தொடர்ந் தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிநீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று (1.3.2021) நடந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாதிட்டார்.

இதுதொடர்பாக மத்தியமாநில சுகாதாரத் துறை செய லர்கள்தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட 9 உயரதி காரிகள் பதில்அளிக்க நீதி பதிகள் உத்தரவிட்டுள்ளனர்.