பக்கங்கள்

புதன், 28 ஜூன், 2023

ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு



சென்னை, ஜூன் 26 பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம்

தீர்ப்பளித்துள்ளது.

சேலம் சுகவனேசுவரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (26.6.2023) தீர்ப்பளித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம்.

பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.

ஆகமக் கோவில் எது? ஆகமம் அல்லாத கோவில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

-விடுதலை நாளேடு, 26.06.23