பக்கங்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

70 ஆண்டு குடியரசின் இலட்சணம்!

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குமுறல்!

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சர்  ராஜீவ் சைசால், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த காட்சி.

சிம்லா, ஜன. 13 இமாச்சலப் பிரதேசத்தின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ராஜிவ் சைசால் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது தன்னை கோவிலில் நுழைய விடாமல் அவமானப்படுத்திவிட்டனர். என்னை மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வரு கின்றனர் என்று புலம்பியுள்ளார்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட் டும் வழங்கப்பட வேண்டுமென அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டம், வரும் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

‘‘எம் ஓட்டுநர் கோவிலுக்குள் போகலாம்;

நான் போக முடியாது!''

இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்தில் நடை முறைப்படுத்த விவாதம் நடைபெற்றது. அப்போது சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறும் போது, “நானும் சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவி லுக்குச் சென்றோம் (கோவில் பெயர் குறிப் பிடப்படவில்லை). அப்போது கோவி லுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட் டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வந்துவிட்டனர், அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது,  எனது ஓட்டுனர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கின்னரூ ஜகத் சிங் நெஹி என்பவர், ‘‘உண்மைதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இது போன்று பல கோவில்களில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

இதற்குப் பிறகும் பேசிய சைசால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேபினெட் தகுதி பெற்ற என்னைப் போன்ற அமைச்சருக்கே இந்த அவமான சூழ்நிலை என்றால், மற்றவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த இழிநிலை எப்போதுதான் முடிவிற்கு வரும் என்று கண்கள் கலங்க சபையில் பேசினார். மேலும் அவர் பேசும் போது, சீக்கிய மதகுரு இந்த பேதங்களை நீக்க அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் முறையையும் (லங்கர்), அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்கும் முறையையும் கொண்டுவந்தார். இதன் மூலம் சீக்கியர்களிடம் ஜாதிய முறை ஒழிந்தே போனது என்று கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுக்வீந்தர் சிங்சாக்கு  கூறும் போது, “நமது மாநில கேபினெட் தகுதி பெற்ற அமைச்சரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தவர்களை தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ராஜீவ் காந்தி சிறப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்'' என் றார்.

கோவில்களில் தீண்டாமை இன்றும் உள்ளது -முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

தனக்கு ஏற்பட்ட இந்த அவமானமான நிகழ்வு குறித்து அமைச்சர் ராஜிவ் சைசால் கூறியதும், சிறிது நேரம் அவையே அமைதி யானது. அதன் பிறகு முதல்வர் ஜெயராம் தாக்கூர் பேசிய போது, “சைசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வேதனை எங்களுக்குப் புரிகிறது, அவரைப்போலவே அவையில் உள்ள பலரின் வேதனைகளையும் நான் கணக்கில் எடுத்துள்ளேன்.  சில இடங்களில் நானும் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உணவு வழங்கும் போது தனிவரிசை மற்றும் தனி பாத்திரம் கொடுப் பதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதற்கான மாற்றங்கள் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். இன்னும் நிறைய தூரம் நாம் செல்லவேண்டியுள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசா குமாரி பேசும் போது முதல்வர் இவ்விவகாரத்தை சாதாரணமாகப் பேசுவது போல் தெரிகிறது, மாநிலம் முழுவதுமே இந்த தீண்டாமை தொடர்கிறது.  ஒரு சில இடங்களில் மட் டும் நடக்கிறது என்பது போல் உள்ளது முதல்வரின் பேச்சு என்று கூறினார்

இதனை அடுத்து சிபிஅய்(மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா பேசும்போது, மாநிலத்தில் தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை நீடிப் பது அவமானகரமான ஒன்றாகும் என்று கூறினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போதும் தீண்டாமை இருந்தது இப்போதுமட்டும் புதிதாக தோன்றியது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் உறுப் பினர் ஆசாகுமாரி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஒரு வாரம் நடைபெறுகிறது, உறுப்பினர்கள் அனைவருமே பேச வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு நாள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெறு கிறது. இச்சபையில் இருக்கும் அனைத்து உயர்ஜாதியில்லாத உறுப்பினர்கள் தாங்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டோம் என்றுகூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்து, சபையை விரைவில் முடித்துவிடப் பார்க் கிறது. இதுதான் பாஜகவினரின் தீண்டா மையை ஒழிக்கும் நடைமுறையா என்று கூறினார். இதனை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்திலும் கோவில்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப் போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மீது திடீர் பாசம் கொண்டவருமான தருண் விஜய் சில தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு உத்தராகண்டில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். அப் போது கோவில் நிர்வாகத்தினர் அவருடன் வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்கள் மீது கல்லெறிந்தனர். அதன் பிறகு அவருடன் சென்ற தாழ்த்தப்பட்ட நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப் பட்டனர். இது தொடர்பாக ‘‘தைனிக் பாஸ்கர்'' என்ற இந்தி இதழில் செய்தி வந்த பிறகும், இது தொடர்பாக தருண் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 13 1 20

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

ஜாதிவாரி கணக்கெடுக்க மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானித்தது வரவேற்கத்தக்கதே!

தமிழ்நாடு அரசும் இதனைப் பின்பற்றவேண்டும் -
ஜாதி ஒழிக்கப்படும்வரை இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
ஜாதியை ஒழிக்க மத்திய அரசு சட்டம் ஒன்று கொண்டு வரட்டும்!
ஜாதி ஒழிக்கப்படும்வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை - அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடும் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது  அறிக்கை வருமாறு:
மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று (8.1.2020) சபாநாயகரே, தாமே முன்வந்து ஒரு முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
அதை ஒருமனதாக அனைவரும் வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர்.
வருகின்ற மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது ஜாதி வாரியாக மக்கள் தொகையும் இணைத்து எடுக்கப்படல் வேண்டும்; அப்போதுதான் இதர பிற் படுத்தப்பட்ட சமூக மக்கள் (Other Backward Classes) தொகை எவ்வளவு என்பது துல்லியமாக கண்டறியும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தனது முன்மொழிவின் விளக்கத் தில் கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு தெரிந்துகொள்ளட்டும்!
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இதற்குப் பா.ஜ.க.வின் முன்னாள் முதல் வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரு மான தேவேந்திர பட்னாவிசும் தனது கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.
இதைத் தமிழ்நாடு அரசும், மற்ற அனைத்து மாநிலங்களின் அரசும் வற் புறுத்தவேண்டும்.
இக்கோரிக்கை நம்மால் பல ஆண்டு களுக்கு முன்பே வற்புறுத்தப்பட்ட ஒன்றாகும்.
‘‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பா? மக்களை இப்படிப் பிரித்து கணக்கெடுப்பது நியாயமா? அதிலும் ஜாதி ஒழிப்புக்கான இயக்கம் போன்ற திராவிடர் கழகம் இதனை வற்புறுத்தலாமா? அது முரண்பாடு அல்லவா?'' என்று மேலெழுந்த வாரியாக இப்பிரச்சினையை நோக்கும் சிலர் கேட்கக்கூடும்.
ஏன் இட ஒதுக்கீடு?
நமது லட்சியம் ஜாதியற்ற சமூகம் காண்பதுதான்; ஆனால், அதே ஜாதி தர்மம் (குலதர்மம் - மனுதர்மம்) காரணமாக பல் லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல கோடி மக்கள் மற்ற முன்னேறிய ஜாதி - வகுப்பினருக்குச் சமமாக ஆகும் நிலை வரும்வரை, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டியது அவசியம் என்பதால்தான், இந்திய அரசமைப்புச் சட்டமே சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்த வர்களான (மலைவாழ்) பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அவசியம் என்று வரையறுத்து, மூன்று  முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கி, நிலைநாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றமும் தனது 9 நீதிபதிகள் அமர்வுமூலம் மண்டல் வழக்குமூலம் இதை (இந்திரா சகானி வழக்கு) ஏற்றுள்ளது.
ஜாதிக் கணக்கெடுப்புமூலம்தான் ஜாதி புகுத்தப்படுகிறதா?
சட்டத்தில் ஜாதி!
இருக்கின்ற யதார்த்த நிலை என்ன?
1. இந்திய அரசமைப்புச் சட்டத்திலே ‘‘தீண்டாமை'' தான் ஒழிக்கப்பட்டுள்ளது - சட்டபூர்வமாக (நடைமுறை சங்கதியோ வேறு - மகா வெட்கக்கேடு!)
இன்னமும் ‘‘ஜாதி'' ஒழிக்கப்படவில்லை; ‘ஜாதி' (Caste)  என்ற சொல் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை எவரே அறிவர்!
2. ‘ஜாதி' பார்த்துத்தானே இன்னமும் திருமணங்கள் (இந்து மத முறையில்) நடைபெறுகின்றன. Matrimonial என்ற ‘மணமக்கள் தேவை' விளம்பரங்களில் - எங்கோ ஒன்றில்தான் ‘Caste No Bar' - ‘ஜாதி' ஒரு பிரச்சினை இல்லை' என்ற சொற்றொடர் உண்டு.
3. தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு முதல் வெற்றி வரை ஜாதி அம்சங்கள் படமெடுத்தாடவில்லையா?
பார்ப்பனர்களின் இரட்டை வேடம்
4. ஏதோ முற்போக்காளர்களைப்போல சில பார்ப்பனத் திருமேனிகளே, இரட்டைக் குரல் - இரட்டை வேடம் போடுவார்கள்; அந்த ‘பிரகஸ்பதிகளை'க் கேட்கிறோம்.
‘‘உங்கள் முதுகில் ஜாதிச் சின்னமான பூணூல் தொங்காமல் உள்ளதா?''
உங்கள் வீட்டில் - குடும்பத்தில் எத்தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள்? அவர்களைப் பார்த்துக் கெட்டுப்போன ‘‘சூத்திரர்களோ'', ஜாதி ஜாதியென்று மாய்ந்து விடுகிறார்களே!
‘பிராமணர் சங்கம்', ‘பிராமண் சம் மேஜம்', ‘பிராமணா தொழில் முனையம்' மாநாடுகளை நாட்டில் நடத்திடவில்லையா?
எனவே, இட ஒதுக்கீடு - சமூகநீதி நிலை நாட்டப்படுவதை எதிர்ப்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு - முற்போக்கு''ப் பார்வையா?
எனவே, தமிழ்நாடு அரசும் தனது நிலைப்பாட்டில், மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஜாதி வாரியான அளவீடு முக்கியம் என்பதை வற்புறுத்திடவேண்டும்.
ஜாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வரட்டுமே - பார்க்கலாம்!
மத்திய அரசு நாளைக்கு ஜாதியை ஒழிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால் பிறகு இதை வற்புறுத்தமாட்டோம் என்று கூற நாங்கள் தயார், மற்றவர்கள் தயாரா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.1.2020

சனி, 11 ஜனவரி, 2020

தாழ்த்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு நீட்டிப்பு: ஆங்கிலோ இந்தியன் நியமனம் நீக்கம்

சென்னை, ஜன. 10- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் நீட்டித்தும், ஆங்கிலோ இந்தியன் நியமனத்தை நீக்கம் செய்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறுவதற்கான தனி தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத் தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்பேரவையில் மேலும் 10 ஆண்டுகள் நீட்டித்து வழங்க தீர்மானம் நிறைவேற்றப்படு கிறது. இப்படி, ஒவ்வொரு முறை 10 ஆண்டுகள், 10 ஆண்டுகளாக நீட்டித்து கொண்டே வரப்படுகிறது.

இதற்கு ஒரே அடியாக 25 ஆண்டுகள் நீட்டித்திருக்கலாம். அதே நேரத்தில் ஆங்கிலோ இந்தியன் சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

சிறுபான்மையாக உள்ள ஆங்கிலோ இந் தியன் மக்களுக்கு 70 ஆண்டுகளாக சட்டப் பேரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் களது பிரதிநிதித்துவத்தை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

- விடுதலை நாளேடு 10 1 20

வெள்ளி, 10 ஜனவரி, 2020

உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...

உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளே முடிவு செய்யலாம்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்

புதுடில்லி, ஜன.8 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திருத்தத்துக்கு விளக்கம் கேட்கும் பொதுநல வழக் கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய இட ஒதுக்கீடு சலுகைகள் பெறாத உயர்ஜாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்தது. இந்த சட்டத்திருத்தத்தால், தமிழ கத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 6 சதவிகித இட ஒதுக்கீட்டில் பாதிப்புகள் இருக்குமா என்ற விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்ற வழக் குரைஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன் றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந் தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் நேற்று (7.1.2019) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதி வகுப்பினருக்கு கல்வி - வேலைவாய்ப்பில் இட ஒதுக் கீடு வழங்க அந்தந்த மாநில அரசு களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடி யாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பதை மத்திய அரசு தனது அதிகாரத்தின் கீழ்வரும் துறைகளில் மட்மே செயல்படுத்தியுள்ளது என்றும் பதில் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 8.1. 20