பக்கங்கள்

தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! பழங்குடியினருக்கு உள்இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 


புதுடில்லி, ஆக.1 தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய வருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கிய முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும்
7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப ளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலிருந்த திமுக அரசு அருந்ததி யினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனாலும், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதி கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், அரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஏழு நீதிபதிகள் அமர்வில் விசாரணை!
அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம், 7 நீதிபதிகள் அமர்வின்முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியது.
இதில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மை அமர்வு தீர்ப்பளித்தது. உள் ஒதுக்கீடு சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீற வில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடை யாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதன், 28 ஜூன், 2023

ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்! சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு



சென்னை, ஜூன் 26 பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம்

தீர்ப்பளித்துள்ளது.

சேலம் சுகவனேசுவரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (26.6.2023) தீர்ப்பளித்தார்.

நீதிபதி அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகராக நியமித்துக் கொள்ளலாம்.

பிறப்பின் அடிப்படையில் பாரபட்சமின்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.

ஆகமக் கோவில் எது? ஆகமம் அல்லாத கோவில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

-விடுதலை நாளேடு, 26.06.23

சனி, 8 ஏப்ரல், 2023

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சமூகநீதிப் போரில் பெற்ற சரித்திர வெற்றி! - கோ.கருணாநிதி

 


ஜனவரி 16-31,2022

 கோ.கருணாநிதி

(சமூகநீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்)

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு எனும் அரசமைப்பு சட்டப்படியான உரிமை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல். இந்த சாதனையை வழமைபோல் தமிழ்நாடு சாதித்துக் காட்டியுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக, வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்தச் சாதனை சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. மக்களிடம் கருத்துருவாக்கம், சட்டப் போராட்டம் எனத் தொடர்ந்து அடிமேல் அடிவைத்து இந்த உரிமையை நாம் பெற்றிருக்கிறோம். இதற்காகப் போராடிய, துணை நின்ற அனைவருக்கும் நமது நன்றி. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல; நாடு முழுவதும் இன்று பிற்படுத்தப்பட்டோர் மனமகிழ்ந்து நன்றியைத்  தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக திராவிடர் கழகம், தமிழர் தலைவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அசாதாரண-மனவை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வோர் ஆண்டும், மருத்துவ மேற்படிப்புகளில் (PG- எம்.டி, எம்.எஸ். மற்றும் எம்.டி.எஸ்) 50% இடங்களையும், மருத்துவப் படிப்புகளில் (UG– எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 15% இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கின்றன.

இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) மற்றும் மருத்துவ கலந்தாய்வு மய்யம் (MCC) இவை மேற்கொள்கின்றன. 2020_-21 கல்வி-யாண்டில், ‘நீட்’ மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்கள் முறையே 7,981 இடங்களையும், 274 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்தன. இவ்வாறு மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சதவிகிதம் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

2017-ஆம் ஆண்டில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்த இடங்கள் (பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு), 40,842 இடங்களாகும். இதில் பிற்படுத்தப்-பட்டோர்க்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு சதவீதம் பூஜ்யமே.

27 சதவிகித அடிப்படையில் அளிக்கப்-பட்டிருந்தால், 11,027 ஓபிசி மாணவர்களுக்கு வாய்ப்புக் கிட்டியிருக்கும். இத்தகைய சமூக அநீதியைச் சுட்டிக்காட்டி, கடந்த சில ஆண்டுகளாக, திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற சமூக அமைப்புகள், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கடிதம் எழுதியும், குரல் எழுப்பியும் எந்தப் பதிலும், தீர்வும் இல்லை.

இந்த அநீதியை எடுத்துரைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2020 மே 9-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார். மேலும் இந்த சமூக அநீதிக்கு எதிராகப் போராட அனைவருக்கும் ஒரு தெளிவான அழைப்பும் விடுத்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திமுக, மதிமுக, சி.பி.அய்., சி.பி.அய். (எம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. – என அனைத்துக் கட்சிகளும் சமூக நீதியைக் கோரி அறிக்கைகளை வெளியிட்டனர். மேலும், இந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை (தி.மு.க., ம.தி.மு.க, காங்கிரஸ், சி.பி.அய்., சி.பி. அய் (எம்), பா.ம.க.) உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்தன. திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. சென்னையில் மே 30-ஆம் தேதி திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மக்களின் ஆதரவை உணர்ந்த அன்றைய தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. சமூக நீதி விஷயத்தில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் உள்ளது. தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகப் போராடினார். இதன் விளைவாக 1951ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஏற்பட்டது. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுமைக்கும் அரசமைப்புச் சட்டம் 15 (4)வது பிரிவின் கீழ் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது.

தந்தை பெரியாருக்குப் பிறகு, அவரது கொள்கையைப் பின்பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்திடக் கோரி 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சிறைத்தண்டனை உள்ளிட்ட தியாகங்களைச் செய்துள்ளது.

1979 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர்க்கு ரூ.9000 பொருளாதார அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில், திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தியதோடு நின்றுவிடாமல், அரசமைப்புச் சட்டம் 31- சி பிரிவின் அடிப்படையில் ஒரு வரைவு மசோதாவை தமிழ் நாடு அரசுக்கு அளித்து, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் பின்னர் அரசியலமைப்பின் 9-ஆம் அட்டவணையில் சேர்க்கப்படுவதற்கும் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வைப்பதிலும் முழுமூச்சாய் செயலாற்றியது.

இவ்வாறு, தந்தை பெரியாரின் கொள்கை-களை நிறைவேற்றுவதற்காக, திராவிடர் கழகம், சமூக இயக்கமாக, நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதியை வழங்குவதைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அதன் பங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சமூக நீதி குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து தமிழ் மக்களிடையே உருவாக்குவதிலும், அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்-பதிலும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவரது மறைவுக்குப் பின்னரும் தமிழர் தலைவர் தலைமையில் தொடர்ந்து பங்காற்றி வருவதால், தமிழ்நாட்டில் சமூகநீதி காப்பாற்றப்பட்டு வருகிறது. இப்போது மருத்துவ சேர்க்கையில் ஓபிசி பிரிவினர்க்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், திராவிடர் கழகம் நாடு முழுவதும் இந்த அநீதியை எதிர்த்து  தீவிரப்படுத்தி வந்தது. இதன் ஒரு முயற்சியாக, இந்தியா முழுவதும் உள்ள பாஜக தவிர்த்த அரசுகளின் பதினோரு முதல்வர்களுக்கும் அதே போன்று, வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பதினோரு தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தத் தலைவர்களில் சிலர் திராவிடர் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டி, கடிதம் எழுதினர். மருத்துவப் பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக திராவிடர் கழகம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 27.7.2020 அன்று சிறப்பான தீர்ப்பினை உயர்நீதிமன்றம் அளித்தது. தீர்ப்பின் சிறப்பு அம்சங்கள்:

1. மாநில சட்டங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளித்திட, இந்திய மருத்துவக் குழு இயற்றிய விதிகள் [(9(4), 5(5)], அகில இந்திய தொகுப்பில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீட்டை மறுக்கவில்லை. (பாரா 85)

2. ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிற்படுத்தப் பட்டோர்க்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு இந்திய மருத்துவக் குழு, எந்த விதியையும் குறிப்பிட இயலவில்லை . (பாரா 86)

3. ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடுக் கொள்கையை சட்டமாக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. அதன் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படவில்லை . (பாரா 87)

4.            யுஜி/பிஜி மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் பங்களித்த அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டமோ அல்லது அரசியலமைப்பும் தடையாக இல்லை. (பாரா 90).

5.            அகில இந்திய தொகுப்பு இடங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்பதை மாநில அரசுகள் அறிந்திருப்பதாக MCI வாதம் செய்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதன் மூலம் MCIஇன் வாதம் மறுக்கப்பட்டதாகி விடுகிறது. (பாரா 95).

6. இந்திய மருத்துவக் குழு, மாணவர் சேர்க்கைக்கான தரங்களை நிர்ணயிக்க முடியும். ஆனால், இடஒதுக்கீடுக் கொள்கை அரசாங்கத்தின் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவு மூலமாகவோ செய்யப்பட வேண்டும். (பாரா 97)

7. தமிழ்நாடு மனுதாரர்களின் மனுவில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் கோரப் பட்டுள்ளது. இது ஒன்றிய அரசின் யோசனைக்கு மாறாக உள்ளது. (பாரா 98)

8.            சமூகநீதி, சமத்துவம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான முந்தைய வழக்குகளில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகளை விசிமி மற்றும் ஒன்றிய அரசு புறக்கணிக்க முடியாது. (பாரா 102)

9.            இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்க ஒன்றிய அரசுக்கு அரசியலமைப்பு கடமை உள்ளது, இது இப்போது அவசியமாக உள்ளது. (பாரா 104)

10.         மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு _- ஒன்றிய அரசின் சுகாதார செயலாளர்,

MCI மற்றும் தமிழ்நாடு அரசின் சுகாதார செயலாளர், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை முடிவு செய்ய அமைக்கப்பட வேண்டும்.

11.         செயல்படுத்தல் தற்போதைய கல்வியாண்டில் அல்ல, எதிர்கால ஆண்டுகளிலும் செய்யலாம். (பாரா 105)

12.         இடஒதுக்கீடு சதவிகிதத்தை அமல்படுத்துவது தொடர்பான குழுவின் வழிமுறைகளை ஒன்றிய அரசு மூன்று மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும். (பாரா 106)

இந்த தீர்ப்பின் மூலம், ஒன்றிய அரசின் மருத்துவக் கவுன்சிலுக்கான அதிகாரம், இட ஒதுக்கீட்டில் நுழைய முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவாக்கியது. மேலும், இட ஒதுக்கீட்டைத் தருவதில் எந்த நீதிமன்றத் தடையும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியது. ஆனாலும், மூன்று மாதத்தில் ஒன்றிய அரசு எந்த முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்திட முடிவு செய்தது. இதனை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

சென்னை உயர் நீதிமன்றமும், 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறைப்படுத்தாமல் நீட் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்திட தடை விதிக்க நேரிடும் என எச்சரித்ததன் அடிப்படியில் ஒன்றிய அரசு ஜூலை 2021இல் ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையில், மிகுந்த போராட்டத்தின் காரணமாக பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவிகிதம் என்பதுடன், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின்னடைந்தோர் என்ற அடையாளத்துடன் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பதையும் இணைத்தே வெளியிட்டது ஒன்றிய அரசு.

இந்த இட ஒதுக்கீடுகளை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக சென்ற ஆண்டு நடைபெற வேண்டிய மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்திட வேண்டிய 27 சதவிகித இட ஒதுக்கீடு தள்ளிப் போனது.

இந்த வழக்கில், ஒன்றிய அரசு முன்னுக்குப் பின் முரணாக தனது வாதங்களையும் பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தது. இ.டபிள்யூ.எஸ். என்ற உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர்க்கான அதே எட்டு லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு குறித்த உச்சநீதி மன்றத்தின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் வழக்குரைஞர் உரிய பதிலைத் தரவில்லை. மாறாக, மூன்று நபர் கொண்ட குழுவை நியமித்து, வருமான வரம்பை நியாயப்படுத்தித் தந்ததையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பாக நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட் ஏற்றுக் கொள்ளவில்லை. வருமான வரி கட்டும் ஒருவர் எப்படி பொருளாதாரத்தில் பின் தங்கியவராக முடியும் என கிடுக்கிப் பிடி போட்டார் நீதியரசர்.

இறுதியாக 7.1.2022 அன்று அளித்த தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு பிறப்பித்த 27 சதவிகித ஆணையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள். அத்துடன் இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடரும் என்றும், வரும் மார்ச் மாத இறுதி வாரத்தில் இது குறித்த இறுதித் தீர்ப்பினை வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்கள்.

நெடிய போராட்டத்தின் காரணமாக இத்தனை ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அகில இந்திய தொகுப்பு இடங்களிலும் வழங்கப்படும். இதன் மூலம் நான்காயிரத்திற்கும் அதிகமான மருத்துவப் படிப்பு இடங்களை (இளங்கலை மற்றும் முதுகலை) பிற்படுத்தப்பட்டோர் முதன் முறையாகப் பெறுவார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வழங்கிய மாண்பமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கோபண்ணா ஆகியோருக்கு நமது நன்றி. இந்த சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வெற்றி கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நமது பாராட்டுகள். மேலும், நீதிமன்றத்தில் திறம்பட வாதம் செய்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர், மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அவர்களுக்கும் நமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றியின் மூலம் தமிழ் நாடு சமூக நீதி மண்; தந்தை பெரியார் மண் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இருப்பினும் இது முதல் கட்ட வெற்றியே. நாம் கேட்டது அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடம் தரப்பட வேண்டும் என்பதே. மாறாக, 27 சதவிகிதமே கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருப்பது போல், அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, நூறு சதவிகித இடங்களையும் அந்தந்த மாநிலங்களே நிரப்பும் நடைமுறை வர வேண்டும் என குறிப்பிட்டிருப்பது சரியானது. அதனை நாம் நிறைவேற்றிட தொடர்ந்து போராட வேண்டும். நாடெங்கிலும் உள்ள அனைத்து சமூக நீதி சக்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக நீதிக்கான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி, அதை நோக்கி, நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம்.

வெள்ளி, 14 அக்டோபர், 2022

ஓ.பி.சி. பிரிவினர்க்கு 27% ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு திராவிடம் பெற்று தந்த உரிமை சாசனம்!

 

முகப்புக் கட்டுரை : ஓ.பி.சி. பிரிவினர்க்கு 27% ஒதுக்கீடு உச்சநீதிமன்றத் தீர்ப்பு திராவிடம் பெற்று தந்த உரிமை சாசனம்!

ஆகஸ்ட் 16-31,2021

மஞ்சை வசந்தன்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவைப் பயன்படுத்தி, மருத்துவக் கல்வி வசதிகள் வளர்ச்சி பெறாத வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களில் உள்ளவர்கள் மருத்துவர்களாவதற்கு உதவும் வகையில், உச்சநீதிமன்றம், ‘மருத்துவக் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மத்திய தொகுப்பு’ என்ற ஒன்றை உருவாக்கி, தங்களுக்குள்ள மொத்த மருத்துவப் படிப்புக்கான இடங்களில் _ எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்புக்கான 15 சதவிகிதமும், மேல் பட்டப் படிப்புக்கான (எம்.டி., எம்.எஸ். போன்றவை) 50 சதவிகிதமும் (முதலில் 25 சதவிகிதம், பிறகு 50 சதவிகிதம்) ஆண்டுதோறும் தரவேண்டும் என்ற ஓர் ஆணையைப் பிறப்பித்து, அது அமலில் இருந்து வருகிறது.

அவ்வாறு ஒன்றியத் தொகுப்பின் மூலம் பெறப்பட்ட இடங்களை ஒன்றிய அரசு _ ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

ஒன்றிய அரசின் தவறான முடிவு!

ஒன்றிய அரசு, ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை, முழுமையாகச் செய்யாமல்,  ஆதிதிராவிடர், பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.,) என்ற பிரிவுக்கு மட்டும் அமல்படுத்திவிட்டு (அதையும் முழுமையாகப் பின்பற்றி யுள்ளார்களா என்பது கேள்வி) ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு அளிக்காமலே, இதை நடைமுறைப்படுத்தி, உயர்ஜாதியினரே எஞ்சிய எல்லா மருத்துவ இடங்களையும் ஏகபோகமாக அனுபவித்த கொடுமை தொடர்ந்தது!

சலோனா குமாரி என்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மருத்துவர் _ இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு இந்த அநீதிக்குப் பரிகாரம் தேட, அப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது! (2015).

திராவிடர் கழக அறிக்கை

இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் _ சட்டப் பிரச்சினைகள் வந்ததோடு, ‘நீட்’ தேர்வு என்று திணிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்வு வந்த பிறகு _ 2016இல் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் திருத்தப்பட்டது. (பிரிவு 10_ஞி கொண்டு வரப்பட்டது.) அதன்கீழ் பிறப்பிக்கப்பட்ட அறிக்கை (ழிஷீtவீயீவீநீணீtவீஷீஸீ) 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ‘தேசிய மருத்துவ ஆணையச் சட்டம்’ 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதன்படி இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின்கீழ் தரப்பட்ட தொடர் அறிக்கையில் (21.12.2010) _ இடஒதுக்கீடு அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்களின்படியே தொடரும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி இருந்தாலும் இதைச் செயல்படுத்தாமல் _ பிற்படுத்தப்பட்ட சமூக மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடே _ ஒன்றியத் தொகுப்பில் தராத கொடுமை தொடர்ந்து வந்தது.

இதை திராவிடர் கழகம் (‘விடுதலை’யில்) முதன்முதலில் அறிக்கையாக வெளியிட்டது. இந்தச் சமூக அநீதியை அம்பலப்படுத்தியது! (8.5.2020, 16.5.2020).

சமூக அநீதிக்கு எதிராக ஒன்றாக திரண்ட தமிழ்நாடு!

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலையில், தி.மு.க.வின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் அறிக்கை வெளியிட்டு, அனைத்து ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர), சமூக அமைப்புகளும் ஓரணியில் திரண்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தச் சமூக அநீதிக்குப் பரிகாரம் தேட வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு அந்நாளைய தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி இராமமூர்த்தி ஆகியோர் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது!

தி.மு.க.வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களும், தி.க.வின் சார்பில் மூத்த வழக்குரைஞர் தியாகராஜன் அவர்களும், அதுபோல பல அரசியல் கட்சியினரும் தனித்தனியே வழக்குகளைத் தொடுத்தனர்.

ஆளுங்கட்சியாக அப்போது அ.தி.மு.க.வும், தமிழ்நாடு அரசும்கூட இறுதியில் இணைந்தனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு

இதனிடையே உச்சநீதிமன்றம்தான் இது சம்பந்தமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தது என்றும், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே சலோனாகுமாரி வழக்கு என்ற பிற்படுத்தப்பட்டவரின் வழக்கு விசாரணையில் இருப்பதால், அதன் முடிவுக்குப் பிறகே இதுபற்றி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் பல எதிர்வாதங்களை வைத்தனர்.

உயர்நீதிமன்றத்தின் விசாரணையைத் தடுக்கும் வகையில், இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடாது என்பதாகவும் ஒன்றிய அரசுத் துறைகள் சார்பாக, மெடிக்கல் கவுன்சில் சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

உடனே தி.மு.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஆர்.வில்சன், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே இது சம்பந்தமாக மாணவர் ஒருவர் சார்பாக போட்டிருந்த வழக்கு விசாரணையில், இதைக் கூறியவுடன், ‘’உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க எந்த ஆட்சேபணையும் இல்லை’’ என்று தெளிவுபடுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஏ.பி.சாஹி, ஜஸ்டீஸ் செந்தில்குமார், ஜஸ்டீஸ் இராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த இடஒதுக்கீட்டு வழக்கினை விசாரணைக்கு எடுத்து, தொடர்ந்து பல மணிநேர வாதங்களை அனுமதித்துக் கேட்டு, காலம் தாழ்த்தாமல், 27ஆம் தேதி தீர்ப்பு என்றும் அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

27.7.2020 அன்று தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் தீர்ப்பு வெளிவந்தது. 171 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில்,

ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பாக தெரிவித்த எதிர்தரப்பு வாதங்களை இந்நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே மாநில அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் அமலில் இருப்பதால் ளிஙிசி என்ற பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு என்ற கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது என்றும், உச்சநீதிமன்றம்தான் இடஒதுக்கீடு சம்பந்தமாக முடிவு செய்ய முடியும் என்ற ஒன்றிய அரசுத் துறைகளின் வாதங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்றும், ஏற்கெனவே ‘நீட்’ தேர்வில், இட ஒதுக்கீடு – மெடிக்கல் கவுன்சில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அபயநாத் வழக்கு போன்றவற்றிலும், ராஜேஸ்வரன், ஜெயக்குமார் வழக்குகளிலும்,  முன்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தர அரசமைப்புச் சட்டப்படியும் எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பு கூறினர்- இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னொரு முக்கிய கருத்தைத் தெளிவுபடுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என்று திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டிருக்கிறது!

இது சம்பந்தமாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல வந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 15 விழுக்காடு, 7.5 விழுக்காடு, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (ணிகீஷி) 10 விழுக்காடு, மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு என்று வரும் போது மொத்தக் கூட்டலில், 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது – இனி எடுபடக் கூடிய வாதமாகாது என்பது தெளிவாகி விட்டது.

காலதாமதம் செய்யாமல்…

இத்தீர்ப்பின்படி, ஒன்றிய அரசு, மூன்று மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைத்து முடிவு செய்ய வேண்டும். சமூகநீதியை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு மனம் வைத்தால், ஒரு வாரத்திற்குள் செய்ய முடியும் என்பதை 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வரலாறே நன்கு உணர்த்தும். எனவே, காலதாமதம் செய்யாமல், அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம், அதன் முதல் அமர்வில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க, சமூகநீதியின் மைல்கல் போன்ற இந்தத் தீர்ப்பு அந்நீதிபதிகளின் ஆழ்ந்த சட்டப் புலமைக்கும், சமூகநீதியின்பால் உள்ள நியாயங்களின் நேர்மையையும் சட்டப்படி விளக்கியிருக்கிறது.

69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதே சரியானது _ சட்டப்படியானது!

மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் _அவர்களே ஒப்புக் கொண்டபடி ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை _ தமிழ்நாட்டில் 1993 ஆண்டு 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பில் சட்டமாகி, அமலில் உள்ளபடி 69 சதவிகிதப்படி இடங்களை பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறியது. ஒரு கமிட்டி அமைத்து மூன்று மாதங்களில் தர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. வரும் 2021ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத ஒன்றிய அரசு

அதற்குப் பிறகு ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறை ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறி, பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை ஏற்க மறுத்தே வந்தது.

ஒரு கட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு என்றும் தயங்காது கூறியது.

தி.மு.க.வின் அவமதிப்பு வழக்கு!

எனவே, தி.மு.க. நீதிமன்ற அவமதிப்பு  வழக்கைத் தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒரு மாதத்திற்குள் ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை பதில் அளிக்கவேண்டும் என்று கண்டிப்பான ஆணை வெளியிட்டது. அதன் பின்னும் மதிக்கவில்லை. மறுமுறை மேலும் அவகாசம் கேட்டபோது, மீண்டும் ஒரு மாதம் அவகாசம் தந்து, அதற்குள் முடிவு தெரிவிக்க கண்டிப்பான உத்தரவு போட்டது நீதிமன்றம்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள், டில்லியில் பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்துப் பேசி, வற்புறுத்திய கோரிக்கைகளில் இதுவும் முக்கிய இடம்பெற்றது.

இதனை நாடாளுமன்றத் தி.மு.க. உறுப்பினர்களும், அதன் தலைவர்

டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவையில் அதன் தலைவர் திருச்சி சிவா, மூத்த வழக்குரைஞர் வில்சன் போன்றவர்களும் வலியுறுத்தினர்.

ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 26ஆம் தேதி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும். அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

27 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 1500 ஓ.பி.சி. மாணவர்களும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 2500 ஓ.பி.சி. மாணவர்களும் பயன்பெறுவர். அது போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் 550 மாணவர்களும், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஓ.பி.சி. இடஒதுக்கீடு தீர்ப்பு – தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்’’  – தமிழர் தலைவர் கி.வீரமணி பெருமிதம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை முழுமையாக செயல்படுத்தியதாகாது என்றாலும்கூட, மூடப்பட்ட சமூகநீதிக் கதவு பிற்படுத்தப்பட்டோருக்கு கொஞ்சம் திறக்கப்பட்டிருக்கிறது – முழுமையாக அல்ல என்றாலும், இது முதற்கட்ட வெற்றி. இதன் பலன் இந்தியாவிலுள்ள அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் அனுபவிக்கக் கூடிய திராவிட இயக்க அருங் கொடையாகக் (தந்தை பெரியாரால் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்த கொடைபோல) கொள்ளலாம்! ஒன்றிய அரசுக்கும் நன்றி!

மூடப்பட்ட கதவு திறக்கப்பட்டுள்ளது, தொடங்கப்படாத புதுக்கணக்கு பிற்படுத்தப் பட்டவர்களுக்குத் தொடங்கப்பட்டுள்ளது!

சமூகநீதியின் ஒரு களத்தில் ஒரு பகுதி வெற்றி!

சமூகநீதிப் போராட்டக் களத்தில்  தொடர்ந்து நின்று போராட வேண்டியவர்களே நாம்!

இதற்குக் காரணமான அத்துணை கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் குறிப்பாக தி.மு.க., தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகள் எல்லோருக்கும் நன்றி!

கிடைத்த இடங்களைவிட பறிபோன இடங்களை எண்ணினால் நெஞ்சம் பதறுகிறது. அதுகுறித்து தனியே பிறகு எழுதுவோம்!

தமிழ்நாடு அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைவருக்கும் நமது பாராட்டுகள்! என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை:

“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூகநீதிப் போராட்டத்தின் முதல் வெற்றி. ஆனாலும் 69% இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோ ருக்கான 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் தொடர்ந்து வலியுறுத்தியும் -_ போராடியும் வந்த தி.மு.க.வின் தலைமையில் இந்த முறை ஆட்சி அமைந்தவுடன் முதன்முதலில் பிரதமரை நான் நேரில் சந்தித்தபோதும் இக்கோரிக்கையை வலியுறுத்தினேன்.

தி.மு.க. தொடர்ந்த வழக்கில்தான் சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று அகில இந்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஏற்கெனவே பல ஆண்டுகளாக இந்த இட ஒதுக்கீட்டினை ஒன்றிய அரசு பின்பற்றாத காரணத்தால் ஏறக்குறைய 10 ஆயிரம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி வாய்ப்பை அகில இந்திய அளவில் இழந்தார்கள். அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இப்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த இட ஒதுக்கீட்டின்படி நாடு முழுவதும் 1500 எம்.பி.பி.எஸ் இடங்களும், 2500 பேருக்கு முதுநிலை மருத்துவ இடங்களும் கிடைக்கும் என்று அறிவித்துள்ள நிலையில், 2021_-22ஆம் கல்வியாண்டில் இருந்து ஆக மொத்தம் 4000 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்கப் போவதை தி.மு.க.வின் சட்ட ரீதியான சமூக நீதிப் போராட்டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் இந்த முதல் வெற்றியில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப் பட்டோருக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது அழுத்தமான உறுதியான கோரிக்கையாகும்.

அத்தகைய முழுமையான சமூக நீதியை அடையும் வரை தி.மு.க.வின் தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை தி.மு.க.வும், இந்த அரசும் தொடர்ந்து நடத்தும். “சமூக நீதியே மக்கள் நீதியாகும்.’’ இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆல் இந்தியா ஓ.பி.சி. ஃபெடரேஷன் அமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி

தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு விசாரணையில் இடஒதுக்கீடு குறித்து முடிவு சொல்லவில்லையென்றால் ‘நீட்’ தேர்வையே  இந்த ஆண்டு தடை செய்யவேண்டி இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது ஒன்றிய அரசு வழக்குரைஞர் வாய்மூடி மவுனமாகத்தானே இருந்தார்!

அதே சமயம் மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றத்தை நாடியது தி.மு.க. தி.மு.க.வை உயர்நீதிமன்றத்தை அணுகச் சொன்னது உச்சநீதிமன்றம். இடஒதுக்கீடு இல்லையென்றால் ‘நீட்’டுக்கே தடைவிதிப்போம் என உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

கடிதத்துக்கு மேல் கடிதம் கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வலியுறுத்தலுக்கு மேல் வலியுறுத்தல் என மாறி மாறிக் கொடுத்த அழுத்தத்துக்குப் பலன் இல்லையென்றாலும் நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்குக் கிடைத்த பலன் இது. தமிழ்நாட்டின் விடாமுயற்சி “நீதி வெல்லும்; சமூகநீதி வாழும்’’ என நிரூபித்துள்ளது.

பா.ஜ.க. அரசின் பசப்பு!

இடஒதுக்கீட்டுக்குத் தொடர்ந்து குழிபறித்து மெல்ல மெல்ல புதைத்துவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு 27% இடஒதுக்கீட்டுக்கு உரிமை கொண்டாடுவது உலக மகா மோசடி மட்டுமல்ல, பசப்பு வேலையாகும்.

மண்டல் கமிஷன் அறிக்கையை நிறைவேற்றிய ஒரே காரணத்துக்காக வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்.

அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டை ஒழித்துவரும் கட்சி பா.ஜ.க.

மருத்துவப் படிப்பில் 27% இடஒதுக்கீட்டுக்கு தொடர்ந்து தடையாய் நின்றதோடு, நீதிமன்றத் தீர்ப்பைக் கூட உதாசீனப்படுத்தி, ஒதுக்கித் தள்ளிய பா.ஜ.க. அரசு, நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பின் அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அறிவிப்பு செய்த கபட அரசு. சந்தடி சாக்கில் உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று 10% ஒதுக்கிக் கொண்ட வஞ்சக அரசு அது. ஆனால், பார்ப்பனத் தாளிகைகள் 27% இடஒதுக்கீட்டை மோடி அரசின் சாதனையென்று அசல் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்கின்றன.

இது பிற்படுத்தப்பட்டோரின் உரிமை சாசனம்!

தமிழ்நாட்டுக்கும், சமூகநீதிக்கும் கிடைத்த வெற்றி இது என்றாலும், முழு வெற்றி அல்ல. இது மறைக்கப்படக் கூடாத உண்மையாகும்!

69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி, தமிழ்நாட்டுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு தருவதற்குப் பதில், 50 சதவிகிதப்படியே _ 27 விழுக்காடுதான் தர ஒப்புக் கொண்டுள்ளார்கள்!

இதன் பலன் இந்தியா முழுமையிலும் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் திராவிட இயக்கம் பெற்றுத் தந்த உரிமை சாசனம் இது. 

சனி, 19 பிப்ரவரி, 2022

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து



உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

மதுரைநவ.1 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளிமதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு வில்தமிழ்நாட்டில் மிக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானவர் கள் உள்ளனர்.

இவர்களுக்கு மொத்த மாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட் டுள்ளதுஇதில் 10.5 சதவீ தத்தை வன்னியர் சமுதா யத்தினருக்கு உள்ஒதுக் கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

இதனால் மிகவும் பிற் பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்விவேலைஎதிர்காலம் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டதுமுறை யாக ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்திய பின் னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எனவேவன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக் கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்துஅதன் அடிப்படையில் கல்வி நிறு வனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த இடைக் கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந் தனர்இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில் நீதிபதிகள் துரைசாமிமுரளிசங்கர் ஆகியோர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நாள் தோறும் விசாரித்தனர்.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக் குரைஞர்கள்மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னி யர்களுக்கு வழங்கி இருப் பதுசட்டத்துக்கு முர ணான இட ஒதுக்கீடாக உள்ளது.

ஜாதி ரீதியான கணக் கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லைதேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன் றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற ஜாதி மாண வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர்அரசு தரப்பிலும் சட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத் தனர்பின்னர் இந்த வழக் கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்தி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் இன்று (1.11.2021) காலை யில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர்அதில் கூறியிருந்ததாவது:-

மிகவும் பிற்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீட் டில் உள்ஒதுக்கீடாக வன் னியர்களுக்கு 10.5 சதவீ தத்தை ஒதுக்க மாநில அர சுக்கு அதிகாரம் உள்ளதா?

ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்படாத சூழ் நிலையில் இது போன்ற அரசாணை பிறப்பிக்க லாமாஜாதி அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்க முடியுமாமுறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமாஎன் பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில்கள் ஏற்றுக் கொள் பவையாக இல்லைஇந்த அரசாணை அரசமைப்பு சட்டங்களுக்கு எதிரான தாக உள்ளது.

எனவே வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக் கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளிகல்லூரிகள் மற்றும் அர சுப்பணிகளில் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின் றனஇந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படு கிறதுஇவ்வாறு நீதி பதிகள் உத்தரவில் கூறி யுள்ளனர்.