பக்கங்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடித்துக்கொலை!

என்று தீரும் இந்தக் கொடூரம்!

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடித்துக்கொலை!

குப்பைத் தொட்டியைத் தொட்டதால்  தீட்டாகிவிட்டதாம்



மீரட்,அக்.25 உத்தரப்பிரதேச மாநிலம் பலாந்துசாகர் மாவட்டம், கேட்டலாப்பூர் பன்சோலி கிராமத்தைச் சேர்ந்தவர் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான சாவித்ரி தேவி (வயது 34). இவர் கடந்த 15.10.2017 அன்று அக்கிராமத்திலுள்ள குப்பைத் தொட்டியைதொட்டுவிட்டதால்தீட் டாகி விட்டதாகக் கூறி, அதே கிராமத் தைச் சேர்ந்த ரோகித் குமார், அவர் தாயார் அஞ்சுதேவி ஆகியோர் சேர்ந்து சாவித்ரிதேவியை சரமாரியாகத் தாக்கி னார்கள். சாவித்ரி தேவி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்,அவர் வயிற்றில் சரமாரியாக தாக்கினர். சாவித்ரி தேவியின் ஒன்பது வயது மகள் கண்முன்பாகவே இக்கொடுமை நடைபெற்றது.

மருத்துவமனையிலும் சிகிச்சை மறுப்பு!

சாவித்ரி தேவி கடுமையாகத் தாக்கப் பட்டதால் அதிகமான ரத்தப்போக்குக்கு உள்ளானார். சாவித்ரி தேவியைக் காப் பாற்றிட அவர் கணவர் திலீப் குமார் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்குஅனுமதிக்காமல்மருத்துவ மனையிலிருந்து வெளியே அனுப்பி விட்டார்கள்.இந்நிலையில்கடந்த சனிக்கிழமையன்று வலி பொறுக்க முடியாத சாவித்ரி தேவியை மீண்டும் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கள் கூறினார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சொல்லுகிறார்!

இதுகுறித்து சாவித்திரிதேவியின் கணவர் திலீப் குமார் கூறியதாவது:

‘‘என்னுடைய மனைவி தவறுத லாகவே குப்பைத் தொட்டியைத் தொட்டுவிட்டார். ஆனால், ரோகித் மற்றும் அவருடைய தாயார் அஞ்சுதேவி என் மனைவியை கொடூரமாகத் தாக்கி னார்கள். அவர்கள் தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கோத்வாலி தேகாட் காவல்நிலையத்தில் 15.10.2017 அன்றே புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால், எங்கள் புகாரை வாங்காத அதிகாரிகள் எங்களைத் துரத்தினர். கடந்த வெள்ளிக் கிழமை அன்றுதான் நாங்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ப் பட்டது’’ என்றார்.

காவல்துறைத் தரப்பில் கூறப்படுவ தாவது:

ரோகித் குமார் மற்றும் அவருடைய தாயார் அஞ்சுதேவி ஆகியோர்மீது இந்திய தண்டனைச்சட்டப்பிரிவுகள் 323 (காயமேற்படும்படி தாக்கியது), 504 (இழிவுபடுத்தும் நோக்கில் அமைதியை சீர்குலைப்பது) ஆகிய பிரிவுகளின் கீழும், சனிக்கிழமை சாவித்ரி தேவி உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை அன்று இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 304 (கவனக்குறைவால் இறப்பு), 316 (பிறக்கும் முன்பாகவே குழுந்தையைக் கொடூரமாகக் கொலை செய்வது) ஆகிய பிரிவுகளின்கீழும்,தாழ்த்தப்பட்ட,பழங் குடியினத்தவர்கள்மீதானவன்கொடு மைத் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழும் சாவித்ரி தேவியைத் தாக்கிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பிரவீன் ரஞ்சன் கூறியதாவது:

‘‘தாழ்த்தப்பட்ட பெண்ணைத் தாக் கிய புகாரில் ஒரு பெண் மற்றும் அவர் மகன்மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள காவல்துறை அலுவலர் இவ்வழக்கில் விரைவில் விசாரணை செய்வார்’’ என்றார்.

கோத்வாலி காவல்நிலைய அலுவலர் தேபேஷ்வர் சிங் கூறுகையில்,

“உடற்கூறு ஆய்வில் தலையில் ஏற்பட்ட உள்காயத்தால்தான் அவர் இறந்திருப்பதாக அறிக்கை உள்ளது’’ என்றார்.
-விடுதலை நாளேடு, 25.10.17

புதன், 25 அக்டோபர், 2017

‘டெக்கான் கிரானிக்கில்’ ஆங்கில ஏட்டில் ‘இட ஒதுக்கீடு’ காலவரையறைக்கு உட்பட்டது என வலியுறுத்திய கட்டுரைக்கு தமிழர் தலைவர் மறுப்பு தெரிவித்து வெளியிடப்பட்ட செய்தி

‘டெக்கான் கிரானிக்கில்’ ஆங் கில நாளேட்டில் வெளிவந்த இடஒதுக்கீட்டை முடித்திடவோ, மாற்றிடவோ இதுதான் நேரம் (Time to replace or end reservation) எனும் கட்டுரைக்கு திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அரசியல மைப்புச் சட்ட விதிகளை மேற் கோள் காட்டி, விரிவாக மறுப்பு தெரிவித்திருந்தார். தமிழர் தலைவர் தெரிவித்த மறுப்புச் செய்தியின் சுருக்கம் நேற்று (13.10.2017) ‘டெக்கான் கிரானிக்கில்’ (சென்னை பதிப்பு) ஏட்டில் வெளி வந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு கால வரையறை கிடை யாது என மறுப்புத் தெரிவித்து வெளிவந்த ஆங்கில நாளேட்டுச் செய்தியின் தமிழாக்கம்:

இடஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் - 
திராவிடர் கழக தலைவர்

‘அரசியல் இடஒதுக்கீடு’ எனச் சொல் லப்படும், நாடாளுமன்ற, மாநில சட்ட மன்றங்களில் தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பி னருக்கான இடஒதுக் கீட்டிற்கு மட்டும்தான் அரசியலமைப்புச் சட்ட விதிகள் காலவரையறையினை நிர்ணயித்துள்ளன. சமூக, கல்வி அடிப் படையில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த விதி பொருந்தாது.

கல்வியிலும் வேலை 

வாய்ப்புக்குமான இடஒதுக்கீட்டு முறையில் அரசியலமைப்புச் சட்டம் எந்தவித கால வரையறையினையும் குறிப்பிடவில்லை. அரசியல் இடஒதுக்கீட்டிற்கும் கல்வி - வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகளுக்கும் இடையிலான வேறுபாடு ‘டெக் கான் கிரானிக்கல்’ ஏட்டில் வெளி வந்த கட்டுரையில் விளக்கப்பட வில்லை. கட்டுரையினை படிக் கும் சராசரி வாசிப்பாளர் களை அந்தக் கட்டுரை உறுதியாக குழப்பி விடும்.

செப்டம்பர் 29இல் வெளி வந்த ‘டெக்கான் கிரானிக்கில்’ ஏட்டில் திரு.மோகன் குருசாமி எழுதிய கட்டுரையில் இட ஒதுக் கீடு பற்றிய வெறுப்பு வெளிப்பட் டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதி களும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என திரா விடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எடுத்துக் காட் டாக விதி 16 (4) என குறிப்பிட்டு விட்டு முதல் 1951ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசிய லமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் இடம் பெற்ற விதி 15 (4) வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள் ளது. இப்படி மாற்றிக் குறிப் பிட்டுவிட்டு, ‘வாக்கு வங்கியை பெற இடஒதுக்கீட்டை நீட்டியும், விரிவாக்கியும் அரசு செய்து வருகிறது’ எனக் கூறியுள்ளது அர்த்தமற்றதாகும்.

மற்ற எந்த காரணங்களுக்கும் மேலாக இடஒதுக்கீட்டின் மூலம் ஜனநாயக ஆட்சியில், அரசு அதிகாரத்தில் மக்கள் பிரதி
நிதித்துவம் பிரதிபலிக்கப்படுகிறது.

இடஒதுக்கீடு நடைமுறையில் தமிழ் நாடு முன்னோடி மாநில மாக திகழ்ந்து வருகிறது. பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இடஒதுக்கீட்டை கொண்டு வந்த சாதனை தமிழ் நாட்டிற்கு உண்டு. ஆண்டாண்டு காலமாக பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தி இதிகாச புராணங்கள் கூறி வரும்  வரலாற்று பாகுபாட்டை சரி செய் திடவே இடஒதுக்கீடு நடை முறைக்கு வந்தது. 

இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரவோ, அதற்கு மாற்று வழிமுறையினைக் கொண்டுவர நினைப்பதற்குக் கூட இது நேரம் அல்ல. பின் பேசுவதும், எழுது வதும எப்படி நியாயமாகும்?

இடஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும்.
-விடுதலை நாளேடு, 14.10.17

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கேரள அரசு எளிமையாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ளது! தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்!

கேரள அரசு எளிமையாக அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ளது!

தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை

தந்தை பெரியார் அவர்கள் ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தின் விளைவாக தற்போது கேரளாவில் எளிமையான நியமனங்கள் மூலம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கி உள்ளது. எனவே தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை  உடனே நியமனம் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை வருமாறு:

கேரளாவில் 6 தாழ்த்தப்பட்ட ('தலித்') ஜாதியினர் உட்பட 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள செய்தி எல்லா ஏடுகளிலும் வந்துள்ளது!

திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மொத்தம் 62 பேர்களை அர்ச்சகர்களாக நியமிக்கத் தேர்வு செய்த பட்டியலில் S.C., S.T., OBC என்ற வகுப்புகளிலிருந்து 32 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப 20 பேர்களும், பொதுப் போட்டி என்ற திறந்த போட்டியிலிருந்து 16 பேர்களும் (36இல்) அடங்குவர்.

S.C.  வகுப்பிலிருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள் ளார்கள். தேவசம் போர்டின் தலைவர் ராஜகோபாலன் நாயர் அவர்கள் இதனை செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

1949 முதல் இந்த தேவசம் போர்டில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை - போராட்டம் வலுவானது! பல ஆண்டுகளாகவே இக்கோரிக்கை அங்கே சமூக நீதி அமைப்புகளால் வற்புறுத்தப்பட்டு வந்தது!

வருங்காலத்திலும், கொச்சியிலும்,  மலபாரிலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நியமனங்கள், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் இதே முறை தொடர்ந்து பின்பற்றப் படும் என்று திரு. ராஜகோபாலன் நாயர் தெரிவித்துள்ளார்!

இது பாராட்டி வரவேற்கப்பட வேண்டும்; முற்போக்கு அரசு என்று கேரள அரசு காட்டியுள்ளது!

மிக எளிமையாக செயல்படுத்தியுள்ளது!

பல ஆண்டுகளுக்கு முன்பே கேரளாவில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிட வாய்ப்பு அளிக்கும் அரசு ஆணை  (G.O.) (தமிழ்நாடுபோல சட்டமன்றத்தில் தனியே சட்டமாக இயற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது) போடப்பட்டது!

அதனை எதிர்த்து யாரும் தமிழ் நாட்டில் நடந்தது போல், அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், காஞ்சி சங்கராச்சாரி போன்ற மடாதிபதிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை.

இதனால் மிக எளிமையாக, முறையாக அதனை அங்குள்ள  அரசு (கேரள மாநில) செயல்படுத்திட ஏதுவாக அமைந்தது!

மானமிகு கலைஞர் ஆட்சியில்.....

தந்தை பெரியார் அவர்கள் ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தைத் துவக்கியபோது, தி.மு.க. ஆட்சியின் முதல்வராக மானமிகு கலைஞர் இருந்தார்; அவர்  உடனே அய்யாவை நேரில் வந்து சந்தித்து "இதற்கென தனிச் சட்டம் ஒன்றினையே கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்திடுவோம். இதற்காகப் போராடவோ, சிறை செல்லவோ தேவை ஏற்படாது; இது தங்கள் அரசு தானே!" என்று கூறி 1970இல் பாரம்பரிய அர்ச்சகர் முறையை ஒழித்துத் தகுதி அடிப்படையில், அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் நடக்கும் என்று சட்டம் இயற்றினார் (2.12.1970). உடனே தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்,  மடாதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

பார்ப்பனர், மடாதிபதிகள் வழக்கு

இதனை உச்சநீதிமன்றத்தில் அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என் ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிஸ் எம்.எச். பெய்க் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்து இச்சட்டம் செல்லும் - அரசமைப்புச் சட்டம் 25 - 26 பிரிவுகளுக்கு முரண் அல்ல என்று தீர்ப்பு தந்தனர்!

என்றாலும் 'எங்கே திமுக அரசு  நாத்திகர்களை அர்ச்சகர்களாக நியமித்து விடுவார்களோ' என்ற அச்சம் தேவையற்றது; அப்படி இருந்தால் நீங்கள் இதே நீதிமன்றத்திற்கு வந்து பரிகாரம் தேடலாம் என்று ஒரு கருத்தினையும் உள்ளடக்கினார்கள்!

இதனால் அது உடனடியாக செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது!

தனிச் சட்டம் நிறைவேற்றம்!

"தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக" இதனை வருணித்த முதல்வர் கலைஞர் அவர்கள் 2006இல் ஒரு தனிச் சட்டம் (Act 15 of - 2006) நிறைவேற்றினார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுபோட்டு வைணவ, சைவ ஆகமப் பாடங்களை நடத்தி ஓராண்டு படித்து பட்டயம் பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் பார்ப்பனர் முதல் ஆதி திராவிடர் வரை 69 சதவீகித இடஒதுக்கீடு அடிப்படையிலும், பொதுப் போட்டி அடிப்படையிலும் 207 பேர் படித்து தகுதி பெற்ற அர்ச்சகர்களாகத் தேர்வு பெற்றனர்.

இதனை எதிர்த்து தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சகர்கள் பரிபாலனசபை, ஆதி சைவ சிவாச்சாரியார் நலச் சங்கம் (மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர்கள்) உட்பட உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு 'தடையாணை' ' (Stay) பெற்று   விட்டனர்.

சட்டம் செல்லும் என தீர்ப்பு

இறுதியில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015இல் ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா ஆகியோரின் அமர்வு தீர்ப்பு வழங்கி, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும், அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

அத்தீர்ப்பில் பாரா 43-இல் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து, "ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன் படிக்கான சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும்.

சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்படல் வேண்டும்" என்றும் வலியுறுத்தியது அவ்வமர்வு.

போராட்டம் 5000 பேர் கைது - சிறை

ஏற்கெனவே ஆகமங்களை பள்ளிகளில் படித்து தகுதி பெற்று தயார் நிலையில் உள்ளவர்களை உடனடியாக - இத்தீர்ப்பு எந்தத் தடையும் செய்யாததால்  தமிழக அரசு  - முன்பு சட்டமன்றத்தில் அளித்த உறுதிமொழிகளைச் செயல்படுத்திட நாம் ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் - தனியே கடிதம் எழுதி போராட்டமும் (சட்டமன்றத் தேர்தலின்போது (2016 மே 16) நடத்தி 5000 பேர் நாடு முழுவதும் கைதாகி சிறையேகினோம்!

ஏற்கெனவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும்,  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கொடுத்த வாக்குறுதி, தமிழக அரசு சார்பில் என்பதால் அது இன்றைய எடப்பாடி அரசையும் கட்டுப்படுத்தக் கூடிய உறுதிமொழியே ஆகும்.

எம்.ஜி.ஆர். நூற்£ண்டு விழாவைக் கொண்டாடுகிறபோது  எம்.ஜி.ஆர். அரசும், ஜெயலலிதா சட்டப் பேரவைக்குள் தந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் நியமனம் 69 சதவிகித அடிப்படையில் செய்வோம் என்று கூறிய உறுதிமொழியையும் செயல்படுத்தப்படுவது இவ்வரசுக்குக் கூட பெருமையாக முடியுமே!

தமிழக அரசு அலட்சியம் காட்டலாமா?

கேரளத்தில் எளிமையான நியமனங்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக்கிட நடைபெறும்போது, தந்தை பெரியார் மண்ணில் இது, சட்டத் தடைகளோ, தீர்ப்பு இடைகளோ குறுக்கே நிற்காதபோது செயல்படுத்த அலட்சியம் காட்டலாமா?

நாம் இன்றைய முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தனிக் கடிதமும் அனுப்பியுள்ளோம்.

எனவே, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் மூலம் உடனடியாக பயிற்சி பெற்ற அனைவரையும் 69 சதவிகித  இடஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் செய்ய தாமதிக்கவே கூடாது!

இன்றேல் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து, கலந்தாலோசித்து அடுத்த கட்டத்தை அறிவித்தாக வேண்டிய கட்டாயக் கடமை திராவிடர் கழகத்திற்கு உண்டு.

எனவே தாமதிக்காமல், கேரளாவைப்போல உடனே செயலில் இறங்கட்டும் இன்றைய தமிழக அரசு!

சட்டத் தடை ஏதும் இல்லை - மறவாதீர்!

 

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

 

சென்னை

7-10-2017

நாட்டிற்கே முன்மாதிரியாகும் கேரளம் 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம்!

திருவனந்தபுரம், அக். 7 -கேரள மாநிலத்தில் 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கெனவே பார்ப் பனர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் முயற்சிகள் நடந்திருந்தாலும், தலித்துகள் 6 பேர் உட்பட பார்ப்பனரல்லாத 36 பேர் ஒரே நேரத்தில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டி ருப்பது இதுதான் முதல்முறையாகும்.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அனைத்துச் சாதியின ரையும் அர்ச்சகர் ஆக்கும் முயற்சியில் அடுத்தடுத்த படிகளுக்கு முன்னேறி பயணித்து வந்தது. 2002-ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பின் தங்கிய ஈழவர் சமூ கத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அதற்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால், அரசியல் சட்டப்பிரிவு 17-இன் படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக் குற்றம்; அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறிய நீதிமன்றம், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சக ராக முடியும் என்பதை ஏற்க முடியாது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணிக்கு தகுதி அடிப்படையில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் சிறிய கோவில்கள் சிலவற்றில் நியமிக்கப்பட்டனர். ஆனால், அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த முயற்சிமுன்னெடுத்துச் செல்லப்படாத நிலையும் இருந்தது.இந்நிலையில்தான், திருவிதாங்கூர் தேவசம் போர்டுகட்டுப்பாட்டிலுள்ள 1248 கோயில்களில் அனைத்து சாதியினரையும் தகுதி மற்றும்இடஒதுக்கீடு அடிப்படையில்அர்ச்சகர்களாக நியமிக்ககேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளிசுரேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் தேவசம் போர்டானது, தகுதியானஅனைவரிடமும் விண்ணப்பங்கள் பெற்று அவர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தியது.

அதில் வெற்றிபெற்றவர்களை வைத்து தற்போது 62 பேரை அர்ச்சகர்களாக நியமித்து தேவசம் போர்டு ஆணையாளர் ராமராஜ பிரசாத் உத்தரவு பிறப்பித் துள்ளார். அதில் தலித்துக்கள் 6 பேரும், பார்ப்பனர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோர் 30 பேரும் அர்ச்சகர்களாகி உள்ளனர். இவர்கள் முழு நேரமற்றும் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றமுழக்கம் முதன் முதலில் தமிழகத்தில்தான் எழுந்தது. இரண்டு முறை அதற்கானசட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனால்,  அது நிறைவேறா மலேயே உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகராகும் கனவு நனவாகி இருப்பது, முக்கியமான சமூகநீதி நடவடிக்கையாக அமைந்துள்ளது.
- விடுதலை நாளேடு,7.10.17

தலித் மக்கள் மீசை முறுக்கும் போராட்டம்



காந்தி நகர், அக்.5 குஜராத்தில், தலித் இளைஞர்கள் மீசை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த தாக்குதலை தொடர்ந்து, மீசையை முறுக்கும் படத்தை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளங்களில் பரப்பும் போராட்டத்தில், தலித் இளைஞர்கள் களமிறங்கி உள்ளனர்.


குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, லம்போதரா கிராமத் தில், மீசை வைத்திருந்ததாக, சில தலித் இளைஞர்கள், சமீபத்தில் தாக்கப்பட்டனர். ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த வர்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், புதிய போராட் டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 'மிஸ்டர் தலித்' என்ற பெயரில், மீசையை முறுக்கும் படங்களை, 'வாட்ஸ் அப்' மூலம் பரப்பிவருகின்றனர்.

- விடுதலை நாளேடு,5.10.17

குஜராத்திலும்  இடஒதுக்கீடு


சங்கர்சிங் வகேலா வலியுறுத்தல்



தமிழகத்தைப் பின்பற்றி குஜராத்தில் படேல்கள் உள்ளிட்ட இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினருக்கு கூடுதலாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், ஜன் விகல்ப் முன்னணியின் தலை வருமான சங்கர் சிங் வகேலா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறிய தாவது: இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத சமூகத்தினருக்கு கூடுதலாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாநிலங்களில் 49.5 சதவீதத் துக்கு மேல் இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதன் காரணமாக, கூடுதலாக 25 சதவீதம் இடம் ஒதுக்க முடியாது என்று கருதப்படுவது தவறு. ஏற்கெ னவே, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழகத்தைப் பின்பற்றி குஜராத் தும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின ருக்கு கூடுதலாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.

குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், இட ஒதுக்கீடு கோரி போராடி வரும் படேல் சமூகத்தினருடன் மாநில பாஜக அரசு பேச்சு வார்த்தை நடத்தி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தினருக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

தேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய் யும் மாபெரும் வாக்கு வங்கியான படேல் சமூகத்தினரைக் கவரவே இந்தச் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப் படுகிறது. எனினும், படேல்களின் முக்கியக் கோரிக்கையான இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசு எதையும் தெரிவிக்க வில்லை. இதையடுத்து, இட ஒதுக்கீட்டுக் கான படேல்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுத் தலைவர் ஹார் திக் படேல் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சங்கர் சிங் வகேலா வலியுறுத் தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா, கட்சியின் மேலிடத்துடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் அணிகளுக்கு மாற்றாகக் கருதப்படும் ஜன் விகல்ப் முன்னணி யில் இணைந்து, அதன் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

குறிப்பு: தமிழ்நாடு அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி  இந்திய அரசமைப்புச் சட்டம் 76ஆவது திருத் தத்தின்படி ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு,6.10.17