பக்கங்கள்

ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

  

 * சென்னை மாநகரில் வி.பி. சிங் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது

* சமூக நீதிக்காக பிரதமர் பதவியை விலையாகக் கொடுத்தவர் 

* திராவிடர் கழகத்தின் மீது வி.பி.சிங் கொண்ட பாசம் - நேசம் பெரியது!

சமூக நீதிக்காவலர் வி.பி. சிங்குக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திறக்கப்பட்ட சிலை தி.மு.க. ஆட்சி மகுடத்தில் ஒளிரும் முத்து

2

சென்னையில் தமிழ்நாடு அரசால் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு வரலாற்றுச் சிறப்பானது. தி.மு.க. அரசின் மகுடத்தில் ஒளிரும் முத்து என்றும், மண்டல் பரிந்துரையை செயல்படுத்திய சமூக நீதி காப்பாளர் வி.பி.சிங்கின் சிலையைத் திறந்தமைக்காக முதல் அமைச்சருக்கு கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதிக் காவலர்  மாண்புமிகு வி.பி.சிங் அவர்களது முழு உருவச் சிலை சமூகநீதிக்கான சரித்திர நாயகர்  மானமிகு மாண்புமிகு  முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் அவர்களால்  இன்று காலை (27.11.2023) திறந்து வைக்கப்பட்டு தமிழ்நாடு வரலாற்றுச் சாதனை புரிந்த பெருமை பெற்றுள்ளது!

சென்னை தியாகராயர் நகரில் நமது வேண்டுகோளும், கலைஞரின் வாக்குறுதியும்

சில ஆண்டுகளுக்கு (2008) முன் வி.பி.சிங் அவர்களது புகழ் வணக்கம் செலுத்திய கூட்டத்தில் தியாகராயர் நகரில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது முன்னிலையில், சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களுக்கு சிலை எழுப்பப்பட வேண்டும் என்று கூறியதை கேட்ட கலைஞர் - அதனை நிச்சயம் செய்வோம் என்று கூறி ஒடுக்கப்பட்டோரின் நன்றிக் குரலாய் மாறினார்!

அதனை இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்படும் மகிழ்ச்சிகரமான கால கட்டத்தில் அவரது தனயனும் நமது 'திராவிட நாயகரு'மான நமது முதலமைச்சர் தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்து இன்று திறந்து வைத்துள்ளார்.

வி.பி. சிங் அவர்களது வாழ்விணையர் திருமதி சீதாதேவி மற்றும் அவரது இரு மகன்கள் அஜயா சிங், அபய் சிங்  ஆகியோர் முன்னிலையிலும் உ.பி.  எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்களை சிறப்பு விருந்தினராகவும் வரவழைத்து நடத்தியுள்ளார்!

தி.மு.க. அரசின் மணி மகுடத்தில் ஒளிரும் முத்து!

தமிழ்நாடு (தி.மு.க.) அரசின் மணிமகுடத்தில்  அற்புதமாகப் பதிக்கப்பட்ட சமூகநீதிக்கான ஒளி வீசும் முத்து ஆகும் இது!

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஒரு மாமனிதர் பண்பட்ட, அரசியல் ஞானி! எடுத்துக்காட்டான லட்சிய வீரர்.

பிரதமர் பதவி காரணமாக பெருமை பெற்றவர் பலர்; பிரதமர் பதவியை கொள்கைக்காக இழந்து, அதனால் பெருமை பெற்றவர் - பெறுபவர் அது என்றும் இழக்க முடியாத பெருமை; இறவாப் புகழ் ஆகும்!

அவரது தமிழ்நாட்டு நேசிப்பு வியக்கத்தக்கது! எளிதில் எவராலும் மறக்கத்தக்கதன்று.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட்டதுடன், தமிழ்நாட்டை மிக சக உறவுக்காரர்களின் உன்னத பூமியாகக் கருதி திராவிட இயக்கத்திடம் மாறா பாசமும் மரியாதையும் வைத்திருந்தவர்!

மண்டல் பரிந்துரையை நிறைவேற்றி அதற்காக பிரதமர் பதவியை இழந்தவர்

மண்டல் அறிக்கையின் பரிந்துரையை (வேலை வாய்ப்பை)  செயல்படுத்திய அவரது துணிச்சல் அசாதாரணமானது. அவருடன் இருந்த அமைச்சரவை சகாக்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்பட பலரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது "எதிர்நீச்சல் அடித்து" அதைச் சாதித்துக் காட்டியவர்!

"சிறந்த பொருளை பெற நல்ல விலை கொடுத்தாக வேண்டும்" அல்லவா?  அதற்காக ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதமர் பதவியை இழக்கத் தயார்" என்று அவர் கூறியது பொன் எழுத்துக்கள் ஆகும். 

"இது" கமண்டலுக்கும் மண்டலுக்கும் நடக்கும் கருத்துப் போர்; இதில் மண்டல் வெற்றி பெற்று வருங்காலத்தில் "மண்டல் காற்று" தனி வாசனையுடன் நாடெங்கும் வீசும் என்று முன்னோக்கோடு அவர் முழங்கினார்!  இன்று நாடெங்கும் சமூகநீதிக் குரல் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திராவிடர் கழகத்தின்மீது 

வி.பி.சிங் கொண்ட பாசம்!

திராவிடர் கழகத்தோடும் நம்மீதும், தி.மு.க.வுடனும், கலைஞரோடும் அவர் கொண்ட பாசமும் நேசமும் என்றும் மறக்க முடியாத வரலாற்றுப் பெட்டகமே!

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா, பெயர்களைக் கூறி மரியாதை செலுத்திய பிறகே மண்டல் ஆணையை நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒப்பற்ற சமூகநீதியாளர். 

அவரது சிலை போதிக்கும் சீலம், சமூகநீதி அரசியலில்  கொள்கைக்காக பதவி துறப்பு மூலம் கொள்கை உயிர்ப்பு என்ற புதுத்தத்துவம் - ஒரு அரசியல் புத்தொளி - புதிய பரிமாணம் ஆகும்! அவரால் துவக்கி வைக்கப்பட்ட மண்டல் புயல் இன்று நாடு தழுவிய சுனாமியாகி, ஆதிக்கவாதிகளின் ஏகபோகத்தையும், எகத்தாள ஏதேச்சதிகாரத்தையும் வீழ்த்த சூறாவளியாக சுழன்றடிக்கத் தொடங்கி விட்டதால் சுயமரியாதை உலகுக்குப் புதிய வெற்றி முளைக்கின்றது!

3

வி.பி.சிங் சிலையை நிறுவிய முதல் அமைச்சருக்கு ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

புதிய நம்பிக்கை சிறகடிக்கிறது! சமூகநீதிக் காவலர்

வி.பி. சிங் சிலை வைத்த நமது திராவிட மாடல் அரசுக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுக்கும் கோடானு கோடி ஒடுக்கப்பட்டோரின் நன்றி!

இது பெரியார் மண்; சமூகநீதி மண்!

திராவிட இயக்கம் அதன் காவல் அரண் - அதனை நாளும் கட்டிக் காப்பது திராவிடர் ஆட்சி. அதுவே என்றும் எம்மாட்சி - வி.பி. சிங் சிலையே அதற்கான சாட்சி.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.11.2023

வெள்ளி, 1 டிசம்பர், 2023

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு- சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

17

18
சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் அண்ணா பொது வாழ்வியல் மய்ய அமைப்பின் துறை தலைவர் முனைவர் கலைச்செல்வி சிவராமன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வரவேற்றார். பெரியார் - வீரமணி அறக்கட்டளைக்கு தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகரன் ரூ.50,000மும், எஸ்.ஜே. பிரகாஷ் ரூ.50,000மும், மருத்துவர் இளஞ்செழியன்.ஜெ ரூ.50,000மும் நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். 

சென்னை, டிச.1- சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று, ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற கருத்தமைய உரையாற்றினார். 

சென்னை பல்கலைக்கழகத்தில் 30.11.2023 அன்று காலை 11 மணி அளவில், முகப்புக் கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தந்தை பெரியார் அரங்கில் (தி-50) அண்ணா பொது வாழ்வியல் மய்யம் சார்பில், “ஜாதிவாரி கணக்கெடுப்பு” எனும் தலைப்பில், கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்கத்தில் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

அண்ணா பொது வாழ்வியல் மய்யம் அமைப்பின் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் கலைச்செல்வி சிவராமன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கருத்தரங்கின் முதல் கருத்துரையாளராக தமிழ்நாடு அரசின் மாநிலத் திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் உரையாற் றினார். சென்னை கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அய்.ஏ.எஸ்.(ஓய்வு) கே.அசோக் வர்தன் ஷெட்டி அடுத்த கருத்துரையாளராகவும் முன்னிலை வகித் தும் உரையாற்றினார். அசோக் வர்தன் ஷெட்டி படக்காட்சி மூலம் புள்ளிவிவரங்களுடன் விளக்கி, ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதை புரிய வைத்தார்.

19

நிறைவாக நிகழ்ச்சியின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார்.  அவர் தமது உரையின் முதலில் பேராசிரியர் நாகநாதன், அஷோக்வர்தன் ஷெட்டி ஆகியோரது உரைகளை மனம் திறந்து பாராட்டினார். தொடர்ந்து, ”இந்தியாவில் இருப்பது இரண்டே இரண்டு அணிதான். ஒன்று சமூக நீதி தேவை என்கிற அணி! மற்றொன்று சமூக நீதி கூடாது என்கின்ற அணி!” என்று தலைப்பின் தேவையை நினைவு கூர்ந்தவர், தொடர்ந்து அறிஞர்கள் அமர்ந்திருந்தாலும், மாணவர்கள் அதிகம் இருந்ததால், “ஜாதி ஒழிய வேண்டும் என்று போராடுகிற நாங்கள் ஜாதிவாரி கணக்கு வேண்டும் என்கிறோம். ஆனால் ஜாதியை நிலைநிறுத்த வேண்டும் என்பவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்று சொல்கிறார்கள். இதென்ன முரண்பாடாக இருக்கிறதே? என்று இங்கே கூட சிலர் நினைக்கலாம்” என்று தொடங்கி மாணவர்களின் ஆவலைக்கூட்டினார். தொடர்ந்து, அதற்கு பதிலாக “ஜாதி ஒழிய வேண்டும் என்றால்; சமத்துவம் வரவேண்டும்; சமத்துவம் வரவேண்டும் என்றால் அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூகநீதியை அடைய ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை!” என்று எங்களிடம் சுயமுரண் இல்லை என்பதை பளிச்சென்று புரியவைத்தார். கூடாது என்பவர்களின் நோக்கம் என்ன என்பதையும் குறிப்பிட்டார். மேலும் எளிமையாக புரிய வைக்க, “அம்மை நோய்க் கிருமியை ஒழிக்க, அம்மை மருந்து தான் பயன்படுத்தப்படு கிறது” என்றொரு உதாரணத்தையும் எடுத்துரைத்தார். 

15

”ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூகத்தை ஸ்கேன் செய்வது போன்றது” என்றொரு கருத்தைச் சொல்லி, “அப்படி ஸ்கேன் செய்தால் தான் சமூகத்தில் இருக்கின்ற ஜாதிக் கிருமிகளை கண்டுபிடிக்க முடியும். அப்படி கண்டுபிடித்த பிறகுதான் அதற்கான மருந்து கொடுத்து அழிக்க முடியும். அந்த மருந்தும்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு” என்று உதார ணங்களைத் தொடர்ந்தார். இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, முகப்புரையை படித்துக்காட்டி, ’சமூக நீதி’ என்பது நமது உரிமை என்பதை எண்பித்தார். மேலும் அதே அரசமைப்புச்  சட்டத்தில் உள்ள ’அடிக்வேட் ரெப்பரசென்டேசன்’ என்பதற்கான பொருளை விளக்கினார். "சமூகத்தில் இருக்கும் மேடு, பள்ளங்களைப் போக்க, சமூகநீதி அவசியம்! அதற்கும் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை” என்பன போன்ற பல்வேறு அரிய கருத்துகளைக் கூறி, "ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதே ஜாதியை ஒழிக்கத்தான். ”ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.   

ஆசிரியர் பேசுவதற்கு முன்பு, பேராசிரியர் நாகநாதன், “கடந்த கூட்டத்தில் கல்வியாளர்கள் இணைந்து ’பெரியார் - வீரமணி அறக்கட்டளை’ நிறுவியதை சுட்டிக்காட்டி, அதற்கு நன்கொடை வழங்குகின்றனர் என்று அறிவித்தார்.  பெரியார் - வீரமணி அறக்கட்டளைக்கு தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகரன் ரூ.50,000மும், எஸ்.ஜே. பிரகாஷ் ரூ.50,000மும், மருத்துவர் இளஞ்செழியன்.ஜெ ரூ.50,000மும் நன் கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். இறுதியில் கல்லூரி மாணவி நன்றி கூறினார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு செய்தனர். 

நிகழ்ச்சியில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கோ.தங்கமணி, தனலட்சுமி, க.கலைமணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மேனாள் நீதியரசர் மற்றும் வழக்குரைஞர்கள், அரங்கத்தை நிறைத் திருந்த கல்லூரியின் இருபால் மாணவர்கள்   கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

புதன், 22 நவம்பர், 2023

இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் - அறிக்கை


* இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? 

* இடஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தானே இடஒதுக்கீடு என்றுள்ளது? 

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கிய 

உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் தானே ஓ.பி.சி.?

1

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்று வரையறை செய்துள்ள நிலையில், பொருளாதார அளவுகோலைத் திணித்து உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒன்றிய பிஜேபி அரசு - அதன் பிரதமர் சமூக நீதி - இடஒதுக்கீடு பற்றிப் பேசலாமா? ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் மூன்றே மூன்று பேர்தானே ஓ.பி.சி. என்று அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

 அவரது அறிக்கை வருமாறு:

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அய்தராபாத்தில் 7.11.2023 அன்று பேசிய பிரதமர் மோடி அவர்கள்,

"சமூகநீதி கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் தனது  அரசு (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் - பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தின்  தலைப்பு என்ன தெரியுமா? "பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம்" ("Self Respect to  BC's") என்பதாகும்.

இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்:

அவரது ஒன்றிய அமைச்சரவையில் 27 சதவிகித ஓ.பி.சி.  (OBC) அமைச்சர்கள், உள்ளனராம்.

2014இல் பிரதமர் பதவிக்கு அவர் வந்தபோது எத்தனை சதவிகிதம் இவர்கள் இருந்தனர் என்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க முடியாத இக்கட்டு நிலையே ஏற்படும்!

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களைப் பற்றி கூறியிருக்கும்போது, நமது பிரதமர் அவர்களை நோக்கி சில சந்தேகங்களை வைக்க ஒடுக்கப்பட்ட மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டின் அளவுகோலில் பொருளாதாரம் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)இன்படி OBC என்ற பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளப்படுத்தல் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் ("Sociallly and Educationally") என்பதுதானே - அதை மாற்றி, முந்தைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட இந்திரா சஹானி வழக்கில் பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு (முன்பு) 10% சதவிகிதம் செல்லாது என்பதை தலைகீழாக்கி அவசர அவசரமாக 103ஆவது அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து 4  நாட்களில் சரியான விவாதமே நாடாளுமன்றத்தில் நடத்தாமல், நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கி,  50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மேலே 10 சதவிகித இடஒதுக்கீடு - அதுவும் உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டுமே; எல்லா ஜாதி ஏழைகளும் இதன் கீழ் வர மாட்டார்கள் என்று அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே தகர்த்தெறிந்தீர்களே, மாநிலங்களின் ஒப்புதல்களைப் பெற்று நிறைவேற்றாது 'தானடித்த மூப்பாக'வேத்தானே நடத்தினர்.

2

உயர்ஜாதியினரில் சமூக கல்வி ரீதியாக 

பின் தங்கியோர் உண்டா?

உயர் ஜாதி ஏழைகள் - கல்வியிலும், சமூக ரீதியாகவும், பிற்படுத்தப்பட்டவர்களா? புள்ளி விவரக் கணக்கு ஏதேனும் நடத்தப்பட்டதா?

 ஒன்றிய அமைச்சரவையில்  பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்று இப்போது  தேர்தல் பிரச்சார சங்கீதம் பாடுகிறாரே - அந்தப்படி அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் 100க்கு 100 சதவிகிதம் உயர்ந்தவர்கள், தேவையற்ற அஜீரணக்காரர்கள் - பசியேப்பக்காரர்கள் அல்ல என்ற உண்மையை இவர் மறுக்க முடியுமா?

அவர்களிலும்கூட அன்றாட வருமான அளவு நாள் ஒன்றுக்கு 2222 ரூபாய் பெறுபவர்கள்  ஏழைகளா?

பதில் அளிக்கட்டுமே பிரதமரோ, அத்துறை அமைச்சரோ!

இதுவரை அவரது அதிகார வர்க்கத்தில் எத்தனைப் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்?

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்?

90 ஒன்றிய அரசு இலாக்காக்களில் செயலாளர்களில் வெறும் 3 பேர் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இளந் தலைவர் ராகுல் காந்தி விடுத்த கேள்விக்கணைக்கு அவர் பதில் அளிப்பாரா?

இவரது அரசு எத்தனை எஸ்.சி., எஸ்.டி., உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்த 9 ஆண்டு ஆட்சியில் நியமனம் செய்துள்ளது?

மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் களோ, பேராசிரியர்களோ எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இவர்களில் இவரது ஆட்சியில் நியமனம் பெற்றோர் புள்ளி விவரங்களைப் பார்த்தால் ஒடுக்கப்பட்டோர் உரிமை காற்றில் பறந்திருக்கும் நிலை தெளிவாகுமே! எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்? சமூகநீதி என்றால் இதுவா? பதில் கூறட்டும்! 

இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
10.11.2023

சனி, 11 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!''கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘ 

 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத்தான்!

‘இந்தியா’ கூட்டணி இந்தப் பிரச்சாரத்தை சிறப்பாக செய்கிறது; சரியான நேரத்தில் இந்தக் கருத்தரங்கத்தை கூட்டியிருக்கிறீர்கள்

9

சிதம்பரம், நவ.11 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாக செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம்தான் 
ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்!
பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு எதிராக அந்த நாளில் கொண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் இது.
ஜாதிவாரியாக 18 ஜாதிகள் அந்தத் திட்டத்திற்கு.
எனவே, ஜாதியை ஒரு பக்கத்தில் ஆணி அடிக்கிறீர்கள். படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
செருப்பு தைப்பது - ஷூ பாலிஸ் போடுவது - ஹிந்தி மொழியில் ஜாதிப் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்திற்காக குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறார்களாம்.
உடனே நம்மாட்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ஒரு லட்சம் ரூபாயா? இதைப் போய் வீரமணி தடுக்கிறார்களே - இந்தியா கூட்டணி தடுக்கிறதே'' என்று நினைக்கிறார்கள்.

சும்மா கொடுக்கவில்லை ஒரு லட்சம் ரூபாயை அவர்கள். கடனாகத்தான் கொடுக்கிறார்கள். 5 சதவிகித வட்டியில்.
ஆனால், 25 லட்சம் கோடி ரூபாயை வாராக் கடன் என்று சொல்லி,  தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்ற ஆட்சி - ஒன்றிய ஆட்சி.
இன்றைய இளைஞர்கள் 18 வயதிற்குமேல் கல் லூரிக்கு செல்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு பேர் வழக்குரைஞர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் வந்திருக்கிறார்கள். ஆனால், இதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே 18 வயதான வுடன், அவரவர் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் ‘‘ விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்.
நான் கேட்கிறேன், ‘‘விஷம் குடியுங்கள்; ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம்‘’ என்று சொன்னால், விஷம் சாப்பிட வருவார்களா? அதன்மேல் சர்க்கரைப் பூச்சு பூசியிருக் கிறார்கள்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று ஏன் சொல்கிறோம்?
இங்கே இருப்பவர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்கள். அதை அளவு பார்ப்பதற்காகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று சொல்கிறோமே தவிர, ஜாதியை நிலை நிறுத்துவதற்காக அல்ல.
ஆனால், இப்பொழுது அவர்கள் முற்போக்கு எண்ணம் உள்ளவர்கள் போன்றும், ஜாதிக்கு எதிரானவர்கள் போன்றும் காட்டிக் கொண் டிருக்கின்றார்கள்.
குலக்கல்வித் திட்டத்தை இராஜகோபாலாச்சாரியார் எப்படி கொண்டு வந்தாரோ - அரை நேரம் படிப்பு - மீதி அரை நேரம் அவரவர் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்பது குலக்கல்வித் திட்டம்.
ஒன்றிய அரசு திணிக்கும் விஸ்கவர்மா யோஜனா திட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
கைகளால் செருப்புத் தைக்கின்ற குலத்தொழிலை செய்யவேண்டும். அந்தத் தொழிலைப் பாரம்பரியமாக செய்யவேண்டும். ஷூ கம்பெனியில் வேலை செய்தால் கடனுதவி கிடையாது. நவீன முறையில் செய்தாலும் கடனுதவி கிடையாது. செருப்புத் தைக்கின்ற படத்தைப் போட்டு இருக்கிறார்களே, அவர்களுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள். 

70 ஆண்டுகளுக்கு முன்பு போராடி ஒழித்த திட்டத்தை இன்றைக்கு நவீன முறையில் திணிக்கிறார்கள்!
அதைப் பார்த்தால் நம்முடைய ரத்தம் கொதிக்கிறது. நம்முடைய தலைவர்கள் 70 ஆண்டு களுக்கு முன்பு போராடி ஒழித்த திட்டம் - அதனால்தான் இன்றைக்கு நவீன முறையில் திணிக்கிறார்கள். ஒரு காமராஜர் இல்லையானால், இன்றைக்கு இவ்வளவு பேர் பட்டதாரிகளாக வந்திருக்க முடியாது. பிள்ளைகளைப் படி, படி என்று சொன்னார்கள்.
ஆனால், படிக்காதே, படிக்காதே என்கிற கூட்டம் அன்றைக்குக் குலத்தொழிலை கொண்டு வந்தது. மீண்டும் இன்றைக்கு அந்தக் குலத் தொழி லையே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், என்ன அக்கிரமம் இது!
அந்த ஒரு லட்சம் ரூபாயை சாதாரணமாகக் கொடுத்துவிட மாட்டார்கள். செருப்பு தைக்கின்ற தொழி லைச் செய்யும் நம்முடைய சகோதரரை அழைத்து, ‘‘உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?’’ என்று கேட்டால்,
‘‘எனக்கு இரண்டு பெண்; இரண்டு ஆண்’’
‘‘சரி, அவர்களுக்கு 18 வயதானவுடன் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டால்,
‘‘அவர்கள் பிளஸ் டூ முடித்ததும், அவர்களைக் கல்லூரிக்கு அனுப்புவேன்’’ என்பார்.
இப்படி சொல்லாமல், 18 வயதானவுடன், என்னுடனேயே வந்து பழைய செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றா சொல்லுவார்?
அதற்காகத்தான் நீதிமன்றம் புள்ளி விவரக் கணக் கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறது. 
சரி, கணக்கெடுக்கட்டும்; நாங்கள் தயாராக இருக்கி றோம். இதில் என்ன சங்கடம் அவர்களுக்கு?

ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை 
நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காக!
இதுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாகச் செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம்.
அய்ந்து மாநில தேர்தல்களில் அவர்களுக்குத் தோல் வியே என்று பயந்துவிட்டார்கள். இதுவரையில், வாக்கு வங்கி மோடிக்குத்தான், மோடிக்குத்தான் என்று சொன்னார்கள்.
மிசோராமில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கே சென்றாரா, மோடி? இதுவரையில் பிரச்சாரம் செய்வதற்காக அங்கே போகவில்லையே!
தேர்தல் நடைபெற்ற கருநாடக மாநிலத்திற்குப் போனார், மற்ற மற்ற மாநிலங்களுக்குப் போனார். ஆனால், மிசோராமில் நடைபெறவிருக்கின்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு இதுவரை போகவில்லை பிரதமர் மோடி என்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது? அங்கே அவர் சென்றாலும், அவர்களால் வெற்றி பெற முடியாது என் பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார்கள். ஆகவேதான், பிரதமர் மோடி அங்கே போகவில்லை.
மணிப்பூர் எங்கே இருக்கிறது? அங்கே நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அங்கே சென்று, மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்.

இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு 
இதுவரை பிரதமர் செல்லவில்லையே!
ஆனால், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், அந்தக் கண்டத்திற்குப் போகிறார், இந்தக் கண்டத்திற்குப் போகிறார், எகிப்துக்குப் போகிறார், விருது வாங்குகிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு இதுவரை அவர் செல்லவில்லையே!
அதனால்தான், ‘இந்தியா’ கூட்டணி இந்தியாவைக் காப்பாற்றப் போகிறது. 
இப்பொழுது அமித்ஷா சொல்கிறார், ‘‘நாங்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விரோதிகள் அல்ல; அதை ஆதரிக்கிறோம்‘’ என்கிறார்.
இதுவரையில் அதனை எதிர்த்தவர்கள் அவர்கள்; இப்பொழுது இதை சொல்கிறார்கள் என்றால், நடை முறையில் அவர்களுக்குச் சிக்கல் இருப்பதால்தான் அவர்கள் ஆதரிப்பதுபோன்று கருத்துகளைச் சொல் கிறார்கள். ‘‘முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை’’ என்பார்கள்.
ஆகவேதான், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது தத்துவம், வரலாறு உடையது. 1941 ஆம் ஆண்டுவரையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அது இருந்தது.

ஜாதி என்பதை வேரடி, 
வேரடி மண்ணோடு அகற்றவேண்டும் என்றால்...
இங்கே இருப்பவர்கள் யாரும் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  ஜாதி என்பதை வேரடி, வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும் என்றால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்கிற வழி சிறப்பானதாகும்.
நம்முடைய பிள்ளைகள் படிக்கவேண்டும்; அப்படி படித்தவர்களுக்கு சமூகநீதிப்படி இடம் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும். யாரையும் நாம் வேற்றுமைப் படுத்தவில்லை என்று சொல்வதற்காகத்தான் இந்தக் கருத்துகள். ஜாதிவாரிக் கணக்கெடுப் பினுடைய தேவைகளை வலியுறுத்துவதற்காகத் தான் இந்தக் கருத்தரங்கங்கள்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகின்ற பொழுதெல்லாம் ஒரு புதிய கோஷத்தை எழுப்பு கிறார்கள். ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ என்று.
எப்பொழுதுமே அவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். ஆர்.எஸ்.எஸினுடயை தத்துவமே அதுதான்.
வள்ளலார் சொன்னார் பாருங்கள்,
‘‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை இருத்தல்வேண்டும்‘’ என்று.
‘‘ஒரே தேர்தல், ஒரே நாடு’’ என்று சொல்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தவறிப் போய் எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இதுதான் இந்த நாடு சந்திக்கின்ற கடைசித் தேர்தல் - ஒரே தேர்தல். இனிமேல் தேர்தலே கிடையாது'' என்பதுதான்.

‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்கின்றோம்!
ஆனால், அவர்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம் - ‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்லியிருக்கின்றோம். இதுதான் உங் களுக்கும் ஒரே தேர்தல். இனிமேல் உங்களுக்கு அந்த வாய்ப்பு என்பது கிடையாது. 
எங்களால்தான் ஒரே நாடு; உங்களால் ஒரே நாடு கிடையாது - மதத்தால், ஜாதியால், பதவி வெறியால் நீங்கள் பிரித்திருக்கிறீர்கள் என்பதால் உங்களால் ஒரே நாட்டை அமைக்க முடியாது.
எனவே, ஜாதி ஒழிப்பிற்கான ஓர் ஆயுதம்; அதற்கான ஒரு வாய்ப்பு; அதற்கான ஒரு தேவைதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதாகும்.
கணக்கெடுப்பதற்கே அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

உங்களோடு எப்பொழுதும்  கடைசிவரையில் இருப்போம் - இறுதி வெற்றி நமக்குத்தான்!
நான் உரையாற்றிவிட்டுச் செல்வதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், உங்களோடு எப்பொழுதும் கடைசி வரையில் இருப்பவன் நான். இந்த யுத்தத்தில் கடைசிவரையில் இருப்பவர்கள் நாங்கள். காரணம் என்னவென்றால், எங்களுக்கென்று எந்தப் பதவி நாற்காலியும் தேவையில்லை. யார் யாரை எந்தெந்த நாற்காலியில்  உட்கார வைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேலை. யார் உட்கார்ந்தால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதைத்தான் நாங்கள் பார்ப்போம்.
அதனால், மிக முக்கியமாக எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசிவரையில் உங்களோடு இருப்போம் - இறுதி வெற்றி நமக்குத்தான்.

போராடுவோம் - வெற்றி பெறுவோம் - 
புதிய சமூகத்தை அமைப்போம்!
அந்த இறுதி வெற்றியைக் காணுகின்ற வரையில் போராடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் - புதிய சமூகத்தை அமைப்போம்!
இன்னும் ஆறு மாதங்களில் ‘புதிய இந்தியா’வை உருவாக்குவோம். காவியற்ற இந்தியாவை உருவாக்கு வோம்!
பாண்டிச்சேரியில் வந்து நம்முடைய பிரதமர் மோடி சொன்னார், ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்‘’ என்று.
இதை எப்பொழுது அவர் சொன்னாரோ, அப்பொழு திருந்தே, ‘‘பா.ஜ.க. இல்லாத இந்தியாவை’’ இப்பொழுது பார்க்கப் போகிறீர்கள். அதற்கான அச்சார முயற்சி கள்தான் - அதற்கான  தொடக்க முயற்சிகள்தான் இதுபோன்று கருத்தரங்கங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி! 

வளர்க புதிய சமுதாயம் - 
வருக சமதர்ம சமுதாயம்!
வெற்றி நமதே!
போராடுவோம், வெற்றி நமதே என்று கூறி விடை பெறுகிறேன்.
வளர்க புதிய சமுதாயம்!
வருக சமதர்ம சமுதாயம்!
சமூகநீதி வெல்லட்டும்!
வெற்றி தொடரட்டும்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத் துரையாற்றினார்.

வெள்ளி, 10 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!'' கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘

 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்!

சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான்!

சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்!

15
சிதம்பரம், நவ.10 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்; சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான். சமூகநீதியைக் நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, 
நெருங்கினால் தீட்டு!

கீழ்ஜாதிக்காரர்களாக நம்மை ஆக்கியதோடு மட்டுமல்லாமல் - தொடக்கூடாத ஜாதி, பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நெருங்கினால் தீட்டு.
இதற்கு என்ன அர்த்தம்?
இது வெளிநாட்டுக்காரர்களுக்குப் புரியவில்லை. ‘‘தொடக்கூடாது என்று உங்கள் நாட்டில் சொல்கிறார்களே - எங்கள் நாட்டில்கூட கருப்பர்கள் - வெள்ளையர்கள் என்ற போராட்டத்தைத்தான் நடத்திக் கொண்டிருக் கின்றோம்'' என்றார்கள்.அமெரிக்காவில் ஒருமுறை ஒருவர் கேள்வி கேட்டார் -
வாட் இஸ் காஸ்ட்? என்று கேட்டபொழுது, அதுகுறித்த விளக்கத்தைச் சொன்னோம்.

மின்சாரத்தைத் தொட்டால்தான் 
‘ஷாக்' அடிக்கும்!
நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, தொட்டால் ஆபத்து எதில் இருக்கும் என்றால், மின்சாரத்தைத் தொட்டால்தான் ‘ஷாக்' அடிக்கும். ஆனால், உங்கள் நாட்டில் சிலர் பிற மனிதர்களைப் பார்த்தாலே தீட்டு என்று சொல்கிறார்களே, என்று ஆச்சரியப்பட்டார்.
நம்முடைய நாட்டில்தான் காலங்காலமாக படிக்கக் கூடாத சமுதாயமாக நம்மாட்களை வைத்திருந்தார்கள்.
அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியாரைப் பின்பற்றி ஒரு கருத்தை சொன்னார்.ஒரு நாட்டில், படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு மதம் - ஒரு ஸநாதனம் - ஒரு தத்துவம்.எல்லோருக்கும் படிப்பைக் கொடுக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
ஆனால், நீங்கள் படிக்கக் கூடாது என்று சொல்வதற்கு ஒரு தத்துவம் இருக்கிறது. எதைக் கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரனுக்கு அறிவை, படிப்பை கொடுக்கக் கூடாது. மீறி படித்தால், அவர்களின் காதில் ஈயத்தைச் காய்ச்சி ஊற்றவேண்டும்; அப்படியும் மீறி படித்தால், அவர்களின் நாக்கை அறுக்கவேண்டும்.

சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் 
சமூக நீதி வேண்டும் என்ற குரல்!
உலகத்தில் வேறு எங்காவது இப்படி சொல்கிற மதம் உண்டா? மனித சமூகத்தில் உண்டா? ஆகவேதான், இந்த சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்.
அந்த சமூகநீதியை எப்படிக் கொடுப்பது? சமூகநீதிக்கு ஒரே விளக்கம் - அனைவருக்கும் அனைத்தும்!
உயர்ஜாதிக்காரர்களை வஞ்சிக்கவேண்டும் என்று நாம் சொல்லவில்லை.
நீங்கள் 3 சதவிகிதம் இருக்கிறீர்களா? நீங்கள் 3 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.30 சதவிகிதம் இருக்கிறார்களா? அவர்கள் 30 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளட்டும்.

சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’ என்பதுதான்!
அவரவர்களுக்கு அந்த வாய்ப்புகள் - இதுதான் சமூகநீதி. சமூகநீதி என்றால், வேப்பங்காய் அல்ல. சமூகநீதி என்றால், யாரையும் பிடித்து கடலில் போடுவது இல்லை. சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்!'' என்பதுதான்.
இதை எப்படி கண்டுபிடிப்பது? சமூகநீதியைக் நிறைவேற்றுவதற்காகத்தான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்.உடலில் நோய் வந்தால், டாக்டரிடம் சென்று, ‘‘எனக்கு இதுபோன்ற பிரச்சினை'' என்று சொல்லும்பொழுது அவர் என்ன சொல்லுவார்? 

ஸ்கேன்தான் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு!’’
டாக்டர், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று பார்ப்பதற்கு இப்பொழுது நவீன முறைகள் இருக்கின்றன. ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று சொல்வார்.
இப்பொழுது டாக்டர்கள், ‘‘ஸ்கேன் வேண்டாம்'' என்று சொன்னாலும்கூட, நோயாளி சொல்கிறார், ‘‘எதற்கும் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிடலாமா?'' என்று. இது உங்களுக்கெல்லாம் இயல்பாகப் புரிகின்ற விஷயம்.
அந்த ஸ்கேன்தான் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு!'' என்பதாகும்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது - என்ன நிலவரம்? யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள்? என்ன சூழ்நிலை? இதைச் சொல்வதுதானே!
உடனே அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்கிறார்கள்.

கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரம் இருக்கிறதா? என்று நீதிமன்றமும் கேட்கிறதே!
சமூகநீதி வேண்டும் என்று சொல்கிறவர்கள் அனைவரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறோம்.
நாம் மட்டும் கேட்கவில்லை, சமூகநீதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே மேலே போய் உட்கார்ந் திருக்கிறார்களே - உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் - அங்கே போனவுடன், நீதிபதி மிகவும் வசதியாக ஒரு கேள்வியை வைத்திருக்கிறார்.
‘‘கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இருக்கிறதா?'' என்கிறார்.
இல்லை என்றால், அந்த சட்டம் செல்லாது; கணக் கெடுத்துவிட்டு வாருங்கள் என்று நீதிமன்றம் கட்டளை யிடுகிறது. ஆனால், கணக்கெடுப்பை உயர்ஜாதி தடுக்கிறது; மனுதர்மக் கூட்டம் தடுக்கிறது.
இப்பொழுது மனுதர்மத்திற்கும் - மனித நேயத்திற்கும் தான் போராட்டம்.

முதல் வழிகாட்டியாக இந்தியாவில் முடிவெடுத்தவர் இளந்தலைவர் 
ராகுல் காந்தி
ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முதல் வழிகாட்டியாக இந்தியாவில் முடிவெடுத்த இளந்தலைவர் - இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர்தான் - எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய ராகுல்காந்தி அவர்கள்தான்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தீர்மானமாக அதை நிறைவேற்றியது.  அதன் பிறகு கருத்தரங்கம். தமிழ்நாடு வழக்கம்போல, எல்லாவற்றிற்கும் வழிகாட்டும்.நம்முடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யா கே.எஸ்.அழகிரிதான் அய்தராபாத்திலிருந்து வந்தவுடன், சென்னையில் கருத்தரங்கம் நடத்தினார்.
இன்று கடலூர் வழிகாட்டுகிறது - நிச்சயமாக கடலூர் வழிகாட்டும் - அதிலொன்றும் சந்தேகமேயில்லை. சிதம்பரத்தில்  இன்று கருத்தரங்கம் நடைபெறுகிறது.
ஏனென்றால், பிறவியிலேயே மேலே இருந்து வந்து, ராஜாக்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் எங்கள் கைகளில்தான் நாங்கள் உள்ளேயே விடமாட்டோம் என்று சொன்னார்கள். 
ஆகவே அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று போராட்டம் ஆரம்பித்தது.

ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று வேடம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்
ஜாதியை நினைவூட்டலாமா? ஜாதிக் கொடுமையல்லவா இது என்று கேட்கிறார்கள்.
யார் கேட்கிறார்கள் என்றால், யார் ஜாதியைப் பிடித்துக்கொண்டு, அந்த முத்திரையோடு வாழ் கிறார்களோ, யார் ஜாதி சின்னத்தைப் போட்டுக் கொள்கிறார்களோ - அவர்கள்தான் கேட்கிறார்கள்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று ஏதோ அவர்கள் பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று வேடம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
ஆனால், உண்மையாகவே ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறவர்கள், இந்த மேடையில் இருக்கின்ற அத்துணை பேரும்தான்.
இங்கே இருப்பவர்கள் யாரும் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் அல்ல.

அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக்கூட விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக்கூட 3, 4 நாள்களிலே விவாதம் ஏதும் நடத்தப்படாமல் நிறைவேற்றுகிறார்கள்.

‘‘ஒரே ஜாதி’’ என்று சொல்லட்டுமே!
நாளைக்கே ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வரட்டுமே - இனிமேல் ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு - ஒரே தேர்தல் - ஒரே மொழி - ஒரே மதம் இந்து மதம் - ஒரே கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம் - எல்லாவற்றிற்கும் ஒரே, ஒரே ஒரே என்று சொல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘ஒரே ஜாதி'' என்று சொல்லட்டுமே!
அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோமே - மனிதர்களில் பேதமே இருக்காது அல்லவா!
ஒரே ஜாதி என்று சொல்லாமல் - ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி பாதுகாக்கிறார்கள்?
நாம், சமத்துவ நாள் கொண்டாடுகிறோம், சமூகநீதி நாள் கொண்டாடுகிறோம் தமிழ்நாட்டில். அதற்கு உத்தரவு போடுகிறது திராவிட மாடல் ஆட்சி.

தென்மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு 
கதவு சாத்தப்பட்டுவிட்டது!
ஆனால், இன்றைக்குத் தங்களுடைய ஆட்சி முடியப் போகிறது என்று சொல்லக்கூடிய கட்டத்தில் - எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நண்பர்களே, ஏற்கெனவே அவர்களுக்குத் தென்மாநிலங்களில் கதவு சாத்தப்பட்டு விட்டது. இங்கே பி.ஜே.பி. தலைகீழாக நின்றாலும்கூட, இனிமேல் கதவைத் திறக்க முடியாது.
நடைபெறவிருக்கின்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் வருகிறபொழுது, வடநாட்டிலும் பி.ஜே.பி.,க்குக் கதவு சாத்தப்பட்டது என்கிற நல்ல செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.
ஏனென்றால், மக்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விட்டார்கள். சில பேரை சில காலம் ஏமாற்றலாம்; பலபேரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும், எல்லா காலத்திலேயும் ஏமாற்ற முடியாது என்பது பொதுவிதி!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறீர்களே என்று கேட்பவர்கள், அதே செப்டம்பர் 17 இல் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
இதோ பாருங்கள், ஆதாரத்தோடு உங்களுக்குச் சொல்கிறேன்.
ஒன்றிய அரசு ‘‘விஸ்வகர்மா யோஜனா'' என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அந்தத் திட்டத்தில், நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், நம்முடைய சகோதரர்கள் செருப்புத் தைக்கிறவர்கள்; துணி வெளுப்பவர்கள்; சவரம் செய்பவர்கள்; மலம் எடுக்கும் தொழில் செய்பவர்கள். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள் பாருங்கள் பரம்பரையாக - அந்த பரம்பரை ஜாதித் தொழிலையே அவர்கள்  செய்ய வேண்டுமாம். 

2028 ஆம் ஆண்டுவரையில் 
நடைமுறையில் இருக்குமாம்!
அந்த ஜாதி இழிவு அவர்களை விட்டு நகர்ந்துவிடக் கூடாது; ஜாதி ஒழிந்துவிடக் கூடாது. அதற்காக ஒரு திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டம். இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டுவரையில் நடைமுறையில் இருக்குமாம். அந்தத் திட்டத்தை படங்களுடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று நாம் சொன்னால், நீதிமன்றம் கேட்கிறது; மற்றவர்கள் கேட்கிறார்கள் - ஆகவே, அது எங்களுக்குத் தேவை என்று நாம் சொல்கிறோம். 

ஜாதி ஒழிப்புக்காரர்கள் நாங்கள் எல்லோரும். ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காகத்தான், ஜாதி வாரிக் கணக்கெடுப்புத் தேவை என்கிறோம்.
அம்மைக் கிருமியை உள்ளே விட்டு, அம்மை நோயை ஒழிக்கின்றோம்.
‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டத்தில் 18 ஜாதிகளின் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்.

கல்வி வள்ளல் காமராஜரால் ஒழித்துக் கட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்
ஆச்சாரியாரால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் - கல்வி வள்ளல் காமராஜரால் ஒழித்துக் கட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்.
காமராஜர் என்ற மாமனிதர், தந்தை பெரியாருடைய அந்தப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்து - அவர் முதலமைச்சராக வந்தவுடன், முதலில் போட்ட கையெழுத்து  ‘‘இனிமேல் குலக்கல்வித் திட்டத்திற்கு இடமில்லை'' என்பதற்காகத்தான்.

குலக்கல்வியைக் கொண்டு வந்த ஆச்சாரியாருடைய ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்குமேல் நீடிக்கவில்லை.
70 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. 70 வயதிற்கு மேலாக இருக்கின்றவர்களுக்குத்தான் அந்தப் பழைய வரலாறு தெரியும். 70 வயதிற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.என்றைக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி!

ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம்தான் ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்!
பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு எதிராக அந்த நாளில் கொண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் இது.
ஜாதிவாரியாக 18 ஜாதிகள் அந்தத் திட்டத்திற்கு.
எனவே, ஜாதியை ஒரு பக்கத்தில் ஆணி அடிக்கிறீர்கள். படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
செருப்பு தைப்பது - ஷூ பாலிஸ் போடுவது - ஹிந்தி மொழியில் ஜாதிப் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
(தொடரும்)

வியாழன், 9 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!’’ கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துரை

‘‘

 ஜாதி ஒழிக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட மேல்ஜாதியினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிக்கம்!

இதனை மாற்றி ‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும்!

1

சென்னை, செப். 26  குறிப்பிட்ட மேல்ஜாதியினர்தான் கல்வி, வேலை வாய்ப்புகளை ஆக்ரமித்து இருப்பதால், ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமத்துவ நெறிக் காக ஜாதிவாரி கணக்கெடுப்பு (சென்சஸ்) தேவைப்படு கிறது.  அதனை வலுப்படுத்தவே இத்தகைய கருத்தரங் குகள் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!''

நேற்று (25.9.2023) மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிற்படுத்தப் பட்டோர் துறை சார்பில் ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு இந்தியாவினுடைய சமூகநீதிப் பாதுகாப்புக்கு எது அடிப்படையானதோ அந்த அடிப் படையான தேவை - ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது இந்தக் காலகட்டத்தில் மிகமிக முக்கியமானது. அதனு டைய அவசியம், அதனுடைய தேவை - முக்கியத்துவம் இவற்றையெல்லாம் எந்த மக்கள் உணரவேண்டுமோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்கள், அதிலும் குறிப்பாக இருக் கின்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக் களாகிய அவர்கள் உணரவேண்டும். அந்த நோக்கத்தை நாம் இந்த நேரத்தில் தெளிவுபடுத்தினால்தான், சமூகநீதி என்பது வெறும் அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப் புரையில் இருக்கின்ற ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல், மிக அழகாக எனக்குமுன் இங்கே உரையாற்றிய தலைவர்கள் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கூடிய அளவிற்கு நடத்தக் கூடிய பொருள் பொதிந்த ஒரு கருத்தரங்கம் இது.

இன்னுங்கேட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவு இருக்கிறதே, அது இன்றைக்குக் காட்டியிருப்பது இந்தியாவில் இருக் கின்ற அத்துணை மாநிலங்களுக்கும் வழக்கம்போல் தமிழ்நாடு வழிகாட்டி இருக்கிறது. அதற்காக எல்லோ ரையும் பாராட்டவேண்டும்.

எனக்குத் தெரிந்து ஒரு கருத்தரங்கம் அய்ந்து மணிநேரம் நடைபெற்று இருக்கிறது என்று சொன்னால், இது ஒரு வரலாறுதான். இங்கே எல்லா கருத்துகளையும் மிக அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், தோழர்கள் - மிகவும் தேவையானதுதான்.

சமூகநீதி அரசமைப்புக்கானது - 

அதனை சீர்குலைப்பதா?

சமூகநீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்த அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதையே, இப்பொழுது ஒன்றியத்தில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு பெரிய மோசடியை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்- மோசடி என்ற வார்த்தையை நான்  திட்டவட்டமாகத் தெரிவிக் கிறேன்.

இந்த இடத்தில் பேசினால், வழக்கு வரும் என்று பாலகிருஷ்ணன் சொன்னார். ஏற்கெனவே ஒரு வழக்கு வந்திருக்கிறது. அடுத்து இதற்காக ஒரு வழக்கு வந்தால் மிகவும் நல்லதுதான்.

ஏனென்றால், மக்கள் மன்றத்தில் பேசுவதைவிட, மிகவும் முக்கியம் நீதிமன்றத்தில் பேசவேண்டிய அவ சியம் - அதுவும் உச்சநீதிமன்றம் போன்ற இடங்களில் பேசவேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, அது சலுகையல்ல; நிறைய பேருக்கு இந்த அடிப்படையைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். இதுவரையில் அந்த அடிப் படையை நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை.

எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய திருப்தி என்னவென்றால், இங்கே சகோதரர் திருமா அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார். காங்கிரசே இப்பொழுது திராவிடர் கழகமாகி விட்டதா?  என்று.

உண்மையை எப்பொழுதும் ஒன்றாகத்தான் நிற் போம் நாங்கள். ஏனென்றால், எங்களைப் பொறுத்த வரையில் கொள்கை ரீதியாக ஒன்றாகத்தான் இருக்கி றோம்.

காமராஜர் ஆட்சியாக இருந்தாலும், ஓமந்தூரார் ஆட்சியாக இருந்தாலும் - அந்தக் காலத்திலேயே ஓமந் தூராரை ‘‘தாடியில்லாத இராமசாமி இவர்'' என்றார்கள்.

காமராஜரை ‘‘கருப்புக் காக்கை'' என்று இராஜ கோபாலாச்சாரியார் வருணித்தார். 

ஆகவே, இந்தக் கொள்கைதான் மிகவும் முக்கியம்.

இப்பொழுது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது- அதுதான் சமூகநீதி.

காங்கிரசில் ஏற்பட்டுள்ள ஒரு திருப்பம்!

சமூகநீதியில், இன்றைக்கு இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருப்பதற்கு - இதுபோன்று இந்தியா முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருக்கவேண்டும் என்று சொல்லி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், யார் இது வரையில் அழுத்தப்பட்டு இருந்தார்களோ, யார் மிதிக்கப் பட்டு இருந்தார்களோ, அவர்களை மேலே கொண்டுவா என்று சொல்லக்கூடிய ஒரு திருப்பம் காங்கிரசில் ஏற்பட்டு இருக்கிறது என்றால், அது இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டு இருக்கின்ற திருப்பம் - வரவேற்கத்தகுந்த திருப்பமாகும்.

இங்கே சகோதரர்கள் திருமா அவர்களும், இளங்கோ அவர்களும் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், ‘‘இன்றைய  காங்கிரசினுடைய தலைமை, சமூகநீதிக்கே முன்னுரிமை கொடுக்கக்கூடிய தலைமை. இதற்குமுன் எந்தக் காலகட்டத்திலும் இல்லாதது  இப்பொழுது இருக்கிறது.

அன்னை சோனியா காந்தி அவர்களானாலும் - இன்றைக்கு நாடே நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்றால், அது ராகுல்காந்தி அவர்கள்தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவர் எந்தக் கட்சிக்குத் தலைவர் என்பது முக்கியமல்ல - இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு இளைய, புதிய நம்பிக்கையுள்ள ஒரு தலைவர்.

அவர்மீது என்ன உங்களுக்கு இவ்வளவு பாசம் என்று நீங்களெல்லாம் கேட்கலாம்.

கொள்கை ரீதியாக 

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

ஒரு தலைவருக்கு முதல் தகுதி என்னவென்றால், நம்முடைய கொள்கைக்கு, யார் கொள்கை எதிரிகள்? கருத்தியல் ரீதியாக, கொள்கை ரீதியாக யார் எதிரிகள்? கொள்கை ரீதியாக யார் நண்பர்கள் என்பதை அடையாளம் காணுவதுதான்.

அதனைத் தெளிவாக அடையாளங்கண்டு கொண் டிருப்பதுதான் இன்றைய தலைமை.

அதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்திருக்கின்ற திரு.மல்லிகார்ஜூனே கார்கே. அவருடைய காலம், அற்புதமான திருப்பங்கள் ஏற்படக்கூடிய, வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்ற காலம்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டி லிருந்து, ஏன் தந்தை பெரியார் வெளியே வந்தார்? 50 சதவிகித இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகத்தான்.

1919 ஆம் ஆண்டிலேயே 

தந்தை பெரியாரின் கோரிக்கை!

50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே உயர்ஜாதிக்காரர்கள், மற்றவர்கள் வேண்டுமானா லும் எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னொரு 50 சத விகிதத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தாருங்கள்'' என்ற தீர்மானத்தை, தந்தை பெரியார் அவர்கள் 1919 இல் காங்கிரசில் சேர்ந்த நாளிலிருந்தே வலியுறுத்தி வந்தார்.

சென்னை மாகாண சங்கம் என்று ஆரம்பித் தார்கள்; காங்கிரசில் சேருவதற்கு முன்பே அந்தக் கருத்தை உண்டாக்கினார். காங்கிரசினுடைய அமைப்புகளில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் இருந்தது. 1920 இல் தலைவராகிறார் தந்தை பெரியார். 1921 இல், திருநெல்வேலி, திருவண்ணா மலை, திருப்பூர் என்று இப்படி வரிசையாக ஒவ்வொரு ஆண்டும் வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அதனை உயர்ஜாதி ஆதிக்கத்தினர் தடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

அதனால்தான், வேறு வழியில்லாமல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியே வருகிறார். 

இந்த வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்.

காங்கிரசை விட்டு பெரியார் விலகியது ஏன்?

இன்றைக்கு எப்படி மாறுதல் வந்தது என்றால், ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு  ‘‘The wheel has come full circle'' என்று.

அதுபோன்று மிகமுக்கியமாக வருகின்ற நேரத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வந்தவுடன், மல்லி கார்ஜூன கார்கே ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.

ராகுல் காந்தி அவர்களுடைய கருத்தே தீர்மானமாக வருகிறது.

முதலில், காங்கிரஸ் கமிட்டி அமைப்பிலேயே, வகுப் புரிமை, சமூகநீதி தத்துவம் இருக்கவேண்டும் என்று.

இதுதான் பெரியாருக்கு வெற்றி! அன்றைக்கு நான் ‘விடுதலை'யில் அறிக்கை எழுதினேன்.

இதற்காகத்தானே பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். 

‘‘அனைவருக்கும் அனைத்தும்!''

சமூகநீதியினுடைய தத்துவம் என்ன?

சமூகநீதியினுடைய தத்துவம் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று பெரியார் அவர்கள் இரண்டே வார்த்தையில் சொன்னார்.

தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளினை - சமூகநீதி நாளாகக் கொண்டாடக்கூடிய நம்முடைய ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய ஒப்பற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாருடைய வாசகத்தையே, உறுதிமொழியில் கொண்டு வந்தார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' - தயவு செய்து நன்றாக எண்ணிப் பாருங்கள். உயர்ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கோ, முன்னேறிய ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கோ இட ஒதுக்கீடு இல்லை என்று நாம் சொல்லவில்லை; கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவில்லை; அல்லது தூக்கி எறியவில்லை.

அதற்குப் பதில் என்ன சொல்லுகிறோம், ‘‘உங்கள் பங்கு எவ்வளவோ அதை அனுபவித்துக் கொள்ளுங்கள்; இவருக்கு எவ்வளவு பங்கோ, அதை இவர் அனு பவித்துக் கொள்ளட்டும்; அவரவர் பங்கை அவரவர் அனுபவிக்கட்டும் என்பதுதான் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' - அதுதான் சமூகநீதி.

சரி, அவரவர் பங்கு என்பது எப்பொழுது தெரியும்?

கணக்கெடுத்தால்தான் தெரியும்.

இங்கே உரையாற்றிய அத்துணை பேரும் சொன் னார்கள்; இளங்கோ அவர்களும் சொன்னார்; நான் அந்தக் கருத்தை வழிமொழிகிறேன்.

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்போர் - ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருவது ஏன்?

ஒரு விசித்திரமான கருத்தரங்கமாக இருக்கும் சில பேருக்கு. எப்படி என்றால், யார் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறார்களே என்று. இன்றைக்கும், நாளைக்கும் எங்களுடைய கொள்கை ஜாதியை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்பதுதான். Annihilation of Caste  இதுதான் அம்பேத்கர் அவர்கள் கொடுத்த தலைப்பு.

ஜாதியை அழிப்பதற்குமுன் ஜாதி இருக்கிறதே- உலக நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

மற்ற நாடுகளில் எல்லாம் மனிதர்கள் பிறக்கிறார்கள். நம்முடைய நாட்டில்தான் உயர்ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன், தொடக்கூடிய ஜாதிக்காரன், தொடக்கூடாத ஜாதிக்காரன், படிக்கக் கூடிய ஜாதிக்காரன், படிக்கக் கூடாத ஜாதிக்காரன், படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற சட்டம் இன்றைக்கும் தர்மமாக - ஸநாதன தர்மமாக இருக்கிறது அது. மனுநீதி- அந்த மனுநீதிதான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வர வேண்டும்  என்பதுதானே ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை.

அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் மனுதர்மம் இருக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து!

ஆர்.எஸ்.எஸ். ஏடு தலையங்கம் எழுதியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார், மனுநீதி இருக்க வேண்டிய இடத்தில், இப்படி ஒரு அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? என்று கேட்கிறார்.

ஆகவே, மனுநீதியில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

உயர்ஜாதிக்காரர்கள் படிக்கவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இங்கே தோழர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.

ஆகவே, அந்த அடிப்படையை நினைத்துப் பார்க்கும்பொழுது, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் தேவை.

பாலம் கட்டும்வரை மாற்றுப் பாதை!

ஓரிடத்தில் பந்தி நடைபெறுகிறது; சாப்பாடு குறை வாக இருக்கிறது; வந்திருக்கின்றவர்களின் எண்ணிக் கையோ அதிகம். அப்பொழுது என்ன செய்யவேண்டும்? நீண்ட நாள்களாக சாப்பிடாமல் இருக்கின்றவர்களை முதல் பந்தியில் உட்கார வையுங்கள் என்று சொல்கிறோம்.

யார், யார் பசியேப்பக்காரர்கள் என்பதைக் கணக் கெடுக்கவேண்டும்; அதேபோன்று புளியேப்பக்காரன் - நிறைய சாப்பிட்டுவிட்டு, அஜீரணத்திற்காக மருந்து சாப்பிடுகிறானே அவனைக் கொண்டு போய் முன்னால் அமர வைத்து - பசியேப்பக்காரனே, நீ வராதே, நீ பார்த்தாலே எங்களுக்குத் தீட்டாயிடும்; நாங்கள் சாப்பிடுவதை நீ பார்க்கக்கூடாது என்று இப்படி ஜாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றபொழுது, ஜாதி ஒழியவேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. ஆனால், அது இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால், இந்த நாட்டில், ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்கிறோம்.

பிறக்கும்பொழுதும் ஜாதி - சாகும் பொழுது ஜாதி - சுடுகாட்டிலும் ஜாதி. ஒரு மனிதனுக்குத் தொல்லையே, உயிரோடு வாழும் வரையில்தான். ஆனால், இந்த ஜாதித் தொல்லை இருக்கிறதே, உயிர் போன பிறகும், சுடுகாட்டில் போய் நிற்கிறது இந்த ஜாதி.

ஆகவேதான், நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்; பின் ஏன், ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல் கிறோம் என்றால், ஜாதியைக் காப்பாற்ற அல்ல. உங் களைக் காப்பாற்ற, மக்களைக் காப்பாற்ற, சமூகநீதியைக் காப்பாற்ற ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை.

ஓரிடத்தில் பாலம் கட்டவேண்டும்; பாலம் கட்டும் வரை மாற்றுப் பாதையில் செல்லவேண்டி இருக்கும். இதுதான் ஜாதி ஒழிப்பு இலக்கணம் - இலக்கு. இதுதான் இட ஒதுக்கீடு, இதுதான் சமூகநீதி. அந்த சமூகநீதி வேண்டும் என்றால், ஒரு மாற்றுப் பாதை தேவை.

உடனே கேட்பார்கள், எவ்வளவு நாள்கள்தான் மாற்றுப் பாதையில் சென்றுகொண்டிருக்கவேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கேட்டால், அவர்களுக்கு ஒரே பதில், ‘‘எவ்வளவு நாளைக்கு நீ பாலம் கட்டுவதைத் தாமதிக்கின்றாயோ, அவ்வளவு காலத்திற்கு இந்த மாற்றுப் பாதை தேவை.'' அது எங்களுக்காக அல்ல. 

இட ஒதுக்கீடு கொடுத்தால், நீதிமன்றத்திற்குச் செல் கிறார்கள்; அங்கே நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு எப்படி இருக்கிறது என்று எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இன் றைக்கு உச்சநீதிமன்றத்தில், மிகப்பெரும்பான்மையான இருக்கின்ற மக்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். அன்றைக்கு மண்டல் எடுத்த கணக்கெடுப்பின்படி 52 சதவிகிதம். ஆனால், இன்றைக்கு 80 சதவிகிதம்.

ராகுல்காந்தி அழகாகக் கேட்டார், ‘‘ஓபிசியினுடைய அடிப்படை என்ன? எத்தனை பேர் இருக்கிறார்கள்?'' என்று.

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் அந்த வார்த்தையை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் 

இட ஒதுக்கீடு உண்டா?

10

உச்சநீதிமன்றத்தில் எத்தனை பேர் நீதிபதியாக இருக்கிறார்கள்; 34 நீதிபதிகள். அந்த 34 பேரில், எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒன்றோ, இரண்டோதான். அதேபோன்று ஓ.பி.சி. இரண்டே பேர்தான்.  அதுவும் கருநாடகத்தில் இருந்து சென்றவர் ஒருவர், தமிழ்நாட் டிலிருந்து சென்ற இன்னொருவர்.

இவர்கள்தான், இத்தனைக் கோடி மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும்பொழுது தீர்ப்பு கொடுக்கவேண்டும்.

என்ன கேட்கிறோம்? ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொல்கிறோம் - ஜாதி ஒழிப்புக்காரர்களுக்கு என்ன அவசியம் என்பதை நன்றாகப் புரிந்து கொள் ளுங்கள்.

இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறீர்களே, எத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கிறீர்கள்?

இத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கின்றோம் என்கிறார்கள்.

சரி, உங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்கிறீர்களே, கணக்கெடுப்பு புள்ளிவிவரம் இருக்கிறதா? 

அங்கே போனால் புள்ளி விவரம் கேட்கவேண்டியது. இங்கே நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே, அவரும் சொல்லுகிறார், ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கமாட்டோம் என்கிறார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

நாங்கள் சமூகநீதி அடிப்படையில் உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கமாட்டோம் என்பதுதானே அதன் அர்த்தம்.

இட ஒதுக்கீடு கொடு என்று நாங்கள் நியாயம் கேட் பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதாகும்.

ஜாதியைக் காப்பாற்ற அல்ல - சமூகநீதிக்காகத்தான்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பதி னுடைய அடிப்படையே, ஜாதியைக் காப்பாற்ற அல்ல; சமூகநீதியைக் காப்பாற்றத்தான் என்பதை நன்றாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

காரணம் என்னவென்றால், இட ஒதுக்கீட்டை - மனுதர்மப்படி யார் உண்டாக்கியது? இட ஒதுக்கீட்டை நாம் உண்டாக்கவில்லை.

ஒடுக்கப்பட்டவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, பெண்களோ இட ஒதுக்கீட்டை உண்டாக்கவில்லை.

இன்றைக்கு இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது?

அருள்கூர்ந்து நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்; புரிய வைக்கவேண்டியது நம்முடைய கடமை.

முதலில் ஆரம்பித்தது அவர்கள்தான்.

பிராமணர்களுக்குக் கல்வி

சத்திரியர்களுக்கு ஆட்சி

வைசியர்களுக்கு வியாபாரம்

சூத்திரர்கள் அடிமையாக இருக்கவேண்டும்.

பஞ்சமர்கள் அதற்கும் கீழே - 

இவை எல்லாவற்றிற்கும் கீழே எல்லா ஜாதிப் பெண் களும் - அது உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும்.

இதைத்தான் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘படிக்கட்டு ஜாதி முறை'' என்று.

ஏணிப் படிக்கட்டில் மேலே, கீழே, அடுத்தது, அடுத்தது என்று வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு அழகான உதாரணத்தையும் சொன்னார் - நான்கு மாடி கட்டடத்தில், மேலே வசிப்பவர் அங்கேயே இருக்கிறார்; கீழே இருப்பவர், கீழே இருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு ஒரு விசித்திரமான சூழல் என்னவென் றால், படிக்கட்டு கிடையாது. மேலே இருப்பவன், மேலேயே இருப்பான்; கீழே இருப்பவன், மேலே போக முடியாது.  மேலே இருக்கிறவன், கீழே வரமாட்டான். அந்தக் கட்டடத்திற்குப் படிக்கட்டு கட்டித்தா என்று சொல்வதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதாகும்.

அப்படி படிக்கட்டு கட்டினால், மேலே இருப்பவர் கீழே இறங்கி வரலாம்; கீழே இருப்பவர் மேலே போகலாம் என்றுதான் சொல்கிறோம்.

ஜாதி ஒழிந்துவிட்டதா?

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று சொல்லும்பொழுது, 100-க்கு 3 பேராக இருப்பவர்கள், அவர்களுடைய பங்கை எடுத்துக் கொள்ளட்டும்; 10 பேர் இருக்கிறார்களா, பத்து பேருக்குரிய பங்கை எடுத்துக்கொள்ளட்டும். மீதி 90 பேருடைய பங்கைக் கொடுக்கவேண்டும் அல்லவா! 

அப்படியில்லாமல், 100-க்கு 100 பங்கையும் அவர் களே அனுபவித்துக்கொண்டு, மற்றவர்களை வெளியே துரத்திவிட்டார்கள்.

இப்பொழுது, மற்றவர்களுக்கு இடம் வேண்டும் என்று கேட்கிறோம். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

ஏனென்றால், ஜாதி என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது. ஜாதி ஒழிப்புக்குப் பணியாற்றுபவர்கள் வேறு. ஆனால், இன்றைக்கும் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றனவே, எப்படி?

சொந்தப் பெண், வேறு ஒரு ஜாதியில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்றவுடன், கூலிப் படையை வைத்துக் கொல்கிறார்களே, அந்த மனப்பான்மையினுடைய கொடுமை என்ன? ஜாதி மனப்பான்மைதானே!

அப்படியென்றால், ஜாதி இருக்கிறதா? இல்லையா? வெளிநாடுகளில் ஜாதி என்றால் என்னவென்று கேட்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்த ஏற்றத்தாழ்வு என்பது - பொருளாதார ஏற்றத்தாழ்வுதான்; சமூக ஏற்றத்தாழ்வு என்பது அவர்களிடையே கிடையாது.

ஆனால், அது இங்கே இருக்கின்ற காரணத்தி னால்தான், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், 

We the People, என்று தொடங்கப்பட்டு, Justice, social, economic and political   அதாவது முதலில் எடுத்தவுடன் சமூகநீதி; இரண்டாவது பொருளாதார நீதி; மூன்றாவது அரசியல் நீதி.

ஆகவேதான், இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்கு, சமூகநீதியை நிலைநாட்ட ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தியாகவேண்டும்.

சமூகநீதி வளர, வளர ஜாதி ஒழியும்!

இட ஒதுக்கீடு வந்தால், சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. மிகப்பெரிய அளவிற்கு நம் மக்கள் படிக்கிறார்கள்; அதனால், சமத்துவம் வருகிறது. ஏற்படுகின்ற வாய்ப்புகள் தானாகவே ஏற்படும்.

இதற்கு நேர் எதிரானதுதான் நண்பர்களே, 

ஆர்.எஸ்.எஸ். - ஜாதியைக் காப்பாற்றுவது- வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் யாரோ ஒருவர் அந்தக் காலத்தில் சொல்லியிருக்கிறார் என்று நினைக்காதீர்கள்; இன்றைக்கு வந்திருக்கின்ற விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினுடைய சூழ்ச்சி என்ன?

18 வயது நிரம்பிய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லக்கூடாது; அதற்குப் பதில் செருப்புத் தைக்கிறவர் பிள்ளை, செருப்புத் தைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; துணி வெளுக்கிறவர் பிள்ளை, துணி வெளுக்கக்கற்றுக்கொள்ளுங்கள்; சிரைக்கிறவர் பிள்ளை, சிரைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நல்ல கத்தி வாங்கிக் கொள்வதற்காக, உங்களுக்கு 500 ரூபாய் சலுகைக் கொடுக்கிறோம் என்று சொன்னால், என்னங்க அர்த்தம்?  பேனா பிடிக்கவேண்டிய நம்மு டைய பிள்ளைகள், மறுபடியும் கத்தியைப் பிடிக்க வேண்டுமா?

நாக்கில் தேனைத் தடவுகிறார்கள்; தூண்டிலில் மண்புழுவை வைத்து மீனைப் பிடிப்பதுபோன்று, வட்டியில்லாத கடன் தருகிறோம்; குறைந்த வட்டி; 5 சதவிகித வட்டி என்று சொல்கிறார்கள்.

நீதிமன்றங்கள் எழுப்பும்  

வினாக்கள் என்ன?

ஒரு லட்சம் ரூபாய் தருகிறார்களே என்று நம்மாட்கள் புரியாமல் சொல்கிறார்கள். 

அந்தப் பணத்தை கடனாகத்தான் தருகிறார்கள்; அவர் வீட்டுப் பணத்தையா எடுத்துத் தருகிறார்? நம் கட்டிய வரிப் பணத்தைத்தானே தருகிறார்கள்.

ஆகவேதான், அவர்கள் ஒருபக்கத்தில் ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள் என்று இங்கே எல்லோரும் சொன் னார்கள்.

ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதை ஒரு பக்கம் உயர்நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்; வன்னியர்கள், மற்றவர்களுக்கு எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். அப்பொழுது என்ன கேட்டார்கள், ஜாதி வாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரம் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால், அது செல்லாது என்று சொன்னார்கள்.

மகாராட்டிரத்தில் உள்ள மராட்டியர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் - அதற்கும் கணக்கெடுப்பு ஜாதி வாரியாக இருக்கிறதா? என்று நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்.

சரி, அவ்வளவு நியாயம் பார்க்கின்ற, தராசு பிடிக்கின்ற உயர்ஜாதி நீதிபதிகள், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதி ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டபொழுது கேட்டார்களா?

அது என்ன? ஏழைகளில், உயர்ஜாதி ஏழைகள். ஏழைகள் அதிகம் இருப்பதே, கீழ்ஜாதிக்குள்தான் இருக் கிறார்கள்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் 

பார்ப்பனர்களா உழைக்கிறார்கள்!

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி யாற்றும் பெண்கள், ஆண்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் அதானிக்கோ, அம்பானிக்கோ சொந்தக் காரர்களா? எங்கள் சகோதரிகள், எங்கள் தாய்மார்கள், எங்களுடைய பிள்ளைகள், எங்களுடைய தோழர் கள்தானே!

எந்த உயர்ஜாதிக்காரன், எந்தப் பார்ப்பான், எந்த முன்னேறிய ஜாதிக்காரன் - உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லுகிறார்களே, அவர்களில் யார் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுங்கள் பார்ப்போம்.

ஆனால்,  அது செல்லும் - நீதிமன்றத் தீர்ப்பு. அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தைக் கேட் டார்களா?

50% இட ஒதுக்கீட்டுக்குமேல் போகக்கூடாது என்றால், உயர்ஜாதியினருக்கு 

10 விழுக்காடு கொடுத்தது எப்படி?

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாடு போராடி, அதில் வெற்றி பெற்று - அதனை நிலைக்க வைத்து - 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் வைத்த பிறகு, அதன் கிட்டே போக முடியவில்லை.

ஆனால், 69 சதவிகித இட ஒதுக்கீடு வரும்பொழுது, ‘‘இது என்ன அநியாயம்? 50 சதவிகிதத்திற்குமேல் போய்விட்டதே, இவர்களுக்கு; எப்படி கொடுத்தார்கள்?'' என்று கூப்பாடு போட்டார்கள்.

இப்பொழுது, இவர்களுக்கு, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் வருகிறது என்றவுடன், அதைப்பற்றி மூச்சே விடவில்லை. 

சரி, 50 சதவிகிதம் தீர்ந்து போய்விட்டதே, இந்த 10 சதவிகிதத்தை எங்கே இருந்து கொடுக்கிறீர்கள்?

உயர்ஜாதியிலிருந்து கொடுக்கிறோம் என்றார்கள்.

ஏழைகளுக்குக் கொடுக்கிறோம் என்றால், எல்லா ஜாதி ஏழைகளுக்கும் அல்லவா கொடுக்கவேண்டும். அதேபோன்று எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்பதுதான் சமூகநீதி.

எவ்வளவு பித்தலாட்டம், எவ்வளவு மோசடி இருக் கிறது என்பதற்கு அடையாளம், நமக்கு 50 சதவிகிதத் திற்குமேலே போனால், தகுதி, திறமை  கெட்டுப்போகிறது என்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு, உயர்ஜாதிக் காரர்களுக்கு வந்தால், அது நியாயமாம்.

இங்கே, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. காரணம், திராவிட ஆட்சி, ‘திராவிட மாடல்' ஆட்சி நடைபெறு வதால், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என் பதில் உறுதியாக இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆனால், புதுச்சேரியில், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக் கிறார்கள். முன்னேறிய ஜாதியினர் என்ற பட்டியலில், 5 சதவிகிதம்தான் மொத்தமே இருக்கிறார்களாம். 5 சதவிகித மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு.  இது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதையெல்லாம் எடுத்துப் பேசவேண்டும்; புரிய வைக்கவேண்டுமே!

இந்த நேரத்தில், இவற்றையெல்லாம் எடுத்து, மக்களிடம் தெளிவாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற கவலையோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இதனை செய்திருப்பது பாராட்டத்தகுந்ததாகும்.

தோழர்களே, இதனை ஒரே ஒரு கருத்தரங்கத்தோடு நிறுத்தாதீர்கள்; ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்துங்கள்.

வட மாநிலங்களில் 

பிரச்சாரம் அதிகம் தேவை!

இன்றைக்கு நமக்குப் பெரிய வாய்ப்பாக, அகில இந்திய காங்கிரசின் தலைமை - இளம் தலைமை இந்தக் கருத்தை முன்னிறுத்தி சொல்வதினால், வடபுலத்தில் இந்தக் கருத்தை அதிகமாக மக்களிடம் பரப்பவேண்டும்.

1951 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் முத லாவது திருத்தத்தை தந்தை பெரியார் போராடியதின் வாய்ப்பாகக் கொண்டு வந்து, அதனை காமராஜர் செய்தார் என்பதையெல்லாம் இங்கே சொன்னார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் வகுப்புவாரி உரிமை இருந்தது. முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்ததால், வழக்கு வந்ததால் என்ன லாபம் என்றால், மறைமுக நன்மை என்னவென்றால், இந்தியா முழுவதும் உள்ள இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதனால் விடியல் ஏற்பட்டது.

ஆகவே, தமிழ்நாடு, இந்தியாவிற்குக் கொடுத்தது அன்றைக்கு. அதேபோல, இன்றைக்கும் நீங்கள் காங்கிரஸ் கமிட்டியின்மூலமாக, இந்தியா முழுமைக்கும் இதை கொண்டு போய்ச் சேர்க்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் கருத்தைச் சொல்லுங்கள்; தெளிவான கருத்துகளைச் சொல்லுங்கள்.

சமூகநீதி என்பது சலுகையல்ல -

சமூகநீதி என்பது பிச்சையல்ல -

சமூகநீதி என்பது நம் பிறப்புரிமை!

ஆகவே, அந்தப் பிறப்புரிமையை வலியுறுத்த வேண்டும் என்றால், எந்த இடத்தில் கண்ணிவெடி வைத் திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கண்ணிவெடியைப் புதைத்து வைத்திருக்கின்ற இடம்தான் - ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாதே'' என்று சொல்வது. அந்தக் கண்ணிவெடியைக் கண்டு பிடித்துத் தூக்கிப் போடுவதுதான் - ஜாதிவாரி கணக் கெடுப்பு என்ற ஏற்பாடு.

ஆகவே, அதை சிறப்பாக செய்துள்ள அத்துணை பேருக்கும் நன்றி!

தென்னாட்டில் பி.ஜே.பி.,க்கு இடமில்லை!

தெளிவாக, இதனை வடநாட்டுக்காரர்களுக்குச் சொல்லவேண்டும்; தென்னாட்டைப் பொறுத்தவரையில் இங்கே பி.ஜே.பி.,க்கு இடமில்லை என்று அனுப்பியாகி விட்டது.

வடநாடும் அதனை செய்யவிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.

இன்னும் 6 மாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.

இப்பொழுது இவர்கள் செய்யாவிட்டாலும், அப் பொழுது செய்வோம். அன்றைக்கு இதேபோன்று, அழைத்துப் பாராட்டுக் கூட்டம் நடத்துவோம். 

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவுப் போட்ட ஒன்றிய அரசாங்கமே, வாழ்க, வருக! என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கு வோம்.

அந்த முயற்சிகளைத் தொடருங்கள், தொய்வில் லாமல் தொடருங்கள்!

வாழ்க பெரியார்!

வளர்க சமூகநீதி!

வருக புதுயுகம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுத் தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணை யத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர், திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார், மதிமுக பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், தி.மு.க அமைப்புச் செயலாளர்  நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்  கருத்தரங்க உரையாற்றி னார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கோவா மாநில பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன், ஆ.கோபண்ணா,  காங்கிரசு கட்சியின் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில பொறுப் பாளர்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப் பாளர்கள்,  கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

 

சனி, 21 ஆகஸ்ட், 2021

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க உழைத்த தமிழர் தலைவருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்


சென்னை,ஆக.21- அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேற்று (20.8.2021) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித் தனர்மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில்இப்பிரச் சினையை முதன் முதல் 8.5.2020 அன்று அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி மக்கள் மன்றத்திலும்அரசியல் தலை வர்கள் மத்தியிலும் எடுத்துச் சென்றுஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்தமைக்குநன்றி யினையும் மகிழ்வையும்  தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன்அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம் மற்றும் மாநில அரசுக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் ஆகிய முக்கிய பிரச் சினைகளில் தொடர்ந்து வலியுறுத்தி  வெற்றி கண்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.

ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக் கான முக்கிய கோரிக்கைகளை நிறை வேற்றிட ஒன்றிய அரசை வலி யுறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் நிர் வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

1.       2021இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்

2.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினர் குறித்து ஒன்றிய அரசு மறுபரி சீலனை செய்து முற்றிலுமாக நீக்க வேண்டும்

3.அரசுடைமையாக்கப்பட்ட ஒன்றிய அரசு வங்கிகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு பறிபோகும் வேலை வாய்ப்புகள்.

4.       அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நியமனத் தில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படாமை.

5.  நாகையில் சிபிசிஎல் நிறுவனம் 50 சத வீதம் தனியார் முதலீட்டில் துவக்கப்பட்டா லும்இட ஒதுக்கீடும்உள்ளூர் பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

6.       பொதுத்துறை வங்கிகள்காப்பீட்டுக் கழகம்அய்.சி.எப்., கனரகத் தொழிற்சாலை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு.

கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதிபொருளாளர் எம்.இளங்கோவன் (அய்.அய்.டி.), செயலா ளர்கள்எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்), எஸ்.பிர பாகரன் (நியூ இந்தியா காப்பீடு), .ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), மற்றும் டி.துரைராஜ் (சென்னை பெட்ரோலி யம் கார்ப்பரேசன்), சுரேஷ் (எச்.வி.எப்., ஆவடி), ராஜ்குமார்லோகநாதன் (சென்சஸ் துறை), டி.ரவிகுமார்எஸ்.நடராசன்எஸ்.சேகரன்ஞா.மலர்க்கொடிகே.சந்திரன்எஸ்.சத்தியமூர்த்திலோகேஷ் பிரபுவேலாயுதம் (யூனியன் பாங்க் ஆப் இந்தியா), ஆகியோர் பங்கேற்றனர்.

அம்ச கோரிக்கைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி,  திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன்  ஆகியோரிடம் வழங்கினர்.

தமிழர் தலைவர் அவர்கள் கோரிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் விரிவாக உரையாடினார்அரசிடம் உரிய முறையில் தெரிவித்திடவும்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்  ஆவன செய்வதாக தெரிவித்தார்.