பக்கங்கள்

ஜாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 நவம்பர், 2023

தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை


காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர் தலை எதிர்கொள்வது தொடர் பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவ னில் 11.9.2023 அன்று நடை பெற்றது.

கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலுக்கு தயாரா வது தொடர்பாக சோழ மண்டல காங்கிரஸ் வாக்குச்சாவடி உறுப்பி னர்கள், நகர, மாநகர, ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை கும்பகோணத்தில் அண்மையில் நடத்தி இருந்தோம். 

அடுத்ததாக திண்டுக்கல், தேனி ஆகிய மக்களவைத் தொகுதி நிர் வாகிகள் கூட்டம் 21ஆ-ம் தேதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம் பரம் தொகுதி நிர்வாகிகள் கூட் டம் 24ஆ-ம் தேதியும், திருவள்ளூர் தொகுதிக்கு 30ஆ-ம் தேதியும், விருதுநகர், தென்காசி தொகுதி களுக்கு அக்.8-ஆம் தேதியும், கன்னி யாகுமரி தொகுதிக்கு அக்14ஆ-ம் தேதியும், தூத்துக்குடி, திருநெல் வேலி தொகுதிகளுக்கு அக்.22ஆ-ம் தேதியும் நடைபெற உள்ளன. 

மற்ற தொகுதிகளுக்கான தேதிகள் பின் னர் அறிவிக்கப்படும்.

எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இட ஒதுக்கீடு செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் பலன்கள் துல்லியமாக மக்களுக்கு சென்ற டைவதில்லை.

இட ஒதுக்கீட்டின் பலன்கள் பாரபட்சமின்றி, சமமாக, துல்லி யமாக மக்களை சென்றடைய தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். பிர தமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றி இருக்கலாம்.

ஆனால் ஜி_20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனை வரும் "இந்தியா" என்று தான் கூறினர். ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கலாம். நாட்டில் சட்டம், நீதிமன்றங்கள் உள்ளன. அதில் அவரது முயற்சி தோற்கடிக்கப் படும். இவ் வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆருண், பீட் டர் அல்போன்ஸ்,  மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் செல்லக் குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், விஜய்வசந்த், அசன் மவு லானா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெ.விஸ் வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு

 அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு

3

சியாட்டில், பிப்.22- அமெரிக்காவிலுள்ள சியாட்டில் மாநகர் மன்றக் கூட்டத்தில் ஜாதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானத் தின்மீதான வாக் கெடுப்பில் ஆறுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் ஜாதிக்கு தடைவிதிக்க ஒப்புதல் அளித் துள்ளனர். அதன்படி, சியாட்டில் மாநகரில் பாகு பாடுகளைக் கொண்டுள்ள ஜாதி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலேயே முதல்முறையாக சியாட்டில் மாநகரில் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தின்படி குறிப்பாக ஜாதியின் பெயரால் உள்ள பாகுபாடுகளுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.

மனிதர்களை பிளவுபடுத்துகின்ற ஜாதி அமைப்புமுறை வருணாசிரம, சனாதன, இந்து மதத்தின் பெயரால் மனிதர்கள் சமத்துவத்துடன் நடத்தப்படாமல், பிறப்பு முதல் இறந்த பின் னரும் ஜாதி இழிவு தொடர்ந்துகொண்டிருக் கிறது. இந்த ஜாதி பாகுபாடுகள் தெற் காசியா விலிருந்து அமெரிக்க அய்க்கிய நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடு களுக்கு புலம் பெயர்ந்தவர் களிடையேயும் நிலவி வருகிறது. 

கண்டம் விட்டு கண்டம் தாண்டியும், பல்வேறு நாடுகளைக் கடந்து பிழைப்புக்காக சென்றபோதிலும், ஜாதி பாகுபாடுகளால், ஜாதி இழிவுகள் மதத்தின் பெயரால் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவலநிலை இந்த இந்து மதம், வருணாசிரமம், சனாதனத்தின் கொடு வாள் சமத்துவத்தைப் பிளந்துகொண்டுவரு கிறது.

அதற்கொரு முடிவு கட்டும்வகையில், அமெரிக்க நாட்டில் முதல் முறையாக சியாட்டில் மாநகர் மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்பொழுது ஜாதிக் கொடுமைக்கு சட்டப்படி தடை போடப்பட்டுள்ளது.

மனித உரிமையில் மனித நேயத்தில் அக் கறை கொண்டோர் என பலதரப்பினரும் இச் சட்டத்தை பெரிதும் வரவேற்று மகிழ்கிறார்கள்.

ஜாதிய பாகுபாடு என்பது மனித உரிமை களுக்கு எதிரான தாக உள்ளது. ஏற்கெனவே உள்ள மனித உரிமைகள் சட்டத் தின்படி ஜாதி பாகுபாடுகளுக்கு எதிரான நடவடிக்கை இல் லாத நிலையில், தற்பொழுது ஜாதிக்கு தடை போடுகின்ற இச் சட்டத்தின்மூலம் சமத்துவம், மனிதநேயம் பாதுகாக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருதி இச்சட்டத்தை வரவேற் கிறார்கள்.

சமூகவியலாளரும், இந்திய அமெரிக்கராக சியாட்டில் மாநகர் மன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒரே உறுப்பினரான ஷாமா சவந்த் கூறுகையில், இந்த சட்டமானது, ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கு எதிரானது அல்ல, நாடு, மத எல்லைகளைக் கடந்து ஜாதி பாகுபாடுகளால் ஏற்படுகின்ற பாதிப்புகுறித்து அக்கறை கொண்டுள்ளதாக உள்ளது.

இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படை யிலும், தொழிலின் அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுள்ளதாக ஜாதிய முறை இருந்து வந்துள்ளது. ஜாதிய முறை முசுலீம்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகளிலும் பல நூற் றாண்டுகளாக தொடர்ந்து நீடித்து இருந்து வந்துள்ளது.

பிரமிட் போன்ற ஜாதி அடுக்குமுறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் (தாழ்த்தப்பட்டோர்) அடித்தட்டு வகுப்பினராக பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்த ஓராண்டில் இந்தியாவில் 1948இலிருந்து தீண்டாமை கடைப்பிடிக்கப்படக் கூடாது என்று உள்ளது.

கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள சமத்துவத்துக்கான அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமாகிய தேன்மொழி சவுந்தரராஜன் கூறுகையில், சியாட்டில் சிட்டி ஹால் பகுதிகளில் இந்த சட்டத்தை வலியுறுத்திய போராட்டங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர் களுக்கான செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சி யான செயல்பாடுகள் காரணமாக இச்சட்டத் துக்கு ஆதரவு பெருகியது. என்றார்.

புலம் பெயர்வோர் குறித்த ஆய்வு நிறு வனத்தின் ஆய்வுத் தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து புலம் பெயர்வோர் பன் னாட்டளவில் அதிக அளவில் அமெரிக்க அய்க்கிய நாட்டி லேயே உள்ளனர். 1980களில் புலம் பெயர்ந்தோர் சுமார் 2,06,000 பேர். 2021இல் சுமார் 27 லட்சம் எண்ணிக்கையில் உள்ளனர்.

2010 கணக்கெடுப்பின்படி தெற்காசியாவி லிருந்து அமெரிக் காவுக்கு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 35 லட்சமாக இருந்து தற்பொழுது 54 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. பங்களா தேஷ், பூடான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டில் இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

பிறந்த ஊரைவிட்டு, மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு, ஆசியக்கண்டத்தைவிட்டே பிழைப்புக்காக இடம்பெயருகின்ற வர்கள் ஜாதி இழிவுகளை சுமந்தபடியே அமெரிக்க நாட் டிலும் ஜாதியின் பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். ஜாதி இழிவுக்கு எதிரான மக்கள் போராட்டம் எழுச்சிபெற்றதன் விளைவாக தற்பொழுது அமெரிக்க அய்க்கிய நாட்டில் சியாட் டில் மாநகர் மன்றத்தின் புதிய சட்டத்தால் ஜாதிக்கு சவுக்கடி விழுந்துள்ளது பாராட்டத்தக்கது.

வியாழன், 9 டிசம்பர், 2021

ஜாதி குறித்து உச்சநீதிமன்றம் [29-11-2021 நாளிட்ட 'இந்து' ஆங்கில நாளிதழின் தமிழாக்கம்]

புதன், 13 ஜனவரி, 2021

வறுமையும் ஜாதியும்!


மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பார்ப்பனர்களுக்குப் புதுப்புது கால்களும், இறக்கைகளும், நீளமான வாயும் முளைத்து விட்டனவோ என்று நினைக்க வேண்டியுள்ளது.

பார்ப்பனர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களுடைய உண்மை உருவத்தை வெளிப்படுத்தி விடுவார்கள் என்பதை நெருக்கடி நிலை காலத்தில் பார்த்தோம் - அனுபவித்தோம்.

த.வே., சுப்பிரமணியம் என்ற இரு பார்ப்பனர்கள் தமிழக ஆளுநருக்கு ஆலோசகராக இருந்து அடேயப்பா எப்படி எப்படி எல்லாம் ஆட்டம் போட்டனர்!

பத்திரிகை தணிக்கை  என்ற போர்வையில் மூன்று பார்ப்பனர்கள், சென்னை சாஸ்திரி பவனில் உட்கார்ந்து கொண்டு சிறப்பு மை பேனா என்ற ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு செய்த 'ரவுடிசம்' சாதாரணமானதல்ல. தந்தை பெரியார் அவர்கள் என்று போடக் கூடாதாம். அதே நேரத்தில் சங்கராச்சாரியார் என்று போட வேண்டும் என்று  அதட்டல், உருட்டல் செய்து பார்த்தனர். அந்த மூவரில் ஒருவர் இப்பொழுது 'துக்ளக்' அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ஆரிய அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டு இருக்கிறார்.

இடஒதுக்கீட்டால் தகுதி - திறமை போய் விடும் என்று கூச்சல் போட்டவர்கள் இப்பொழுது பொருளாதார அளவுகோல் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பெற்று விட்டனர். மத்தியில் பா.ஜ.க. என்ற பார்ப்பன ஆட்சி என்னும் காற்றுவீசும்போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று துடியாய்த் துடித்து ஒவ்வொரு காரியத்தையும் சாதித்துக் கொண்டு வருகிறார்கள்.

நீட்டை திணித்தார்கள் - சட்டத்துக்கு விரோதமாக இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்து விட்டார்கள்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் குலக்கல்வி திட்டத்திற்கு வழிதேடுகிறார்கள். அதில் ஒரு வார்த்தையை சன்னமாக நுழைத்திருக்கிறார்கள் Socially and Educationally என்று அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான சொற்களுக்குப் பதிலாக  Socio - Economically Disadvantaged Group என்கிற சொற்களைத் திணித்துள்ளனர்.

நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தான் அவருக்கே உரித்தான நுட்பமான ஈரோட்டு நுண்ணாடி மூலம் அதை வெளிப்படுத்தினார்.

ஈரோட்டில் கூடிய பார்ப்பனர்களின் பொதுக் குழுவில் இன்னொரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

பொருளாதார ரீதியாக நலிந்த வறுமைக்கோட்டிற்குக்  கீழ் உள்ள பார்ப்பன சமூகத்திற்கென்றே தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்கிறபோது பார்ப்பனர் அல்லாதார்தான் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். வறுமையில்கூட ஜாதி பார்க்கும் இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி என்பது. வறுமைக்கும் ஜாதிக்கும் முக்கிய தொடர்பு உண்டு என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு குறித்து பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆர். ஆர்தர் லூயிஸ் (A  theory of Economic Development) பின்வருமாறு கூறகிறார்.

"இந்தச் சமூகம் பொருளாதார தேக்கமடைந்ததற்கு மனிதன் பல ஜாதிப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு (The Water Tight Compartments of Castes) தொழிலாளர் புழக்கம் (Mobility of Labours) தடைப்பட்டது ஒரு முக்கிய காரணமாகும்“ என்கிறார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையத்தின் தலைவரான காகா கலேல்கர் என்ற பார்ப்பனர் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது கவனத்துக்குரியதே!

"ஜாதி அமைப்பினால்தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருகிறது - என்பது உண்மையாகும்.பொருளாதாரத் தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர, ஜாதி தோன்றுவதற்குரிய காரணம் அது வல்ல" என்று ஒரு பார்ப்பனப் பேராசிரியரே குறிப்பிட்டுள்ள நிலையில், பிறப்பினால் உயர்வு எனும் ஜாதி ஆதிக்கத்தின் உச்சியில் இருப்பவர்கள், இந்த வாய்ப்புப் போதாது என்று பொருளாதார அளவுகோல் என்ற முகமூடி  அணியும் கொள்ளையர்களாகத் துடிக்கிறார்கள் - வெகு மக்களான ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

புதன், 6 ஜனவரி, 2021

சமூகநீதியின் நெருப்புப் பொறி துவங்கிய மாநிலத்தில் குடியிருப்புகளின் ஜாதிப் பெயர் நீக்கம்

• Viduthalai

மராட்டிய அரசு உத்தரவு



மும்பை, டிச.4 இந்தியாவில் தமிழ்நாடு, பீகார், மராட்டியம் போன்ற மாநிலங்கள் சமூகநீதிக்கான எடுத்துக்காட்டாக திகழ்கின்றன  அதில், மராட்டிய மாநிலத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. மகாத்மா ஜோதிராவ் புலே, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் என மாபெரும் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனையாளர்களை வழங்கிய பெருமை மராட்டிய மண்ணிற்கு உண்டு.  அந்த மண்ணில் தற்போது முற்போக்கான ஒரு முடிவை மராட்டியத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது


மராட்டிய மாநிலம் முழுமையும் பிராமன்வாடா (பார்ப்பனர்கள் குடியிருக்கும் பகுதி), கோலிவாடா (மீனவர் குடியிருப்பு) சர்ம்மாவாடா (தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்பு) மங் வாடா (சூத்திரர் குடியிருப்பு) தோர் பஸ்தி (பழங்குடியினர், நாடோடிகள் குடியிருப்பு), மல்லி கல்லி (குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும் தெரு) போன்றவை ஒழிக்கப்படும் என்றும்; அவற்றுக்கு மாற்றாக சமதா நகர் (ஒற்றுமைநகர்), பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர், கிராந்தி நகர்(புரட்சி நகர்) என்ற புதுமைப் பெயர்கள் சூட்டப்படும் என்றும் குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே வசிக்கும்பகுதிகளில் அனைத்து ஜாதியினரும் வசிக்கும் நிலையை உருவாக்க முயற்சிகள் எடுக்கப் படும் எனவும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அம்பேத்கர் அவர்கள் பெயரில் வழங்கப்படும் விருதும், அம்பேத்கர் சமஜ் பூசண் விருது என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தந்தை பெரியார் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தங்களின் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக நிறைவேற்றினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரும் ஜாதிப் பெயர்களைக் வைத்துக்கொள்வதில்லை.


தாங்கள் படித்துப் பெற்ற பட்டங்களையே தாங்கி நின்று, சமூகநீதியின் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதுபோலவே, தெருக்களில் உள்ள ஜாதிப் பெயர்களும் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டுவிட்டது. ஜாதி ஏற்றத்தாழ்வின்றி அனைத்து மக்களும் சேர்ந்து இணக்கமாக வசிக்கக்கூடிய கனவுத் திட்டமான தந்தை பெரியார் பெயரிலான ‘சமத்துவபுரம்’, தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு, இந்தியாவுக்கே வழிகாட்டும் மனிதநேயத்தின் மகத்தான மய்யங்களாயின.


பல நூறு ஆண்டுகளாகப் பரவிப் புரையோடிப் போயிருக்கும் ஜாதிப் பாகுபாடுகளை - அதன் விளைவாக நேர்ந்த கொடுமைகளை - வன்மத்தை அகற்றிட, தொடர்ச்சியான செயல் பாடுகள் தேவை. அனைத்து மாநி லங்களிலும் அவை பரவலாக முன் னெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு இதனைமேற்கொண்டுள்ளது.


ஞாயிறு, 14 ஜூன், 2020

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

ஜாதிவாரி கணக்கெடுக்க மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானித்தது வரவேற்கத்தக்கதே!

தமிழ்நாடு அரசும் இதனைப் பின்பற்றவேண்டும் -
ஜாதி ஒழிக்கப்படும்வரை இட ஒதுக்கீடு அவசியம் தேவை!
ஜாதியை ஒழிக்க மத்திய அரசு சட்டம் ஒன்று கொண்டு வரட்டும்!
ஜாதி ஒழிக்கப்படும்வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை - அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடும் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது  அறிக்கை வருமாறு:
மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று (8.1.2020) சபாநாயகரே, தாமே முன்வந்து ஒரு முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
அதை ஒருமனதாக அனைவரும் வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர்.
வருகின்ற மக்கள் தொகை கணக் கெடுப்பின்போது ஜாதி வாரியாக மக்கள் தொகையும் இணைத்து எடுக்கப்படல் வேண்டும்; அப்போதுதான் இதர பிற் படுத்தப்பட்ட சமூக மக்கள் (Other Backward Classes) தொகை எவ்வளவு என்பது துல்லியமாக கண்டறியும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தனது முன்மொழிவின் விளக்கத் தில் கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு தெரிந்துகொள்ளட்டும்!
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
இதற்குப் பா.ஜ.க.வின் முன்னாள் முதல் வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரு மான தேவேந்திர பட்னாவிசும் தனது கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.
இதைத் தமிழ்நாடு அரசும், மற்ற அனைத்து மாநிலங்களின் அரசும் வற் புறுத்தவேண்டும்.
இக்கோரிக்கை நம்மால் பல ஆண்டு களுக்கு முன்பே வற்புறுத்தப்பட்ட ஒன்றாகும்.
‘‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பா? மக்களை இப்படிப் பிரித்து கணக்கெடுப்பது நியாயமா? அதிலும் ஜாதி ஒழிப்புக்கான இயக்கம் போன்ற திராவிடர் கழகம் இதனை வற்புறுத்தலாமா? அது முரண்பாடு அல்லவா?'' என்று மேலெழுந்த வாரியாக இப்பிரச்சினையை நோக்கும் சிலர் கேட்கக்கூடும்.
ஏன் இட ஒதுக்கீடு?
நமது லட்சியம் ஜாதியற்ற சமூகம் காண்பதுதான்; ஆனால், அதே ஜாதி தர்மம் (குலதர்மம் - மனுதர்மம்) காரணமாக பல் லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல கோடி மக்கள் மற்ற முன்னேறிய ஜாதி - வகுப்பினருக்குச் சமமாக ஆகும் நிலை வரும்வரை, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டியது அவசியம் என்பதால்தான், இந்திய அரசமைப்புச் சட்டமே சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்த வர்களான (மலைவாழ்) பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மிகவும் பிற் படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அவசியம் என்று வரையறுத்து, மூன்று  முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கி, நிலைநாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றமும் தனது 9 நீதிபதிகள் அமர்வுமூலம் மண்டல் வழக்குமூலம் இதை (இந்திரா சகானி வழக்கு) ஏற்றுள்ளது.
ஜாதிக் கணக்கெடுப்புமூலம்தான் ஜாதி புகுத்தப்படுகிறதா?
சட்டத்தில் ஜாதி!
இருக்கின்ற யதார்த்த நிலை என்ன?
1. இந்திய அரசமைப்புச் சட்டத்திலே ‘‘தீண்டாமை'' தான் ஒழிக்கப்பட்டுள்ளது - சட்டபூர்வமாக (நடைமுறை சங்கதியோ வேறு - மகா வெட்கக்கேடு!)
இன்னமும் ‘‘ஜாதி'' ஒழிக்கப்படவில்லை; ‘ஜாதி' (Caste)  என்ற சொல் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை எவரே அறிவர்!
2. ‘ஜாதி' பார்த்துத்தானே இன்னமும் திருமணங்கள் (இந்து மத முறையில்) நடைபெறுகின்றன. Matrimonial என்ற ‘மணமக்கள் தேவை' விளம்பரங்களில் - எங்கோ ஒன்றில்தான் ‘Caste No Bar' - ‘ஜாதி' ஒரு பிரச்சினை இல்லை' என்ற சொற்றொடர் உண்டு.
3. தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு முதல் வெற்றி வரை ஜாதி அம்சங்கள் படமெடுத்தாடவில்லையா?
பார்ப்பனர்களின் இரட்டை வேடம்
4. ஏதோ முற்போக்காளர்களைப்போல சில பார்ப்பனத் திருமேனிகளே, இரட்டைக் குரல் - இரட்டை வேடம் போடுவார்கள்; அந்த ‘பிரகஸ்பதிகளை'க் கேட்கிறோம்.
‘‘உங்கள் முதுகில் ஜாதிச் சின்னமான பூணூல் தொங்காமல் உள்ளதா?''
உங்கள் வீட்டில் - குடும்பத்தில் எத்தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள்? அவர்களைப் பார்த்துக் கெட்டுப்போன ‘‘சூத்திரர்களோ'', ஜாதி ஜாதியென்று மாய்ந்து விடுகிறார்களே!
‘பிராமணர் சங்கம்', ‘பிராமண் சம் மேஜம்', ‘பிராமணா தொழில் முனையம்' மாநாடுகளை நாட்டில் நடத்திடவில்லையா?
எனவே, இட ஒதுக்கீடு - சமூகநீதி நிலை நாட்டப்படுவதை எதிர்ப்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு - முற்போக்கு''ப் பார்வையா?
எனவே, தமிழ்நாடு அரசும் தனது நிலைப்பாட்டில், மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஜாதி வாரியான அளவீடு முக்கியம் என்பதை வற்புறுத்திடவேண்டும்.
ஜாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வரட்டுமே - பார்க்கலாம்!
மத்திய அரசு நாளைக்கு ஜாதியை ஒழிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால் பிறகு இதை வற்புறுத்தமாட்டோம் என்று கூற நாங்கள் தயார், மற்றவர்கள் தயாரா?

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.1.2020

வியாழன், 21 நவம்பர், 2019

ஜாதியும், மதமும் சேர்ந்ததுதான் பி.ஜே.பி. ஆட்சியா?

அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!''

ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம்

ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில் உணவு அளிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள  நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிய அகர்வால் வைசிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று விளம்பரம் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ரயில்வேதுறை உணவு வழங்கலுக்கு அய்.ஆர்.சி. டி.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங் களிடம் ரயிலில் உணவுவழங்கும் பணியை ஒப்படைத்து வருகிறது, ராஜஸ்தானைச்சேர்ந்த  பிருந்தா வன் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமும் மத்திய மேற்கு ரயில்வே சார்பில் உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவ னம் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடையில் ஓடும் சில ரயில்களில் உணவு வழங்கும் பணியைச் செய் கிறது. இந்த நிறுவனத்திற்கு சமீபத் தில் மேலும் பல புதிய ரயில்களில் உணவு வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.

இதனை அடுத்து இந்த நிறுவ னத்தின் சார்பில் ரயில் உணவக மேலாளருக்கான ஆட்கள் தேவை என விளம்பரம்  செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் “ரயில்வேயில் கேட்டரிங், கிச்சன் மற்றும் ஸ்டோர் மேலாளர் காலி பணியிடங்களுக்கு 100 ஆண்கள் தேவை, விண்ணப்பதாரர்கள் அகர் வால் வைஷ்ணவ சமூகம், நல்ல குடும்பப் பின்னணியை  உடையவர் களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்''  என குறிப்பிடப்பட்டி ருந்தது.

இது தொடர்பாக புனே அய்.ஆர்.சி.டி.சி. ஊழியர் ஒருவர் கூறும் போது, ”இவ்விவகாரம் ஊடகத்தில் வெளிவந்த காரணத் தால் தான் விவாதப் பொருளானது. ஆனால் நீண்ட காலமாகவே ரயில் வேயில் உணவு வழங்குபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.

ராமன்தான் பணித்தாராம்!

அகர்வால் பிரிவினர் அனை வரும் ராமன் அயோத்தி திரும்பிய பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது தன்னலமில்லாமல் உணவு சமைத்து தங்களது கையாலேயே அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ராமன் தனது சேனைகளுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தார். இதனா லேயே மிகப்பெரிய உணவுப் பரி மாறல் வலைப்பின்னலைக் கொண்ட  இந்திய ரயில்வேதுறையில் பெரும்பாலும் அகர்வால் ஜாதி னரையே தேர்ந்தெடுக்கின்றனர்.  சமீப காலமாக ரயில்வே சார்பில் வெளியிடப்படும் ஒப்பந்ததாரர் பணியிடங்களுக்குத் தரும் விளம் பரத்தைப் பார்த்து பலரும் வரு கின்றனர். இதனால் அனைவரிட மும் நேர்காணல் நடத்தவேண்டியுள் ளது. ஆகவே ஊடகத்திலேயே குறிப்பிட்ட ஜாதியினர் தான் ரயில் வேயில் உணவு வழங்கும் பணிக்கு வரவேண்டுமென்று விளம்பரம் கொடுத்துவிட்டால் நேரம் மிச்ச மாகும்'' என்று கூறினார்.

”இந்தியாவைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் இந்துக்கள் ஆவார் கள். இவர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அகர் வால் ஜாதியைச்சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கின்றனர்” என்றும் கூறினார்.

மதிய உணவிலும்

குறிப்பிட்ட ஜாதியினர் தானாம்!

இஸ்கான் என்ற அரே ராமா அரே கிருஷ்ணா அமைப்பின் சார்பில் மோடி பிப்ரவரி மாதம் மதுராவில் உள்ள சந்திரோதயா பிருந்தாவன் கோவிலுக்குச் சென்று அக்ஷயா பாத்திரம் என்ற ”3 கோடிப் பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு” என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இஸ்கான் சார்பில் உணவு வழங்கப்படுகிறது, இங்கு பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். அதாவது கிருஷ்ணனை மட்டும் கும்பிடுபவரக்ளாக இருக்க வேண்டும் கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனை  வரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது ”இங்கு ஜாதி பேதம் இல்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைப்படி வாழ நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கே அனைத்து ஜாதியினரும் வேலை பார்க்கின்றனர்'' என்று விளக்கம் கொடுத்திருந்ததுதான் வேடிக்கையும், விஷமமுமாகும்.

- விடுதலை நாளேடு 13 11 19

திங்கள், 16 ஏப்ரல், 2018

வருணம் ஜாதியானது எப்படி! - அம்பேத்கர்



கி.மு. 185இல் புஷ்ய மித்திரன் என்ற பிராமணப் படைத் தளபதி மவுரியப் பரம் பரையில் வந்த தன் மன்னனைக் கொலை செய்து விட்டு சுங்க மரபை நிறுவினான். இதைப் புஷ்யமித்திரன் என்ற தனி மனி தனின் செயலாக அம்பேத்கர் பார்க்கவில்லை. புஷ்யமித்தி ரனின் இந்தச் செயலை "பிரா மணியப் புரட்சி" என்று அடை மொழியிட்டு அழைக்கும் அம் பேத்கர் புஷ்யமித்திரனின் புரட்சி புத்த சமயத்தைத் தூக்கி எறிவதற்காக பிராமணர்கள் தூண்டிவிட்ட அரசியல் புரட்சி என்கிறார்.

புஷ்ய மித்திரனைக் கரு வியாகக் கொண்டு பிராமணியம் வெற்றி பெற்ற பின்னர் மேற் கொண்ட தீச்செயல்களைப் பின் வருமாறு ஏழு தலைப்புகளில் அம்பேத்கர் பட்டியலிடுகிறார்.

(1) ஆட்சி செய்வதற்கு மன்னனைக் கொல்லுவதற்கும் பிராமணனுக்கு உரிமையுண்டு என்றே அது நிலை நிறுத்தியது..

2) பிராமணர்களை தனி சலுகைகள் பெற்ற ஒரு வகுப் பாக அது மாற்றியது. 3) அது வருணத்தை ஜாதி யாக மாற்றியது. (4) வெவ்வேறு ஜாதிகளி டையே போராட்டங்களையும், சமூக விரோத உணர்வுகளையும் அது உருவாக்கியது. (5) அது சூத்திரர்களையும் பெண்களையும் தாழ்ந்த நிலைக் குத் தள்ளியது. 6) படிப்படியான ஏற்ற, தாழ்வு முறையை அது தோற் றுவித்தது. 7) மரபொழுங்குகளை அடிப்படையாகக் கொண்டதாக வும், நெளிவு சுழிவானதாகவும் இருந்த சமூக அமைப்பை அது மாற்றிச் சட்டத்துக்கு உட்பட் டதாகவும் கடுமையானதாகவும் செய்தது.

"வருண தரும முறையை ஜாதியாக உருமாற்றம் செய் ததுதான் பிராமணியம் தனது வெற்றிக்குப் பின் முதன்மையாக ஈடுபட்ட மிகப் பெரிய சுயநல நோக்குள்ள செயலாகும்"

இதுபற்றி அண்ணல் அம் பேத்கர் சிறப்பாகக் குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

"பிராமணியம் வருணத்தை ஜாதியாக மாற்றியது என்று  நான் கூறும்போது அந்தஸ்தையும், தொழிலையும் பரம்பரையாக வருவதாக அது மாற்றி விட்டது என்பதையே குறிப்பிடுகிறேன்.

1) முதல் கட்டத்தில் ஒருவ னுடைய  வருணம். அதாவது அந்தஸ்தும், தொழிலும் ஒரு குறிப்பிட்டக் கால அளவே நீடித்தது. 2) இரண்டாவது கட்டத்தில் ஒருவரது வருணம் அவரது ஆயுட்காலம் வரை நீடித்தது. 3) மூன்றாவது கட்டத்தில் பரம் பரை அடிப்படையில் வரும் சொத்து போல் வருணம் ஆகி விட்டது" என்றார் அண்ணல் அம்பேத்கர்.

புரிகிறதா பார்ப்பனியத்தின் பலமான அடித்தளம்!

- மயிலாடன்

குறிப்பு: சென்னைப் பல் கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் (27.11.2009) பேராசிரியர் ஆ. சிவசுப்பிர மணியம் ஆற்றிய ஆய்வுரை யிலிருந்து இது).

-விடுதலை நாளேடு, 15.4.18