பக்கங்கள்

சனி, 24 டிசம்பர், 2022

நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேறியது

வியாழன், 22 டிசம்பர், 2022

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஜார்க்கண்ட் மாநில அரசின் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர்!

வெள்ளி, 9 டிசம்பர், 2022

ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வேண்டும்: மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் வலியுறுத்தல்


புதுடில்லி,டிச.9- நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது: 

''ஆர்.என். பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.3.1993  அன்று சமூக ரீதியாக முன்னேறிய நபர்களை தவிர்ப்பதற்காக கிரீமிலேயர் முறையை கண்டறிந்தது. ஓபிசி இடஒதுக்கீடுகளில் இருந்து கிரீமிலேயர் வகுப்பினரை விலக்குவதற்கான அறிக்கையினை வகைப்படுத்தி அக்குழு சமர்ப் பித்தது. இது செப்டம்பர் 8, 1993 இல் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கும், கிரீமிலேயரை விலக்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தொடக்கத்தில், அதாவது 1993 ஆம் ஆண் டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது உயர்த்தப்பட் டது. கடைசியாக செப்டம்பர் 2017 இல் ரூ.6 லட்சத்தி லிருந்து ரூ.8 லட்சமாக திருத்தப்பட்டது.

இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான உச்சவரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வில்லை. பணவீக்கம், பணமதிப்பு, நேர மாற்றங் களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமத்துவம் அடைய முடியவில்லை. ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சத்தைத் திருத்துவதற்கான காலம் ஏற்கனவே 1.9.2020 இல் முடிந்துவிட்டது. எனவே, வருமான உச்சவரம்பை ரூ.15 லட்சமாக திருத்துவது தற்போதைய தேவையாக உள்ளது. அதே போன்று கிரீமிலேயரை நிர்ணயிக்கும் காரணிகள் திருத்தப்பட வேண்டும். எனவே, ஓபிசி வகுப்பினரின் வருமான உச்சவரம்பை திருத்து வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்,’’ என கோரிக்கை வைத்துள்ளார்.

வியாழன், 8 டிசம்பர், 2022

அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! 596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!