பக்கங்கள்

வியாழன், 19 மார்ச், 2020

தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும் - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் சமூகநீதி உரை

அ.இ. ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன்  சமூகநீதி உரை

புதுடில்லி, மார்ச் 15 தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும்; அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக் கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றார் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.

13.3.2020 அன்று மக்களவையில் நடைபெற்ற சமூக நலத்துறை மான்யம் தொடர்பான விவாதத்தில்,  நாடாளு மன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் (திமுக) தெரிவித்த சிறப்பான கருத்துகள்

1. தந்தை பெரியாரின் சிந்தனை களையும், கருத்துகளையும் பறைசாற்ற மத்திய அரசு தந்தை பெரியார் பெயரில் அறக்கட்டளை நிறுவிட வேண்டும்.

2. ஏனைய சீர்திருத்தக்காரர்கள் சமூக நீதியை வென்றிட பல ஆண்டுகள் போராடிய நிலையில், இருபது ஆண்டு களில் சமூக நீதியை நிலை நாட்டி வெற்றி கண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

3. இந்தியாவில் 1969-ஆம் ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சகம் உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

4. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததோடு, அருந்ததியினர்க்கும்  உள் ஒதுக்கீடும் அளித்தவர் டாக்டர் கலைஞர்.

5. கிரிமிலேயர் என்பதை ‘கிருமி'லே யர் என அறிவித்தவர் டாக்டர்கலைஞர்.

6. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட் டோர் குழு 9.3.2019 அன்று அளித்த அறிக்கையை மத்திய அரசு புறக்கணித் துள்ளது.

7. பிற்படுத்தப்பட்டோர் தொடர் பான கிரிமிலேயர் குறித்து மத்திய அரசு நியமித்த மூன்று நபர் நிபுணர் குழு தேவையற்றது. அக்குழுவில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆணையம் இருக்கை யில், இக்குழு தேவையற்றது.

8. சம்பள வருமானத்தையும், குரூப் ஏ மற்றும் பி பிரிவு பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை கிரிமிலேயர் என அறிவிப்பது நியாயமற்றது; தகுதி யுள்ள பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீடு பெறாமல்  நீக்கும் முயற்சி யாகும்.

9. மூன்று நபர் நிபுணர் குழுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தை கிரிமிலேயர் குறித்த பிரச்சி னையை ஆராய்ந்திட அறிவுறுத்த வேண்டும்.

10. மருத்துவ படிப்பில் - மருத்துவர் மற்றும் முதுகலைப்படிப்பு - அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் அநீதி இழைக்கப்பட் டுள்ளது. இது குறித்து, மத்திய நல் வாழ்வுத்துறை கவனத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில் உரிய பதில் அளித்திட வேண்டும்.

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமி ழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு 15 3 20

சமூகநீதி மீது மற்றொரு பேரிடி!

மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கும் நுழைவுத் தேர்வு தேவையாம்!

புதுடில்லி, மார்ச் 15 தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயில நிதி உதவி பெற்று வந்த ‘ஸ்காலர்ஷிப்' திட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாற்றிட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் குறைந்துகொண்டே வருவதற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெரும் எதிர்ப்பினைக் காட்டிவரும் வேளையில், மேலும் நிதி உதவி கிடைக்கக்கூடிய வாய்ப் பினைக் குறைக்கின்ற வகையிலே, உயர்ஜாதி யினரும் ‘ஸ்காலர்ஷிப்' பெறுகின்ற வகையில் திட்டம் மாற்றப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் இந்த திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை இதுநாள் வரை மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்து வந்தன. மத்திய அரசு அளித்துவந்த நிதி அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாநில அரசின் நிதிப் பளு அதிகமாகிக் கொண்டுடே வருகிறது. நிதிப் பளு என்று காரணங்கூறி, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் எண் ணிக்கையையும், பெறும் நிதி அளவையும் குறைத்துக்கொண்டு வரும் சூழல்களும் நிலவி வருகின்றன.

நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்ட மத்திய அரசு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக'', நிதி உதவித் திட்டத்தை ‘‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவித் திட்டம்'' (PM - YASASVI) என்பதாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உயர்ஜாதி மாணவர்களும் ‘ஸ்காலர்ஷிப்' பெற்றிட முடியும் என்பதாக அறிவிப்புகள் வந்துள்ளன.

ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத்

தகுதி தேர்வாம்!

நிதி உதவி என்பதே ஒடுக்கப்பட்ட மாண வர்களுக்கு - ஆண்டாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு என்பதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்தில்  பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்த அளவில் வரம்பு விதிக்கப்பட்டு (ஆண்டு வருமானம் முறையே ரூ.1.5 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சம் வரம்பு)  ‘ஸ்கலர்ஷிப்' வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அடியோடு நீக்கப்பட்டு, ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கு தகுதித் தேர்வு என்ற பெயரில் ‘நுழைவுத் தேர்வு' நடத்தப்படுமாம். உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதிடலாமாம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே ‘ஸ்காலர்ஷிப்' கிடைத்திடும் வகையில் கல்வி நிதி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுகாறும் வழங்கப்பட்ட நிதி உதவியானது - பராமரிப்புச் செலவு, திருப்பி அளிக்கப்படாத கட்டாய கல்விக் கட்டணம்,  அஞ்சல் வழிக் கல்வி பெறுவதற்கான புத்தகச் செலவு என பல வகையிலும் பயன் அளித்தது. இதன்மூலம் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர் அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு ரூ.87,000/- என்ற அளவில் கல்வி நிதி உதவி பெற முடிந்தது.

இனிவர இருக்கின்ற உயர்ஜாதி மாணவர் களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் திட்டத்தில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.30,000/- மட்டுமே வழங்கிடும் வகையில், நிதி உதவி வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய திட்டத்தின்கீழ் மத்திய அரசு, மாநில அரசு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிதி ஒதுக்கீடு அளவுபற்றிய குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. கடந்த கால நிதி ஒதுக் கீட்டால் மாநிலங்களின் நிதிப்பளு அதிகரித்து பாதிக்கப்படக் கூடிய சூழல்கள்தான் உரு வாகின. சில மாநில அரசுகள் சமூகநீதி அடிப் படையில் நிதிப் பளு கூடினாலும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலன் பெறுகிறார்கள். அவர்களின் உயர்வு கருதி செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களும் இனி முடக்கப்படும்; முடிவு பெறும்.

உயர்கல்வி பெறுவதற்கு, உயர்ஜாதி மாண வர்களும் நிதி உதவி பெறுவதற்கு உருவாக் கப்பட்டுள்ள பா.ஜ. அரசின் புதிய கல்வி நிதித்திட்டம் மாநில அரசின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில்தான் அமையும் என்பது உறுதியாகத் தெரிகிறது என சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள், அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை, உயர்ஜாதியி னருக்கும் கல்வியில், வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என இதுவரை அரசமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உரிமைகளை படிப்படியாகப் பறித்துக்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவி' திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பினை உருவாக்கிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு 15 3 20

பெரியார்- சமூகநீதி- தமிழ் தேசியம் - வேல்முருகன் உரை

https://www.facebook.com/1434130116731307/videos/208229906910830/

புதன், 18 மார்ச், 2020

தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்

தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்

  1. ஆதி ஆந்திரா
  2. ஆதி திராவிடர்
  3. ஆதி கர்நாடகர்
  4. அஜிலா
  5. அருந்ததியர்
  6. ஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  7. பைரா
  8. பகூடா
  9. பண்டி
  10. பெல்லாரா
  11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  12. சக்கிலியன்
  13. சாலாவாடி
  14. சாமார், மூச்சி
  15. சண்டாளா
  16. செருமான்
  17. தேவேந்திர குலத்தான்
  18. டோம், தொம்பரா, பைதி, பானே
  19. தொம்பன்
  20. கொடகலி
  21. கொட்டா
  22. கோசாங்கி
  23. ஹொலையா
  24. ஜக்கலி
  25. ஜம்புவுலு
  26. கடையன்
  27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  28. கல்லாடி
  29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
  30. கரிம்பாலன்
  31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  32. கோலியன்
  33. கூசா
  34. கோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  35. குடும்பன்
  36. குறவன், சித்தனார்
  37. மடாரி
  38. மாதிகா
  39. மைலா
  40. மாலா
  41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  42. மாவிலன்
  43. மோகர்
  44. முண்டலா
  45. நலகேயா
  46. நாயாடி
  47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  48. பகடை
  49. பள்ளன்
  50. பள்ளுவன்
  51. பம்பாடா
  52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  53. பஞ்சமா
  54. பன்னாடி
  55. பன்னியாண்டி
  56. பறையர், பறயன், சாம்பவர்
  57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  59. புலையன், சேரமார்
  60. புதிரை வண்ணான்
  61. ராணேயர்
  62. சாமாகாரா
  63. சாம்பான்
  64. சபரி
  65. செம்மான்
  66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  67. தோட்டி
  68. திருவள்ளுவர்
  69. வல்லோன்
  70. வள்ளுவன்
  71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  72. வாதிரியான்
  73. வேலன்
  74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  75. வெட்டியான்
  76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்

  1. அடியன்
  2. ஆறுநாடன்
  3. இரவாளன்
  4. இருளர்
  5. காடர்
  6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  7. காணிக்காரன்,காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  8. கணியன், கண்யான்
  9. காட்டு நாயகன்
  10. கொச்சுவேலன்
  11. கொண்டக்காப்பு
  12. கொண்டாரெட்டி
  13. கொரகா
  14. கோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  15. குடியா, மேலக்குடி
  16. குறிச்சன்
  17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
  18. குறுமன்
  19. மகாமலசார்
  20. மலை அரையன்
  21. மலைப் பண்டாரம்
  22. மலை வேடன்
  23. மலைக்குறவன்
  24. மலைசர்
  25. மலையாளி (தருமபுரிவேலூர்புதுக்கோட்டைசேலம்கடலூர்திருச்சிராப்பள்ளிநாமக்கல்கரூர்பெரம்பலூர் மாவட்டங்களில்)
  26. மலையக்கண்டி
  27. மன்னன்
  28. மூடுகர், மூடுவன்
  29. முத்துவன்
  30. பழையன்
  31. பழியன்
  32. பழியர்
  33. பணியர்
  34. சோளகா
  35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  36. ஊராளி

வெள்ளி, 6 மார்ச், 2020

சமூகம் : தேசிய அவமானம் (தீண்டாமை)


தீண்டாமைக்கு எதிராக  போராடி, அரசியலமைப்பும் 1950இல் அதைத் தடை செய்தது. ஆனால் தேசிய அவமானம் என் றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப் பிடப்பட்டாலும் ஜாதித்தீண்டாமை இந் தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித் திருக்கிறது.

வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும் பங்கள் ஜாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய 'எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி' இதழின் ஆய்வு கூறி யிருக்கிறது.

ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக் காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டா மையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத்  மற்றும் ஓம்கர் ஜோஷி  கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு 2012அய் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய் வினை அவர்கள் மேற் கொண்டுள்ளனர். கல்வியின் நிலை உயர உயர தீண்டாமை யின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அள விற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990-களில் தனியார்மய கொள் கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை பார்க்க முடிவதாக தெரிவிக்கின்றனர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக் கின்றன. அடுத்ததாக 30 விழுக்காடு இந் துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின் றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக் காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறு கிறது.

- விடுதலை ஞாயிறுமலர் 22 2 20

ஞாயிறு, 1 மார்ச், 2020

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்குதிரைமீது திருமண ஊர்வலம் செல்வதா?

இராணுவவீரர் மீது குஜராத்தில் தாக்குதல்

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்

குதிரைமீது திருமண ஊர்வலம் செல்வதா?

அகமதாபாத், பிப்.20, குதிரையில் திருமண ஊர்வலம் சென்றதற்காக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை, ராணுவ வீரர் என்றுகூட பார்க்காமல், கல்லால் அடித்துத் தாக் கிய சம்பவம் பாஜக ஆளும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம், பழன்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் கோட்டியா. 22 வயதான இவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அண்மையில் பெங்களூருவில் ராணுவ வீரருக்கான பயிற்சியை முடித்த இவர், மீரட்டில் பணியில் சேரவுள்ளார்.

முன்னதாக அவரது குடும்பத்தினர் திருமணம் ஏற்பாடு செய்த அடிப் படையில், கடந்த ஞாயிறன்று குதிரையில்மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற் றுள்ளது. அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ் கோட்டியா, குதிரையில் செல்வதா? என்று ஆத்திர மடைந்த கோலி பிரிவைச் சேர்ந்த ஜாதி ஆதிக்கவெறியர்கள், ஆகாஷ் கோட் டியா மீதும், ஊர்வலத்தின் மீதும் சர மாரியாக கற்களை வீசியுள்ளனர். மேலும், கோட்டியாவை கீழே தள்ளி அடித்து உதைத்த அவர்கள், “கீழ்ஜாதி யான நீ குதிரையில் ஏறுவதற்கு ஆசைப் படலாமா?” என் றும், “அதற்கு நீ உயர்ந்த ஜாதியில் பிறந்திருக்க வேண்டும்'' என்றும் இழிவாகப் பேசியுள்ளனர்.

காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற ஊர்வலத்திலேயே ஜாதி ஆணவத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், ஆகாஷ் கோட்டியா ஒரு இராணுவ வீரராக இருந்தும், எனினும் உயர்ஜாதி வெறியர்கள், கொடூர வெறியுடன் இந்த தாக்குதலை அரங் கேற்றியுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஆகாஷ் கோட் டியா மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட செஞ்சிகோலி, சிவாஜி கோலி, தீபக் கோலி, துஷார் கோலி, பவன் கோலி, வினோத் கோலி, ராமாஜி கோலி, தீபக் ஈஸ்வர் கோலி, பாய் கோலி, மஞ்சுகோலி மற்றும் ஜீது கோலி உட்பட 11பேர் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

 - விடுதலை நாளேடு 20 2 20

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அரசு!

‘‘உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

யு.பி.எஸ்.இ., அய்.ஏ.எஸ்., போன்ற மத்திய அரசு தேர்வுகளில் கலந்து கொள்ளும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் வயது வரம்பில் சில சலுகைகள் இருந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

உயர்ஜாதியில் ஏழைகள் என்று கூறி (EWS) அவர்களுக்குப் பிற்படுத்தப் பட்டோருக்கு உள்ளதுபோல 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம் என்ற சலுகையை மத்திய பி.ஜே.பி. அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களோடு, உயர்ஜாதி ஏழைகளை சம அளவில் வைத்துப் பார்ப்பது - சமூகநீதிக்கு எதிரானதாகும்.

இட ஒதுக்கீடுக்காக எந்த நோக்கத்தில் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்தின் ஆணிவேரையே வெட்டும் வேலையில் மத்திய பி.ஜே.பி. அரசு வேக வேகமாக செயல்பட்டு வருகிறது.

உயர்ஜாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலு வையில் இருந்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு நடந்துகொள்வது அதன் உயர்ஜாதித் தன்மையின் வெறியையும், வேகத் தையும்தான் வெளிப்படுத்துகிறது.

அனைத்து சமூகநீதியாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகநீதிப் போராளித் தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

20.2.2020