பக்கங்கள்

சமூக அநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக அநீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2019

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவா?

டில்லி பல்கலை. பேராசிரியர்கள் கண்டனம்


புதுடில்லி, ஜூலை 18 பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக் கீட்டை அமல்படுத்த, டில்லி பல்கலைக் கழகம் மிகவும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட் டிருக்கிறது.

இதனைக் கண்டித்து, டில்லி பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மத்திய பா.ஜ.க. அரசு, 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதே, அவசரகதியில் மசோதா கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும், பல்வேறு கேள்விகளுக்கு இதில் சரி யான விளக்கங்கள் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், டில்லி பல்கலைக் கழக நிகழ் வுகள் நடந்துள்ளன.

டில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்


பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், டில்லிப் பல் கலைக் கழக நிர்வாகமானது, தற் போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற் றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்ப தாக, டில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டி யுள்ளார்.

டில்லி பல்கலைக் கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியி டங்கள் உருவாக்கும்வரை, பொருளாதார ரீதியாக நலி வடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

- விடுதலை நாளேடு, !8.7.19

புதன், 29 மே, 2019

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு இல்லை

பாரீர்!


பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு மட்டும் இடம் உண்டு




புதுடில்லி, மே 28  எல்லை பாதுகாப்பு படையில்  ரேடியோ ஆபரேட்டர்களுக்கான 300 பணியிடங்களுக்கான அறிவிப்பில்  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. ஆனால்  புதிதாக சட்டம் கொண்டு வரப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதி யினருக்கு மட்டும் இடம் உண்டு என்ற அரசு விளம்பரம் இதோ:

-  'எம்பிளாய்மென்ட் நியூஸ்' - 25.5.2019

- விடுதலை நாளேடு, 28. 5 .2019

திங்கள், 12 பிப்ரவரி, 2018

நீதித்துறையில் சமூக அநீதி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பெரும் அளவு வாய்ப்பு மறுப்பு



புதுடில்லி, பிப்.1 கீழமை நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர்,பிற் படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுப் புப் பெரும் அளவில் உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:

கீழமை நீதிமன்றங்களில் இடஒதுக் கீட்டின்படி நியமிக்கப்பட்டு பணி யாற்றிவரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியி னர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களைச் சேர்ந்த நீதிபதிகள்குறித்த தக வல்களை அளித்த மாநிலங்களும், விவ ரங்களும் வருமாறு:

மத்தியப்பிரதேசமாநிலத்தில் பணியாற்றி வரும் 1,328 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள்(183), பழங்குடி யினர் (192), பிற்படுத்தப்பட்டவர்கள் (186) மூன்று பிரிவினரும் தலா 14 விழுக் காட்டளவில் உள்ளனர்.

டில்லியூனியன்பிரதேசத்தில்பணி யாற்றிவரும்482நீதிபதிகளில்8 விழுக் காட்டளவில் தாழ்த்தப்பட்ட வர்கள்(37), 1.24 விழுக்காட்டளவில் பழங்குடியினர் (6) உள்ளனர்.   பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஒடிசா மாநிலத்தில் பணியாற்றிவரும் 441 நீதிபதிகளில் 15 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(65),20விழுக் காட்டளவில்பழங்குடியினர்(90),10 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள் (45) மூன்று பிரிவினரும் தலா 14 விழுக்காட்டளவில் உள்ளனர்.

பஞ்சாப்மாநிலத்தில்பணியாற்றி வரும்398நீதிபதிகளில்23விழுக்காட் டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(91), 14 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள்(56) உள்ளனர். பழங்குடியினத்தவர் ஒருவர்கூட இல்லை.

சத்தீஸ்கர்மாநிலத்தில்பணியாற்றி வரும்395நீதிபதிகளில்15விழுக்காட் டளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(59),25 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர் (97), 18 விழுக்காட்டளவில் பிற்படுத் தப்பட்டவர்கள்(72) உள்ளனர்.

அரியானாமாநிலத்தில்பணியாற்றி வரும்348நீதிபதிகளில் 20விழுக்காட் டளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(70),15 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள்(52) உள்ளனர். பழங்குடியினத்தவர் ஒருவர் கூட இல்லை.

அசாம் மாநிலத்தில் பணியாற்றிவரும் 174 நீதிபதிகளில் 7 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(13),12 விழுக்காட் டளவில் பழங்குடியினத்தவர் (20) உள் ளனர்.  பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஜார்க்கண்ட்மாநிலத்தில்பணியாற்றி வரும்153நீதிபதிகளில்11 விழுக்காட்ட ளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(17),31 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர் (47), 17 விழுக்காட்டளவில் பிற்படுத்தப் பட்டவர்கள்(26) உள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிவரும் 83 நீதிபதிகளில் 10 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(8),17விழுக் காட்டளவில் பழங்குடியினத்தவர் (14) உள்ளனர்.பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் பணியாற்றிவரும் 23 நீதிபதிகளில் 26 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர்(6),52 விழுக்காட் டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள்(12)   உள்ளனர்.   தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு வர் கூட இல்லை.

மத்திய சட்ட அமைச்சகம்கேட்டுக் கொண்டதன்பேரில் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,பிற்படுத் தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த நீதிபதி களின் விவரங்களை 11 மாநிலங்கள் அளித்தன.  அதன்படி, அம்மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றிவரும் 3,973 நீதிபதிகளில்  14 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(563), 12 விழுக்காட் டளவில்பழங்குடியினத்தவர்(478), 12விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள் (457) நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள்.

மக்கள் தொகையில் பெரும்பான்மை யராக உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும 12 விழுக்காட்டளவில் மட் டுமே உள்ளனர். நீதித்துறையில் நீதிபதி கள்பணியிடங்களில்முறையாகஇட ஒதுக்கீடுபின்பற்றப்பட்டால்ஒழிய அவரவர் விகிதாச்சாரப்படி பயன்பெற முடியாத நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

- விடுதலை நாளேடு, 1.2.18