பக்கங்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவேண்டும்




சென்னை, செப்.24_ தமிழ்நாட்டில் 69 சத விகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றவேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடை முறையிலிருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட் டைப் பாதுகாக்க சமூக நீதியில் அக்கறை உள்ள அனைத்து இயக்கங்களும் முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.  மண்டல் குழு தொடர் பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட் டிற்குமேல் போகக் கூடாது என கூறப்பட் டது. அதற்குப் பிறகு வந்த பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் இந்த 50 விழுக்காட்டு வரம்பை உறுதிப்படுத்தியுள்ளன.  அதை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் சட் டம் எதுவும் இயற்றப் படாத நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்த அந்த வரம்பே தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி யாக விளங்குகிறது.

இடஒதுக்கீடு தொடர் பான உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு அதிகமாக தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து வழக்குத் தொடுக் கப்பட்டபோது அன் றைக்கு முதல்வராக இருந்த செல்வி ஜெய லலிதா அவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக சட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அதனை அர சமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கச் செய்தார்.  ஆனால், 2007ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1973ஆம் ஆண் டுக்குப் பிறகு 9 ஆவது அட்டவணையில் சேர்க் கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் உச்சநீதி மன்றம் ஆய்வு செய்து ரத்து செய்யலாம் என்று கூறிவிட்டது.  அதன் விளைவாக, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டத்திற்கு இருந்த பாதுகாப்பு பறிக் கப்பட்டு விட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இது தொடர் பாக இரண்டு வாரத்திற் குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று  உத்தரவிட்டுள்ளது. தற் போதுள்ள அரசியல் சூழலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத் திற்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது.  இதனைக் கவ னத்தில்கொண்டு இந்தச் சட்டத்தைப் பாதுகாத்தி டவும் சமூகநீதியைக் காப்பாற்றிடவும் உடன டியாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசையும், சமூகநீதி யின்பால் பற்றுக்கொண்ட இயக்கங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள் கிறது.

இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் 9 ஆவது அட்டவணை தொடர் பாக வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.  இந்தக் கருத் துக்களை வலியுறுத்திடு மாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

இவ்வாறு திருமா வளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது!
--விடுதலை,24.9.14

வியாழன், 26 ஜனவரி, 2017

"சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு இந்துமத சன்னியாசி


சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு இந்துமத சன்னியாசி அல்ல" என பா.ஜ.கட்சியின் திரிபுவாதத்திற்கு கொள்கை ஆதாரத்துடன் தமிழர் தலைவர் மறுப்பு
கேரளத்தில் திராவிட மன்னன் மாவலியின் புகழினை, மாண்பினைப் போற்றிக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையினை மாற்றி அதனை "வாமன ஜெயந்தி" என கொண்டாட நினைத்த ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரின் திரிபுவாத திணிப்பு  முறியடிக்கப்பட்டு, அந்த விவகாரம் அடங்குவதற்குள் சமூக சீர்திருத்தவாதி சிறீ நாராயண குருவை இந்து மத சன்னியாசியாக முதன்மைப்படுத்த கேரள பாரதிய ஜனதா கட்சியினர் முனைந்துள்ளனர். பி.ஜே.பி. கேரளம்(ஙியிறி  ரிமீக்ஷீணீறீணீனீ) எனும் முகநூலில் சிறீநாராயண குரு இந்து சன்னியாசி எனவும், இந்து மதத்தை சீர்திருத்த வந்த மகான் எனவும் குறிப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. இது குறித்த செய்தி "டெக்கான் கிரானிக்கில்" நாளிதழில் (சென்னை பதிப்பு) சுயமரியாதை ஏந்தல் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் பிறந்த நாளில் செப்டம்பர் 17இல் செய்தியாக வெளிவந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் கூற்றினை ஆதாரத்துடன் மறுத்து திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஓர் அறிக்கையினை வெளியிட்டார். தமிழர் தலைவரது அறிக்கையின் சாரம் "நாராயண குரு இந்து மத தொடர்பு அற்றவர்" எனும் தலைப்பில் "டெக்கான் கிரானிக்கில்" நாளிதழில் 20.9.2016 அன்று வெளிவந்தது.

சிறீ நாராயண குருபற்றியும், அவர்தம் சிந்தனை கொள்கைகள் பற்றியும் தமிழர் தலைவர் விரிவாக தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நாராயண குரு தமது வாழ்வில் எந்தக் காலத்திலும் இந்து மத வாதி எனக்கூறிக் கொண்டது கிடையாது. மதத்திற்கு முன்னுரிமை கொடுப் பதை விட்டு மனித சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர் குரு அவர்கள். கேரள மாநிலம் ஆல்வாயில் குரு, சிவன் கோவில் கட்டி முடித்தது, ஆலய வழிபாடு என்பதை விட ஆலயத்தில் பூஜை செய்திட அனைத்து மக்களுக்கும் - அனைத்து ஜாதியினருக்கும் உரிமை உண்டு என்பதை நிலை நாட்டிடவே; கோயிலில் அர்ச்சனை செய்திட (பார்ப்பன நம்பூதிரிகள் மட்டுமே உரிமை பெற்றிருந்த ஆதிக்க நிலையில்) ஒடுக்கப்பட்ட  ஜாதியிலிருந்தும் தீண்டத் தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களிடமிருந்தும் அர்ச்சகர்களை தாம் நிறுவிய சிவன் கோயிலில் நியமித்தார்.
"எந்த மதமாக இருந்தால் என்ன?

மனிதரை உயர்வாக மதித்தால் அது போதுமே!"

என கவிதை  யாத்தவர் நாராயண குரு. மத அடை யாளம் தேவையற்றது எனும் கருத்துக் கொண்டவர். தமது சீடர்களிடம், "ஒருவர் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு செல்ல விரும்பினால் அதற்கான உரிமை அவருக்கு வழங்கப்பட வேண்டும்; மேலும் மத நம்பிக்கை அற்றவர் என வாழவும் மனிதருக்கு உரிமை வேண்டும்" என போதித்தவர். மனித குலம் முழுவதும் "ஒரே ஜாதி, ஒரே பிரிவு" என கொள்கைப் பரப்புரை செய்த குரு, மதத்தைப் பற்றிய முழக்கத்தை அதில் சேர்க்கவில்லை. 1924இல் ஆல்வாயில் நாராயண குரு நடத்திய அனைத்து மத மாநாட்டில் தம்மை ஒரு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே காட்டிக் கொண்டவர். இந்து மதவாதி என சொல்லிக் கொள்ளவில்லை. மேலும் மாநாட்டில் இந்து மதத்தினை பிரதிநிதித்துவ படுத்தும் விதமாக சென்னை - திருவல்லிக்கேணி தியாசபிகல் சங்கத்தின் சார்பாக ஒரு பார்ப்பனர் தான் கலந்து கொண்டார்.
சமூகத்தினரை கடவுளின் பெயரால் வேறுபடுத்திப் பார்த்து அவர்களிடம் பிறவி பேத அடிப்படை யில் ஏற்றத் தாழ்வினை ஏற்படுத்திய மதம் வேத மதமாகிய இந்து மதம். மனிதரைப் பேதப்படுத்தி, பிளவுபடுத்திப் பார்ப்பது இந்து மதத்தின் சாராம்சக் கொள்கை. ஆனால் நாராயண குருவோ மனி தரை ஒற்றுமைப்படுத்திப் பார்த்தவர்; அவர்களிடம் சமத்துவம், சமவாய்ப்பு கிடைத் திடப் பாடுபட்டவர். சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்குவதை மறுத்து வருவது இந்துமதம். மறுக்கப்பட்ட கல்வியினை அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியவர் நாராயண குரு. கல்வியினை வலியுறுத்தி களத்தில் இறங்கி ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்ந்திட அரும்பாடு பட்டவர் நாராயணகுரு. இந்து மத கோட்பாடு,  இன்று மனுதர்மம் மக்கள் விரோத நிலையில் இருக்கும்பொழுது, சமத்துவத் திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி சிறீநாராயண குருவை "இந்துமத சன்னியாசி" என பா.ஜ. கட்சியினர் குறிப்பிட்டு இருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது; உண்மைக்கு முற்றிலும் மாறானது.

பகுத்தறிவுவாதி புத்தரையே கடவுள் அவதாரமாக மாற்ற முனைந்த மதம் இந்து மதம். புத்தரது கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளை மாற்றி மகாயானம் என பிரிவினை ஏற்படுத்தி புத்தரது கொள்கைகளை சிதைத்தவர்கள் வேத மதத்தினர். புத்தரது போதனைகள் எழுத்து வடிவில் இல்லாமல், பேச்சு வழக்கில் மட்டுமே அமைந்த துவக்க நிலையிலிருந்து அவரது கொள்கைகளை மாற்றுவதற்கு வேத மதத்தினருக்கு 400 ஆண்டுகள் பிடித்தது.

ஆனால் நாராயணகுரு அவர்களது போதனைகள் அவரே எழுதி, சீடர்கள் பதிவு செய்த நிலையில் அவர் மறைந்து ஒரு நூற்றாண்டு கூட ஆகாத நிலையில் அவரது சமத்துவம் போதிக்கும் மனித நேயக் கொள்கைகளை கபளீகரம் செய்து அவரை "இந்து மத சன்னியாசி" என திரிபு வாதம் செய்திடும் வேலையினை காவிக் கூட்டத்தினர் செய்யத் துவங்கிவிட்டனர். நாராயண குருவின் உண்மை சீடர்கள், தொண்டர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் காவிக் கூட்டத்தினரின் உண்மைக்கு மாறான செய்தியினை உணர்ந்திட வேண் டும். உண்மை நிலையினை - சமூக சீர்த்திருத்த வாதி நாராயண குருவின் உண்மையான கொள்கை வெளிப் பாட்டை பரப்பிட முன் வரவேண்டும்.

இவ்வாறு தமிழர் தலைவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தலைவரது அறிக்கையின் சாரத்தினை, உண்மை விளக்கத்தினை, நாராயண குரு இந்து மதத்திற்கு தொடர்பில்லாதவர் எனும் செய்தியை நாராயண குருவின் நினைவு நாளான செப்டம்பர் 20ஆம் நாளில் "டெக்கான் கிரானிக்கில்" நாளிதழ் வெளியிட்டது நாராயண குருவின் கொள்கைக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது.
-விடுதலை,22.9.16

எங்கள் அய்யா பெரியாரின் இரண்டாம் பாகமாம் தமிழர் தலைவரும் இரண்டாயிரத்து பதினாறும்!

- தகடூர் தமிழ்ச்செல்வி -
தந்தை பெரியாரின் கணிப்பு
"எவனுக்குப் பொய் சொல்லத் தைரியம் இருக்கிறதோ, எவனுக்குப் பொருள் செலவு செய்யச் சக்தி இருக்கிறதோ, எவனுக்குப் பொய்ப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பும், சவுகரியமும் இருக்கிறதோ, அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராய் இருக்கிறது.”
- தந்தை பெரியார்
மே-2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையும், இரண்டு ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலையும், இவற்றின் முடிவு களையும், ஒரு நிமிடம் நாம் எண்ணிப் பார்த்தால், தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்கோடு, இன்றைய காலகட்டத்திற்கும் எப்படி கச்சிதமாகப் பொருந்தி வருகிறது என்பதை நாம் கணிக்க முடியும்.
நல்ல விதைகளை விதைப்பதற்குப் பதிலாக, நச்சு விதைகளை, தேர்தல் கழனி யில் விதைத்ததன் பலனை இன்றைக்கு, மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொடுமையான ஆட்சி :
இந்திய அரசியல் வரலாறில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஓர் அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
பசுவின் பெயரைச் சொல்லி மனிதர் களைக் கொடுமைப்படுத்துவது, கொலை புரிவது, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக நடத்துவது, பெண்களைக் கீழ்த்தரமாக இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் நடத்துவது, இந்தி, சமஸ்கிருத மொழி வல்லாண்மையை மற்ற மாநிலங்களில் புகுத்துவது, நதிநீர் பிரச்சினைகளில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணித்து வருவது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர்கள் கொடூரமாக கொல்லப்படுவது, பொதுத்துறை நிறுவனங் களை சூறை ஆடுவது, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வர்ணாசிர மத்தை மீட்டுருவாக்கம் செய்யத் துடிப்பது என ஒரு கொடுமையான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மின்னி வெடிக்கும் மின்னல் கீற்று
இத்தகைய ஒரு அபாயகரமான காலகட்டத்தில், இருண்ட வானிற்குள் மின்னி வெடிக்கும் மின்னல் கீற்றாய், கீழே விழுந்து காயப்பட்ட குழந்தையை வாரி எடுத்து, மருந்து தடவி ஆதரிக்கும், அன் னையைப் போல, தனது அறிக்கைகளாலும், போராட்ட அறிவிப்புகளாலும் மக்களுக் காக அனைத்து நிலைகளிலும் ஆதரவாக நிற்கின்ற ஒரே இயக்கம், திராவிடர் கழகம்! அரசியல் ஆசாபாசங்களுக்கு அப்பாற் பட்டு, ஒட்டுமொத்த அநியாயங்களையும், அவலங்களையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்று குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா மானமிகு கி.வீரமணி அவர்கள் மட்டுமே!
சமூகநீதியே வாழ்நாள் லட்சியம்
ஒடுக்கப்பட்ட சமூகங்களான பிற்படுத் தப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்காகவும், பெண்ணினத்திற் காகவும், சிறுபான்மைச் சமூகத்துக்காகவும், இவர்கள் அனைவருக்கும் மூச்சுக்காற்றாய் விளங்கும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுப்பது ஒன்றையே தன் வாழ்நாள் இலட்சியமாய் கொண்டு, தொடர்ந்து பயணித்து வருகிறார் நம் தமிழர் தலைவர்.
போராட்ட வரலாறு துவக்கம்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் 
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு என்பது திராவிடர் கழகத்தை பொறுத்தவரை ஒரு போராட்ட ஆண்டு. இந்த ஆண்டு துவக் கமே ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற போராட்டத்துடன் துவங்கியது. அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், இறுதியாக முடிக்க இயலாமல் மிகுந்த மனவேதனையுடன் அவர்கள் விட்டுச் சென்ற பணி. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அனைத்து ஜாதியினரிலிருந்தும், இடஒதுக்கீட்டு முறைப்படி, ஆட்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு, ஆகமப்பயிற்சி அளிக்கப் பட்டு, இடைக்காலத் தடை ஆணை உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு குறித்த தீர்ப்பு 16.12.2015 அன்று வெளியாகி யது. அந்தத் தீர்ப்பு அம்சங்கள் குறித்து அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொண்டு வியாக்கியானம் அளித்த நேரத்தில், தமிழர் தலைவர் அவர்கள் தனித்துவமாக விளக்கம் அளித்தார். ஆசிரியர் அய்யா தன்னுடைய அறிக்கையில் முத்தாய்ப்பான மூன்று கருத்துக்களை எடுத்து வைத்தார்.
தனித்துவமான தமிழர் தலைவரின் கருத்துக்கள்
(1) “1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் இயற்றப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற சட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கப்படவில்லை.
(2) ஆகமப் பயிற்சி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டி ருக்கிறது. அர்ச்சகர் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 206 பேரும் ஏற்கெனவே ஆகமப் பயிற்சி பெற்றவர்களே! அதில் ஏதும் குழப்பம் இல்லை.
(3) அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை இல்லை என்று தொடரப் பட்ட வழக்கில், மனுதாரரின் 3 வாதங் களுமே உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
எனவே தமிழக அரசு, அர்ச்சகர் பயிற்சி முடித்துக் காத்திருக்கும் 206 பேருக்கும், பணி நியமனம் வழங் குவதில் ‘சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று அரசுக்கே எடுத்துரைத் தார்.
சூத்திர மக்கள் கரம் தீண்டிக்கொடுக்கும் கரன்சிநோட்டுகள் தட்சணை என்ற பெயரில் கருவறைக்குள் தடையின்றி நுழைகின்றன. ஆனால் அங்கே நுழைந்து பூஜை செய்யும் உரிமை சூத்திரர் கரங் களுக்குக் கிடையாது. இந்தக் கொடுமை களை எதிர்த்துதான் ‘அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர்’ எனும் போராட்டம்.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு மாபெரும் மறியல் போராட்டம் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்றது.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் 27 சதவீதம் எங்கே? வெறும் 12 சதவீதம் எங்கே?
மண்டல் குழு அறிக்கை மத்திய அர சால், நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் ஆகியும், வெறும் 12 விழுக்காடு மக்களே பயன் அடைந்துள் ளனர்.
இவ்வளவு நீண்டகாலக் கட்டத்திற்குப் பின்பும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 12%க்கு மேல் வாய்ப்புகள் அளிக்கப்பட வில்லை. பெரும்பாலான துறைகளில் வெறும் 6.9 சதவீதத்துடன் நின்றுவிட்டது. இந்த அநியாயத்திற்கு ஆண்ட, ஆளுகிற மத்திய அரசுகள்தான் பொறுப்பு என்றாலும், இந்தியாவின் உயர்மட்ட நிர்வாக வளையம் என்பது பார்ப்பனிய வளையமாகத்தான் இருந்து கொண்டே இருக்கிறது என்பதற்கும் இது ஒரு அழுத்தமான எடுத்துக்காட்டு.
27 சதவீதம்
எட்டப்படாதது ஏன்?
பிற்படுத்தபட்ட மக்கள் 27% இடஒதுக் கீட்டு அளவை நிரப்புகிற வகையில் போதிய அளவு படித்திருந்தாலும், இந்த அவலத்திற்குக் காரணம் என்ன என்பதை பட்டியல் இடுகிறார் தமிழர் தலைவர்.
(1) கிரீமி லேயரைப் (சிக்ஷீமீணீனீஹ் றீணீஹ்மீக்ஷீ) பயன்படுத்தி நிறைய பிற்படுத்தப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
(2) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துக்கு சட்ட அதிகாரம் இல்லை.
(3) “27 சத இடஒதுக்கீட்டை முறையாகச் செயல்படுத்தாத அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்னும் திரு.சுதர்சன நாச்சி யப்பன் அவர்களின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கண்காணிப்புக்கு உரிய அதிகாரம் இன்னும் சட்ட ரீதியாக வழங் கப்படவில்லை.
(4) அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டவர்கள், திறந்த போட்டி யில்தான் வைக்கப்பட வேண்டும். ஆனால் தில்லுமுல்லுத் தனமாக மோசடித்தனமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட் டில் புகுத்தப்படுகிறார்கள்.
இது போன்றெல்லாம் பட்டியல் இட்டு, எடுத்துவைத்து இடித்துரைக்க தமிழர் தலைவரை விட்டால் வேறு நாதி கிடையாது இந்த நாட்டில்!
நீதிபதிக்கு அரசியல் சட்டம் தெரிந்திருக்க வேண்டாமா?
ஆண்டாண்டு காலமாக கொடுக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மீட்டு எடுக்கும் ஒரு மீட்டுரிமையின் வடிவம்தான் இடஒதுக்கீடு. இந்த அடிப்படை உண்மை யும் புரியாமல், அரசியல் சட்டமும் தெரி யாமல், குஜராத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே.பி.பர்திவாலா, இட ஒதுக் கீட்டை, லஞ்ச ஊழலுடன் ஒப்பிட்டு பேசியதை தமிழர் தலைவர் வன்மையாக கண்டிக்கிறார். நீதிபதி மீது நாடாளு மன்றத்தில், 58 நாடாளுமன்ற உறுப் பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாய கரிடம், ஒழுங்கு நடவடிக்கையை
(வீனீஜீமீணீநீலீனீமீஸீt) வலியுறுத்தி மனு கொடுத் துள்ளனர் என்பதும் இதன் தொடர் செய்தி. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் சமூகநீதிக்கு எதிராக குரல் ஒலித்தால், அதற்குக் கண்டனக் குரல் எழுப்பும் முதல் தலைவர் நம் தமிழர் தலைவர்தான்!
அதே நேரத்தில் சமூகநீதிக்கு ஆதர வாக யாராவது குரல் ஒலித்தால் அவர் களை எடுத்து உச்சி முகர்ந்து முத்தம் இட்டுப் பாராட்டுவதும், தமிழர் தலைவர் தான்!
இந்த இடத்தில் ஒன்றை நினைவுபடுத் துவது பொருத்தமாக இருக்கும்.
உச்சநீதிமன்றத்தில் “முதல் பிற்படுத் தப்பட்ட சமூக தலைமை நீதிபதி”
தமிழர் தலைவரின் சிந்தனையில் உருவான முக்கியமான சமூகநீதிக் கொள் கையான "நீதித் துறையில் இடஒதுக்கீட்டு முறை வேண்டும்” என்னும் கொள்கையை வழிமொழிந்ததைப் போல் உச்சநீதிமன்ற நீதிபதியாக, 19.7.2013 அன்று நியமிக்கப் பட்ட நீதியரசர் திரு.பி.சதாசிவம் அவர்கள் "நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு-சமூக நீதிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்” என்று குரல் கொடுத்திருந்தார்.
“66 ஆண்டு கால சுதந்திர இந்தியா வில் முதல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினைச் சேர்ந்த ஒரு மூத்த நீதிபதி, உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை ஏற்கப் போகிறார் என்னும் போது ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக் காக வாழ்நாள் முழுதும் போராடும் அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடுகிறது” என்று உள்ளம் மகிழ எழுதியவர் நம் தமிழர் தலைவர் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கு
காலவரையரை உண்டா?
இடஒதுக்கீடு - காலஅளவு என்பது குறித்தும் தெளிவான நிலையை அறிவிக் கிறார். இடஒதுக்கீடு 10 ஆண்டு வரைதான் என்பது அரசியல் ரீதியான இடஒதுக் கீட்டுக்கு மட்டும்தான். ஆனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என் பது அடிப்படை உரிமை (றிணீக்ஷீt - மிமி)யில் வருகிறது. அரசமைப்புச் சட்டம் துவக்க கால முதல் இன்று வரையிலும் அதற்குக் கால நிர்ணயம் கிடையாது என்பதை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார் நீதிபதி சதாசிவம்.
ரோஹித் வெமூலா
தற்கொலை ஏன்?
அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலைக்குக் காரணமான பல்கலைக்கழக நிர்வாகத் தையும், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயையும், மனிதவள மேம்பாட்டுத் துறையையும் கண்டித்து திராவிடர் மாணவர் கழகம் சார்பாக ஜனவரி 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறைகூவல் விடுகிறார். “நூற்றுக்கு நூறு உயர்ஜாதி ஆதிக்கக் கூடாரமாக இருந்த இந்த நிறுவனங்களில், தாழ்த்தப்பட் டோரும், பிற்படுத்தப்பட்டோரும் கொஞ்சம் உள்ளே நுழைய தலைப்பட்டு விட்டார்கள் என்றதும், வேறு வகையில் அவர்களுக்கு நெருக்கடியையும், அழுத் தத்தையும் கொடுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விரட்டப் படுகிறார்களே” என்று உள்ளம் குமுறு கிறார் தமிழர் தலைவர்.
கோயிலில் நுழைய பெண்களுக்கு உரிமை இல்லையா?
“ஆண்களுக்குள்ள அத்தனை உரிமை களும் பெண்களுக்கும் உண்டு” என்பது தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் குரல்! சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண் டாண்டு காலமாக பெண்கள் உள்ளே செல்ல, தேவஸ்தானம் போர்டு அனுமதிப்பதில்லை. (குறிப்பாக 10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள்) இதனை எதிர்த்து கேரளாவில் இளம் வழக்குரைஞர்கள் அணியும், 5 பெண்களும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஜஸ்டிஸ் டி.பி. மிஸ்ரா அவர்கள், "இந்திய அரசியல்  அமைப்புச் சட்டத்தின் எந்தப்பிரிவில், பெண்கள் கோயி லுக்குச் செல்லக்கூடாது என்று சொல்லப் பட்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.
நெத்தியடி கேள்வி
அந்தக் கேள்வி குறித்து பாராட்டிய தமிழர் தலைவர் அவர்கள், ‘இது சமூகநீதி முக்கியத்துவத்துடன் கூடிய, எதிர் காலத்தில் பல புரட்சிகர மாறுதல் களைக் கொண்டு வரக்கூடிய நெத்தியடி கேள்வி’ என்று வெகுவாக பாராட்டி எழுதி உள்ளார்.
இந்த நாட்டில் பொது உடைமை இயக் கங்களைச் சார்ந்த ‘பெண்கள் அமைப்புகள்’ இருக்கின்றன. அவர்கள் எல்லாம்கூட இது குறித்து தீரமாக எதுவும் பேசவில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு பதிவிடுகிறோம்.
-விடுதலை ஞா.ம.3.12.16