பக்கங்கள்

மருத்துவப் படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவப் படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2021

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

 

 தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை , ஆக, 4- மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட் டில் தமிழ் நாட்டில் 69 சத வீத இடஒதுக்கீட்டை பின் பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல் படுத்தவில்லை என கூறி தி.மு.சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான முதன்மை அமர்வு விசாரித்து வருகிறதுஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிநீதிபதி பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், 'உயர்நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் குழு நியமிக்கப் பட்டுஅதன் பரிந்துரை அடிப்படையில்மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதுஎன்றார்.

இதற்கு தி.மு.சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிவில்சன் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். 'தற்போது தமிழகத் தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அம லில் உள்ளதுஅந்த ஒதுக்கீட்டைத்தான் ஒன்றிய அரசும் அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதுஒன்றிய அரசின் 27 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்தமிழ்நாடு அர சின் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதுஅதை ஒன்றிய அரசின் குழுவும்உச்சநீதிமன்ற மும் ஏற்றுக்கொண்டுள்ளனஎனவேமாநிலத்தில் பின்பற்றப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று வாதிட்டார்.

இருதரப்புவாதங்களையும் கேட் டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்உச்சநீதிமன்றமும்இந்த உயர்நீதிமன்ற மும்தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைத்தான் அமல் படுத்த வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளனஎனவேமருத்து வப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்ஆனால்இந்த உயர்நீதிமன்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்தாமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டுகிறார்மேலும் 50 சதவீத ஒதுக்கீட்டுக்குள்தான் பொருளாதாரத் தில் பின் தங்கியவருக்கான 10 சதவீதம் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.

தற்போது இந்த விவகாரத்தில்ஒன் றிய அரசு நிலையை கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கால அவகாசம் கேட்கிறார்இதை ஏற்றுக் கொண்டு விசாரணையை வருகிற 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்என்று கூறியுள்ளனர்.

புதன், 3 மார்ச், 2021

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரம் மத்திய, மாநில செயலர்கள் உட்பட 9 பேர் பதில் அளிக்க தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னைமார்ச் 2- மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய விவகாரத்தில் மத்தியமாநில சுகாதாரத் துறை செயலர்கள் உள்ளிட்ட 9 பேர் பதில் அளிக்க சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு மற் றும்திமுகஅதிமுகபாமக உள் ளிட்டகட்சிகள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுஅதன்படிஇதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2021-2022 கல்வி ஆண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கு வது தொடர்பாக மத் திய பொது சுகாதாரப் பணிகள் இயக் குநர்தமிழக சுகாதாரத் துறை செயலர்பல் மருத்துவ கவுன்சில் செயலர் உள் ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை யில் உத்தர விட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசுஅமைத்துள்ள குழுஉயர் நீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவுப்படி இல்லை’ என்று கூறிமத்திய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவமதிப்பு வழக்கு தொடர்ந் தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிநீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று (1.3.2021) நடந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாதிட்டார்.

இதுதொடர்பாக மத்தியமாநில சுகாதாரத் துறை செய லர்கள்தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட 9 உயரதி காரிகள் பதில்அளிக்க நீதி பதிகள் உத்தரவிட்டுள்ளனர்.