பக்கங்கள்

வெள்ளி, 29 மார்ச், 2019

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம்! ஓபிசி மாநாட்டில் ராகுல் பேச்சு

புதுடில்லி, மார்ச்29, பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம் டில்லியில் நடைபெற்ற ஓபிசி மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதிபட கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினர் (ஓபிசி) மாநாடு டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது.

இதில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது:

நாட்டின் 5 கோடி ஏழைக் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்க, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் குறைந்தபட்ச ஊதிய உறுதி திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஏழைகளுக்கு நமது கட்சி, நீதி வழங்கப்  போவதை பிரதமர் உணர்ந்துள்ளார். விண்வெளி சாதனை குறித்த அறிவிப்புக்காக அவர் 45 நிமிடம் மக்களை காக்க வைத்து விட்டார்.

அந்த சாதனை குறித்து சொல்லும்போது அவர் முகத்தை பார்த்தீர்களா?  ஏழைகளுக்கு காங்கிரஸ் நீதி வழங்கப் போவதையும், தான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்ட தையும் உணர்ந்த அவரது முகத்தில் பயம் நன்றாக தெரிகிறது.

2014 தேர்தலின் போது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15  லட்சம் தருவதாக மோடி பொய் சொன்னார். நாங்கள் பொய் சொல்ல மாட்டோம். ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.3.60 லட்சம் கோடியை நாங்கள் தருவோம். நாங்கள் சொன்னதை செய்வோம்.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை உறுதி செய்வோம்.

அதே போல எங்கள் தேர்தல் அறிக்கையில், எந்த சமுகத்தை சேர்ந்த இளைஞர்களாக இருந்தாலும் புதிதாக தொழில் தொடங்க முதல் 3  ஆண்டுக்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற அம்சத்தை சேர்த்துள் ளோம்.

நாங்கள் விரும்புவது மேக் இன் இந்தி யாவை, பிரான்சின் அம்பானியின் தயாரிப்பை அல்ல என்றார்.

- விடுதலை நாளேடு, 29.3.19

புதன், 20 மார்ச், 2019

தமிழகத்தின் 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு பாதிப்பில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு



புதுடில்லி, மார்ச் 15,  தமிழகத் தில் கடந்த 1993ஆம் ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு அமலானது. அரசியலமைப்பு சட்டத்தின் ஒன் பதாவது அட்டவணையில் இது சேர்க்கப்பட்டிருந்தாலும்,  அதில் இடம் பெற்றுள்ள அனைத்து  அம்சங்களும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவையே என உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித் துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் தமிழக மருத்துவ கலந்தாய்வின் போது 69 சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் ஓசி பிரி வினருக்கு உரிய இடம் கிடைக்க வில்லை என்பதால் 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என சென் னையைச்  சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன் றம், “தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக் கீட்டை காரணம் காட்டி மருத்துவ படிப்பில் கூடுதல் இடம் கேட்க முடியாது. மேலும் இந்த  வழக்கை பொறுத்தமட்டில் தனிப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர மாநிலத்தில் நடைமுறையில் இருக் கும் 69 சதவீதத்திற்கு எதிராக மனுவில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை  என்பதால் அதற்கு எந்த தடையும் விதிக்க முடியாது’’ என தெரிவித்த நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இருப்பினும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான மைனர் காயத்ரியின் பிரதான வழக்கை விரைவில் இறுதி விசாரணை மேற்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முந்தைய விசாரணையின்போது நாடு முழுவதும்  50 சதவிகிதம் கடைபிடித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி 69 சதவிகித இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தி வரப்படுகிறது என மாநில அரசு நீதிமன்றத்தில் முழு விளக்கங் களை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை மார்ச் 14க்கு  ஒத்திவைத்து கடந்த மாதம் 21ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நேற்று மீண் டும்  விசா ரணைக்கு வந்தது. இதுகுறித்து விளக்கமளிக்க தமி ழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தயாராக இருந்தனர். ஆனால் வழக்கை 6 வாரங்களுக்கு பின்னர் விசாரிப்பதாக நீதிபதிகள் நேற்று ஒத்தி வைத்தனர்.  இதையடுத்து  தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் 69 சதவிகித இடஒதுக்கீடு பயன் பாட்டிற்கு தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 15.3.19

செவ்வாய், 19 மார்ச், 2019

இட ஒதுக்கீட்டில் நடுவன் அரசின் மோசடி!

அதாவது பொதுப்பட்டியல்ல எப்புடி மெரிட் OBC/SC/ST மாணவர்கள உள்ள விடாம உயர்சாதிகளுக்கு மட்டும் டெக்னிக்கலா இந்திய அரசு ஒதுக்குதுங்கரத இப்ப பாக்கலாம் ..

முதல்ல இரண்டு கட்ட தேர்வுனு அறிவிப்பு வரும்

அதுல தேர்வு விதில ஒரு விதிய சேத்துவானுங்க அதாவது நீங்க முதல் தகுதித்தேர்வுல ஒதுக்கீட்டு பட்டியல் மரர்க் வாங்கி தேர்ச்சி பெற்றா அடுத்தடுத்த தேர்வுகளிலும் ஒதுக்கீட்டு பட்டியல் மட்டுமே உங்களுக்கான வேலை ஒதுக்கீடு செய்யப்படும்

அதாவது நீங்க முதல் தகுதி தேர்வுல OBC கட்ஆப் மார்க் வாங்கி பாஸ் ஆகிடுறீங்க ஆனா அடுத்த ரெண்டாவது தேர்வுல நல்லா படிச்சு ஜென்ரல் கட் ஆப் எடுத்து பாஸ் ஆனாலும் உங்கள மெரிட் பிராகரம் ஜென்ரல்ல ஒதுக்க மாட்டாங்க ஏன்ன முதல் தேர்வுல OBC ல பாஸ் ஆனதால அடுத்த தேர்வுக்கு உங்கள OBC ல ஒதுக்குவாங்க

இப்ப இதுல என்ன கெட்டு போச்சு மொத்தத்துல வேலை வந்துடுச்சுனு நீங்க நினைக்கலாம் ஆனா இதுல திருட்டு வேலை இருக்கு வெவராம மெரிட் வாங்குனவனையும் OBC க்கு தள்ளிவிட்டா ஜென்ரல் கோட்டா சீட்டா அழகா உயர்சாதிக்கு தூக்கி குடுத்துடலாம்.க
இது முலமா ஜென்ரல் கோட்டவுல ++

மெரிட் ஒதுக்கீட்டு பட்டியல் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் ...எப்புடி வெவரமா வேலை பாக்குறானுங்க பாருங்க

எ.கா கடைசியா வந்த NTPC நோட்டிபிகேசன்ல வந்த திருத்தம் ..
( இதையே இங்கிலீஸ்ல போட்டு ஒருத்தரும் கண்டுக்கலை அதான் தமிழ்ல ஒருக்கா போட்டு இருக்கேன் .) https://t.co/plWwVNIPGV

- பால் பாண்டி, 18.3.19, கீச்சுலிருந்து எடுத்தது.

திங்கள், 18 மார்ச், 2019

13 point roster reservation எனும் அயோக்கியத்தனம்

பல்கலைக் கழகங்களில் முன்பு நடைமுறையில் இருந்த 200 point roster முறையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2017இல் உத்தர விட்டது. அதாவது பல்கலைக் கழகத்தை ஒரு அலகாக (unit) கொண்டு அமல் படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை துறை வாரியாக (Department as a unit) இட ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதன் மூலம் 13 point roster முறை அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

200 point rosterமுறை என்றால் என்ன ?


அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் 200 point roster முறையே அமலில் இருந்தது. இதன் மூலம் பல்கலைக் கழகத்தை ஒரு அலகாக (University as a unit) கொண்டு இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டது. உதாரணமாக ஒரு பல்கலைக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால் அதை இட ஒதுக்கீடு மூலம் பிரிக்கும் போது 99 பணியிடங்கள் SC, ST, OBC பிரிவினருக்கும் மீதி 101 இடங்கள் பொது போட்டியிலும் நிரப்பப் படும். இதுவே 200 point roster system.

இந்த முறையை அலகாபாத் உயர்நீதி மன்றம் ரத்து செய்து, துறை வாரியாக (Department as a unit) இட ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதன் பின் தான் 13 point roster முறை அமலுக்கு வந்தது.

13 point roster முறையில் எப்படி பணியிடங்கள் நிரப்பப்படும் ?


இந்த முறைப்படி முதல் மூன்று (1,2,3) இடம் - OC

4ஆவது இடம் - OBC

5,6ஆவது இடம் - OC

7ஆவது  இடம் - SC

8ஆவது இடம் - OBC

9,10,11ஆவது இடம் -  OC

12ஆவது இடம் - OBC

13ஆவது இடம் - SC

என இந்த வரிசையில் தான் நிரப்பப் படும்.

அதாவது ஒரு OBCக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்தபட்சம் 4 காலியிடங்கள் அந்த துறையில் இருப்பது அவசியம். SCக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்தபட்சம் 7 காலியிடங்கள் அந்த துறையில் இருப்பது அவசியம். STக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்த பட்சம் 14 காலியிடங்கள் இருந்தாக வேண்டும். ஒரு துறையில் 14 காலி பணியிடமாக இருப்பது சாத்தியமற்ற ஒன்று. பல துறைகளில் மொத்த பணி இடங்களே வெறும் 6 அல்லது 7 தான்.

இந்த 13 point roster முறை என்பது சட்ட ரீதியாக பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நிர்மூலமாக்குகிறது. உச்ச நீதிமன்றமும் இதற்கு துணை போகும் வகையில் கடந்த ஜனவரி 23 தேதி இது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதார இட ஒதுக்கீடு எனும் பெயரில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ள இந்த சூழலில். உச்ச நீதிமன்றம் மீண்டும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இட ஒதுக்கீட்டை சிதைக்கும்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனை எதிர்த்து, டில்லி பல்கலைக் கழக பேராசிரியர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, வேறு வழி யின்றி, மோடி அரசு,  7.3.2019 அன்று, ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந் துள்ளது. இதன்படி, பழைய முறையில், அதாவது 200 பாயிண்ட் ரோஸ்டர் முறை பின்பற்றப்படும்.

ஆனால், 8.3.2019 அன்று, இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

- கோ.கருணாநிதி
- விடுதலை நாளேடு, 13.3.19

புதன், 13 மார்ச், 2019

அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு

உயர்நீதிமன்றம் உத்தரவு




சென்னை, மார்ச் 9  தமிழக அரசின் அனைத்து துறைகளி லும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட் டுள்ளது. கோவையில் உள்ள பள் ளியின் இளநிலை உதவியாளர் பணிக்கு மாற்றுத்திறனாளி இடஒதுக்கீட்டின்படி பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பள் ளிக்கல்வித்துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசா ரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதி, தாக்கல் செய்யப்பட்ட அறிக் கையில் போதுமான தகவல்கள் இல்லை.மேலும் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி அரசின் பிற துறைகளிலும் மாற்றுத்  திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுவ தில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு 8 வார காலத்துக்குள் பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங் குவது தொடர்பான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து துறை களுக்கும், பொதுத்துறை நிறு வனங்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 9.3.19

வியாழன், 7 மார்ச், 2019

காங்கிரசு ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு உயர்வு

முதல்வர் கமல்நாத் அறிவிப்பு




போபால், மார்ச்.7 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 16 விழுக்காடும், பழங்குடியினத்தவருக்கு 20 விழுக் காடும், இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 14 விழுக்காடும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடாக அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இடஒதுக்கீடு 14 விழுக் காடாக உள்ளது. அதனை 27 விழுக் காடாக அதி கரித்திட முடிவெடுத்து அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களை வழங்கி அம்மாநில முதல்வர் கமல்நாத் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்தியப்பிரதேச மாநிலத் தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட் டவர்களுக்கு 27 விழுக்காடாக இடஒதுக்கீடு அதி கரித்து வழங்கப்படும் என்றார். குழு அமைத்து முடிவெடுக்கப்படும்

மத்தியப்பிரதேச மாநில சட்ட மன்றத்தில் கேள்விக்கு மாநிலத்தின் முதல்வர் கமல்நாத் பதில் அளித்த போது, பொருளாதாரத்தில் நலிவுற் றவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு  இதுவரை நடை முறைப்படுத்தப்படவில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதற் காக துணைக்குழு அமைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

அந்நாள் - இந்நாள்


1926 - 'இந்தியின் இரகசியம்' என்ற பெரியாரின் கட்டுரை 'குடிஅரசு' ஏட்டில் வெளி வந்த நாள்.

- விடுதலை நாளேடு, 7.3.19