பக்கங்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்திய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சபாஷ்



மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்திய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சபாஷ் போட்டு விடுதலையில் வெளிவந்த தலையங்கம்

8.8.1990 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் 27 சதவிகித இடஒதுக்கீடு செய்து பிரதமர் வி.பி.சிங் அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை வரவேற்று 10 ஆண்டுகளாக, காங்கிரஸ், பார்ப்பன சூழ்ச்சியால் மூலையில் வீசப்பட்ட மண்டல் குழு பரிந்துரை அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. சமூகநீதியில் சரித்திரம் படைத்தது. தேசிய முன்னணி அரசு என்று ‘விடுதலை’யில் சிறப்புத் தலையங்கம் தீட்டியது. அதில், “சபாஷ் வி.பி.சிங்’’ என்று தலைப்பிட்டு, “சமூக_கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்னும் சொற்றொடர், இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெறுவதற்கான காரணம், தந்தை பெரியார் அவர்கள்தான் என்பது வரலாற்று உண்மை; தென்னகத்தில் தந்தை பெரியார் உயர்த்திய சமூகநீதிப் போர்க்கொடியால் அரசியல் சட்டம் முதன்முதலாகக் திருத்தப்பட்டது. அரசுப் பதவிகளில் சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காகச் சேர்க்கப்பட்ட சொற்றொடர்தான் அது!

அந்த சமூகநீதி; காலம்காலமாக முழுமையாக பார்ப்பன ஆதிக்கம் கோலோச்சிக் கொண்டிருக்கும் மத்திய அரசுப் பதவிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்போது, பெரியார் தத்துவம் காலத்தை வென்று நிற்கிறது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மண்டல் அறிக்கையை வெளிக்கொணர் வதற்கும் அதை அமல்படுத்த வைப்பதற்கும் எனது தலைமையில் திராவிடர் கழகம் அடுக்கடுக்காக மேற்கொண்ட போராட்டங்கள், மாநாடுகள் ஏராளம்.

இதற்கு அடித்தளமாக இருந்து _ பிரச்சினையின் ஆழத்தை கூர்மையாகப் புரிந்துகொண்டு செயல்பட்டு வரும் _ தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் தத்துவங்களை உள்ளத்தில் என்றென்றும் ஏந்தியிருப்பவருமான சமூகநலத்துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அவர்களின் இடைவிடாத முயற்சியை கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் பாராட்டி மகிழ்கிறோம்“ என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

மண்டல் குழு பரிந்துரை அமலாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக நமது வீட்டு குழந்தைகளுக்கு இனி, வி.பி.சிங் என்றோ, விசுவநாத் பிரதாப் சிங் என்றோ பெயரிடுங்கள் என்று வலியுறுத்தும் முக்கிய அறிக்கையில் 8.8.1990 அன்று கேட்டுக்கொண்டேன்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ், 1- 15 .11 .19

ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி!

வெள்ளி, 4 டிசம்பர், 2020

தலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது!


திங்கள், 30 நவம்பர், 2020

69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய சட்ட முன்வடிவு

 69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய அரசியல் சட்டம் 31(சி) விதியைப் பயன்படுத்தி 9ஆவது செட்டியூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் அதற்கான ஒரு தனிச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் இதை தமிழக முதல்வர் செய்து வரலாற்றச் சாதனையைப் படைத்து, சமூக நீதி வரலாற்றினுள் நிரந்தர இடத்தைப் பெற வேண்டும் என நாம் கேட்டுக் கொண்டோம்.

ந்நூ.ந்நூபுயூடுஷிட்

30.12.1993 தமிழக சட்ட மன்றத்தில்  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க - தமிழ்நாடு அரசே தனிச்சட்டம் இயற்ற முன்வந்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான மசோதாவை தமிழக முதல்வர் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

 காலை 10 மணிக்கு சட்டப் பேரவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தனிச் சட்டத்துக்கான மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகம் செய்தார்.(இது ஒரு தமிழக வரலாற்றுப் பொன்னாள்.)

மசோதா அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு - ஆரவாரத்துக்கிடையே முதலமைச்சர் அறிமுகப்படுததினார். மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு அவையில் ஓர் உறுப்பினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! இந்த மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும். சட்டப் பேரவையில் மசோதா நிறைவேறிய பிறகு - குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையெழுத்திட்டவுடன் அது சட்டமாகும். நகல் மசோதாவின் முன்னுரையில் “இந்தச் சட்டமானது அரசமைப்பின் IV---ம் பகுதியில், அதிலும் குறிப்பாக 38ஆம் உறுப்பிலும், 34ஆம் உறுப்பின் (b) மற்றும் (c) எனும் கூறுகளிலும், மற்றம் 69ம் உறுப்பிலும் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிற வகையில், அரசின் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக இயற்றப்படுகிறது என்று இதன் மூலம் விளம்பப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவை முன்மொழிந்து தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பேசியதாவது:

1. “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஷெட்யூல்டு ஜாதியினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி நிலையங்களில் இடங்களை ஒதுக்குங்கள் மற்றும் அரசுப் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல் என்னும் கொள்கையானது. 1921ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் நீண்டதொரு வரலாற்றினைப் பெற்று வந்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அளவானது பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கிணங்கிய வகையில், நிலையாக மேல் நோக்கி வளர்த்துவந்து, தற்போது அது 69 சதவீதம் என்னும் அளவினை எட்டியுள்ளது.

2. உச்சநீதிமன்றமானது, இந்திரா சஹானி-க்கும், இந்திய அரசுக்குமிடையேயான (AIR 1993 5C பக்கம் 477) வழக்கில், அரசமைப்புச் சட்த்தின் 14(4) எனும் உறுப்பினர் படியான மொத்த இடஒதுக்கீடுகள், 50 சதவிதத்திற்கு மேற்படுதல் ஆகாது என்று கூறி 24.11.1982 அன்று தன் தீர்ப்புரையினை வழங்கியது. நடப்புக் கல்வியாண்டிற்குக் கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னர் வந்தபோது, இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தன் இடஒதுக்கீட்டுக் கொள்கையினை தமிழ்நாடு அரசு நடப்புக் கல்வி ஆண்டின்போது தொடர்ந்து கடைப்பிடித்து வரலாம் என்றும், அந்த இடஒதுக்கீட்டு அளவானது அடுத்த

1994-95ஆம் கல்வி ஆண்டின்போது, தற்போதுள்ளதைக் குறைத்து 50 சதவீதத்திற்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொடர்ந்து முன்னேற்றத்தை உறுதி செய்ய மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையானது மீண்டும் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதற்காக வேண்டி, தமிழ்நாடு அரசானது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்சொன்ன தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனி அனுமதி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றமானது, கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் பொறுத்த அளவில் இட ஒதுக்கீடானது 80 சதவிதத்திற்கு மேற்படுதல் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி இடைக்கால ஆணையொன்றைப் பிறப்பித்துள்ளது.

69% இடஒதுக்கீட்டு தீர்மானம் நிறைவேற்றிய பின் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர்

3. இம்மாநிலத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீத அளவினர் குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் ஷெட்யூல்டு சாதியும், ஷெட்யூல்டு பழங்குடிகளையும் சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதிலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒன்றுதான், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் தொடர்ந்த முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்பதோடு, மாறி வருகின்ற சூழ்நிலைகளுக்கும் அது வகை செய்யும் என்பதால், மேற்சொன்ன இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வர இயலும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 9ஆம் நாளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையினர் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையில், 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 24ஆம் நாளில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் 69 சதவீத இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் எந்தவிதமான அய்யப்பாடோ, காலத் தாழ்வோ இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தியது. அந்தக் கூட்டத்தில், அரசமைப்புச் சட்டத் திருத்தமொன்று கொண்டு வரப்பட வேண்டும், அல்லது இம்மாநில அரசு தனிச்சட்டமொன்றை இயற்றுதல் வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் சமூக அமைப்புகளும் இம்மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கிணங்கிய வகையில், சமூக நீதி என்னும் குறிக்கோளை எய்துவதற்காக வேண்டி, தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் பெருவிழைவிற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத் தனிச் சட்டமொன்றை ஒரு முன் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருகின்ற வகையிலும், ஏற்கெனவே இது குறித்துச் செய்யப்பட்ட செயல்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செல்லத் தக்கனவாக்குவதற்குத் தேவையான வகை முறைகளுடன் சேர்த்தும், கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. இச்சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது.’’

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த மசோதாவை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.

அன்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

நான் “தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்ததற்காக முதல்வரைப் பாராட்டி நன்றி’’ தெரிவித்தேன்.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நமது வேண்டுகோளை, வழிகாட்டுதலை ஏற்று சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த தீர்மான நிறைவேற்றம் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாய், ஆந்திர ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் 90 வயது நிரம்பிய சுதந்திரப்போராட்ட வீரர் சர்தார் கோது லட்சண்ணா எனக்குத் தந்தி அனுப்பி பாராட்டினார்.

கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கும், முயற்சிக்கும் இது ஒரு மாபெரும் வெற்றியாகும். சமூக நீதிக்குக் கிடைத்த அசைக்க முடியாத நிரந்தர பாதுகாப்புக்கு அடிப்படையாகவும் இது அமைந்தது. கழகம் தந்தை பெரியாருக்குப்பிறகு இப்படி ஒரு வரலாறு படைத்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் ஜூன் 16 ஜூலை 15.2020


செவ்வாய், 24 நவம்பர், 2020

கருநாடகாவில் தலைவிரித்தாடும் ஜாதியக் கொடுமை கீழ்ஜாதிக்காரர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

 

November 22, 2020 • Viduthalai • இந்தியா

புகார் கொடுத்தும் கருநாடகா பா.ஜ.க. ஆட்சியில் நடவடிக்கை இல்லை

மைசூரு, நவ.22 கருநாடகத்தில்,  உயர் ஜாதியினர் அல்லாதவர்களுக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லி கார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ ருக்கு ரூ.50000 அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.

47 வயதாகும் அந்த முடிதிருத்துநர், மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவில், ஹல்லாரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முடிதிருத்தம் செய் யும் நிலையத்தில் அனைத்து ஜாதி யினருக்கும் முடிதிருத்தம் செய்து வந்தார்.

அந்த ஊரில் உள்ள உயர்ஜாதியி னர் இவரை வீட்டிற்கு அழைத்து முடிவெட்டி வந்தார்கள். கரோனா பொது முடக்கம் முடிந்த பிறகு இவர் கடையில் முடிவெட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கவே இவருக்கு உயர் ஜாதி யினரின் வீட்டிற்குச் சென்று முடி வெட்ட நேரம் இல்லை. இதனால் நீங்கள்கடைக்கு வாருங்கள்என்று உயர்ஜாதியினரிடம் கேட்டுக்கொண் டார்.இதனால்ஆத்திரமடைந்த  உயர்ஜாதியினர், இனிமேல்உயர்ஜாதி யினருக்குமட்டுமே கடையில்முடி வெட்டவேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.  இவரின் கடைக் குச் சென்ற, இவரது கிராமத்தின் உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த மகா தேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜு உள்ளிட்டோர், இனி மேல் தங்களைத் தவிர வேறு யாருக்கும் முடிவெட்டக் கூடாது, அப்படி வெட்டினால் ஊரை விட்டு விரட்டிவிடுவோம் என்று மிரட்டி யுள்ளனர்.

அதற்கு அவர் நான்  யாருக்கும் ஜாதி பார்ப்பதில்லை என்பதாகப் பதிலளித்தார். இதனை அடுத்து தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடு என்று கூறி அவர் ரூ.50000அபராதம் செலுத்த வேண்டு மெனவும் கூறினர்.  ஆனால், இதற்கு உடன்பட மறுத்துவிட்டார் மல்லிகார்ஜூன். எனவே, அவர்மீது ஊர்விலக்க நடவடிக்கையை அறிவித் ததோடு, அவரின் கடைக்கு யாரும் முடிதிருத்தச்செல்லக்கூடாதுஎன் றும் ஊருக்குள் பிரச்சாரம் செய்தனர்

கடந்த 3 மாதங்களாகவே உயர் ஜாதியினர் மிரட்டி வருவதால், காவல்துறையில் புகார் அளித்தார்.  காவல்துறையினர், புகாரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். காவல் துறையினரிடம் தங்கள் மீது புகார் அளித்ததை அறிந்த உயர்ஜாதியினர் மல்லிகார்ஜூனின் 21 வயது மகனை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து  நாயக் சமூகத்தைப் பற்றிகேவலமாகப் பேசுமாறுசெய்து, அதை காணொலியில் படம் பிடித்த னர். இதன்மூலம், காவல் துறையிடம் சென்றால், அந்தக் காணொலியை வெளியிட்டு விடுவதாகவும் மிரட் டியுள்ளனர்.

மல்லிகார்ஜூன் தன்மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்துவருவதை அடுத்து அப்பகுதி வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், வட்டாட்சியர் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகப்பேசி அவரைசமாதா னப் படுத்த முயன்றார். இதனை அடுத்து அவர் உள்ளூர் ஊடகவி யலாளர்களைச் சந்தித்து தனது குறையைக்கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித் துள்ளார்.


வியாழன், 22 அக்டோபர், 2020

முலைவரி - தோள்சீலை போராட்டம்


#முலைவரி

இந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." 

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவருடைய #மனைவியாக, #மகளாக, #சகோதரியாக, #தாயராக, #பாட்டியாக, இருந்தாலும் "முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்." 

இந்த இந்துத்துவ அடக்குமுறையை கூறும்போது கண்டிப்பாக நாங்கிலி என்ற பெண்ணைபற்றி கூறியே ஆகவேண்டும்.

நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. 
(முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது.) 

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில்  முலைக்கர்ணம் என்று பெயர்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். நாங்கிலியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.

நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.

மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்ககார்கள். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.

இந்த வரலாறுகள் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்குமுறைகளும் மக்களை எவ்வாறு பாடாய்ப்படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.
நன்றி

க. கார்த்திக் சியான் சியான்/ ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 22.10.19

1. இணைய முகவரி
https://www.opindia.com/2018/01/the-recurring-myth-of-breast-tax-doesnt-seem-to-die-down-this-time-propagated-by-scroll/

2.
https://indusscrolls.com/marxists-fabricate-nangeli-and-travancores-breast-tax-myths-to-divide-hindus/

புதன், 15 ஜூலை, 2020

இந்திய அறிவியல் கழக (Indian institute of science)த்தில் முதல் பிற்படுத்தப்பட்டோர்

நேற்றைய தினம் மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்ததலைவர் பி.கே.ஹரிப்ரசாத் இந்திய அறிவியல் கழகம் (Indian institute of science) துவங்கப்பட்ட 1907 ம் ஆண்டிலிருந்து நூறாண்டுகள் கழிந்து 2007 ம் ஆண்டில்தான் முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சொன்னார். அதுவும் மறைந்த அர்ஜூன் சிங் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது உயர்கல்விநிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக என்கிற கூடுதல் தகவலையும் அவர் சொன்ன போது மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

யோசித்துப்பாருங்கள் ஒரு நூறாண்டுகளில் ஒரு பிற்பட்டவகுப்பினர்கூட நுழைய முடியாமைக்கு தகுதியின்மை மட்டுமா காரணமாக இருக்க முடியும்..? இந்த அநீதி எவ்வளவு குரூரமானது..?

இதற்கெல்லாம் வராத அறச்சீற்றம் 10% அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதென்றால் அது எவ்வளவு தேர்ந்தெடுத்த கயமைத்தனம்..?

பக்கத்து வீட்டில் அடுத்த தெருவில் விரும்பிய படிக்க முடியாமல் அரசு வேலை கிடைக்காமல் கிருஷ்ணா ஸ்வீட்நெய் மைசூர்பா வாங்கி உண்ண வழியில்லாமல் இருக்கும் அரியவகை ஏழைகளின் சோகம் பிழியும் கதைகளை தூக்கிக்கொண்டு வருபவர்கள் எவரும் துளிகூட நேர்மையற்ற சல்லிகள்.. இரக்கவுணர்வினை சுரண்டி எத்திப்பிழைக்கவும் எத்திப்பிழைப்பவர்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் இந்த உண்மைகள் சுடுவதேயில்லை..

இந்த மண்ணில் சமூகநீதிக்கான போராட்டம் நேற்று துவங்கியதுமில்லை.. இன்று முடிவதுமில்லை.. நமது காலத்தில் அது தொய்வடைந்தது என்கிற அவப்பெயரின்றி இதற்காக உறுதியுடன் நின்றாக வேண்டியதொன்றே நம் வரலாற்று கடமை.. டாட்..
16.07.18
From Muruganantham Ramasamy

சனி, 4 ஜூலை, 2020

தனியார்த் துறையில் இடஒதுக்கீடு!

இன்றைய நிலையில் இடஒதுக்கீடு என்பது அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் சுருங்கி விட்டது.
தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற திரிசூலம் - சமூகநீதியை வெகுவாகப் பதம் பார்த்து விட்டது. இந்த நிலையில் தனியார்த்துறையில் இடஒதுக்கீடு என்பதுதான் சமூகநீதி கண்ணோட்டத்தில் மிகச் சரியானதாக இருக்க முடியும்.
26.6.2020 அன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் காணொலி மூலம் கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடஒதுக்கீட்டில் நமது அடுத்த இலக்கு தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறுவதே என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மண்டல் குழுப் பரிந்துரையில்கூட இது வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் தனியார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய - மாநில உறவுகள் குறித்து வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமும், தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்படும்போதும், அல்லது அதில் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்போதும், ஏற்கெனவே அந்தப் பொதுத்துறை நிறுவனம் செயல்படுத்தி வந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும், நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் விகிதாச்சார அளவை நிர்ணயிக்கும் உரிமையும், சட்டம் இயற்றும் உரிமை யும் மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. (Affirmative action)
11 பேர்களுக்குமேல் பணியாற்றும் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வோர் ஆண்டும் கருப்பர், இஸ்லாமியர், பெண்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த நிலை பின்பற்றாவிடின் வழக்குத் தொடரலாம் என்கிற அளவுக்கு அமெரிக்காவில் சட்டம் உள்ளது.
இங்கிலாந்தில் Equality act என்றும், கனடாவில் Employment Equality Act என்றும், சீனாவில் Affirmative Minorities Nationality Act என்றும் இடஒதுக்கீட்டு பெயர்களாகும்.
இந்தியாவில் பிஜேபி ஆட்சி வந்த பிறகு. அரசு நிர்வாகமே தனியார்த் துறைகளிலிருந்து பெறப்பட்ட அதிகாரிகளின் கைகளில் குவிந்து வருகிறது.
2014-ஆம் ஆண்டு திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற பெயரில் வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டது, முதல் முதலாக இந்த வளர்ச் சிக்குழுவில் இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசகர்களாகவும், நிர்வாகிகளாகவும் நியமிக்கப்பட்ட னர்.
இதற்கு அரசு கொடுத்த விளக்கம் தனியார் துறைகளில் சிறப்பாகச் செயல்படும் பல துறைசார் நிபுணர்களின் சேவையை அரசு பயன்படுத்திக் கொண்டது என்பதாகும்.
அதன் பிறகு அரசு பணியிலும், 'லேட்டரல் என்டரி' எனப்படும், தனியார்த் துறைகளில் பணிபுரிவோரை, அரசுப் பணியில் சேர்க்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒன்பது துறைகளுக்கான இணைச் செயலர் பதவிக்கு, தனியார் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தோர் என்று கூறி நியமிக்கப்பட்டனர். வழக்கமாக, இணை, உதவி செயலர் பத விக்கு, அய்.ஏ.எஸ்., எனப்படும் இந்தியக் குடிமைப் பணிகள், அய்.பி.எஸ்., எனப்படும் இந்திய போலீஸ் சேவை, அய்.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு சேவை, அய்.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரிகளே நியமிக்கப்படுவர்.
ஆனால், மோடி அரசு தனியார்த் துறை அதிகாரிகளை இந்தப்பணிகளில் நியமித்து வருகிறது. தற்போது இந்த அரசு மத்திய அரசில் காலியாக உள்ள 1300 இயக்குநர்கள் மற்றும் உதவி செயலாளர்கள் பணியிடங்களுக்கு தனியார் துறையினரை நியமிக்க முடிவு செய்துள்ளது. இணைச் செயலாளர் பதவியில் அமர்த்தப்படும் இவர்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல் ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் என்றும், இந்தப் பணி நியமனம் மூன்று வருடத்திற்கு முதலிலும், அதன் பிறகு அய்ந்தாண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் நீடிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில், அவர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுவார்கள்; இன்று மத்திய அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் பார்ப்பனர்களே, தனியார்த் துறைகளில் பெரும் அதிகார மட்டத்தில் இவர்கள் நிறைந்து உள்ளனர்.
வருமான வரித் துறை, கலால் துறை, ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களே தகுதி உயர்வு வழங்கப்பட்டு, அரசின் செயலாளர்களாக நியமிக்கப்படுவது மரபு. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசால், லேட்ரல் எண்டரி முறையில், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பவர்கள், மத்திய அரசின் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்,
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்துத் துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத் துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச் சேவைத் துறையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல் போக்குவரத்து துறையில் பஷன் குமார் ஆகியோரை அரசு இணைச் செயலாளர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச் செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டு களுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ பதவியில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பில் உள்ளவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
இப்படி இருக்க அரசுத்துறையிலும் தனியார்களை அனுமதிக்கும்போது அங்கு பார்ப்பனர்களே அமருவார்கள். இதன் மூலம் இட ஒதுகீட்டை முற்றிலும் ஒழித்துக்கட்டி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோர் பதவிக்குவந்து கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும். இதன் மூலம் அரசாங்க ரகசியங்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தே! ஏற்கெனவே அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் மத்திய அரசின் செயலாளர்கள் மட்டத்திலும் தனியாரை நியமித்து அரசமைப்புச் சட்டத்தின் அச்சாணியையே இந்த அரசு அசைத்துப் பார்க்கிறது.
இந்த மிகப் பெரிய அபாயம் உரிய வகையில் வெளிச்சத்துக்கு வரவில்லை. சமூகநீதியாளர்கள் மிகப் பலமாகக் கட்டமைத்து இதற்கொரு முடிவு எட்டப்படாவிடின் சமூகநீதி பட்டப் பகலிலேயே 'படுகொலை' செய்யப்படும் நிலைதான்.
நமது அடுத்த இலக்கு தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு நோக்கியே என்று திராவிடர் கழகத் தலைவர் காணொலியில் கூறியது - காலத்தால் ஊதப்பட்ட சமூகநீதி சங்கே ஆகும்.
- கலி.பூங்குன்றன், 4.7.20

ஞாயிறு, 21 ஜூன், 2020

வடநாட்டில் சமூகநீதி குரல்

https://www.facebook.com/100001731296342/posts/2987314001336280/

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பூஜ்யம்

*மருத்துவக்கல்வி அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பூஜ்யம்*

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு தமிழ் நாடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 8121 இடங்களை தந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டின்படி, பூஜ்யம் இடங்களே தரப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்டோர்க்கு 50% இட ஒதுக்கீடு உள்ளது. மத்திய அரசு 69% சட்டத்தின்படி இட ஒதுக்கீடு செய்திருந்தால், 4060 பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக்கல்வியில் மேற்படிப்பிலும், பட்டப்படிப்பிலும் சேர்ந்திருப்பர். மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு, பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை மறுத்து வருகிறது.

-கோ.கருணா நிதி
பொதுச் செயலாளர்.
அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

*ZERO RESERVATION TO OBC:*

In all their replies (reply to Members of Parliament, reply to AIOBC Federation), the DGHS of MoH&FW has quoted a pending case in Supreme Court (596/2015 Saloni Kumari) and in their short affidavits submitted before Supreme Court of India (Feb 2016), and the High Court of Madras (June 17, 2020) mentions a proposal to implement state reservation subject to 50% ceiling and a proportionate increase in seats. The Ministry also mentions about a Supreme Court case of 2007 (Abhay Nath Case) that ordered for SC/ST reservation in AIQ seats.

But, in all these replies and also affidavits filed with Courts including the Supreme Court of India, the DGHS of MoH&FW has intentionally omitted to mention the regulations framed under the Medical Council of India Act, 1956, viz. Postgraduate Medical Education Regulation, 2000 and Regulation for Graduate Medical Education, 1997.

Both these regulations were amended and gazette notification was published on 21st December 2010 that stipulates  “The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories”.

DGHS is bound to implement reservation policy in the AIQ seats contributed by the States, as per the above regulations i.e. as per the reservation policy adopted in the respective States. But, it has intentionally denied for OBCs.

Thus,

1. The DGHS of Health Ministry has suppressed the above regulations before the Supreme Court of India (first affidavit of Feb 2016), before Nagpur High Court (2018) and Madras High Court (2020).

2. The DGHS of Health Ministry has suppressed the above regulations before the Parliament through its reply to Hon’ble Members of Parliament.

3. The DGHS of Health Ministry has suppressed the above regulations in the reply sent to NCBC, a constitutional body, in response to the complaint lodged by AIOBC Federation.

The matter of implementation of OBC reservation in All India Quota requires an executive action thro’ implementation of the regulations framed by the same Ministry. The DGHS and the upper caste lobby in the Central Secretariat is wilfully avoiding this and pushing the matter before the judiciary so that the matter gets delayed and ultimately get an order in their favour.

So, the solution lies not with the judiciary but with the political masters of Delhi who are silent spectators; same is the case with the OBCs, the supposed to be the largest segment of the society.

The pressure has to be built on the political stage at the All India level, seriously and immediately to make the dream of OBC reservation in Medical Admission under AIQ, a reality.

Tamil Nadu, which is always at the forefront in the fight for social justice has the duty and responsibility to unite and lead all social justice forces across the country.

-G.Karunanidhy
General Secretary
AIOBC Federation
20th June 2020
மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு தமிழ் நாடு கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 8121 இடங்களை தந்துள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீட்டின்படி, பூஜ்யம் இடங்களே தரப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தின்படி, பிற்படுத்தப்பட்டோர்க்கு 50% இட ஒதுக்கீடு உள்ளது. மத்திய அரசு 69% சட்டத்தின்படி இட ஒதுக்கீடு செய்திருந்தால், 4060 பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக்கல்வியில் மேற்படிப்பிலும், பட்டப்படிப்பிலும் சேர்ந்திருப்பர். மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு, பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை மறுத்து வருகிறது.

-கோ.கருணா நிதி
பொதுச் செயலாளர்.
அ.இ.பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு

*ZERO RESERVATION TO OBC:*

In all their replies (reply to Members of Parliament, reply to AIOBC Federation), the DGHS of MoH&FW has quoted a pending case in Supreme Court (596/2015 Saloni Kumari) and in their short affidavits submitted before Supreme Court of India (Feb 2016), and the High Court of Madras (June 17, 2020) mentions a proposal to implement state reservation subject to 50% ceiling and a proportionate increase in seats. The Ministry also mentions about a Supreme Court case of 2007 (Abhay Nath Case) that ordered for SC/ST reservation in AIQ seats.

But, in all these replies and also affidavits filed with Courts including the Supreme Court of India, the DGHS of MoH&FW has intentionally omitted to mention the regulations framed under the Medical Council of India Act, 1956, viz. Postgraduate Medical Education Regulation, 2000 and Regulation for Graduate Medical Education, 1997.

Both these regulations were amended and gazette notification was published on 21st December 2010 that stipulates  “The reservation of seats in Medical Colleges/institutions for respective categories shall be as per applicable laws prevailing in States/Union Territories”.

DGHS is bound to implement reservation policy in the AIQ seats contributed by the States, as per the above regulations i.e. as per the reservation policy adopted in the respective States. But, it has intentionally denied for OBCs.

Thus,

1. The DGHS of Health Ministry has suppressed the above regulations before the Supreme Court of India (first affidavit of Feb 2016), before Nagpur High Court (2018) and Madras High Court (2020).

2. The DGHS of Health Ministry has suppressed the above regulations before the Parliament through its reply to Hon’ble Members of Parliament.

3. The DGHS of Health Ministry has suppressed the above regulations in the reply sent to NCBC, a constitutional body, in response to the complaint lodged by AIOBC Federation.

The matter of implementation of OBC reservation in All India Quota requires an executive action thro’ implementation of the regulations framed by the same Ministry. The DGHS and the upper caste lobby in the Central Secretariat is wilfully avoiding this and pushing the matter before the judiciary so that the matter gets delayed and ultimately get an order in their favour.

So, the solution lies not with the judiciary but with the political masters of Delhi who are silent spectators; same is the case with the OBCs, the supposed to be the largest segment of the society.

The pressure has to be built on the political stage at the All India level, seriously and immediately to make the dream of OBC reservation in Medical Admission under AIQ, a reality.

Tamil Nadu, which is always at the forefront in the fight for social justice has the duty and responsibility to unite and lead all social justice forces across the country.

-G.Karunanidhy
General Secretary
AIOBC Federation
20th June 2020

ஞாயிறு, 14 ஜூன், 2020

சனி, 13 ஜூன், 2020

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையேயாகும்!

June 12, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளபடியும் - அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய கர்த்தாக்களின் கருத்துப்படியும் -

இந்திரா சகானி வழக்கில் நீதிபதிகளின் கருத்துப்படியும்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை உரிமையல்ல என்று கூறும் கருத்து சரியானதல்ல!

தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சமூகநீதி, இட ஒதுக்கீடு அடிப்படையான உரிமையல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள கருத்து - சட்டப்படி சரியானதல்ல என்று பல்வேறு சட்ட ஆதாரங்களையும், தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முக்கிய அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டவர் புறக்கணிக்கப் பட்டது குறித்து திராவிடர் கழகம், அனைத்துக் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி சமூக அநீதியைச் சுட்டிக்காட்டியது.

இந்தக் கல்வி ஆண்டில் ‘நீட்' (NEET), மருத்துவ மேற்பட்டப்படிப்பு (PG) மற்றும் பல் மருத்துவ மேற் படிப்பில் மாநிலங்கள் முறையே 7,981 இடங்களையும்,  மேற்படிப்பில்  மாநிலங்கள் முறையே 7,981 இடங் களையும், 274 இடங்களையும் அகில இந்திய தொகுப் பிற்கு ஒப்படைத்துள்ளன.

இந்தக் கல்வி ஆண்டில் (2020-2021) மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர் களுக்கு இட ஒதுக்கீடு உரிய சதவிகிதம் வழங்கப்பட வில்லை.

மாபெரும் சமூக அநீதி!

2013 ஆம் ஆண்டிலிருந்து (‘நீட்' தேர்வு அமலான ஆண்டுமுதல்) தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப் படையில் அகில இந்திய தொகுப்பிற்கு - மாநிலங்கள் அளித்த இடங்கள் பட்டப் படிப்பு மற்றும் மேற்பட்டப் படிப்பு (மருத்துவம்) 72,500 இடங்கள் ஆகும். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைத்த இடம் பூஜ்ஜியமே! என்னே கொடுமை! எத்தகைய மாபெரும் சமூக அநீதி!

சமூகநீதி மண்ணாகவும், தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் போராடிப் பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கும் நிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதால், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் - கட்சி மாச்சரி யங்களைக் கடந்து இந்த அநீதியைக் களைய - உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன, இதுபற்றி நீதி கேட்டு!

உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியானதா?

திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது; தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.அய்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.), காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ்வழக்குகள் நேற்று (11.6.2020) விசாரணைக்கு வந்தபோது, இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு ஒன்று, வாதாடிய தி.மு.க. வழக்கு ரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களிடம் ‘‘இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல (Not  a Fundamental Right). எனவே, நீங்கள் அந்த மாநில உயர்நீதிமன்றத்திலேயே ‘‘வழக் கைத் தொடுங்கள். இங்கே ஏன் வந்தீர்கள்?'' என்று கண்டிப்பு தொனியில் பேசி, ‘‘வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் - இல்லையானால், டிஸ்மிஸ் செய்யவேண்டி வரும்'' என்று கூறியுள்ளது கண்டு, சமூக நீதியாளர்களும், சட்ட வல்லுநர்களும்கூட அதிர்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியானதா?

அரசமைப்புச் சட்டப்படியும், அதனை உருவாக்கிய அதன் கர்த்தாக்கள் (Founding Fathers) நோக்கப்படியும் சரியானதுதானா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

கருநாடக மாநில அரசால் அமைக்கப்பட்ட எல்.ஜி.ஹாவனூர் கமிஷன் அறிக்கை

1975 இல் கருநாடக மாநிலத்தில் - அரசால் அமைக்கப்பட்ட எல்.ஜி.ஹாவனூர் கமிஷன் தலைவர், அந்த அறிக்கையின் முன்னுரையில் ஓர் அருமையான கருத்தினை எடுத்து வைத்தார். (அப்போது சமூகநீதி வழக்குகளே சொற்பம்).

‘‘.....Language of the Constitution in so far as it relates to backward classes, is simple and unambiguous. But the language of the Judiciary in interpreting the Constitutional provisions is highly ambiguous and complicated.”

‘‘பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் சம்பந்தமான (இந்திய) அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைப்பற்றிய வாசகங்கள் மிகவும் தெளிவானதும், பல அர்த்தங்களுக்கு இடம் தராததும் ஆகும். ஆனால், நீதிமன்றங்கள் இந்த அரசமைப்புச் சட்ட வாசகங்களைப்பற்றிய வியாக்கி யானங்கள் செய்யும்போது அது மிகவும் சிக்கலான தாகவும், பலவித அர்த்தங்களைக் கொண்டவை போலவும் செய்யப்படுகின்றன'' என்று மிகவும் பொருத்தமாகச் சொன்னார்.

‘‘நேற்று (11.6.2020) உச்சநீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதி ஜஸ்டீஸ் நாகேஸ்வரராவ் அவர்களது தலைமை யிலான அமர்வு கூறியது இதைத்தான் நினைவூட்டுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை

  1. இட ஒதுக்கீடு - Reservation என்பது சமூகநீதியின் வடிவம் ஆகும். அதை அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவது சரியல்ல என்பதற்கு முதல் எளிமையான பதில்.

அந்த இட ஒதுக்கீடு பிரிவுகள் இடம்பெற்றுள்ள அரசமைப்புச் சட்ட அத்தியாயம் மூன்றாம் பிரிவின் (Part III) தலைப்பு என்ன?

‘‘Fundamental Rights'' என்பதல்லவா?

பின் அதன்கீழ் வரும் ஷரத்துக்கள் எப்படி அந்தத் தன்மையற்றவைகளாக ஆக முடியும்?

  1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை - பீடிகை (Preamble) யில்
    Justice - Social - Economic and Political என்ற வாசகங்கள் உள்ளதின் விரிவாக்கம்தானே இட ஒதுக்கீடு - அதிலும் சமூகநீதிக்கே முன்னுரிமை, முதலிடம் அம்மூன்றில் என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
  2. அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்பட முடியாத அடிக்கட்டுமான (Basic Structure of the Constitution) பகுதியில், பீடிகை தொடர்ச்சி IV பகுதிவரை உள்ளன என்பதை எவரே மறுக்க முடியும்?
  3. இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கருத்தையும் இங்கே சுட்டிக்காட்டுவது இட ஒதுக்கீடு - சமூகநீதி என்பது அடிப்படை உரிமை தான் என்பதை நிரூபிக்கும் ஆவணமாகும்.

‘‘The Fundamental rights are basic rights and include basic freedoms guaranteed to the individual. Articles 12 to 35 deal with the Fundamental Rights. The Fundamental Rights are freedoms guaranteed but these freedoms are not absolute, they are Judicially enforceable.


‘‘....The Fundamental Rights  என்பதற்கும், Legal Rights என்பதற்கும் - அதாவது அடிப்படை ஜீவாதார உரிமை என்பதற்கும், சட்ட உரிமை என்பதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால்,

சட்ட உரிமை (Legal Rights) என்பது நீதிமன்றங்களால் பாதுகாக்கப்படுவது. ஆனால், ஜீவாதார - அடிப்படை உரிமைகளோ, அரசமைப்புச் சட்டத்தாலேயே பாதுகாக் கப்படக் கூடியது.

அத்தகைய அடிப்படை உரிமைகள் அடங்கியவை.

  1. சமத்துவத்திற்கான உரிமை - Right to equality (Articles 14 to 18)

  2. சுதந்திரத்திற்கான உரிமை - Right to Freedom (Articles 19 to 21, 21A and 22)

  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை - Right against Exploitation - (Articles 23 and 24) 

  4. மதச் சுதந்திர உரிமை - Right  to Freedom of Religion (Articles 25 to 28)

  5. கலாச்சார மற்றும் கல்விக்கான உரிமைகள் - Cultural and Educational Rights (Articles 29 and 30)
  6. அரசமைப்புச் சட்டப்படி கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக நிவாரணம் கோரும் உரிமை - Right to Constitutional Remedies (Article 32)

மேற்காட்டியவைகளில் சமத்துவத்துக்கான அடிப் படை உரிமை என்பதன் கீழ்தான் இட ஒதுக்கீடு, சமூகநீதி பாதுகாக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு என்பது

சமூகநீதி அடிப்படை உரிமைதான்

  1. இதை 9 நீதிபதிகள் கொண்ட இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் கமிஷன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளும், ஒட்டுமொத்த பெரும்பான்மை தீர்ப்பிலும் சரி, தனித்தனியே எழுதப்பட்ட தீர்ப்புகளிலும் சரி, இதனை வலியுறுத்தத் தவறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதும், இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி அடிப்படை உரிமைதான் என்பதைப் பறைசாற்றுகிறது.

உதாரணத்திற்கு, மண்டல் கமிஷன் வழக்கு என்ற இந்திரா சகானி வழக்குத் தீர்ப்பில், ஜஸ்டீஸ் பி.பி.ஜீவன் ரெட்டி (மற்றவர்களுக்காகவும் இணைந்து) எழுதிய தீர்ப்பில்,

‘‘Articles 14 to 18  In short the doctrine of equality has many facets. It is a dynamic and evolving concept. Its main facets relevant to the Indian society have been referred to in the Preamble and Articles under the sub-heading 'Right to Equality.'''

‘‘அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 முதல் 18 வரை, சுருக்கமாக, ‘சமத்துவத்தின் கோட்பாடு’ பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இது மாறுதலையும், வளரும் தன்மையும் கொண்ட கருத்தாகும்.

இந்திய சமுதாயத்துடன் தொடர்புடைய அதன் முக்கிய அம்சங்கள் 'சமத்துவத்திற்கான உரிமை' என்ற துணைத் தலைப்பின்கீழ் முகப்புரை மற்றும் சட்டப் பிரிவுகளில்  குறிப்பிடப்பட்டுள்ளன.''

‘‘Articles 14 to 18  In short the goal is 'equality of status and opportunity'.

Articles 14 to 18 must be understood not merely with reference to what they say but also in light of several Articles in Part IV (Directive Principles of State Policy).

Justice - social, economic and political is the sum total of aspirations in Part IV.''

‘‘அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 முதல் 18, சுருக்கமாக சொல்வதென்றால், சம அந்தஸ்து, சம வாய்ப்பு என்பது குறிக்கோள்.

அரசமைப்புச் சட்டப்பிரிவுகள் 14 முதல் 18 வரை அவர்கள் சொல்வதைக் குறிப்பதோடு மட்டுமல் லாமல், அரசமைப்புச் சட்டம் நான்காம் பகுதியின் (அரசிற்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள்) பல பிரிவுகளில் இருந்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப் பட்டுள்ள, “நீதி - சமூக, பொருளாதார மற்றும் அரசியல்'' - என்பது பகுதி IV இல்  குறிப்பிட்டுள்ள நெறிமுறைகளின் மொத்த சாரமாகும்.''

அரசமைப்புச் சட்டத்திற்கு

முரணான வியாக்கியான கருத்து

எனவே, இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று கூறுவது அரசமைப்புச் சட்டப்படியும், அரச மைப்புச் சட்டக் கர்த்தாக்கள் - தந்தைகள் கருத்துப்படியும், 9 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கான - மண்டல் வழக்குத் தீர்ப்புப்படியும் - அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான வியாக்கியான கருத்து ஆகும்!

என்றாலும், மக்கள் மன்றத்தின் இடையறாத போராட் டங்களும், நியாயங்களும், கண் திறக்க மறுப்பவர்களுடைய கண்களையும் திறக்க வைக்கும் என்பது உறுதி,  உறுதியிலும் உறுதி!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

12.6.2020

50% இட ஒதுக்கீடுக்கு உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு

சென்னை, ஜூன் 12 மருத்துவக் கல்வியில் முதுநிலைப் படிப்புகளுக்கு மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்தன. உயர்நீதிமன் றத்திலேயே மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று நேற்று (11.6.2020) உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், தி.மு.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

வியாழன், 19 மார்ச், 2020

தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும் - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் சமூகநீதி உரை

அ.இ. ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன்  சமூகநீதி உரை

புதுடில்லி, மார்ச் 15 தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும்; அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக் கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றார் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.

13.3.2020 அன்று மக்களவையில் நடைபெற்ற சமூக நலத்துறை மான்யம் தொடர்பான விவாதத்தில்,  நாடாளு மன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் (திமுக) தெரிவித்த சிறப்பான கருத்துகள்

1. தந்தை பெரியாரின் சிந்தனை களையும், கருத்துகளையும் பறைசாற்ற மத்திய அரசு தந்தை பெரியார் பெயரில் அறக்கட்டளை நிறுவிட வேண்டும்.

2. ஏனைய சீர்திருத்தக்காரர்கள் சமூக நீதியை வென்றிட பல ஆண்டுகள் போராடிய நிலையில், இருபது ஆண்டு களில் சமூக நீதியை நிலை நாட்டி வெற்றி கண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

3. இந்தியாவில் 1969-ஆம் ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சகம் உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

4. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததோடு, அருந்ததியினர்க்கும்  உள் ஒதுக்கீடும் அளித்தவர் டாக்டர் கலைஞர்.

5. கிரிமிலேயர் என்பதை ‘கிருமி'லே யர் என அறிவித்தவர் டாக்டர்கலைஞர்.

6. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட் டோர் குழு 9.3.2019 அன்று அளித்த அறிக்கையை மத்திய அரசு புறக்கணித் துள்ளது.

7. பிற்படுத்தப்பட்டோர் தொடர் பான கிரிமிலேயர் குறித்து மத்திய அரசு நியமித்த மூன்று நபர் நிபுணர் குழு தேவையற்றது. அக்குழுவில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆணையம் இருக்கை யில், இக்குழு தேவையற்றது.

8. சம்பள வருமானத்தையும், குரூப் ஏ மற்றும் பி பிரிவு பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை கிரிமிலேயர் என அறிவிப்பது நியாயமற்றது; தகுதி யுள்ள பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீடு பெறாமல்  நீக்கும் முயற்சி யாகும்.

9. மூன்று நபர் நிபுணர் குழுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தை கிரிமிலேயர் குறித்த பிரச்சி னையை ஆராய்ந்திட அறிவுறுத்த வேண்டும்.

10. மருத்துவ படிப்பில் - மருத்துவர் மற்றும் முதுகலைப்படிப்பு - அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் அநீதி இழைக்கப்பட் டுள்ளது. இது குறித்து, மத்திய நல் வாழ்வுத்துறை கவனத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில் உரிய பதில் அளித்திட வேண்டும்.

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமி ழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு 15 3 20

சமூகநீதி மீது மற்றொரு பேரிடி!

மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கும் நுழைவுத் தேர்வு தேவையாம்!

புதுடில்லி, மார்ச் 15 தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயில நிதி உதவி பெற்று வந்த ‘ஸ்காலர்ஷிப்' திட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாற்றிட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் குறைந்துகொண்டே வருவதற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெரும் எதிர்ப்பினைக் காட்டிவரும் வேளையில், மேலும் நிதி உதவி கிடைக்கக்கூடிய வாய்ப் பினைக் குறைக்கின்ற வகையிலே, உயர்ஜாதி யினரும் ‘ஸ்காலர்ஷிப்' பெறுகின்ற வகையில் திட்டம் மாற்றப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் இந்த திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை இதுநாள் வரை மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்து வந்தன. மத்திய அரசு அளித்துவந்த நிதி அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாநில அரசின் நிதிப் பளு அதிகமாகிக் கொண்டுடே வருகிறது. நிதிப் பளு என்று காரணங்கூறி, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் எண் ணிக்கையையும், பெறும் நிதி அளவையும் குறைத்துக்கொண்டு வரும் சூழல்களும் நிலவி வருகின்றன.

நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்ட மத்திய அரசு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக'', நிதி உதவித் திட்டத்தை ‘‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவித் திட்டம்'' (PM - YASASVI) என்பதாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உயர்ஜாதி மாணவர்களும் ‘ஸ்காலர்ஷிப்' பெற்றிட முடியும் என்பதாக அறிவிப்புகள் வந்துள்ளன.

ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத்

தகுதி தேர்வாம்!

நிதி உதவி என்பதே ஒடுக்கப்பட்ட மாண வர்களுக்கு - ஆண்டாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு என்பதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்தில்  பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்த அளவில் வரம்பு விதிக்கப்பட்டு (ஆண்டு வருமானம் முறையே ரூ.1.5 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சம் வரம்பு)  ‘ஸ்கலர்ஷிப்' வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அடியோடு நீக்கப்பட்டு, ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கு தகுதித் தேர்வு என்ற பெயரில் ‘நுழைவுத் தேர்வு' நடத்தப்படுமாம். உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதிடலாமாம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே ‘ஸ்காலர்ஷிப்' கிடைத்திடும் வகையில் கல்வி நிதி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுகாறும் வழங்கப்பட்ட நிதி உதவியானது - பராமரிப்புச் செலவு, திருப்பி அளிக்கப்படாத கட்டாய கல்விக் கட்டணம்,  அஞ்சல் வழிக் கல்வி பெறுவதற்கான புத்தகச் செலவு என பல வகையிலும் பயன் அளித்தது. இதன்மூலம் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர் அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு ரூ.87,000/- என்ற அளவில் கல்வி நிதி உதவி பெற முடிந்தது.

இனிவர இருக்கின்ற உயர்ஜாதி மாணவர் களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் திட்டத்தில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.30,000/- மட்டுமே வழங்கிடும் வகையில், நிதி உதவி வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய திட்டத்தின்கீழ் மத்திய அரசு, மாநில அரசு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிதி ஒதுக்கீடு அளவுபற்றிய குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. கடந்த கால நிதி ஒதுக் கீட்டால் மாநிலங்களின் நிதிப்பளு அதிகரித்து பாதிக்கப்படக் கூடிய சூழல்கள்தான் உரு வாகின. சில மாநில அரசுகள் சமூகநீதி அடிப் படையில் நிதிப் பளு கூடினாலும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலன் பெறுகிறார்கள். அவர்களின் உயர்வு கருதி செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களும் இனி முடக்கப்படும்; முடிவு பெறும்.

உயர்கல்வி பெறுவதற்கு, உயர்ஜாதி மாண வர்களும் நிதி உதவி பெறுவதற்கு உருவாக் கப்பட்டுள்ள பா.ஜ. அரசின் புதிய கல்வி நிதித்திட்டம் மாநில அரசின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில்தான் அமையும் என்பது உறுதியாகத் தெரிகிறது என சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள், அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

புதிய கல்விக் கொள்கை, உயர்ஜாதியி னருக்கும் கல்வியில், வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என இதுவரை அரசமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உரிமைகளை படிப்படியாகப் பறித்துக்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவி' திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பினை உருவாக்கிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

- விடுதலை நாளேடு 15 3 20

பெரியார்- சமூகநீதி- தமிழ் தேசியம் - வேல்முருகன் உரை

https://www.facebook.com/1434130116731307/videos/208229906910830/

புதன், 18 மார்ச், 2020

தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்

தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்

  1. ஆதி ஆந்திரா
  2. ஆதி திராவிடர்
  3. ஆதி கர்நாடகர்
  4. அஜிலா
  5. அருந்ததியர்
  6. ஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  7. பைரா
  8. பகூடா
  9. பண்டி
  10. பெல்லாரா
  11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  12. சக்கிலியன்
  13. சாலாவாடி
  14. சாமார், மூச்சி
  15. சண்டாளா
  16. செருமான்
  17. தேவேந்திர குலத்தான்
  18. டோம், தொம்பரா, பைதி, பானே
  19. தொம்பன்
  20. கொடகலி
  21. கொட்டா
  22. கோசாங்கி
  23. ஹொலையா
  24. ஜக்கலி
  25. ஜம்புவுலு
  26. கடையன்
  27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  28. கல்லாடி
  29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
  30. கரிம்பாலன்
  31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  32. கோலியன்
  33. கூசா
  34. கோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  35. குடும்பன்
  36. குறவன், சித்தனார்
  37. மடாரி
  38. மாதிகா
  39. மைலா
  40. மாலா
  41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  42. மாவிலன்
  43. மோகர்
  44. முண்டலா
  45. நலகேயா
  46. நாயாடி
  47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  48. பகடை
  49. பள்ளன்
  50. பள்ளுவன்
  51. பம்பாடா
  52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  53. பஞ்சமா
  54. பன்னாடி
  55. பன்னியாண்டி
  56. பறையர், பறயன், சாம்பவர்
  57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  59. புலையன், சேரமார்
  60. புதிரை வண்ணான்
  61. ராணேயர்
  62. சாமாகாரா
  63. சாம்பான்
  64. சபரி
  65. செம்மான்
  66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  67. தோட்டி
  68. திருவள்ளுவர்
  69. வல்லோன்
  70. வள்ளுவன்
  71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  72. வாதிரியான்
  73. வேலன்
  74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  75. வெட்டியான்
  76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்

  1. அடியன்
  2. ஆறுநாடன்
  3. இரவாளன்
  4. இருளர்
  5. காடர்
  6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  7. காணிக்காரன்,காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  8. கணியன், கண்யான்
  9. காட்டு நாயகன்
  10. கொச்சுவேலன்
  11. கொண்டக்காப்பு
  12. கொண்டாரெட்டி
  13. கொரகா
  14. கோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  15. குடியா, மேலக்குடி
  16. குறிச்சன்
  17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
  18. குறுமன்
  19. மகாமலசார்
  20. மலை அரையன்
  21. மலைப் பண்டாரம்
  22. மலை வேடன்
  23. மலைக்குறவன்
  24. மலைசர்
  25. மலையாளி (தருமபுரிவேலூர்புதுக்கோட்டைசேலம்கடலூர்திருச்சிராப்பள்ளிநாமக்கல்கரூர்பெரம்பலூர் மாவட்டங்களில்)
  26. மலையக்கண்டி
  27. மன்னன்
  28. மூடுகர், மூடுவன்
  29. முத்துவன்
  30. பழையன்
  31. பழியன்
  32. பழியர்
  33. பணியர்
  34. சோளகா
  35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  36. ஊராளி

வெள்ளி, 6 மார்ச், 2020

சமூகம் : தேசிய அவமானம் (தீண்டாமை)


தீண்டாமைக்கு எதிராக  போராடி, அரசியலமைப்பும் 1950இல் அதைத் தடை செய்தது. ஆனால் தேசிய அவமானம் என் றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப் பிடப்பட்டாலும் ஜாதித்தீண்டாமை இந் தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித் திருக்கிறது.

வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும் பங்கள் ஜாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய 'எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி' இதழின் ஆய்வு கூறி யிருக்கிறது.

ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக் காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டா மையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத்  மற்றும் ஓம்கர் ஜோஷி  கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு 2012அய் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய் வினை அவர்கள் மேற் கொண்டுள்ளனர். கல்வியின் நிலை உயர உயர தீண்டாமை யின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அள விற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990-களில் தனியார்மய கொள் கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை பார்க்க முடிவதாக தெரிவிக்கின்றனர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக் கின்றன. அடுத்ததாக 30 விழுக்காடு இந் துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின் றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக் காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறு கிறது.

- விடுதலை ஞாயிறுமலர் 22 2 20

ஞாயிறு, 1 மார்ச், 2020

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்குதிரைமீது திருமண ஊர்வலம் செல்வதா?

இராணுவவீரர் மீது குஜராத்தில் தாக்குதல்

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்

குதிரைமீது திருமண ஊர்வலம் செல்வதா?

அகமதாபாத், பிப்.20, குதிரையில் திருமண ஊர்வலம் சென்றதற்காக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை, ராணுவ வீரர் என்றுகூட பார்க்காமல், கல்லால் அடித்துத் தாக் கிய சம்பவம் பாஜக ஆளும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம், பழன்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் கோட்டியா. 22 வயதான இவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அண்மையில் பெங்களூருவில் ராணுவ வீரருக்கான பயிற்சியை முடித்த இவர், மீரட்டில் பணியில் சேரவுள்ளார்.

முன்னதாக அவரது குடும்பத்தினர் திருமணம் ஏற்பாடு செய்த அடிப் படையில், கடந்த ஞாயிறன்று குதிரையில்மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற் றுள்ளது. அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ் கோட்டியா, குதிரையில் செல்வதா? என்று ஆத்திர மடைந்த கோலி பிரிவைச் சேர்ந்த ஜாதி ஆதிக்கவெறியர்கள், ஆகாஷ் கோட் டியா மீதும், ஊர்வலத்தின் மீதும் சர மாரியாக கற்களை வீசியுள்ளனர். மேலும், கோட்டியாவை கீழே தள்ளி அடித்து உதைத்த அவர்கள், “கீழ்ஜாதி யான நீ குதிரையில் ஏறுவதற்கு ஆசைப் படலாமா?” என் றும், “அதற்கு நீ உயர்ந்த ஜாதியில் பிறந்திருக்க வேண்டும்'' என்றும் இழிவாகப் பேசியுள்ளனர்.

காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற ஊர்வலத்திலேயே ஜாதி ஆணவத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், ஆகாஷ் கோட்டியா ஒரு இராணுவ வீரராக இருந்தும், எனினும் உயர்ஜாதி வெறியர்கள், கொடூர வெறியுடன் இந்த தாக்குதலை அரங் கேற்றியுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஆகாஷ் கோட் டியா மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட செஞ்சிகோலி, சிவாஜி கோலி, தீபக் கோலி, துஷார் கோலி, பவன் கோலி, வினோத் கோலி, ராமாஜி கோலி, தீபக் ஈஸ்வர் கோலி, பாய் கோலி, மஞ்சுகோலி மற்றும் ஜீது கோலி உட்பட 11பேர் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

 - விடுதலை நாளேடு 20 2 20

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அரசு!

‘‘உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

யு.பி.எஸ்.இ., அய்.ஏ.எஸ்., போன்ற மத்திய அரசு தேர்வுகளில் கலந்து கொள்ளும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் வயது வரம்பில் சில சலுகைகள் இருந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

உயர்ஜாதியில் ஏழைகள் என்று கூறி (EWS) அவர்களுக்குப் பிற்படுத்தப் பட்டோருக்கு உள்ளதுபோல 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம் என்ற சலுகையை மத்திய பி.ஜே.பி. அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களோடு, உயர்ஜாதி ஏழைகளை சம அளவில் வைத்துப் பார்ப்பது - சமூகநீதிக்கு எதிரானதாகும்.

இட ஒதுக்கீடுக்காக எந்த நோக்கத்தில் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்தின் ஆணிவேரையே வெட்டும் வேலையில் மத்திய பி.ஜே.பி. அரசு வேக வேகமாக செயல்பட்டு வருகிறது.

உயர்ஜாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலு வையில் இருந்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு நடந்துகொள்வது அதன் உயர்ஜாதித் தன்மையின் வெறியையும், வேகத் தையும்தான் வெளிப்படுத்துகிறது.

அனைத்து சமூகநீதியாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகநீதிப் போராளித் தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

20.2.2020


சனி, 29 பிப்ரவரி, 2020

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

11.10.1931 - குடிஅரசிலிருந்து...

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.

ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத் திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதா ரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீ ரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்  என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலி களையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்தி ரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன் னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

எனவே இந்த விசேஷமான மாற்றத் திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டு மென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டுக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மைதெரிந்தது.

ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத் திலேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக் கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத் திற்கென்றுதான் வரையப்பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசா ரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன. கோர்ட்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவதுகச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத் தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக் கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக் கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட் டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோகஸ்தர் தீண்டாதா ருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென் பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பல மேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

 - விடுதலை நாளேடு 29 2 20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மகாராட்டிரம், பீகாரைப் பின்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிடுக!

தமிழ்நாடு சமூகநீதி மண் என்ற வரலாற்றை நிலை நிறுத்திடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மகாராட்டிரம், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

2020-2021 இல் நடைபெறவிருக்கும் நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதி வாரியான கணக் கெடுப்பு கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்பதை, தொடர்ந்து திராவிடர் கழகமும், முற்போக்கு சமூகநீதி அமைப்புகளும், கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன!

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியோர் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எஃப்.சி.) போன்ற பல ஜாதியினரும், வகுப் பினரும் மக்கள் தொகையில் எவ்வளவு உள்ளனர் என்பதைக் கண்டறிய இது கட்டாயம் தேவை. 1901 இல் முதன்முதலில் பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியபோதே, இம்முறை பின்பற்றப்பட்டது.

ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்படவில்லையே!

ஜாதியும், ஜாதி அடிப்படையிலான பேதங்களும், சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், நம் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன என்பது யதார்த்தம்.

ஜாதியை ஒழிக்க இந்த 73 ஆண்டுகால ‘‘சுதந்திர சுயராஜ்ஜியத்தில்'' எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால்தான் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நகலை எரித்து 3000 பேர்,  6 மாதம் முதல் 3 ஆண்டுவரை கருஞ்சட்டைத் தோழர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.

திராவிடர் கழகம் நடத்திய

சட்ட எரிப்புப் போராட்டம்

அப்போராட்டத்தின் காரணமாக இருபால் தோழர் கள் சுமார் 16 பேர் மரணமடைந்து, வரலாற்றில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!

தந்தை பெரியார் நடத்திய கடைசி மாநாட்டில்கூட (1973 ஆம் ஆண்டு) இதுபற்றிதான் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கோவில் கருவறைக்குள் நுழைந்து, ஜாதி இழிவைத் துடைத்தெறியும் வாய்ப்புக்காகவே  தந்தை பெரியார் போராடினார்.

பல மாநிலங்களிலும் தீர்மானம்

எனவே, ஏற்கெனவே மகாராட்டிர சட்டமன்றம் இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அது இப்போது எதிர்க்கட்சி அணி. ஆனால், பீகாரின் நிதீஷ்குமார் கட்சி ஆட்சியில், பா.ஜ.க.வின் கூட்டணி உள்ளதே!  அங்கேயும் சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று வற்புறுத்தி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றை, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது!

ஏற்கெனவே நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானப்படியே, தமிழ்நாடு அரசும் வருகிற சட்டமன்றத் தொடரில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே (2021 இல்) ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவேண்டியது அவசியம், அவசரமும்கூட!

தமிழ்நாடு சட்டமன்றத்திலும்

தீர்மானம் நிறைவேற்றிடுக!

மகாராட்டிரம், பீகார் மாநிலமும் வழிகாட்டியுள்ளன.

தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதைப் பின்பற்றி சமூகநீதி மண் இந்த மண் என்ற வரலாறு படைப்பதில் முந்திக் கொள்ளவேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.2.2020

சனி, 22 பிப்ரவரி, 2020

கோயில்களில் தீட்டு

*பார்ப்பனர்களும் –* *தீட்டும்* 
----------------------------------------
சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் வழிபட்டார்கள் என்பதற்காக கோவிலை பூட்டிவிட்டு கேரள பார்ப்பன நம்பூதிரிகள் தீட்டுக் கழித்தனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும், இதே போன்ற இழிசெயலை பல இடங்களில் பலமுறை பார்ப்பனர்கள் செய்துள்ளனர் என்ற வரலாறு இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா.

1) 1927ல் திருச்சி மலைக்கோட்டை கோவில் நுழைவுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் ஜே.என்.இராமநாதன்,டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் பார்ப்பனர்களால் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாக தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

2) 1929ல் ஈரோடு கோவில் கருவறைக்குள் நுழைய உரிமை கோரி தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் உள்ளே சென்ற மாயூரம் நடராசன்,பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தோழர்களைப் பார்பனர்கள் கோவிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

3) 1927ல் திருவண்ணாமலைக் கோவிலுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணப்பன் தோழர்களுடன் சென்றபோது பறையர்கள் வருகிறார்கள் என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4) 1874ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5) 1939ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப்போய் விட்டால் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்கும் பூட்டுப் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

6) 1984ல் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே(அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் என்பதால்) உள்ளே விட பார்ப்பனர்கள் மறுத்துவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

7) 1946ல் திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8) 1925ல் கன்னியாகுமரிக்கு கோவிலுக்கு வந்த காந்தியடிகளை பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள்,கோவிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

9) 1927ல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்,கோவிலுக்குள் இருத்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டு கிடந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

10)  1979ல் பாபு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை பசுவின் சிறுநீரும் கங்கை நீரும் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

11)  2014ல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றதும் பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

12)  2018ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால்,இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள்  நுழையவே அனுமதிக்கவில்லை. கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?✍🏼🌹
- பகிரி வழியாக