சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 9 ஜூன், 2022

பட்டியலின மக்களின் பணிகளைப் பறிப்பதா?



   May 24, 2022 • Viduthalai

போலி ஜாதிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய கருநாடக காவல்துறை தலைவரை இடமாற்றம் செய்ததால் அவர் பதவி விலகினார். 

கருநாடகாவில் காவல்துறையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப்பிரிவினர் என போலியான சான்றிதழ்களை வாங்கி அதன் மூலம் நூற்றுக்கணக்கான காவலர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். 

அவர்கள் மூலம் காவல்துறையில் பலகோடி ரூபாய் ஊழல் பணம் கைமாறி உள்ளது எனப் புகார் வந்தது. இதனை அடுத்து பல அதிகாரிகள் இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஆணையிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், காவல்துறை தலைவர் 

பி.ரவீந்திரநாத் நேரடியாக தானே விசாரணையில் இறங்கினார். இதில் சமீபத்தில் காவல்துறையில் இட ஒதுக்கீட்டின் பிரிவில் சேர்ந்தவர்களில் 700 பேர்களின் சான்றிதழ்கள் போலியானவை என்றும், சமூகத்தில் மிகவும் உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொள்ளும் சிலர் கூட தாழ்த்தப்பட்டோர் என சான்றிதழ் வாங்கி காவல்துறையில் சேர்ந்திருப்பதும் தெரிய வந்தது, 

 இது குறித்த முழு அறிக்கையை அவர் மாநில முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையிடம் சமர்ப்பித்தார். ஆனால் வியப்பிற்குரிய வகையில் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தாமல் காலத்தையும், தனது பதவிக்கான கண்ணியத்தையும் காக்கத் தவறிவிட்டார் என்று கூறி மாநில அரசு அவருக்கான பல சலுகைகளை பறித்தது, முக்கியமாக அவருக்கு என்று பாதுகாப்பிற்கு இருக்கும் காவலர்களை வேறு பணிக்குச் செல்ல உத்தரவிட்டு, அவரது பாதுகாப்பிற்கு காவலர்களையும் நியமிக்காமல் விட்டுவிட்டது,  இந்த நிலையில் அவரை காவலர் பயிற்சிப்பள்ளியில் மேற்பார்வையாளர் பணிக்கு அனுப்பியது. மிகவும் உயர்ந்த பதவியில் இருந்த ஒருவர் கிட்டத்தட்ட துணை ஆய்வாளர் நிலையில் பணியாற்ற கருநாடக அரசால் நிர்பந்திக்கப்பட்டார்.  அவர் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். ஆனால் ஆளுநர் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டார். இதனை அடுத்து அவர் தனது அய்.பி.எஸ். பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக கருநாடக மாநில தலைமைச் செயலாளர் ரவிக்குமாருக்கு அவர் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: 

“நான் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் எனப் போலியாக சான்றிதழ்களைப் பெற்று காவல் துறையில் சேர்ந்தவர்கள் குறித்து விசாரணை நடத்த தனிக் குழு ஒன்றை நியமிக்கக் கோரியிருந்தேன், போலிச்சான்றிதழ்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் காவல்துறையில் ஊடுருவி உள்ளனர். இவர்களால் எப்படி நேர்மையாக காவலர்களுக்கான சேவையை மக்களுக்குக் கொடுக்க முடியும்?

ஆனால் அரசு அக்குழுவை அமைக்க முன்வர வில்லை. நானே நேரடியாக விசாரணை செய்து 500க்கும் மேற்பட்ட போலிச்சான்றிதழ்கள் தொடர்பான சான்றுகளை அரசின் பார்வைக்கு அனுப்பினேன். அச்சான்றுகளை ஆய்வு செய்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக என்னை அதிகாரமில்லாத பதவிக்கு மாற்றம் செய்தனர்.   இந்த நிலையில் நான் இந்தப்பதவியில் தொடர முடியாது" என்று பதவிவிலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   சமீபத்தில் "ரூ.1200 கோடி அல்லது அதற்கு அதிகமாக கொடுத்தால் கருநாடக முதலமைச்சராக டில்லி மேலிடம் நியமிக்கும்" என்று பாஜகவின் மேனாள் அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் மாநில காவல்துறை தலைவர் தனது கீழ் உள்ள காவல்துறையில் பல கோடிகள் ஊழல் கைமாறி போலிச்சான்றிதழ்களைப் பெற்று பணி பெற்றது  பற்றிய சான்றுகளோடு புகாரினை சமர்ப்பித்த அவரையே இடமாற்றல் செய்ததைப் பார்க்கையில் கருநாடக சட்டமன்ற உறுப்பினர் கூறியது உண்மையாக இருக்கும் என்றுதான் தெரியவந்துள்ளது. 

பிஜேபி ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஊழல், மோசடிகள் என்னும் விரியன் குட்டிகள் பின்னிப் பிணைந்து புதர்களிலிருந்து சாரை சாரையாக பவனி வந்து கொண்டுள்ளன.

பட்டியலின மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பணிகளை, பட்டியலினத்தவர் எனப் போலிச் சான்றிதழ் பெற்று பிற ஜாதியினர் அபகரிப்பது எந்த வகையைச் சார்ந்தது?

இதுதான் ராம ராஜ்யமோ - இந்து ராஜ்யமோ! கருநாடக மாநிலத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்வினை ஆற்றிட வேண்டும். இல்லையெனில் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் இழப்புகளை ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:42 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: போலி சான்றிதழ்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (29)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ▼  ஜூன் (1)
      • பட்டியலின மக்களின் பணிகளைப் பறிப்பதா?
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.