பக்கங்கள்

புதன், 25 செப்டம்பர், 2024

ஆந்திர சட்ட மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – அமைச்சரவையில் தீர்மானம்


விடுதலை நாளேடு

அமராவதி, செப்.20 ஆந்திர அமைச் சரவை கூட்டம் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் அமராவதியில் நேற்று (19.9.2024) நடை பெற்றது.

இதில் சட்டப் பேரவையில், பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் சந்திரபாபு நிறைவேற்றி உள்ளார். மேலும் மதுபான கடைகளை மீண்டும் தனியாருக்கே வழங்கி, தரமான மதுபானங்களை குறைந்த விலைக்கு கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

180 மிலி ரூ.99-க்கு தரமானதாக வழங்கிட வேண்டுமெனவும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் அளவுக்கு விலை இருக்க வேண்டுமெனவும், அதுவும் தரமான மதுபானங்களை மட்டுமே விற்க வேண்டுமெனவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஜெகன் அரசு, அவரது ‘சாட்சி’ நாளிதழை மட்டுமே கிராம,வார்டு செய லகங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.200 செலுத்தி அரசு சார்பில் வழங்கி வந்தது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தவும், சாட்சி நாளிதழ் வழங்குவதை நிறுத்தவும் முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவிட்டார்.

ஆதார் அட்டைபோன்று, மாணவ, மாணவிகளுக்கு தனி அடையாள அட்டையை அரசு தரப்பில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு ‘ஸ்டே மீ’ எனும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உள்துறைக்கு புதிய கார்ப்பரேஷன் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.