பக்கங்கள்

செவ்வாய், 21 ஜனவரி, 2020

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

70 ஆண்டு குடியரசின் இலட்சணம்!

தாழ்த்தப்பட்ட அமைச்சர்களும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லையே!

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் குமுறல்!

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட  இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சர்  ராஜீவ் சைசால், கோவிலுக்கு வெளியே நின்றிருந்த காட்சி.

சிம்லா, ஜன. 13 இமாச்சலப் பிரதேசத்தின் சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் ராஜிவ் சைசால் மாநிலத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தின் போது தன்னை கோவிலில் நுழைய விடாமல் அவமானப்படுத்திவிட்டனர். என்னை மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வரு கின்றனர் என்று புலம்பியுள்ளார்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், அப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு மட் டும் வழங்கப்பட வேண்டுமென அரச மைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும், இந்த இடஒதுக்கீட்டை 1960-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டு களுக்கும் மத்திய அரசு நீட்டித்து வந்தது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை நீட்டித்து கடந்த 2010-ஆம் ஆண்டு இயற் றப்பட்ட சட்டம், வரும் 25-ஆம் தேதியோடு நிறைவடைகிறது.

‘‘எம் ஓட்டுநர் கோவிலுக்குள் போகலாம்;

நான் போக முடியாது!''

இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அரசமைப்புச் சட்ட (126-ஆவது) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநில சட்டப் பேரவைகளிலும் இந்த இடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது.  இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது மத்திய அரசின் இந்த சட்டம் மாநிலத்தில் நடை முறைப்படுத்த விவாதம் நடைபெற்றது. அப்போது சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜீவ் சைசால் கூறும் போது, “நானும் சட்டமன்ற உறுப்பினரான வினோத் முகோரும் கோவி லுக்குச் சென்றோம் (கோவில் பெயர் குறிப் பிடப்படவில்லை). அப்போது கோவி லுக்கு வெளியே வந்த கோவில் நிர்வாகிகள் எங்களை கோவில் வாசலில் இருந்து பல மீட்டர் தூரம் வெளியே நிற்குமாறு மிரட் டினார்கள்.

என்னுடன் வந்த பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கோவிலுக்குள் சென்று வந்துவிட்டனர், அங்கு நின்று கொண்டு இருந்த எங்களுக்கு மிகுந்த அவமானமாகப் போய்விட்டது,  எனது ஓட்டுனர் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு நாங்கள் அங்கு நிற்பதைப் பார்த்து ஒன்றும் கூறாமல் நின்றுவிட்டார்” என்று வேதனையுடன் கூறினார். அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கின்னரூ ஜகத் சிங் நெஹி என்பவர், ‘‘உண்மைதான் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இது போன்று பல கோவில்களில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்.

இதற்குப் பிறகும் பேசிய சைசால் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் கேபினெட் தகுதி பெற்ற என்னைப் போன்ற அமைச்சருக்கே இந்த அவமான சூழ்நிலை என்றால், மற்றவர்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த இழிநிலை எப்போதுதான் முடிவிற்கு வரும் என்று கண்கள் கலங்க சபையில் பேசினார். மேலும் அவர் பேசும் போது, சீக்கிய மதகுரு இந்த பேதங்களை நீக்க அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் முறையையும் (லங்கர்), அனைவரும் ஒன்று சேர்ந்து வணங்கும் முறையையும் கொண்டுவந்தார். இதன் மூலம் சீக்கியர்களிடம் ஜாதிய முறை ஒழிந்தே போனது என்று கூறினார்.

இது தொடர்பாக மற்றொரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுக்வீந்தர் சிங்சாக்கு  கூறும் போது, “நமது மாநில கேபினெட் தகுதி பெற்ற அமைச்சரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தவர்களை தாழ்த் தப்பட்ட பழங்குடியினர் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும். இது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் ராஜீவ் காந்தி சிறப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார்'' என் றார்.

கோவில்களில் தீண்டாமை இன்றும் உள்ளது -முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

தனக்கு ஏற்பட்ட இந்த அவமானமான நிகழ்வு குறித்து அமைச்சர் ராஜிவ் சைசால் கூறியதும், சிறிது நேரம் அவையே அமைதி யானது. அதன் பிறகு முதல்வர் ஜெயராம் தாக்கூர் பேசிய போது, “சைசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வேதனை எங்களுக்குப் புரிகிறது, அவரைப்போலவே அவையில் உள்ள பலரின் வேதனைகளையும் நான் கணக்கில் எடுத்துள்ளேன்.  சில இடங்களில் நானும் இதே போன்ற ஒரு நிலையை சந்தித்துள்ளேன். தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உணவு வழங்கும் போது தனிவரிசை மற்றும் தனி பாத்திரம் கொடுப் பதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதற்கான மாற்றங்கள் அடிமட்டத்தில் இருந்து வரவேண்டும். இன்னும் நிறைய தூரம் நாம் செல்லவேண்டியுள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆசா குமாரி பேசும் போது முதல்வர் இவ்விவகாரத்தை சாதாரணமாகப் பேசுவது போல் தெரிகிறது, மாநிலம் முழுவதுமே இந்த தீண்டாமை தொடர்கிறது.  ஒரு சில இடங்களில் மட் டும் நடக்கிறது என்பது போல் உள்ளது முதல்வரின் பேச்சு என்று கூறினார்

இதனை அடுத்து சிபிஅய்(மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்கா பேசும்போது, மாநிலத்தில் தீண்டாமையை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் தீண்டாமை நீடிப் பது அவமானகரமான ஒன்றாகும் என்று கூறினார்.

அப்போது பேசிய பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் ஆட்சியின் போதும் தீண்டாமை இருந்தது இப்போதுமட்டும் புதிதாக தோன்றியது போன்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.

இதற்குப் பதிலளித்து காங்கிரஸ் உறுப் பினர் ஆசாகுமாரி பேசும் போது, “காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ஒரு வாரம் நடைபெறுகிறது, உறுப்பினர்கள் அனைவருமே பேச வாய்ப்புகள் தரப்படுகின்றன. ஆனால் இங்கே ஒரு நாள் அதுவும் சில மணி நேரம் மட்டுமே சட்டமன்ற கூட்டம் நடைபெறு கிறது. இச்சபையில் இருக்கும் அனைத்து உயர்ஜாதியில்லாத உறுப்பினர்கள் தாங்கள் தீண்டாமையால் பாதிக்கப்பட்டோம் என்றுகூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு அரசு அனுமதி மறுத்து, சபையை விரைவில் முடித்துவிடப் பார்க் கிறது. இதுதான் பாஜகவினரின் தீண்டா மையை ஒழிக்கும் நடைமுறையா என்று கூறினார். இதனை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

2017-ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்திலும் கோவில்களில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தனர். அப் போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மீது திடீர் பாசம் கொண்டவருமான தருண் விஜய் சில தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு உத்தராகண்டில் உள்ள கோவில்களுக்குச் சென்றார். அப் போது கோவில் நிர்வாகத்தினர் அவருடன் வந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட நபர்கள் மீது கல்லெறிந்தனர். அதன் பிறகு அவருடன் சென்ற தாழ்த்தப்பட்ட நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கிவைக்கப் பட்டனர். இது தொடர்பாக ‘‘தைனிக் பாஸ்கர்'' என்ற இந்தி இதழில் செய்தி வந்த பிறகும், இது தொடர்பாக தருண் விஜய் எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு 13 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக