பக்கங்கள்

புதன், 15 ஜூலை, 2020

இந்திய அறிவியல் கழக (Indian institute of science)த்தில் முதல் பிற்படுத்தப்பட்டோர்

நேற்றைய தினம் மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்ததலைவர் பி.கே.ஹரிப்ரசாத் இந்திய அறிவியல் கழகம் (Indian institute of science) துவங்கப்பட்ட 1907 ம் ஆண்டிலிருந்து நூறாண்டுகள் கழிந்து 2007 ம் ஆண்டில்தான் முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சொன்னார். அதுவும் மறைந்த அர்ஜூன் சிங் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது உயர்கல்விநிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக என்கிற கூடுதல் தகவலையும் அவர் சொன்ன போது மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

யோசித்துப்பாருங்கள் ஒரு நூறாண்டுகளில் ஒரு பிற்பட்டவகுப்பினர்கூட நுழைய முடியாமைக்கு தகுதியின்மை மட்டுமா காரணமாக இருக்க முடியும்..? இந்த அநீதி எவ்வளவு குரூரமானது..?

இதற்கெல்லாம் வராத அறச்சீற்றம் 10% அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதென்றால் அது எவ்வளவு தேர்ந்தெடுத்த கயமைத்தனம்..?

பக்கத்து வீட்டில் அடுத்த தெருவில் விரும்பிய படிக்க முடியாமல் அரசு வேலை கிடைக்காமல் கிருஷ்ணா ஸ்வீட்நெய் மைசூர்பா வாங்கி உண்ண வழியில்லாமல் இருக்கும் அரியவகை ஏழைகளின் சோகம் பிழியும் கதைகளை தூக்கிக்கொண்டு வருபவர்கள் எவரும் துளிகூட நேர்மையற்ற சல்லிகள்.. இரக்கவுணர்வினை சுரண்டி எத்திப்பிழைக்கவும் எத்திப்பிழைப்பவர்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் இந்த உண்மைகள் சுடுவதேயில்லை..

இந்த மண்ணில் சமூகநீதிக்கான போராட்டம் நேற்று துவங்கியதுமில்லை.. இன்று முடிவதுமில்லை.. நமது காலத்தில் அது தொய்வடைந்தது என்கிற அவப்பெயரின்றி இதற்காக உறுதியுடன் நின்றாக வேண்டியதொன்றே நம் வரலாற்று கடமை.. டாட்..
16.07.18
From Muruganantham Ramasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக