பக்கங்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

இடஒதுக்கீட்டில் மோசடி செய்து வெளிநாடுகளில் உல்லாச வாழ்வு! ஜாதியோ உயர்ந்த ஜாதி! செய்வதோ தரம் தாழ்ந்த அநீதி!-பாணன்

 ஞாயிறு மலர்,விடுதலை


இடஒதுக்கீட்டில் மோசடி செய்து, ஜாதிப் பிரிவுகளுக்கு போலிச் சான்றிதழ் கொடுத்து, ஒன்றிய அரசின் நிதிச் சலுகைகளைப் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்று உல்லாசமாக வாழும் பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினர் குறித்துப் பார்க்கலாம்:

இது மத்தியப் பிரதேசம்

போலி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சான்றிதழ் கொடுத்து வெளிநாடு படிக்கச்சென்று செட்டில் ஆன பார்ப்பனர்கள்.

வெளிநாடு சென்று படிப்பதற்காக 30 மாணவர்கள் ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளின் போலி ஜாதிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் உதவித்தொகை பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பை முடித்துவிட்டு லண்டன். சிட்னி, மிட்சிகன்(அமெரிக்கா) உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் பணியில் சேர்ந்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

தகுதி இருந்தும் பல ஆண்டுகளாக தங்களுக்கு வெளிநாடு சென்று படிப்பதற்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்று விண்ணப்பித்திருந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்களின் சான்றிதழ்களை தனியார் அமைப்பு ஆய்வு செய்தபோது இவர்கள் தகுதியானவர்கள். ஆனால், இவர்கள் இடத்தில் வேறு நபர்களுக்கு உதவித்தொகை கொடுத்து அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதும் தெரியவந்தது.

மத்தியப் பிரதேச அரசு ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கான வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்திற்கு வந்த விண்ணப்பங்களில் பல விண்ணப்பதாரர்களின் சிலரை ஆய்வு செய்தது. அப்படி விண்ணப்பித்து பணம் பெற்று வெளிநாடு சென்றவர்களின் குடும்பப் பெயர் சர்மா ஆகும்.
இதில் ஆயுஷி சர்மா, சிசிர் சர்மா மற்றும் நயன் சர்மா ஆகிய மூவரைப் பற்றியும் துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

இந்தூரில் தயாரிக்கப்பட்ட அவர்களது ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளூர் நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டபோது, மூன்று மாணவர்களும் பார்ப்பனர்கள் என்பது தெரிய வந்தது.

ஓபிசி மகாசபை, பழங்குடியினர் சேவா சங்கம் மற்றும் பிற அமைப்புகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டன. 2019 முதல் 2022 வரை உதவித்தொகை பெற்ற மாணவர்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்படி ஆய்வின் போது 50 க்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர்.

எனவே, இந்த அமைப்புகள் விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்ப்பதுடன், அவர்கள் வசித்த இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தின. இந்த விசாரணையின் போது, அவர்கள் பார்ப்பனர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

புகார் அளித்த பிறகும் இது குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக புகார் அளித்த அமைப்புகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளன.

1. ஜனவரி 1, 2022 அன்று நயன் சர்மாவின் போலி ஜாதிச் சான்றிதழ் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும், ஏப்ரல் 2022இல் 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022இல் நயன் ஆஸ்திரேலியா சென்றார். ஜாதிச் சான்றிதழ் போலியானது என கண்டறியப்பட்டது.

2. சிசிர் சர்மா 2020இல் 35 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்றார். இவருக்கு இயக்குநர் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி சிபாரிசு செய்திருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர் சிக்ஷா சாஸ்திரி கலா பள்ளி, கனாடியா சாலை, இந்தூரில் படித்ததாகக் கூறினார். சான்றிதழில் குறிப்பிடப்பட்ட அந்தப் பள்ளியே இல்லை என்பது தெரிய வந்தது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரியும் இதை உறுதிப்படுத்தினார். இவர் லண்டனில் உள்ளார்.

3. அவனீஷ் தன்வருக்கு 2022இல் 20 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. தன்வரின் சான்றிதழ் இந்தூரில் எந்த முகவரியில் தயாரிக்கப்பட்டதோ அது வாடகை வீடு என்பதும், அய்டிஆர் மற்றும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பானிபட் முகவரியும் போலியானது என்பதும் தெரிய வந்தது. இவர் சிட்னியில் உள்ளார்.
கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் போலி ஜாதிச் சான்றிதழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரது பெயர் பட்டியலில்.

1. பெயர் நயன் ஷர்மா, ஆண்டு: 2021, அரசு உதவி: ₹20 லட்சம், ஜாதி: பிராமணர்.
2. கரிமா சிங், ஆண்டு: 2020, அரசு உதவி: ₹29 லட்சம், ஜாதி: தோமர் ராஜ்புத்.
3. ஆஷின் மொஹ்பே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹26 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
4. பிரகர் அமிர்தா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹27 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
5. ஷுபம் தேஷ்முக், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித் தொகை: ₹31 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
6. தருண் கும்ராவத், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹2 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
7. ஆஷிர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: ஜெனரல் ராஜ்புத்.
8. அவ்னிஷ் தன்வார், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹20 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
9. ரவீனா சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹1 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
10. ஷிஷிர் சர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

 

11. ஆயுஷி ஷர்மா, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹30 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
12. தர்ஷன் சோன்வானே, ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹35 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.

மத்தியப் பிரதேசம் விதிசா என்ற இடத்தில் பழங்குடியின சான்றிதழைக் கொடுத்து 32 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் அபிசேக் சர்மா என்ற பார்ப்பனர். இவர் மீது புகார் அளித்த பிறகும் விசாரணையை துவங்க 12 ஆண்டுகள் ஆனது. அதற்குள் அவர் பணி ஓய்வும் பெற்றுவிட்டார்.

13. நீலம் ரத்தோர், ஆண்டு: 2020, பெற்ற அரசு உதவித்தொகை: ₹37 லட்சம், ஜாதி: உயர்ஜாதி.
14. பரம் கேவலே, ஆண்டு: 2019, பெற்ற அரசு உதவித்தொகை: ₹28 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.
15. துவாரகை வீர், ஆண்டு: 2010, பெற்ற அரசு உதவித்தொகை: ₹48 லட்சம், ஜாதி: பார்ப்பனர்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! பழங்குடியினருக்கு உள்இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

 


புதுடில்லி, ஆக.1 தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய வருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கிய முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும்
7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வில், ஆறு நீதிபதிகள் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்ப ளித்துள்ளனர். ஒரு நீதிபதி மட்டும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளன. அந்த சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலிருந்த திமுக அரசு அருந்ததி யினருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டு அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு தமிழ்நாடு அரசின் அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்பு அளித்தது.

ஆனாலும், ஏற்கெனவே உள் ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திரா வழக்கில் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதி கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரை செய்திருந்தது. இதேபோன்று பஞ்சாப், அரியானா மாநில வழக்குகளும் ஏழு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஏழு நீதிபதிகள் அமர்வில் விசாரணை!
அந்த வழக்குகள் ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதம், 7 நீதிபதிகள் அமர்வின்முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அமர்வு இன்று (1.8.2024) தீர்ப்பு வழங்கியது.
இதில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும். பட்டியல், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க முடியும் என பெரும்பான்மை அமர்வு தீர்ப்பளித்தது. உள் ஒதுக்கீடு சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆறு நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பில் நீதிபதி பெலா திரிவேதி மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவை உள் ஒதுக்கீடு மீற வில்லை. அதன்பிறகு பட்டியலின உள்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை.இதன் காரணமாக உள் ஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும் பட்டியல் இனத்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் எந்த ஒரு தடையும் கிடை யாது என உச்ச நீதிமன்றம் இறுதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது.