பக்கங்கள்

ஞாயிறு, 26 மார்ச், 2017

தெலுங்கானா சட்டபேரவையில் இடஓதுக்கீடு சம்பந்தமான விவாதத்தில்...

நேற்று முன் தினம் தெலுங்கானா சட்டபேரவையில் இடஓதுக்கீடு சம்பந்தமான விவாதத்தில் பேசிய முதல்வர் சந்திரசேகரராவ். என் தலைமையிலான அரசு இந்த மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க இந்திய அரசோடு எந்த எல்லைக்கும் சென்று போராடுமென்று அறிவித்திருக்கிறார்.

இதில் சிறப்பு என்னவென்றால் இடஓதுக்கீடு சம்பந்தமாக இவ்வளவு முக்கியத்துவமும் அதற்காக விரிவான போராட்டம் செய்யும் உத்வேகத்தை எது/யார் தந்தது என்பதையும் அவரே அதே விவாதத்தில் சொன்னார்.

அவர் தனக்கு உத்வேகமாக இருந்தது தமிழ்நாடும் இதற்கனவே அங்கு இயக்கம் கண்டு வெற்றிபெற்ற ஈ.வெ.ரா பெரியாரும் தான் என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் அவர் நாமெல்லாம் இங்கு  தசரா கொண்டாட லட்சக்கணக்கில் வீதியில் நின்றபோது தமிழ்நாட்டில் மதத்தை தள்ளிவைத்துவிட்டு மனிதத்திற்காக மக்களை ஒருங்கினைத்தார். அதற்கு அவருக்கு எதிர்ப்புகளும் இருந்ததுஏன் செருப்பால் கூட மாலை போட்டார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்காக வாகனம் இல்லாத நேரங்களில் நடந்தே அவர் இந்த வேலையை செய்திருக்கிறார். அந்தளவுக்கு அவர் உறுதியாக இருந்து தமிழகத்தை வழிநடத்தினார். அதுபோலவே நானும் இடஓதுக்கீடுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசியிருக்கிறார். https://www.youtube.com/watch?v=FYge-TuYvfY

பெரியாரின் உழைப்பும் அவர்தம் போராட்டங்களும்  பல  மாநிலங்களுக்கே முன்மாதிரியாக மாறிவரும் வேளையில் அவரின் உழைப்பால் முன்னேறியவர்கள் அவரை வீழ்த்த நினைக்கும் கொடுமையை எங்கே போய் சொல்வது.

நீங்கள் பெரியரை எவ்வளவு தான் இழிவாக பேசினாலும் அவரின் உழைப்பு அதனை எரித்து பொசுக்கும் என்பதை தான் தெலுங்கானா முதலமைச்சரின் பேச்சு உணர்த்துகிறது.
-கட்செவி செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக