பக்கங்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2018

ஜாதி ஆணவத்துடன் தாழ்த்தப்பட்ட பெண்ணைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ.மீது வழக்குப் பதிவு




டேராடூன், மார்ச் 13 பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், ருத் ராபூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமாகிய ராஜ்குமார் துக்ரால் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை ஜாதி ஆணவத்துடன் தாக்கியுள்ளார். தாழ்த்தப்பட்ட பெண்ணை பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கிய காட்சிப் பதிவு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு பரவியுள்ளது.

காதலித்த பெண்ணுடன் இளைஞர் சென்றது தொடர் பான பிரச்சினையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக் ரால் தன்னுடைய வீட்டில் இருதரப்பினரையும் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, அவ் விளைஞரின் தாயை பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால் அடித்துள்ளார். அதனையடுத்து, அவ்விளைஞரின் தந்தை காவல் துறையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால்மீது புகார் கொடுத்தார்.

அதனையடுத்து,வன்கொடு மைத் தடுப்புச் சட்டப் பிரிவு உள்படபல்வேறுபிரிவுகளின் கீழ்  பாஜக சட்ட மன்ற உறுப்பி னர் ராஜ்குமார் துக்ரால் மற்றும் பாஜகவைச் சேர்ந்த மேலும் இருவர்மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தவர் தற்பொழுது, சில ரின் நெருக்குதலால் புகார் அளித்ததாகக்குறிப்பிட்டு அதைத் திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளாராம்.

உத்தம்சிங் நகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் சுதா னந்த் தத்தே  கூறுகையில்,

Òபுகாரைத்திரும்பப்பெறு வதாகக்கூறினாலும்,வழக் குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதைய டுத்து காவல்துறையினர்  தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்’’ என்றார்.

துக்ரால் இதுகுறித்து கூறு கையில்,

இது காங்கிரசு கட்சியின் சதிச்செயல் என்றும், தன்னு டைய வீட்டில் கண்காணிப்பு கேமரா பதிவைக் கொண்டு ஆராயலாம் என்றும் கூறினார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் துக்ரால்இப்பிரச்சினையில் 10 நாள்களுக்குள்ளாகவிளக்கம் அளிக்குமாறு கோரி மாநிலத் தலைவர் அஜய்பட் விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓட்டுநர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக துக் ரால்மீது புகார் கொடுத்தார். தற்பொழுது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது-.
- விடுதலை நாளேடு, 13.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக