பக்கங்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

அற்றைநாள் “ஸனாதன ஸமுதாயத்தால்”படிக்கப்பட்ட பாடம்



இவன் பறையன் தப்படிப்பான்;

இவன் நோக்கன் சங்கூதுவான்;

இவன் தாதன் சங்கூதி பாடுவான்;

இவன் நாவிதன் முடிவெட்டுவான்;

இவன் வெட்டியான் பிணம் சுடுவான்;

இவன் தோட்டி மலம் எடுப்பான்;

இவன் வண்ணான் துணி வெளுப்பான்;

இவன் சக்கிலியன் செருப்பு தைப்பான்,

இவன் குறவன் கூடை முடைவான்;

இவன் குயவன் மண்பாண்டம் செய்வான்;

இவன் தச்சன் மரவேலை செய்வான்;

இவன் தட்டான் நகை செய்வான்;

இவன் கொல்லன் இரும்பு வேலை செய்வான்;

இவன் கோனான் பால் கறப்பான்;

இவன் சாணான் மரமேறுவான்;

இவன் சேணியன் துணி நெய்வான்;

இவன் வாணியன் எண்ணெய் ஆட்டுவான்;

இவர் அய்யர்! நல்லவர்! வேதம் ஓதுவார்! “கேட்டீர்களா?”

உழைக்கும் வர்க்கம் “அவன்” இவன்’!

உஞ்சிவிருத்திக் கூட்டம் “அவர்! “இவர்!

வேதம் ஓதும் செயல் உயர்ந்தது!

ஏனைய தொழில்கள் இழிவானது!

அய்யர் மட்டும் நல்லவர்!

மற்றவர்கள்...

இவை பொதுநீதியா?

இல்லை! இல்லை! இல்லவே இல்லை!

ஒரு குலத்துக்கு ஒரு நீதி!

இற்றைநாள் இக்கொடுமைக்கு முடிவு கட்டியவர்

யார்? யார்? யார்?

பெரியார்! பெரியார்! பெரியார்!

- வை. மாறன், நன்னிலம்

-  விடுதலை ஞாயிறு மலர், 17.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக