பக்கங்கள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

குதிரையில் ஊர்வலம் சென்ற தாழ்த்தப்பட்ட சமூக மணமக்கள் மீது தாக்குதல்! : 6 பேர் கைது


போபால்ஜன.30- தாழ்த்தப் பட்ட சமூக மணமக்கள் குதி ரையில் ஊர்வலம் சென்றதற்காகமத்தியப் பிரதேச மாநிலம் கனி யாரி கிராமத்தில் ஜாதியவாதி கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கனி யாரி கிராமத்தில் ‘லோதி தாக் குர்’ என்ற சமூகத்தினர் தங் களை உயர்ந்த வகுப்பினராக கருதி வருகின்றனர்திருமண நிகழ்வுகளில் மணமக்களை குதிரையில் அழைத்து செல்லும் மரபுகள் தங்களுக்கானது என் றும் சொல்லிக் கொள்கின்றனர்

இந்நிலையில்கனியாரி கிராமத்தைச் சேர்ந்த திலிப் அகர்வார் என்ற இளைஞர்தனது திருமண நிகழ்வுக்காக குதிரை ஒன்றை முன்பதிவு செய் துள்ளார்இவர்தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தால்அவர் குதிரையில் ஊர்வ லம் செல்லக் கூடாது என்று லோதி தாக்குர் பிரிவினர் மிரட் டல் விடுத்துள்ளனர்

எனினும்திலீப் அகர்வார், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்புடன்தனது மணவிழாவில் குதிரை யில் ஊர்வலம் சென்றுள்ளார்கனியாரி கிராம வரலாற்றில் தாழ்த்தப்பட்ட சமூக மணமகன் ஒருவர் குதிரையில் ஊர் வலம் சென்றது இதுதான் முதல்முறை என்பதால்தங்கள் மீதான அடக்குமுறையில் விடிவு கிடைத்து விட்டதாக அச்சமூக மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் தனர்.  ஆனால்தாழ்த்தப்பட்ட சமூக மணமக்களின் மணவிழா ஊர்வலம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மண மகன் திலீப் அகர்வாரின் வீட் டின்மீது ஜாதியவாதிகள் தாக் குதல் நடத்தியுள்ளனர்இந்த சம்பவம் தொடர்பாகதற்போது வன் கொடுமை சட்டத்தின் கீழ் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்

சில நாட்களுக்கு முன்புராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் சாடி கிராமத்திலும்இதேபோல ஜாதியவாதிகளின் அடக்குமுறையை எதிர் கொண்டுபட்டியல் வகுப்பைச் சேர்ந்த சிறீராம் மேக்வால் - திரோபதி தம்பதி குதிரை ஊர்வலம் சென்றுஉரிமையை நிலை நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக