பக்கங்கள்

திங்கள், 12 பிப்ரவரி, 2018

நீதித்துறையில் சமூக அநீதி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பெரும் அளவு வாய்ப்பு மறுப்பு



புதுடில்லி, பிப்.1 கீழமை நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர்,பிற் படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுப் புப் பெரும் அளவில் உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:

கீழமை நீதிமன்றங்களில் இடஒதுக் கீட்டின்படி நியமிக்கப்பட்டு பணி யாற்றிவரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியி னர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களைச் சேர்ந்த நீதிபதிகள்குறித்த தக வல்களை அளித்த மாநிலங்களும், விவ ரங்களும் வருமாறு:

மத்தியப்பிரதேசமாநிலத்தில் பணியாற்றி வரும் 1,328 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள்(183), பழங்குடி யினர் (192), பிற்படுத்தப்பட்டவர்கள் (186) மூன்று பிரிவினரும் தலா 14 விழுக் காட்டளவில் உள்ளனர்.

டில்லியூனியன்பிரதேசத்தில்பணி யாற்றிவரும்482நீதிபதிகளில்8 விழுக் காட்டளவில் தாழ்த்தப்பட்ட வர்கள்(37), 1.24 விழுக்காட்டளவில் பழங்குடியினர் (6) உள்ளனர்.   பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஒடிசா மாநிலத்தில் பணியாற்றிவரும் 441 நீதிபதிகளில் 15 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(65),20விழுக் காட்டளவில்பழங்குடியினர்(90),10 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள் (45) மூன்று பிரிவினரும் தலா 14 விழுக்காட்டளவில் உள்ளனர்.

பஞ்சாப்மாநிலத்தில்பணியாற்றி வரும்398நீதிபதிகளில்23விழுக்காட் டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(91), 14 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள்(56) உள்ளனர். பழங்குடியினத்தவர் ஒருவர்கூட இல்லை.

சத்தீஸ்கர்மாநிலத்தில்பணியாற்றி வரும்395நீதிபதிகளில்15விழுக்காட் டளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(59),25 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர் (97), 18 விழுக்காட்டளவில் பிற்படுத் தப்பட்டவர்கள்(72) உள்ளனர்.

அரியானாமாநிலத்தில்பணியாற்றி வரும்348நீதிபதிகளில் 20விழுக்காட் டளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(70),15 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள்(52) உள்ளனர். பழங்குடியினத்தவர் ஒருவர் கூட இல்லை.

அசாம் மாநிலத்தில் பணியாற்றிவரும் 174 நீதிபதிகளில் 7 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(13),12 விழுக்காட் டளவில் பழங்குடியினத்தவர் (20) உள் ளனர்.  பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஜார்க்கண்ட்மாநிலத்தில்பணியாற்றி வரும்153நீதிபதிகளில்11 விழுக்காட்ட ளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(17),31 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர் (47), 17 விழுக்காட்டளவில் பிற்படுத்தப் பட்டவர்கள்(26) உள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிவரும் 83 நீதிபதிகளில் 10 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(8),17விழுக் காட்டளவில் பழங்குடியினத்தவர் (14) உள்ளனர்.பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் பணியாற்றிவரும் 23 நீதிபதிகளில் 26 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர்(6),52 விழுக்காட் டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள்(12)   உள்ளனர்.   தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு வர் கூட இல்லை.

மத்திய சட்ட அமைச்சகம்கேட்டுக் கொண்டதன்பேரில் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,பிற்படுத் தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த நீதிபதி களின் விவரங்களை 11 மாநிலங்கள் அளித்தன.  அதன்படி, அம்மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றிவரும் 3,973 நீதிபதிகளில்  14 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(563), 12 விழுக்காட் டளவில்பழங்குடியினத்தவர்(478), 12விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள் (457) நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள்.

மக்கள் தொகையில் பெரும்பான்மை யராக உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும 12 விழுக்காட்டளவில் மட் டுமே உள்ளனர். நீதித்துறையில் நீதிபதி கள்பணியிடங்களில்முறையாகஇட ஒதுக்கீடுபின்பற்றப்பட்டால்ஒழிய அவரவர் விகிதாச்சாரப்படி பயன்பெற முடியாத நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

- விடுதலை நாளேடு, 1.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக