பக்கங்கள்

திங்கள், 18 மார்ச், 2019

13 point roster reservation எனும் அயோக்கியத்தனம்

பல்கலைக் கழகங்களில் முன்பு நடைமுறையில் இருந்த 200 point roster முறையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2017இல் உத்தர விட்டது. அதாவது பல்கலைக் கழகத்தை ஒரு அலகாக (unit) கொண்டு அமல் படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டை துறை வாரியாக (Department as a unit) இட ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதன் மூலம் 13 point roster முறை அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

200 point rosterமுறை என்றால் என்ன ?


அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முன் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் 200 point roster முறையே அமலில் இருந்தது. இதன் மூலம் பல்கலைக் கழகத்தை ஒரு அலகாக (University as a unit) கொண்டு இட ஒதுக்கீடு அமல்படுத்தப் பட்டது. உதாரணமாக ஒரு பல்கலைக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்றால் அதை இட ஒதுக்கீடு மூலம் பிரிக்கும் போது 99 பணியிடங்கள் SC, ST, OBC பிரிவினருக்கும் மீதி 101 இடங்கள் பொது போட்டியிலும் நிரப்பப் படும். இதுவே 200 point roster system.

இந்த முறையை அலகாபாத் உயர்நீதி மன்றம் ரத்து செய்து, துறை வாரியாக (Department as a unit) இட ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது. இதன் பின் தான் 13 point roster முறை அமலுக்கு வந்தது.

13 point roster முறையில் எப்படி பணியிடங்கள் நிரப்பப்படும் ?


இந்த முறைப்படி முதல் மூன்று (1,2,3) இடம் - OC

4ஆவது இடம் - OBC

5,6ஆவது இடம் - OC

7ஆவது  இடம் - SC

8ஆவது இடம் - OBC

9,10,11ஆவது இடம் -  OC

12ஆவது இடம் - OBC

13ஆவது இடம் - SC

என இந்த வரிசையில் தான் நிரப்பப் படும்.

அதாவது ஒரு OBCக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்தபட்சம் 4 காலியிடங்கள் அந்த துறையில் இருப்பது அவசியம். SCக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்தபட்சம் 7 காலியிடங்கள் அந்த துறையில் இருப்பது அவசியம். STக்கு இட ஒதுக்கீடு கிடைக்க குறைந்த பட்சம் 14 காலியிடங்கள் இருந்தாக வேண்டும். ஒரு துறையில் 14 காலி பணியிடமாக இருப்பது சாத்தியமற்ற ஒன்று. பல துறைகளில் மொத்த பணி இடங்களே வெறும் 6 அல்லது 7 தான்.

இந்த 13 point roster முறை என்பது சட்ட ரீதியாக பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நிர்மூலமாக்குகிறது. உச்ச நீதிமன்றமும் இதற்கு துணை போகும் வகையில் கடந்த ஜனவரி 23 தேதி இது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதார இட ஒதுக்கீடு எனும் பெயரில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வேலையில் இறங்கியுள்ள இந்த சூழலில். உச்ச நீதிமன்றம் மீண்டும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இட ஒதுக்கீட்டை சிதைக்கும்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனை எதிர்த்து, டில்லி பல்கலைக் கழக பேராசிரியர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, வேறு வழி யின்றி, மோடி அரசு,  7.3.2019 அன்று, ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந் துள்ளது. இதன்படி, பழைய முறையில், அதாவது 200 பாயிண்ட் ரோஸ்டர் முறை பின்பற்றப்படும்.

ஆனால், 8.3.2019 அன்று, இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் உயர்ஜாதியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

- கோ.கருணாநிதி
- விடுதலை நாளேடு, 13.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக