பக்கங்கள்

வியாழன், 7 மார்ச், 2019

காங்கிரசு ஆட்சியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு உயர்வு

முதல்வர் கமல்நாத் அறிவிப்பு




போபால், மார்ச்.7 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 16 விழுக்காடும், பழங்குடியினத்தவருக்கு 20 விழுக் காடும், இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 14 விழுக்காடும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடாக அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கான இடஒதுக்கீடு 14 விழுக் காடாக உள்ளது. அதனை 27 விழுக் காடாக அதி கரித்திட முடிவெடுத்து அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்களை வழங்கி அம்மாநில முதல்வர் கமல்நாத் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: மத்தியப்பிரதேச மாநிலத் தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட் டவர்களுக்கு 27 விழுக்காடாக இடஒதுக்கீடு அதி கரித்து வழங்கப்படும் என்றார். குழு அமைத்து முடிவெடுக்கப்படும்

மத்தியப்பிரதேச மாநில சட்ட மன்றத்தில் கேள்விக்கு மாநிலத்தின் முதல்வர் கமல்நாத் பதில் அளித்த போது, பொருளாதாரத்தில் நலிவுற் றவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு  இதுவரை நடை முறைப்படுத்தப்படவில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதற் காக துணைக்குழு அமைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

அந்நாள் - இந்நாள்


1926 - 'இந்தியின் இரகசியம்' என்ற பெரியாரின் கட்டுரை 'குடிஅரசு' ஏட்டில் வெளி வந்த நாள்.

- விடுதலை நாளேடு, 7.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக