பக்கங்கள்

வெள்ளி, 16 ஜூலை, 2021

அரசு வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

 சென்னை, ஜூலை 7 அரசு வேலைவாய்ப்பில் மாற்று த்திறனாளிகளுக்கு 4 சத வீத இட ஒதுக்கீடு வழங் குவது உறுதி செய்யப்பட வேண்டும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல் பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமை செய லகத்தில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்வித தாமதமும் இன்றி வழங்கிட அனைத்து துறை களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத் தினார்.

நலத்திட்டங்கள், உப கரணங்கள் பெற விண் ணப்பித்து காத்திருப் போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அனை வருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கை களை அரசு துறைகள் முனைப்புடன் செயல் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாற் றுத்திறனாளிக ளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற் றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனி யார் நிறுவனங்களில் ம £ற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்படு வதையும் உறுதி செய்யு மாறு முதல்வர் அறிவுறுத் தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக