சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 8 டிசம்பர், 2022

அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! 596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!



  December 06, 2022 • Viduthalai

596 பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே!

EWS செயல்படுமானால் பார்ப்பனர்கள் மட்டுமே எல்லாவற்றிலும் வலுப்பெறுவர்-மனுநீதியே ஆட்சி செய்யும்!


சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் 596 இடங்களில் 515 பேர் பார்ப்பன உயர்ஜாதியினரே! இந்த நிலையில், உயர்ஜாதியினரில் ஏழை என்ற பெயரால் ஒன்றிய பி.ஜே.பி. கொண்டு வந்துள்ள சட்டம் (EWS) மேலும் பார்ப்பன ஆதிக்க மனுவாதி ஆட்சியைக் கொண்டு வரும்; இதனை எதிர்த்து ஒழிக்காவிட்டால் பார்ப்பனரல்லாதார் படுகுழிக்குத் தள்ளப்படுவர் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நூற்றுக்கு நூறு சரியானது என்பதற்கு 

இரண்டு எடுத்துக்காட்டுகள்!

ஆபத்து! ஆபத்து! சமூக நீதித் தலையின் மீது விழுந்த பேரிடி! EWS என்ற உயர் ஜாதி ஏழைகளுக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு வந்தால், அது பட்டியலின மக்களையும், பிற்படுத்தப்பட்டோரையும் எந்த அள விற்குப் பாதிப்புக்கு ஆளாக்கும் என்று நாம் எச்சரித்து வந்தோம். அது எந்த அளவிற்கு உண்மையானது - நூற்றுக்கு நூறு சரியானது என்பதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை வெளியிட்டுள்ளோம்.

இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒன்றிய அரசு சமூக நீதியை கொல்லைப்புற வழியாக ஆயிரம் அடிகளுக்கும் கீழே எப்படிப் புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக, திட்டவட்டமாக தெரிந்து கொள்ள முடியும்.

பிஜேபி ஒன்றிய அரசின் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையே!

இந்தப்  போக்கு  தொடருமேயானால், அதன் பார தூர விளைவு மிகக் கடுமையானதாக இருக்கும்; பட்டிய லின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும் இனித் தலை எடுக்க முடியாது என்ற நிலை உறுதி செய்யப்பட்டு விடும். இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசின் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையே!

ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை என்பது இட ஒதுக் கீடுக்கு எதிரானது - சமூக நீதிக்கு எதிரானது. 1990 இல் பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் ஆட்சியை, அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மண்டல்குழு பரிந்துரை யின் அடிப்படையில் கொண்டு வந்தார் என்பதற்காக கவிழ்த்தவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்.அய்  தலைமை யாகக் கொண்ட பிஜேபியினர் என்பதை மறந்து விடக்கூடாது.

சமூகநீதியை மறைமுகமாக கொல்லைப்புற வழியாக வீழ்த்துகின்ற சூழ்ச்சிதான்!

எப்படியும் இந்த இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற நினைப்பில் 24 மணிநேரமும் கவனத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்த இந்த ஆர்.எஸ்.எஸ்.அய் தலைமையாகக் கொண்ட பிஜேபி இன்றைக்கு ஒன்றிய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நேரடி யாக இட ஒதுக்கீட்டை ஒழித்தால், அது பெரும்பான் மையான மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள  நேரிடும் என்ற அச்சத்தால், சமூகநீதியை மறைமுகமாக கொல்லைப்புற வழியாக வீழ்த்துகின்ற சூழ்ச்சிதான் - திட்டம் தான் உயர் ஜாதி ஏழைகளுக்குப் பத்து விழுக் காடு இட ஒதுக்கீடு என்ற சட்டமாகும். அதனுடைய விளைவு இதுதான் என்பதை மேற்கண்ட புள்ளி  விவரங்கள் நமக்கு உணர்த்தவில்லையா?

 மூன்று விழுக்காடு உள்ள பார்ப்பனர்களுக்கு, பத்து விழுக்காடு ஒதுக்கீட்டை செயல்படுத்துவதன்மூலம் என்ன விளைவு ஏற்படும்? தற்போதுள்ள சனாதன வர்ணாசிரம முறை - அதாவது சமூகப் படிநிலைகள் அப்படியே தொடர வழிவகுக்கும். இனி அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களே தலைமைப் பொறுப்பில் ஆதிக்கத்தில் வேரூன்றி நிற்பார்கள். பட்டியலின மக்க ளும், பிற்படுத்தப்பட்ட பழங்குடி சமூகமும் தலைமைப் பொறுப்புக்கு வருவது தடுக்கப்படும். மூன்று சதவிகித மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது அவர் களின் வளர்ச்சியை விரைவுப்படுத்தும்; மற்ற பார்ப் பனரல்லாதாரின் வளர்ச்சியை வீழ்த்தும். நூற்றுக்கு 10 மதிப்பெண் வாங்கிய பார்ப்பான் தேர்வாகி விடுவான்; ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றாலும், தேர்வு செய்யப் பட மாட்டார்.  இந்த பத்து விழுக்காடு - அவர்களுக்கான பொருளாதார இட ஒதுக்கீடு என்பது உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கானது.  மீண்டும் மனுதர்ம ஆட்சி தான் வெளிப்படையாக கோலோச்சும். அதனால் அய்.அய்.டி. போன்ற உயர் தொழில் நிறுவனங்கள் பார்ப் பானுக்கு மட்டுமே என்ற ஏகபோக நிலை உறுதியாகி விடும். பார்ப்பனரல்லாதவர்களின் உயர்கல்வி கானல் நீர் ஆகும்.

அய்.அய்.டி. என்றால், அய்யர் அய்யங்கார் டெக்னாலஜி என்று கருதவேண்டும். 

பார்ப்பனரல்லாதவர்கள் தெளிவாகப் புரிந்து - விழிப்புணர்வு பெற வேண்டும்!

இதில் நகை முரண் என்னவென்றால், ஆண்டுக்கு ரூபாய் இரண்டு லட்சத்தை ஒருவரது வருமானம் தாண் டினால், அவர் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். அப்படியிருக்க ரூபாய் 8 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவன் எப்படி ஏழை? ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி ஆட்சிக்கு இது எல்லாம் மிக நன்றாகவே தெரியும். ஆனாலும், அவர்களுடைய ஆட்சி என்பது உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கான ஆட்சி என்பதால், சட்டத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னிச்சையாக அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனரல்லாதவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், விழிப்புணர்வு பெற வேண்டும்.

நீதிமன்றங்கள் சாதிக்க முடியாதவற்றை 

மக்கள் மன்றம் சாதிக்கும்!

திராவிடர் கழகம் ஒவ்வொரு கட்டத்திலும் இதுபற்றி எச்சரித்து வந்திருக்கிறது. அந்த எச்சரிக்கை எவ்வளவு உண்மையானது, துல்லியமானது என்பதை பார்ப்பன ரல்லாதவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். சட்ட மன்றங்கள், நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள் சாதிக்க முடியாதவற்றை  மக்கள் மன்றம் சாதிக்கும் என்பது வரலாறு. முதல் சட்டத் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால் மக்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வுப் போராட்டம் - இவற்றின் காரணமாக அன்று பிரதமராக இருந்த பண்டித ஜவகர்லால் நேரு தலைமையில் இருந்த ஆட்சி இட ஒதுக்கீட்டுக்காக முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்ததை நாம் அறிவோம். (சட்ட அமைச்சர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர்).

அதேபோல தமிழ்நாட்டில் இருந்து வந்த 69 சதவிகி தத்திற்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபொழுதும் திராவிடர் கழகம் முன்னின்று போராடிய காரணத்தி னாலும், மாநாடுகளை நடத்தி மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்திய காரணத்தாலும் அன்று இருந்த ஆட்சிக்கு சட்ட ரீதியாக 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எப்படி காப்பாற்றலாம் என்ற சட்ட வழிமுறையை திராவிடர் கழகம் காட்டிய காரணத்தினாலும் 76 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அரசமைப்புச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம். திராவிடர் கழகத்தின் பங்கு இதில் முக்கியமானது என்பது சுவரெழுத்தாகும்!

நாடு தழுவிய அளவில் 

பிரச்சாரம், போராட்டம்!

மற்ற சக்திகளை விட மக்கள் சக்தி வலிமையானது, மேலானது, வெற்றியை  ஈட்டக் கூடியது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது. இப் பொழுது ஏற்பட்டு இருக்கின்ற சமூகநீதிக்கு எதிரான ஆபத்தை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து வெற்றி பெற வேண்டும். இதில் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் என்ற முறையில் அழுத்தம் கொடுத்து ஒன்றிய அரசை சமூக நீதிப் பாதையில் கொண்டுவர வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதனால் பலன் பெற வேண்டிய பார்ப்பரல்லாத மக்கள் ‘யாருக்கோ வந்த விருந்து' என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இல்லாமல், நம்முடைய வருங்கால தலைமுறையினர் தலை எடுக்க திராவிடர் கழகம் - அதேபோல சமூக நீதியில் அக்கறை உள்ள அத்தனை அமைப்புகளும் காட்டும் சமூக நீதிப் பாதையில் தங்கள் பங்களிப்பையும், பயணத்தையும் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்து கிறோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

6.12.2022

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:02 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: 10%, அய்.அய்.டி, ஆசிரியர் அறிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (29)
    • ▼  டிசம்பர் (5)
      • நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கு...
      • இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்க...
      • பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட் டோரும் எப்படி ...
      • ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வே...
      • அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! 596 பேராசிரிய...
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.