சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு

வியாழன், 22 டிசம்பர், 2022

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஜார்க்கண்ட் மாநில அரசின் மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர்!



  December 22, 2022 • Viduthalai

ராஞ்சி,டிச.22- ஜார்க்கண்ட் மாநிலத் தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை- அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

இதனையடுத்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மாநி லத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரமேஷ் பயாஸை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியுள்ளார். 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றபோது மாநிலத்தில்  இடஒதுக்கீட் டின் அளவை அதிகரிப்போம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங் கிரஸ் கூட்டணி வாக்குறுதி அளித்தது. 

அதன்படி கடந்த நவம்பர் 11 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில், இடஒதுக் கீட்டு உச்ச வரம்பை 77 விழுக்காடாக உயர்த்தி, அம்மாநில ஹேமந்த் சோரன் அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்காக, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, ‘ஜார்க்கண்ட் அரசுப் பணி  காலியிடங்கள் மற்றும் பணிகள் திருத்த மசோதா-2022’வை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார்.  இந்த புதிய மசோதா மூலம், பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 12 விழுக்காடாகவும், பழங்குடியினருக்கான ஒதுக்கீடு  28 விழுக்காடாகவும் தலா 2 விழுக்காடு  உயர்த்தப்பட்டது. இதர பிற்படுத்தப் பட்டோ ருக்கு 12 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்டோரில் புதிதாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  (Extremely Back ward Classes  -EBCs) 4 என்ற புதிய பிரிவை உருவாக்கப்பட்டு,  அதற்கு தனியாக 15 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய பாஜக அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை 27 சதவிகிதத்தில் இருந்து 14 விழுக்காடாக குறைத்து இருந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு 12 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு 15 விழுக்காடு என இட ஒதுக்கீட்டு அளவை மீண்டும் 27 விழுக்காடாக உயர்த்தியது. பட்டியல் - பழங்குடியினருக்கும் தலா 2 விழுக்காடு இடஒதுக்கீட்டை உயர்த்தி, ஒட்டு மொத்தமாக 77 விழுக்காடாக அதி கரித்தது.

இந்த மசோதாவுக்கு பாஜக மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. இடஒதுக்கீடு விஷயத்தில், ஹேமந்த் சோரன் அரசு தேவையற்ற அவசரம் காட்டுவதாகவும், உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS)  இடஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் கூறியது. ஆனால், பாஜக எதிர்ப்பையும் மீறி, ஹேமந்த் சோரன் அரசு 77 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோ தாவை நிறைவேற்றியது. அத்துடன், தமிழ்நாட்டில் நடைமுறையில்  இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு, அரசியல் சாசனத்தின் 9ஆவது  அட்ட வணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக் கப்பட்டு இருப்பதுபோல, ஜார்க் கண்டில் கொண்டு வரப்பட்டுள்ள 77 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் 9-ஆவது அட்ட வணையில் சேர்த்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்தார். இந் நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநில அரசு மசோதா நிறைவேற்றி 2 மாதங்களாகியும் அம்மாநில ஆளுநர் இதுவரை 77 விழுக்காடு இடஒதுக் கீட் டுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது விமர் சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.  

இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி, ஆளுநரின் ஒத்துழையாமை குறித்து விவரித்து இருந்தார். இதன் அடுத்தகட்டமாக அனைத்துக் கட்சி  குழுவினரை ஆளுநர் மாளிகைக்கே அழைத்துச்  சென்று, ஆளுநர் ரமேஷ் பயாஸை சந்தித்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 77 விழுக்காடு இடஒதுக்கீட்டு மசோ தாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:59 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இடஒதுக்கீடு, ஜார்க்கண்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (29)
    • ▼  டிசம்பர் (5)
      • நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கு...
      • இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்க...
      • பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட் டோரும் எப்படி ...
      • ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வே...
      • அய்.அய்.டி.யின் அநியாயத்தைப் பாரீர்! 596 பேராசிரிய...
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.