பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2019

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவா?

டில்லி பல்கலை. பேராசிரியர்கள் கண்டனம்


புதுடில்லி, ஜூலை 18 பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக் கீட்டை அமல்படுத்த, டில்லி பல்கலைக் கழகம் மிகவும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட் டிருக்கிறது.

இதனைக் கண்டித்து, டில்லி பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மத்திய பா.ஜ.க. அரசு, 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதே, அவசரகதியில் மசோதா கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும், பல்வேறு கேள்விகளுக்கு இதில் சரி யான விளக்கங்கள் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், டில்லி பல்கலைக் கழக நிகழ் வுகள் நடந்துள்ளன.

டில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்


பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், டில்லிப் பல் கலைக் கழக நிர்வாகமானது, தற் போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற் றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்ப தாக, டில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டி யுள்ளார்.

டில்லி பல்கலைக் கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியி டங்கள் உருவாக்கும்வரை, பொருளாதார ரீதியாக நலி வடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

- விடுதலை நாளேடு, !8.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக