பக்கங்கள்

வியாழன், 4 அக்டோபர், 2018

அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லத் தடையில்லை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது - செத்தது வைதீகம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என்ற தடையை உச்சநீதிமன்றம் தகர்த்துத் தீர்ப்பு வழங்கியுள்ளதை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வரவேற்று அளித்துள்ள அறிக்கை:

"சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு" என்ற உச்சநீதிமன்றத்தின் - 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு வரவேற்றுப் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

ஆண் - பெண் பாலின வேறுபாடு கூடாது என்ற அரசியல்சட்ட அடிப்படை உரிமைகளைச் சரியாகப் பாதுகாத்த ஒரு வரலாற்று முக்கியத்துவமான  தீர்ப்பே இது!

சனாதனம் அரசியல் சட்டத்துக்கு  அப்பாற்பட்டதல்ல!


சனாதனம் என்பது அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல; இந்திய அரசியல் சட்டத்திற்கும், அதன் உரிமைகளுக்கும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்!

மேலும் மாதவிடாய் என்பது பெண்கள் உடலின் ஒரு இயற்கை நிகழ்வு - வியர்வை வெளிப்படுவதுபோல; இதைத் தீட்டு என்று கூறுவது அறிவியல் உடலியல் பற்றிய  அறிவுக்குறைபாடே யாகும்.

எனவே, அந்தக் காரணத்தைக் காட்டுவது - வயதுள்ள பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல உரிமை  மறுக்கப்படுவது, மனித உரிமைக் கோணத்தில் மாபெரும் தவறான நடவடிக்கையே! இதை மாற்றிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியான தீர்வே!

செத்தது வைதீகம்!


கேரளத்தில் பகவதியம்மனுக்கு மாதவிடாய் வைத்தே திருவிழாவும், வழிபாடும் உண்டே! பின் இங்கு மட்டும் ஏன் தடை? வைதீகம் செத்தது! தீர்ப்புக்கு மீண்டும் பாராட்டு!

- கி. வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

28.9.2018

இந்நாள்... இந்நாள்...

1877 - ஈ.வெ. கிருஷ்ணசாமி பிறப்பு
1907 - பகத்சிங் பிறப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக