பக்கங்கள்

ஞாயிறு, 5 மே, 2019

பார்ப்பனப் பண்ணையம்!

உண்மையைச் சொல்லப்போனால் மக்கள் தொகையில் குறைந்த சதவீதத்தில் உள்ள உயர்சாதியினரின் ஆதிக்கம்தான் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எவ ரெஸ்ட் உயரத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக 17.1.2019 நாளிட்ட ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் வெளிவந்துள்ள புள்ளி விவரமே  போது மானதாகும்.
40 மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் 71 துறைகளில் பணியிடங் களில் வகுப்பு வாரியாக வஞ்சிக்கப்பட்ட நிலவரம்:
மத்திய பல்கலைக்கழகங்களில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27, தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கு 15, மலைவாழ் மக்களுக்கு 7.5 அளிக்கப்பட வேண்டிய நிலையில்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உதவிப் பேராசிரியர்கள் - 14.38, பேராசிரியர் - 0.0, அசோசியேட் பேராசிரியர்கள் - 0.0
பேராசிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 3.47, பழங்குடி வகுப்பினர் - 0.7
முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பேராசிரியர்கள் பணியிடங்களில் - 95.2, அசோசியேட் பேராசிரியர்கள் - 92.9, உதவிப் பேராசிரியர்கள் - 1.3
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (27 இருக்க வேண்டிய நிலையில்) மத்திய அரசின் 71  துறைகளில் - 14.94, ரயில்வே துறையில் - 8.05, மனிதவள மேம்பாட்டு துறையில் - 8.42, மத்திய அமைச்சரவை செயலகத்தில் - 9.26, நிதி ஆயோக்கில் - 7.56, குடியரசுத் தலைவர் செயலகத்தில் - 7.56, துணைக்குடியரசுத் தலைவர் செயலகத்தில் - 7.69, மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் - 11.43, சி.ஏ.ஜிஜி அமைப்பில் 8.24.
மத்திய பல்கலைக் கழகங்களிலும் சரி, மத்திய அரசின் துறைகளிலும் சரி, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் அளிக்கப்பட்ட இடஒதுக்கீடுகளும் நிரப்பப்படவில்லை.
இந்தப் புள்ளி விபரங்கள் எதைக் காட்டுகின்றன?
நூற்றுக்கு 3 சதவீதமாக மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் மத்திய பல்கலைக் கழகங் களில் 95 விழுக்காடு அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் உள்ளவர்களுக்குத்தான் ‘வீக்கர் செக்சன்’ என்று சொல்லி கல்வியி லும், வேலை வாய்ப்பிலும் மேலும் 10 விழுக் காடு இடஒதுக்கீடு அளிக்கபோகிறதாம் மத்திய பிஜேபி ஆட்சி.
(உயர்ஜாதி வகுப்பினருக்கு பொருளா தார  ரீதியிலான 10% இட ஒதுக்கீடுகூடாது - ஏன்? - கி.வீரமணி, பக்கம் 62)
தகவல்: க.பழனிசாமி
தெ.புதுப்பட்டி
-விடுதலை ஞாயிறு மலர்,20.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக