பக்கங்கள்

செவ்வாய், 12 ஜனவரி, 2021

டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)

டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)


இந்தியாவின் தலைநகரில் மண்டல்குழு அறிக்கையை அமலாக்கக் கோரி ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடும், சமூகநீதி கோரி எழுச்சிப் பேரணியும் 06.12.1985 அன்று டெல்லியில் பெரிய அளவில் நடைபெற்றன. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான அன்று டில்லியில் பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் சமுதாய மக்களுக்கு சமூகநீதி கேட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.

இடஒதுக்கீடு செயல் கமிட்டித் தலைவர் சந்திரஜித் யாதவ் உள்பட பல தாழ்த்தப்பட், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முன்னணித் தலைவர்கள இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தேசிய ஒன்றிணைந்த தூதுக் குழுவினர் உடன் சென்று குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். பேரணியின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உள்ளபடி விளக்கி குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி உரிமைகளை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஆணை இடவேண்டும் என்று நாங்கள் குடியரசுத் தலைவரிடம் வற்புறுத்தினோம்.

தூதுக்குழுவினரின் விளக்கங்களை நல்லவண்ணம் கேட்ட குடியரசுத் தலைவர் இப்பிரச்சினையில் கட்சி சார்பின்றி ஒருமித்து நின்று இதனை வற்புறுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

நான், குடியரசுத் தலைவர் அவர்களை தனிமையில் சந்தித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலினை வழங்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.


அவர், இடஒதுக்கீட்டுத் துறையில் தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களும் முன்னேற வேண்டும். இதில் தமிழ்நாடுதான் முன்னேறிய மாநிலம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

மறுநாள் 7.12.1985 அன்று டெல்லி விட்டல்பாய் மண்டபத்தில் பல  மாநில முக்கிய பிரதிநிதிகளைக் கொண்ட சமூகநீதிப் பணியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றினேன்.


- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

உண்மை இதழ்,1-15.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக