பக்கங்கள்

செவ்வாய், 11 மே, 2021

மைசூரில் சமூகநீதி எழுச்சி

உங்களுக்குத் தெரியுமா?                        1916ஆம் ஆண்டு(தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்பட்ட அதே ஆண்டு) மைசூர் நாட்டு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்             பட்ட மக்களைப் பற்றிய எச்.நரசிங்கராவ் (பிற்படுத்தப் பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் தோன்றிய பெருமகனார்)பேருரையாற்றினார்.பிற்படுத்தப்பட்ட       மக்களுக்குக் கல்வி வாய்ப்பு வேண்டும் எனவும்,கல்வியில் மேல் நிலயடைய அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் அதுவே அவர்கள் தன்னிறைவடையத் தேவை என்று முழங்கினார்.அவரைத் தொடர்ந்து        அங்கிருந்த மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களும் கல்வி வாய்ப்பில் சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் என  உரிமை முழக்கமிட்டனர்.         1900 ல் பிற்ப்படுத்தப்பட்ட ஒரு ஜாதியில் துவங்கிய போராட்டம் 1946ல்  35 சமூககங்கள்             இணைந்த பெரும் போராட்டமாக மாறிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?          (ஆதாரம்:பேரா.நிரமல்ராஜ்.the backward class movement in the princely state of Mysore .)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக