பக்கங்கள்

திங்கள், 24 அக்டோபர், 2022

சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

சமூகநீதி : சமூகநீதி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

டிசம்பர் 16-31,2021

கவிஞர் கலி.பூங்குன்றன்

1921 ஆம் ஆண்டு PUBLIC ORDINARY SERVICE G.O. NO. 613 Dated 16/9/1921) 12

1) பார்ப்பனர் அல்லாதார் 5 (44%)

2) பார்ப்பனர்கள் 2 (16%)

3) முஸ்லிம்கள் 2 (16%)

4) ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் 2 (16%)

5) தாழ்த்தப்பட்டவர்கள் 1 (12%)

மீண்டும் 15.2.1922 மற்றும் 2.2.1924 ஆகிய நாள்களில் இதே ஆணை தொடர்ந்து வெளியிடப்பட்டது. (பானகல் அரசர் என்ற இராமராய நிங்கர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தார்). 1924இல் சென்னை பல்கலைக்கழக மசோதாவைக் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று பார்ப்பனர் போட்டிருந்த சூழ்ச்சியை நொறுக்கினார்.

1928ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் பி.சுப்பராயன் தலைமையில் அமைந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் அந்த வகுப்புரிமை ஆணை COMMUNAL G.O முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

1948ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சராக இருந்த போது பழைய ஆணையைக் கொஞ்சம் திருத்தி அமைத்தார். பெற்ற இடங்கள் 14 என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பார்ப்பனர் அல்லாதாருக்கு 6 இடங்கள் (43%)

பிற்படுத்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (44%)

தாழ்த்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (14%)

ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓரிடம் (7%)

முஸ்லிம்களுக்கு ஓரிடம் (7%)

பார்ப்பனர்களுக்கு 2 இடம் (14%)

இவர்களைத் தெரிந்து கொள்வீர்!

மண்டல் குழுப் பரிந்துரை வெளியாவதற்கு முன், அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை எப்படியோ அறிந்து கொண்ட நிலையில்‘BURRY THE MANDAL REPORT’ என்று “இண்டியன் எக்ஸ்பிரஸ்’’ எழுதியது.

அன்றைய திராவிடர் கழக பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம்  ‘HURRY THE MANDAL REPORT’ என்று கூறினாரே பார்க்கலாம்!

மண்டல் குழு மீதான 9 நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் என்ன கூறினார்? இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டினால், அது ஜாதியத்துக்கு வழிவகுக்கும் என்றார்.

(49 சதவிகிதம் கொடுத்தால் ஜாதியத்தை வளர்க்காதோ?)

இன்று ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோர்:

35க்கு 24 அமைச்சகங்களில் அதிகாரிகள்

‘ஏ’ பிரிவு

(Group – A) –  17%

பி.பிரிவு – 14%

சி.பிரிவு – 11%

டி,பிரிவு – 10%

ஒன்றிய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர்:

37க்கு 25 துறைகளில்

‘ஏ’ பிரிவு – 14%

‘பி’ பிரிவு – 15%

‘சி’ பிரிவு – 17%

‘டி’ பிரிவு – 18%

குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் அலுவலகங்களில் 27% அமல்படுத்தப்-பட-வில்லை

(10.12.2017: ‘தி.இந்து’)

தகுதி – திறமை

சிறீ ஹரி கோட்டாவும் வாணியம்பாடியும்

இடஒதுக்கீடுதான் தகுதி திறமை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ற பல்லவியைப் பாடுவது பார்ப்பனர்களின் பிறவிக் குணம்.

11.2.1981 அன்று வாணியம்பாடியில் இரயில் விபத்தில் மாண்டவர்கள் 200 பேர்களுக்கு மேல். அப்பொழுது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு எழுதியது என்ன தெரியுமா?-

“VANIYAMBADI SMASH LINKED TO RESERVATION POLICY”

தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று எழுதியது.

சிறீஹரிகோட்டா இஸ்ரோவில் ஜி.எஸ்.எல்.வி _ எஃப் 2 ராக்கெட் 15.7.2006 மாலை 5:37 மணிக்கு ஏவப்பட்டது. 90 வினாடிகளில் ராக்கெட் கடலில் விழுந்தது. அதற்கான செலவு ரூ. 256 கோடி.

தகுதி – திறமைக்குப் பெயர் போனவர்கள் தானே அந்த ராக்கெட்டை ஏவினர்! அந்தத் துறையில் தான் இடஒதுக்கீடு கிடையாதே! அப்படி இருக்கும்போது ஏன் தோல்வி? – ரூ. 256 கோடி நட்டம்! இதுபற்றி ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’கள் ஒரு வரி கண்டித்து எழுதாதது ஏன்? இதற்கு பெயர்தான் பார்ப்பனத்தன்மை என்பது.

இரயில்வே அமைச்சராக, துணைப் பிரதமராகவெல்லாம் இருந்த பாபு ஜெகஜீவன்ராம்“CASTE CHALLENGE IN INDIA”

என்ற ஒரு நூலை எழுதினார். அதில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“WHEN A RAILWAY ACCIDENT TOOK PLACE, IT WAS A FASHION TO BLAME THE PROMOTED SCHEDULED CASTES AND SCHEDULED TRIBES EMPLOYEES OR OFFICIALS”.

“எப்பொழுதாவது இரயில் விபத்து ஏற்பட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு கொடுப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டுவது ஒரு வகை நாகரிகமாகப் போய்விட்டது என்று பாபு ஜெகஜீவன்ராம் எழுதியுள்ளார்.’’ஸீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக