பக்கங்கள்

புதன், 22 நவம்பர், 2023

இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் - அறிக்கை


* இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? 

* இடஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தானே இடஒதுக்கீடு என்றுள்ளது? 

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கிய 

உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் தானே ஓ.பி.சி.?

1

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்று வரையறை செய்துள்ள நிலையில், பொருளாதார அளவுகோலைத் திணித்து உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒன்றிய பிஜேபி அரசு - அதன் பிரதமர் சமூக நீதி - இடஒதுக்கீடு பற்றிப் பேசலாமா? ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் மூன்றே மூன்று பேர்தானே ஓ.பி.சி. என்று அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

 அவரது அறிக்கை வருமாறு:

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அய்தராபாத்தில் 7.11.2023 அன்று பேசிய பிரதமர் மோடி அவர்கள்,

"சமூகநீதி கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் தனது  அரசு (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் - பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தின்  தலைப்பு என்ன தெரியுமா? "பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம்" ("Self Respect to  BC's") என்பதாகும்.

இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்:

அவரது ஒன்றிய அமைச்சரவையில் 27 சதவிகித ஓ.பி.சி.  (OBC) அமைச்சர்கள், உள்ளனராம்.

2014இல் பிரதமர் பதவிக்கு அவர் வந்தபோது எத்தனை சதவிகிதம் இவர்கள் இருந்தனர் என்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க முடியாத இக்கட்டு நிலையே ஏற்படும்!

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களைப் பற்றி கூறியிருக்கும்போது, நமது பிரதமர் அவர்களை நோக்கி சில சந்தேகங்களை வைக்க ஒடுக்கப்பட்ட மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டின் அளவுகோலில் பொருளாதாரம் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)இன்படி OBC என்ற பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளப்படுத்தல் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் ("Sociallly and Educationally") என்பதுதானே - அதை மாற்றி, முந்தைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட இந்திரா சஹானி வழக்கில் பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு (முன்பு) 10% சதவிகிதம் செல்லாது என்பதை தலைகீழாக்கி அவசர அவசரமாக 103ஆவது அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து 4  நாட்களில் சரியான விவாதமே நாடாளுமன்றத்தில் நடத்தாமல், நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கி,  50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மேலே 10 சதவிகித இடஒதுக்கீடு - அதுவும் உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டுமே; எல்லா ஜாதி ஏழைகளும் இதன் கீழ் வர மாட்டார்கள் என்று அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே தகர்த்தெறிந்தீர்களே, மாநிலங்களின் ஒப்புதல்களைப் பெற்று நிறைவேற்றாது 'தானடித்த மூப்பாக'வேத்தானே நடத்தினர்.

2

உயர்ஜாதியினரில் சமூக கல்வி ரீதியாக 

பின் தங்கியோர் உண்டா?

உயர் ஜாதி ஏழைகள் - கல்வியிலும், சமூக ரீதியாகவும், பிற்படுத்தப்பட்டவர்களா? புள்ளி விவரக் கணக்கு ஏதேனும் நடத்தப்பட்டதா?

 ஒன்றிய அமைச்சரவையில்  பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்று இப்போது  தேர்தல் பிரச்சார சங்கீதம் பாடுகிறாரே - அந்தப்படி அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் 100க்கு 100 சதவிகிதம் உயர்ந்தவர்கள், தேவையற்ற அஜீரணக்காரர்கள் - பசியேப்பக்காரர்கள் அல்ல என்ற உண்மையை இவர் மறுக்க முடியுமா?

அவர்களிலும்கூட அன்றாட வருமான அளவு நாள் ஒன்றுக்கு 2222 ரூபாய் பெறுபவர்கள்  ஏழைகளா?

பதில் அளிக்கட்டுமே பிரதமரோ, அத்துறை அமைச்சரோ!

இதுவரை அவரது அதிகார வர்க்கத்தில் எத்தனைப் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்?

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்?

90 ஒன்றிய அரசு இலாக்காக்களில் செயலாளர்களில் வெறும் 3 பேர் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இளந் தலைவர் ராகுல் காந்தி விடுத்த கேள்விக்கணைக்கு அவர் பதில் அளிப்பாரா?

இவரது அரசு எத்தனை எஸ்.சி., எஸ்.டி., உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்த 9 ஆண்டு ஆட்சியில் நியமனம் செய்துள்ளது?

மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் களோ, பேராசிரியர்களோ எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இவர்களில் இவரது ஆட்சியில் நியமனம் பெற்றோர் புள்ளி விவரங்களைப் பார்த்தால் ஒடுக்கப்பட்டோர் உரிமை காற்றில் பறந்திருக்கும் நிலை தெளிவாகுமே! எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்? சமூகநீதி என்றால் இதுவா? பதில் கூறட்டும்! 

இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
10.11.2023

வியாழன், 16 நவம்பர், 2023

பதவி உயர்வில் இடஒதுக்கீடு


1

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான  தொல். திருமாவளவன் கடிதம் கொடுத்திருக்கிறார்.

ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன. மற்ற சமூகத்தினரை காட்டிலும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்வதே மிகவும் சவாலானதாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில். அவர்களுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு வெறும் உத்தரவாக மட்டுமே இருக்கின்றன.

இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளனர். இந்த கடிதத்தில்,

"பிஜேபி எம்.பியான கிரித் சோலங்கி தலைமையிலான எஸ்.சி. எஸ்.டி., நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த அய்ந் தாண்டுகளில் குரூப் A-யில் பதவி உயர்வு பெற்ற எஸ்.சி. எஸ்.டி., ஊழியர்களின் பிரதிநிதித்துவம், எஸ்.சி.க்கான 15%க்கும் எஸ்.டி.க்கு 7.5% க்கும் குறைவாகவே உள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ளது. இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவம் குரூப் 'சி' மற்றும் 'டி'-க்கும் காணப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்ய, எஸ்.சி. எஸ்.டி., பிரிவினருக்கான பின்னடைவு காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது; அதுமட்டுமின்றி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக நியமனங்களில் எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தர விட்டுள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன, இட ஒதுக்கீட் டைப் புறக்கணிக்கின்றன. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,   பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் சிவில் மேல்முறையீட்டு எண். 629 இல், "ஜர்னைல் சிங் & பிறர் Vs லச்மி நரேன் குப்தா & பிறர்" என்ற வழக்கில், பதவி உயர்வு அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை வழங்குவதற்காக எஸ்.சி.,  மற்றும் எஸ்.டி.களின் பிரதிநிதித்துவத்தை அளவிடுவதற்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. மதிப்பீட்டின் அலகு என்பது 'கேடர்' ஆகும், இது குரூப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

ஒவ்வொரு தனிப்பட்ட கேடருக்கும் கணக்கிடக்கூடிய தரவு தொகுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒன்றிய அரசின் கடமை. உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரவுகளை உடனடியாக சேகரிக்கவும் அதன் அடிப்படையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.யினருக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்கவேண்டும்" என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் எவற்றை குறிக்கின்றன எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது உச்சநீதிமன்றம் உள்பட அறிந்திருக்கும் செய்தியாகும். நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதனை எடுத்துக்காட்டி உள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்கள் நிர்வாகத்தில் உரிய இடம் பெற்று இருக்காவிட்டால் அது எப்படி உண்மையான ஜனநாயகமாகும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கு நிராகரிக்கப்பட்டால் நாட்டில் புரட்சி வெடிப்பது சாத்தியமாகும் என்று சொல்லி இருப்பதையும் ஒன்றிய அரசுக்கு இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம் - வலியுறுத்துகிறோம். 

1992 முதல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஒன்றிய அரசுத் துறைகளில் அளிக்கப்பட்டும் இதுவரை அவர்களுக்குரிய 27% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் - அரசு தரும் புள்ளி விவரங்களின்படி பார்த்தாலே இல்லை என்பது வெளிப்படை. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தவிர்க்கப்படவே முடியாத ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது சமூகநீதியிலும் ஜனநாயக ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும். 

இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு சமூக நீதிக்கு எதிரானது  என்று வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று. அதே நேரத்தில் உயர் ஜாதியினர் கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் அவர்களுக்கு கதவுகளை திறந்து விடும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது  சமூக அநீதியாகும். குறுக்கு வழியில் பாய்ந்து சமூக நீதியின் ஆணிவேரையே வெட்டுகின்ற அபாயகரமான செயலாகும். 

இந்த நிலையில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் கைகோத்து ஒன்றிணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதிக்கு எதிரான பிஜேபியை மிகப்பெரிய அளவில் வீழ்த்த வேண்டும் என்ற சபதத்தை - உறுதியை எடுத்துக் கொள்வார்களாக!

செவ்வாய், 14 நவம்பர், 2023

திராவிட மாடல்' ஆட்சியின் சமூகப் புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருகிறது! ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு நமது பாராட்டு!

 ராஜஸ்தான் மாநில முதலமைச்சருக்கு நமது பாராட்டு!

2

காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்கள் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தவர்; அதோடு சமூகநீதியில் ஆழ்ந்த நம் பிக்கை உடையவர். அவர், அனைத்து ஜாதியினரும் - ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தது பாராட்டத்தக்கது!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியைப் பின்பற்றி செயல்பட்டால், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் நிலைத்த சாதனையாக அதனை ஆக்கிட முடியும்! சமஸ்கிருதம் மட்டுமே தனித்த மொழியாக இருக்க முடியாது.

வடபுல ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெரியார் - அம்பேத்கர் விருப்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன! ‘திராவிட மாடல்' ஆட்சியின் சமூகப்புரட்சிக் கொள்கை எங்கெங்கும் அரங்கேறி வருவது மகிழ்ச்சிக்குரியது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை 

4.7.2023 

சனி, 11 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!''கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘ 

 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத்தான்!

‘இந்தியா’ கூட்டணி இந்தப் பிரச்சாரத்தை சிறப்பாக செய்கிறது; சரியான நேரத்தில் இந்தக் கருத்தரங்கத்தை கூட்டியிருக்கிறீர்கள்

9

சிதம்பரம், நவ.11 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாக செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம்தான் 
ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்!
பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு எதிராக அந்த நாளில் கொண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் இது.
ஜாதிவாரியாக 18 ஜாதிகள் அந்தத் திட்டத்திற்கு.
எனவே, ஜாதியை ஒரு பக்கத்தில் ஆணி அடிக்கிறீர்கள். படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
செருப்பு தைப்பது - ஷூ பாலிஸ் போடுவது - ஹிந்தி மொழியில் ஜாதிப் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்திற்காக குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறார்களாம்.
உடனே நம்மாட்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ஒரு லட்சம் ரூபாயா? இதைப் போய் வீரமணி தடுக்கிறார்களே - இந்தியா கூட்டணி தடுக்கிறதே'' என்று நினைக்கிறார்கள்.

சும்மா கொடுக்கவில்லை ஒரு லட்சம் ரூபாயை அவர்கள். கடனாகத்தான் கொடுக்கிறார்கள். 5 சதவிகித வட்டியில்.
ஆனால், 25 லட்சம் கோடி ரூபாயை வாராக் கடன் என்று சொல்லி,  தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்ற ஆட்சி - ஒன்றிய ஆட்சி.
இன்றைய இளைஞர்கள் 18 வயதிற்குமேல் கல் லூரிக்கு செல்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு பேர் வழக்குரைஞர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் வந்திருக்கிறார்கள். ஆனால், இதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே 18 வயதான வுடன், அவரவர் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் ‘‘ விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்.
நான் கேட்கிறேன், ‘‘விஷம் குடியுங்கள்; ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம்‘’ என்று சொன்னால், விஷம் சாப்பிட வருவார்களா? அதன்மேல் சர்க்கரைப் பூச்சு பூசியிருக் கிறார்கள்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று ஏன் சொல்கிறோம்?
இங்கே இருப்பவர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்கள். அதை அளவு பார்ப்பதற்காகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று சொல்கிறோமே தவிர, ஜாதியை நிலை நிறுத்துவதற்காக அல்ல.
ஆனால், இப்பொழுது அவர்கள் முற்போக்கு எண்ணம் உள்ளவர்கள் போன்றும், ஜாதிக்கு எதிரானவர்கள் போன்றும் காட்டிக் கொண் டிருக்கின்றார்கள்.
குலக்கல்வித் திட்டத்தை இராஜகோபாலாச்சாரியார் எப்படி கொண்டு வந்தாரோ - அரை நேரம் படிப்பு - மீதி அரை நேரம் அவரவர் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்பது குலக்கல்வித் திட்டம்.
ஒன்றிய அரசு திணிக்கும் விஸ்கவர்மா யோஜனா திட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
கைகளால் செருப்புத் தைக்கின்ற குலத்தொழிலை செய்யவேண்டும். அந்தத் தொழிலைப் பாரம்பரியமாக செய்யவேண்டும். ஷூ கம்பெனியில் வேலை செய்தால் கடனுதவி கிடையாது. நவீன முறையில் செய்தாலும் கடனுதவி கிடையாது. செருப்புத் தைக்கின்ற படத்தைப் போட்டு இருக்கிறார்களே, அவர்களுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள். 

70 ஆண்டுகளுக்கு முன்பு போராடி ஒழித்த திட்டத்தை இன்றைக்கு நவீன முறையில் திணிக்கிறார்கள்!
அதைப் பார்த்தால் நம்முடைய ரத்தம் கொதிக்கிறது. நம்முடைய தலைவர்கள் 70 ஆண்டு களுக்கு முன்பு போராடி ஒழித்த திட்டம் - அதனால்தான் இன்றைக்கு நவீன முறையில் திணிக்கிறார்கள். ஒரு காமராஜர் இல்லையானால், இன்றைக்கு இவ்வளவு பேர் பட்டதாரிகளாக வந்திருக்க முடியாது. பிள்ளைகளைப் படி, படி என்று சொன்னார்கள்.
ஆனால், படிக்காதே, படிக்காதே என்கிற கூட்டம் அன்றைக்குக் குலத்தொழிலை கொண்டு வந்தது. மீண்டும் இன்றைக்கு அந்தக் குலத் தொழி லையே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், என்ன அக்கிரமம் இது!
அந்த ஒரு லட்சம் ரூபாயை சாதாரணமாகக் கொடுத்துவிட மாட்டார்கள். செருப்பு தைக்கின்ற தொழி லைச் செய்யும் நம்முடைய சகோதரரை அழைத்து, ‘‘உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?’’ என்று கேட்டால்,
‘‘எனக்கு இரண்டு பெண்; இரண்டு ஆண்’’
‘‘சரி, அவர்களுக்கு 18 வயதானவுடன் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டால்,
‘‘அவர்கள் பிளஸ் டூ முடித்ததும், அவர்களைக் கல்லூரிக்கு அனுப்புவேன்’’ என்பார்.
இப்படி சொல்லாமல், 18 வயதானவுடன், என்னுடனேயே வந்து பழைய செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றா சொல்லுவார்?
அதற்காகத்தான் நீதிமன்றம் புள்ளி விவரக் கணக் கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறது. 
சரி, கணக்கெடுக்கட்டும்; நாங்கள் தயாராக இருக்கி றோம். இதில் என்ன சங்கடம் அவர்களுக்கு?

ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை 
நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காக!
இதுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாகச் செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம்.
அய்ந்து மாநில தேர்தல்களில் அவர்களுக்குத் தோல் வியே என்று பயந்துவிட்டார்கள். இதுவரையில், வாக்கு வங்கி மோடிக்குத்தான், மோடிக்குத்தான் என்று சொன்னார்கள்.
மிசோராமில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கே சென்றாரா, மோடி? இதுவரையில் பிரச்சாரம் செய்வதற்காக அங்கே போகவில்லையே!
தேர்தல் நடைபெற்ற கருநாடக மாநிலத்திற்குப் போனார், மற்ற மற்ற மாநிலங்களுக்குப் போனார். ஆனால், மிசோராமில் நடைபெறவிருக்கின்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு இதுவரை போகவில்லை பிரதமர் மோடி என்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது? அங்கே அவர் சென்றாலும், அவர்களால் வெற்றி பெற முடியாது என் பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார்கள். ஆகவேதான், பிரதமர் மோடி அங்கே போகவில்லை.
மணிப்பூர் எங்கே இருக்கிறது? அங்கே நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அங்கே சென்று, மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்.

இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு 
இதுவரை பிரதமர் செல்லவில்லையே!
ஆனால், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், அந்தக் கண்டத்திற்குப் போகிறார், இந்தக் கண்டத்திற்குப் போகிறார், எகிப்துக்குப் போகிறார், விருது வாங்குகிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு இதுவரை அவர் செல்லவில்லையே!
அதனால்தான், ‘இந்தியா’ கூட்டணி இந்தியாவைக் காப்பாற்றப் போகிறது. 
இப்பொழுது அமித்ஷா சொல்கிறார், ‘‘நாங்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விரோதிகள் அல்ல; அதை ஆதரிக்கிறோம்‘’ என்கிறார்.
இதுவரையில் அதனை எதிர்த்தவர்கள் அவர்கள்; இப்பொழுது இதை சொல்கிறார்கள் என்றால், நடை முறையில் அவர்களுக்குச் சிக்கல் இருப்பதால்தான் அவர்கள் ஆதரிப்பதுபோன்று கருத்துகளைச் சொல் கிறார்கள். ‘‘முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை’’ என்பார்கள்.
ஆகவேதான், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது தத்துவம், வரலாறு உடையது. 1941 ஆம் ஆண்டுவரையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அது இருந்தது.

ஜாதி என்பதை வேரடி, 
வேரடி மண்ணோடு அகற்றவேண்டும் என்றால்...
இங்கே இருப்பவர்கள் யாரும் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  ஜாதி என்பதை வேரடி, வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும் என்றால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்கிற வழி சிறப்பானதாகும்.
நம்முடைய பிள்ளைகள் படிக்கவேண்டும்; அப்படி படித்தவர்களுக்கு சமூகநீதிப்படி இடம் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும். யாரையும் நாம் வேற்றுமைப் படுத்தவில்லை என்று சொல்வதற்காகத்தான் இந்தக் கருத்துகள். ஜாதிவாரிக் கணக்கெடுப் பினுடைய தேவைகளை வலியுறுத்துவதற்காகத் தான் இந்தக் கருத்தரங்கங்கள்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகின்ற பொழுதெல்லாம் ஒரு புதிய கோஷத்தை எழுப்பு கிறார்கள். ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ என்று.
எப்பொழுதுமே அவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். ஆர்.எஸ்.எஸினுடயை தத்துவமே அதுதான்.
வள்ளலார் சொன்னார் பாருங்கள்,
‘‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை இருத்தல்வேண்டும்‘’ என்று.
‘‘ஒரே தேர்தல், ஒரே நாடு’’ என்று சொல்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தவறிப் போய் எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இதுதான் இந்த நாடு சந்திக்கின்ற கடைசித் தேர்தல் - ஒரே தேர்தல். இனிமேல் தேர்தலே கிடையாது'' என்பதுதான்.

‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்கின்றோம்!
ஆனால், அவர்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம் - ‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்லியிருக்கின்றோம். இதுதான் உங் களுக்கும் ஒரே தேர்தல். இனிமேல் உங்களுக்கு அந்த வாய்ப்பு என்பது கிடையாது. 
எங்களால்தான் ஒரே நாடு; உங்களால் ஒரே நாடு கிடையாது - மதத்தால், ஜாதியால், பதவி வெறியால் நீங்கள் பிரித்திருக்கிறீர்கள் என்பதால் உங்களால் ஒரே நாட்டை அமைக்க முடியாது.
எனவே, ஜாதி ஒழிப்பிற்கான ஓர் ஆயுதம்; அதற்கான ஒரு வாய்ப்பு; அதற்கான ஒரு தேவைதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதாகும்.
கணக்கெடுப்பதற்கே அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

உங்களோடு எப்பொழுதும்  கடைசிவரையில் இருப்போம் - இறுதி வெற்றி நமக்குத்தான்!
நான் உரையாற்றிவிட்டுச் செல்வதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், உங்களோடு எப்பொழுதும் கடைசி வரையில் இருப்பவன் நான். இந்த யுத்தத்தில் கடைசிவரையில் இருப்பவர்கள் நாங்கள். காரணம் என்னவென்றால், எங்களுக்கென்று எந்தப் பதவி நாற்காலியும் தேவையில்லை. யார் யாரை எந்தெந்த நாற்காலியில்  உட்கார வைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேலை. யார் உட்கார்ந்தால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதைத்தான் நாங்கள் பார்ப்போம்.
அதனால், மிக முக்கியமாக எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசிவரையில் உங்களோடு இருப்போம் - இறுதி வெற்றி நமக்குத்தான்.

போராடுவோம் - வெற்றி பெறுவோம் - 
புதிய சமூகத்தை அமைப்போம்!
அந்த இறுதி வெற்றியைக் காணுகின்ற வரையில் போராடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் - புதிய சமூகத்தை அமைப்போம்!
இன்னும் ஆறு மாதங்களில் ‘புதிய இந்தியா’வை உருவாக்குவோம். காவியற்ற இந்தியாவை உருவாக்கு வோம்!
பாண்டிச்சேரியில் வந்து நம்முடைய பிரதமர் மோடி சொன்னார், ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்‘’ என்று.
இதை எப்பொழுது அவர் சொன்னாரோ, அப்பொழு திருந்தே, ‘‘பா.ஜ.க. இல்லாத இந்தியாவை’’ இப்பொழுது பார்க்கப் போகிறீர்கள். அதற்கான அச்சார முயற்சி கள்தான் - அதற்கான  தொடக்க முயற்சிகள்தான் இதுபோன்று கருத்தரங்கங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி! 

வளர்க புதிய சமுதாயம் - 
வருக சமதர்ம சமுதாயம்!
வெற்றி நமதே!
போராடுவோம், வெற்றி நமதே என்று கூறி விடை பெறுகிறேன்.
வளர்க புதிய சமுதாயம்!
வருக சமதர்ம சமுதாயம்!
சமூகநீதி வெல்லட்டும்!
வெற்றி தொடரட்டும்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத் துரையாற்றினார்.

ஆரிய' விகடனின் 'சனாதன' அலறல்

பிற இதழிலிருந்து...'ஆரிய' விகடனின் 'சனாதன' அலறல்

‘திராவிட மாடலின் சமூக (அ)நீதி’  - என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர் களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள் நோக்கம் என்ன தெரியுமா?

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மவுனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூக நீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.

மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்பு ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?

பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு - தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதை மறைத்து - இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற் றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.

• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள் -  குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், ஜாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங் கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.

• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக் கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!

• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.

• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதிப் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என் றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.

உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘ஜாதியை ஆதரித்தும் - மற்ற ஜாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த ஜாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்த ஜாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல் லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.

• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.

• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.

• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.

• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.

• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர் களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவ லர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர் களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

• ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.

• தீண்டாமையைக் கடைப்பிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.

• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெ திரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.

• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

 • ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.

• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச் சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம் படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் படவுள்ளது.

• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண் டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக் கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.

- இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.

முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள் ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.

அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் - மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் - நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.

நன்றி:

 'முரசொலி' தலையங்கம் -11.11.2023 


வெள்ளி, 10 நவம்பர், 2023

பீகார் மாநிலத்தில் கல்வி வேலை வாய்ப்புகளில் 65 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல்


6
பாட்னா, நவ. 10-  அரசு வேலை மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் வகையில் பீகார் சட்டப் பேரவையில் (9.11.2023) இட ஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

பீகாரில் பட்டியலினத்தோர், பழங்குடியினத்தவர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு அளவை 65 சதவிகிதமாக உயர்த்த அம்மாநில அமைச்சரவை அண் மையில் ஒப்புதல் வழங்கிய நிலை யில், அம்மாநில சட்டப் பேரவை யில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, பீகார் சட்டப் பேரவையில், ஜாதிவாரி கணக் கெடுப்பு தொடர்பான அறிக்கை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டது. அதனை தாக்கல் செய்த முதலமைச்சர் நிதிஷ் குமார், இட ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அனுமதித்த 50 சதவீத இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பையும் தாண்டி 65 சதவீதம் இடஒதுக்கீடு தர இந்த மசோதா வழிவகை செய்கிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடும் இருப்பதால் பீகாரின் புதிய இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மொத் தம் 75 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் சென்றுவிடும்.

புதிய சட்டத்தின் கீழ் இட ஒதுக்கீடு பிரேக் அப்: > பட்டிய லினத்தோர்: 20 சதவீதம் > பழங் குடியினர்: 2 சதவீதம் > இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 43 சதவீதம் என்ற வீதத்தில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். 

தற்போதைய சூழலில் பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதம், ஓபிசிக்களுக்கு 12 சத வீதம், பட்டியலினத்தோருக்கு 16 சதவீதம் மற்றும் பழங்குடியினத் தவருக்கு 1 சதவீதம், பிற்படுத்தப் பட்ட வகுப்பின் மகளிருக்கு 3 சதவீதம் என்று இடஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக எழுப்பிய குரல்

இந்த மசோதா சட்டப் பேரவை யில் தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதாவில் 10 சதவீதம் பொருளா தார ரீதியாக பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு பற்றி ஏதும் குறிப்பிடப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த இடஒதுக்கீட்டில் எந்த ஒரு குழப்பமும் வந்துவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!'' கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘

 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்!

சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான்!

சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்!

15
சிதம்பரம், நவ.10 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்; சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான். சமூகநீதியைக் நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, 
நெருங்கினால் தீட்டு!

கீழ்ஜாதிக்காரர்களாக நம்மை ஆக்கியதோடு மட்டுமல்லாமல் - தொடக்கூடாத ஜாதி, பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நெருங்கினால் தீட்டு.
இதற்கு என்ன அர்த்தம்?
இது வெளிநாட்டுக்காரர்களுக்குப் புரியவில்லை. ‘‘தொடக்கூடாது என்று உங்கள் நாட்டில் சொல்கிறார்களே - எங்கள் நாட்டில்கூட கருப்பர்கள் - வெள்ளையர்கள் என்ற போராட்டத்தைத்தான் நடத்திக் கொண்டிருக் கின்றோம்'' என்றார்கள்.அமெரிக்காவில் ஒருமுறை ஒருவர் கேள்வி கேட்டார் -
வாட் இஸ் காஸ்ட்? என்று கேட்டபொழுது, அதுகுறித்த விளக்கத்தைச் சொன்னோம்.

மின்சாரத்தைத் தொட்டால்தான் 
‘ஷாக்' அடிக்கும்!
நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, தொட்டால் ஆபத்து எதில் இருக்கும் என்றால், மின்சாரத்தைத் தொட்டால்தான் ‘ஷாக்' அடிக்கும். ஆனால், உங்கள் நாட்டில் சிலர் பிற மனிதர்களைப் பார்த்தாலே தீட்டு என்று சொல்கிறார்களே, என்று ஆச்சரியப்பட்டார்.
நம்முடைய நாட்டில்தான் காலங்காலமாக படிக்கக் கூடாத சமுதாயமாக நம்மாட்களை வைத்திருந்தார்கள்.
அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியாரைப் பின்பற்றி ஒரு கருத்தை சொன்னார்.ஒரு நாட்டில், படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு மதம் - ஒரு ஸநாதனம் - ஒரு தத்துவம்.எல்லோருக்கும் படிப்பைக் கொடுக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
ஆனால், நீங்கள் படிக்கக் கூடாது என்று சொல்வதற்கு ஒரு தத்துவம் இருக்கிறது. எதைக் கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரனுக்கு அறிவை, படிப்பை கொடுக்கக் கூடாது. மீறி படித்தால், அவர்களின் காதில் ஈயத்தைச் காய்ச்சி ஊற்றவேண்டும்; அப்படியும் மீறி படித்தால், அவர்களின் நாக்கை அறுக்கவேண்டும்.

சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் 
சமூக நீதி வேண்டும் என்ற குரல்!
உலகத்தில் வேறு எங்காவது இப்படி சொல்கிற மதம் உண்டா? மனித சமூகத்தில் உண்டா? ஆகவேதான், இந்த சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்.
அந்த சமூகநீதியை எப்படிக் கொடுப்பது? சமூகநீதிக்கு ஒரே விளக்கம் - அனைவருக்கும் அனைத்தும்!
உயர்ஜாதிக்காரர்களை வஞ்சிக்கவேண்டும் என்று நாம் சொல்லவில்லை.
நீங்கள் 3 சதவிகிதம் இருக்கிறீர்களா? நீங்கள் 3 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.30 சதவிகிதம் இருக்கிறார்களா? அவர்கள் 30 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளட்டும்.

சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’ என்பதுதான்!
அவரவர்களுக்கு அந்த வாய்ப்புகள் - இதுதான் சமூகநீதி. சமூகநீதி என்றால், வேப்பங்காய் அல்ல. சமூகநீதி என்றால், யாரையும் பிடித்து கடலில் போடுவது இல்லை. சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்!'' என்பதுதான்.
இதை எப்படி கண்டுபிடிப்பது? சமூகநீதியைக் நிறைவேற்றுவதற்காகத்தான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்.உடலில் நோய் வந்தால், டாக்டரிடம் சென்று, ‘‘எனக்கு இதுபோன்ற பிரச்சினை'' என்று சொல்லும்பொழுது அவர் என்ன சொல்லுவார்? 

ஸ்கேன்தான் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு!’’
டாக்டர், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று பார்ப்பதற்கு இப்பொழுது நவீன முறைகள் இருக்கின்றன. ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று சொல்வார்.
இப்பொழுது டாக்டர்கள், ‘‘ஸ்கேன் வேண்டாம்'' என்று சொன்னாலும்கூட, நோயாளி சொல்கிறார், ‘‘எதற்கும் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிடலாமா?'' என்று. இது உங்களுக்கெல்லாம் இயல்பாகப் புரிகின்ற விஷயம்.
அந்த ஸ்கேன்தான் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு!'' என்பதாகும்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது - என்ன நிலவரம்? யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள்? என்ன சூழ்நிலை? இதைச் சொல்வதுதானே!
உடனே அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்கிறார்கள்.

கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரம் இருக்கிறதா? என்று நீதிமன்றமும் கேட்கிறதே!
சமூகநீதி வேண்டும் என்று சொல்கிறவர்கள் அனைவரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறோம்.
நாம் மட்டும் கேட்கவில்லை, சமூகநீதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே மேலே போய் உட்கார்ந் திருக்கிறார்களே - உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் - அங்கே போனவுடன், நீதிபதி மிகவும் வசதியாக ஒரு கேள்வியை வைத்திருக்கிறார்.
‘‘கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இருக்கிறதா?'' என்கிறார்.
இல்லை என்றால், அந்த சட்டம் செல்லாது; கணக் கெடுத்துவிட்டு வாருங்கள் என்று நீதிமன்றம் கட்டளை யிடுகிறது. ஆனால், கணக்கெடுப்பை உயர்ஜாதி தடுக்கிறது; மனுதர்மக் கூட்டம் தடுக்கிறது.
இப்பொழுது மனுதர்மத்திற்கும் - மனித நேயத்திற்கும் தான் போராட்டம்.

முதல் வழிகாட்டியாக இந்தியாவில் முடிவெடுத்தவர் இளந்தலைவர் 
ராகுல் காந்தி
ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முதல் வழிகாட்டியாக இந்தியாவில் முடிவெடுத்த இளந்தலைவர் - இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர்தான் - எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய ராகுல்காந்தி அவர்கள்தான்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தீர்மானமாக அதை நிறைவேற்றியது.  அதன் பிறகு கருத்தரங்கம். தமிழ்நாடு வழக்கம்போல, எல்லாவற்றிற்கும் வழிகாட்டும்.நம்முடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யா கே.எஸ்.அழகிரிதான் அய்தராபாத்திலிருந்து வந்தவுடன், சென்னையில் கருத்தரங்கம் நடத்தினார்.
இன்று கடலூர் வழிகாட்டுகிறது - நிச்சயமாக கடலூர் வழிகாட்டும் - அதிலொன்றும் சந்தேகமேயில்லை. சிதம்பரத்தில்  இன்று கருத்தரங்கம் நடைபெறுகிறது.
ஏனென்றால், பிறவியிலேயே மேலே இருந்து வந்து, ராஜாக்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் எங்கள் கைகளில்தான் நாங்கள் உள்ளேயே விடமாட்டோம் என்று சொன்னார்கள். 
ஆகவே அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று போராட்டம் ஆரம்பித்தது.

ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று வேடம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்
ஜாதியை நினைவூட்டலாமா? ஜாதிக் கொடுமையல்லவா இது என்று கேட்கிறார்கள்.
யார் கேட்கிறார்கள் என்றால், யார் ஜாதியைப் பிடித்துக்கொண்டு, அந்த முத்திரையோடு வாழ் கிறார்களோ, யார் ஜாதி சின்னத்தைப் போட்டுக் கொள்கிறார்களோ - அவர்கள்தான் கேட்கிறார்கள்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று ஏதோ அவர்கள் பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று வேடம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
ஆனால், உண்மையாகவே ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறவர்கள், இந்த மேடையில் இருக்கின்ற அத்துணை பேரும்தான்.
இங்கே இருப்பவர்கள் யாரும் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் அல்ல.

அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக்கூட விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக்கூட 3, 4 நாள்களிலே விவாதம் ஏதும் நடத்தப்படாமல் நிறைவேற்றுகிறார்கள்.

‘‘ஒரே ஜாதி’’ என்று சொல்லட்டுமே!
நாளைக்கே ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வரட்டுமே - இனிமேல் ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு - ஒரே தேர்தல் - ஒரே மொழி - ஒரே மதம் இந்து மதம் - ஒரே கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம் - எல்லாவற்றிற்கும் ஒரே, ஒரே ஒரே என்று சொல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘ஒரே ஜாதி'' என்று சொல்லட்டுமே!
அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோமே - மனிதர்களில் பேதமே இருக்காது அல்லவா!
ஒரே ஜாதி என்று சொல்லாமல் - ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி பாதுகாக்கிறார்கள்?
நாம், சமத்துவ நாள் கொண்டாடுகிறோம், சமூகநீதி நாள் கொண்டாடுகிறோம் தமிழ்நாட்டில். அதற்கு உத்தரவு போடுகிறது திராவிட மாடல் ஆட்சி.

தென்மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு 
கதவு சாத்தப்பட்டுவிட்டது!
ஆனால், இன்றைக்குத் தங்களுடைய ஆட்சி முடியப் போகிறது என்று சொல்லக்கூடிய கட்டத்தில் - எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நண்பர்களே, ஏற்கெனவே அவர்களுக்குத் தென்மாநிலங்களில் கதவு சாத்தப்பட்டு விட்டது. இங்கே பி.ஜே.பி. தலைகீழாக நின்றாலும்கூட, இனிமேல் கதவைத் திறக்க முடியாது.
நடைபெறவிருக்கின்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் வருகிறபொழுது, வடநாட்டிலும் பி.ஜே.பி.,க்குக் கதவு சாத்தப்பட்டது என்கிற நல்ல செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.
ஏனென்றால், மக்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விட்டார்கள். சில பேரை சில காலம் ஏமாற்றலாம்; பலபேரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும், எல்லா காலத்திலேயும் ஏமாற்ற முடியாது என்பது பொதுவிதி!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறீர்களே என்று கேட்பவர்கள், அதே செப்டம்பர் 17 இல் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
இதோ பாருங்கள், ஆதாரத்தோடு உங்களுக்குச் சொல்கிறேன்.
ஒன்றிய அரசு ‘‘விஸ்வகர்மா யோஜனா'' என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அந்தத் திட்டத்தில், நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், நம்முடைய சகோதரர்கள் செருப்புத் தைக்கிறவர்கள்; துணி வெளுப்பவர்கள்; சவரம் செய்பவர்கள்; மலம் எடுக்கும் தொழில் செய்பவர்கள். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள் பாருங்கள் பரம்பரையாக - அந்த பரம்பரை ஜாதித் தொழிலையே அவர்கள்  செய்ய வேண்டுமாம். 

2028 ஆம் ஆண்டுவரையில் 
நடைமுறையில் இருக்குமாம்!
அந்த ஜாதி இழிவு அவர்களை விட்டு நகர்ந்துவிடக் கூடாது; ஜாதி ஒழிந்துவிடக் கூடாது. அதற்காக ஒரு திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டம். இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டுவரையில் நடைமுறையில் இருக்குமாம். அந்தத் திட்டத்தை படங்களுடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று நாம் சொன்னால், நீதிமன்றம் கேட்கிறது; மற்றவர்கள் கேட்கிறார்கள் - ஆகவே, அது எங்களுக்குத் தேவை என்று நாம் சொல்கிறோம். 

ஜாதி ஒழிப்புக்காரர்கள் நாங்கள் எல்லோரும். ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காகத்தான், ஜாதி வாரிக் கணக்கெடுப்புத் தேவை என்கிறோம்.
அம்மைக் கிருமியை உள்ளே விட்டு, அம்மை நோயை ஒழிக்கின்றோம்.
‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டத்தில் 18 ஜாதிகளின் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்.

கல்வி வள்ளல் காமராஜரால் ஒழித்துக் கட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்
ஆச்சாரியாரால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் - கல்வி வள்ளல் காமராஜரால் ஒழித்துக் கட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்.
காமராஜர் என்ற மாமனிதர், தந்தை பெரியாருடைய அந்தப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்து - அவர் முதலமைச்சராக வந்தவுடன், முதலில் போட்ட கையெழுத்து  ‘‘இனிமேல் குலக்கல்வித் திட்டத்திற்கு இடமில்லை'' என்பதற்காகத்தான்.

குலக்கல்வியைக் கொண்டு வந்த ஆச்சாரியாருடைய ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்குமேல் நீடிக்கவில்லை.
70 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. 70 வயதிற்கு மேலாக இருக்கின்றவர்களுக்குத்தான் அந்தப் பழைய வரலாறு தெரியும். 70 வயதிற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.என்றைக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி!

ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம்தான் ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்!
பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு எதிராக அந்த நாளில் கொண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் இது.
ஜாதிவாரியாக 18 ஜாதிகள் அந்தத் திட்டத்திற்கு.
எனவே, ஜாதியை ஒரு பக்கத்தில் ஆணி அடிக்கிறீர்கள். படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
செருப்பு தைப்பது - ஷூ பாலிஸ் போடுவது - ஹிந்தி மொழியில் ஜாதிப் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
(தொடரும்)