பக்கங்கள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

இடஒதுக்கீட்டை சென்னை அய்.அய்.டி.யில் பின்பற்றாமல் பணி நியமனம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை



சென்னை, ஏப்.25 சென்னை ஆழ் வார்பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை அய்.அய்.டி. இயக் குநராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்திநியமனம்செய்யப் பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இவரது நியமனம் அய்.அய்.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு மேற் கொள்ளவில்லை என்றும் குற் றம் சுமத்தியிருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முரளிதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அய்.அய்.டி. இயக்குநராக பாஸ்கர் ராம மூர்த்தியை நியமித்தது செல் லாது என்று நான் தொடர்ந்த வழக்குநிலுவையில் இருக்கும் போதே,அய்.அய்.டி.நிறுவனத் தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பியுள் ளார். தற்போதும் பலரை நிய மிக்கிறார்.

இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், இந்தபணியிடங்கள்நிரப்பப் படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்குபொது விளம்பரம் எதுவும்கொடுக்காமல், இட ஒதுக்கீட்டு முறையைபின் பற்றாமல், ஆட்களை நியமித் துள்ளார். எனவே, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந் துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், அய்.அய்.டி. நிறுவனத்தில் பேராசிரியர்உள்ளிட்டபதவி களுக்குநடைபெற்றநியமனத் தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.அய். விசார ணைக்கு உத்தரவிட வேண் டும்.இடஒதுக்கீட்டுமுறையை பின்பற்றாமல், மேற்கொண் டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம். தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்தஇடைக்காலஉத் தரவில், பேராசிரியர் பணியிடங் களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றி நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், பணி நியமனம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

ஒருவேளை பணி நிய மனம்,இடஒதுக்கீட்டு கொள் கையை பின்பற்றாமல் மேற் கொள்ளப்பட்டால், கடும் நட வடிக்கையை எதிர்கொள்ளநேரி டும். விசாரணையை ஜூன் 6- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று கூறியுள்ளனர்
- விடுதலை நாளேடு, 27.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக