பக்கங்கள்

வெள்ளி, 6 மார்ச், 2020

சமூகம் : தேசிய அவமானம் (தீண்டாமை)


தீண்டாமைக்கு எதிராக  போராடி, அரசியலமைப்பும் 1950இல் அதைத் தடை செய்தது. ஆனால் தேசிய அவமானம் என் றும், பாவச்செயல் என்றும் ஏடுகளில் குறிப் பிடப்பட்டாலும் ஜாதித்தீண்டாமை இந் தியாவின் பல பகுதிகளிலும் இன்னும் பீடித் திருக்கிறது.

வட இந்தியாவில் 49 விழுக்காடு குடும் பங்கள் ஜாதித் தீண்டாமையை இன்னமும் கடைப்பிடிப்பதாக சமீபத்திய 'எக்கனாமிக் & பொலிடிகல் வீக்லி' இதழின் ஆய்வு கூறி யிருக்கிறது.

ஆனால் தென்னிந்தியாவில் 20 விழுக் காடு குடும்பத்தினர் மட்டுமே தீண்டா மையை கடைப்பிடிப்பதாக ஆய்வின் ஆசிரியர்களான அமித் தோரத்  மற்றும் ஓம்கர் ஜோஷி  கூறுகின்றனர். இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பு 2012அய் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய் வினை அவர்கள் மேற் கொண்டுள்ளனர். கல்வியின் நிலை உயர உயர தீண்டாமை யின் அளவு குறைவதாக ஆய்வு கூறுகிறது. இதற்கு இடஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட அள விற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது. ஆனால் 1990-களில் தனியார்மய கொள் கைகளை புகுத்திய பிறகு கல்விக்கான அரசு கட்டமைப்பு சிதைந்து வருவதால் இதில் ஒரு பெரும் தேக்கம் இருப்பதை பார்க்க முடிவதாக தெரிவிக்கின்றனர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் அதிக அளவில் அதாவது 35 விழுக்காட்டு சமண குடும்பங்கள் தீண்டாமையை கடைப்பிடிக் கின்றன. அடுத்ததாக 30 விழுக்காடு இந் துக்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கின் றனர். புத்த சமயத்தைப் பின்பற்றும் 1 விழுக் காடு குடும்பங்கள் மட்டுமே தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாக இந்த ஆய்வு கூறு கிறது.

- விடுதலை ஞாயிறுமலர் 22 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக