பக்கங்கள்

புதன், 18 ஜனவரி, 2017

ஆந்திரப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு

அய்தராபாத், செப்.7_ நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு அளவு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய அரசியல் சாசனத் தில் வகை செய்யுமாறு மத்திய அரசை வலி யுறுத்தி, ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையில் சனிக் கிழமை, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

ஆந்திரப்பிரதேச சட் டப்பேரவையில் பட் ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான சனிக் கிழமையன்று அந்த மாநில முதல்வர் என்.சந் திரபாபு நாயுடு, இது தொடர்பான தீர்மா னத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம்

தீர்மானத்தில் கூறப் பட்டிருந்ததாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியிலான அங்கீகாரம் அளிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் எண் ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும். பிற்படுத்தப் பட்டோர் நலனுக்கென தனி அமைச்சக்கத்தை உருவாக்கவேண்டும். பிற் படுத்தப்பட்டோர் மேம் பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கென பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25 சதவிகித நிதியாதாரத்தை ஒதுக்கவேண்டும்.

மேலும், அரசுத்துறை ஊழியர்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வில் இட ஒதுக் கீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கைவினைஞர்களின் நலனுக்கான ஆதாரனா திட் டம் ஆந்திரத்தில் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அந்தத் தீர்மானத் தில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந் தத் தீர்மானம் ஒருமன தாக நிறைவேற்றப்பட டது.

இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவரான ஒய்.எஸ்.ஆர். கட்சித் தலைவர் ஜெகன்மோகன் எழுந்து, ஆளும் தெலுங்கு தேசக் கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

தீர்மானம் நிறைவேறிய பிறகு...

அப்போது, பேரவை யில் தீர்மானம் நிறை வேறிய பிறகு அதுகுறித்து பேசுவது மரபல்ல. பேரவை மரபுகளை பின் பற்றுவது குறித்து மாநில அரசு சார்பில் நடத்தப் பட்ட பயிலரங்கில்கூட ஜெகன்மோகன் கலந்து கொள்ளவில்லை என்று பேரவை விவகாரத் துறை அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு கூறினார்.

ஒத்தி வைப்பு

இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் கோடேலா சிவப்பிரசாத், இந்தத் தீர்மானம் குறித்து பேசுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்குப் போதிய வாய்ப்பு வழங் கப்பட்டுவிட்டது என்று கூறினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் பேர வைக் கூட்டத் தொடரை அவர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

,விடுதலை,7.9.14

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக