பக்கங்கள்

திங்கள், 3 செப்டம்பர், 2018

வேலை வாய்ப்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் சலுகை பெற முடியாது உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

டில்லி, ஆக.31 ‘‘ஒரு மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி என்று வகைப்படுத்தப் பட்டவர், வேறு மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியாது’’ என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக உள்ளவர், வேறு மாநிலத்தில் அவருடைய ஜாதி எஸ்சி, எஸ்டி.யாக அறிவிக்கப்படாத நிலையில் அந்த மாநிலத்தில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெற முடியுமா என்று கேள்வி எழுப்பி உச்ச நீதி மன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மேலும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பி னர் டெல்லியில் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோர முடியுமா என்று கேள்வியும் எழுப் பப்பட்டிருந்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆர்.பானுமதி, எம்.சந்தான கவுடர், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

மனுக்களை விசாரித்து நீதிபதிகள் நேற்று ஒருமனதாக அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி வகுப்பினர் வேறு மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடி யாது. வேறு மாநிலத்தில் அவருடைய ஜாதி எஸ்சி, எஸ்டி பட்டியலில் அறிவிக் கப்படாமல் இருந்தால், இடஒதுக்கீடு சலுகையைப் பெற முடியாது

மேலும், ஒரு மாநிலத்தில் எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பினராக அறிவிக் கப்பட்டவர் என்பதாலேயே, அதே அந்தஸ்தை அவர் வேறு மாநிலத்தில் பெற முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

டில்லியைப் பொறுத்தவரையில் எஸ்சி, எஸ்டி விஷயத்தில் மத்திய இட ஒதுக்கீடு கொள்கை இங்கு பொருந்தும் என்ற 4 நீதிபதிகள் கூறினர். இந்தக் கருத்தை நீதிபதி பானுமதி ஏற்கவில்லை. எனினும், 4:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் டில்லியில் இடஒதுக்கீடு குறித்த விஷயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 31.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக