பக்கங்கள்

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

'கிரிமிலேயர்' முறையை முற்றிலும் நீக்கிடவும் பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரியும் ஆர்ப்பாட்டம்



சென்னை, செப்.14 அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலசங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் 11.9.2018 அன்று பகல் 11.30 மணி அளவில் பிற்படுத்தப் பட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி சென்னை பெரம் பூரில் உள்ள அய்.சி.எப். நிறு வன பொதுமேலாளர் அலுவல கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, இக் கூட்டமைப்பின் செயல் தலை வர் ஜே.பார்த்தசாரதி தலைமை வகித் திட, பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி போராட்டத் திற்கான கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். அய்.சி.எப். பிற்படுத் தப்பட்டோர் நல சங்கத்தின் தலைவர் கே.ராமமூர்த்தி வர வேற் புரையும், அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அன்பு குமார் நன்றியுரையும் நிகழ்த் தினார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மத்திய அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளா வன:

1. மத்திய பணியாளர் துறை யின் 6.10.2017 தேதியிட்ட ஆணை, பொதுத் துறை நிறு வனம், வங்கி, காப்பீட்டுக் கழகம் மற்றும் தனியார் நிறு வனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்டோர் அனை வரையும் கிரிமிலேயர் என்று பாகுபாடு செய்து, 27 விழுக் காடு இட ஒதுக்கீட்டினை பெற தகுதியற்றவர்கள் என அறிவித்துள்ளது. சமூக அநீதியான இந்த ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

2. பிற்படுத்தப்பட்டோரை மட்டும் கிரிமிலேயர் எனும் பொருளாதாரக் கோட்பாட்டில் பிரித்திடும் முறையை முற்றி லுமாக நீக்கிடவும், இதற்குரிய அரசியல் சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற் கொள்ளவும் வேண்டும்.

3. மத்திய அரசில் பிற் படுத்தப்பட்டோருக்கென தனி யாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

4. பதவி உயர்வில் பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அய்.சி.எப்., ஏர் இந்தியா, பால்மர் லாரி, பாங்க் ஆப் பரோடா, மத்திய கணக் கெடுப்புத்துறை, சென்னை பெட்ரோலியக் கழகம், பணி யாளர் காப்பீட்டுக் கழகம், அய்.அய்.டி, சென்னை உரத் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி கழகம், நியூ இந்தியா காப்பீட்டுக் கழகம், சேலம் உருக்காலை நிறுவனம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஆவடி கனரக தொழிற்சாலை  ஆகிய நிறுவன பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகள் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.

- விடுதலை நாளேடு, 14.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக