பக்கங்கள்

புதன், 19 டிசம்பர், 2018

தெலங்கானாவில் இடஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு

அய்தராபாத், டிச. 17- தெலங்கா னாவில் உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினத்தவர் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யும் அவசர சட்டத்தை அந்த மாநில அரசு பிறப்பித்து உள்ளது.

தெலங்கானா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பை 67 சதவீதமாக உயர்த்த அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் சட்டமியற் றப்பட்டது. இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு 34 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க அச்சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசா ரித்த அய்தராபாத் உயர்நீதிமன் றம், எஸ்சி, எஸ்டி, இதர பிற்ப டுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தெலங் கானா அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த உச்சநீதிமன்றம், தெலங் கானா அரசின் மனுவை தள்ளு படி செய்தது.

இதனிடையே, உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி, ஜன வரி 11-ஆம் தேதிக்குள் உள் ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீ தத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை, தெலங்கானா அரசு பிறப்பித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 17.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக