பக்கங்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

உ.பி. சாமியார் ஆட்சி இதுதான்! தாழ்த்தப்பட்ட மாணவிமீது பெட்ரோல் வீச்சு

ஆக்ரா, டிச.21 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகோலா ஒன்றியப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.  அம்மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகையில், அவருடைய சைக்கிளை  பைக்கில்  பின்தொடர்ந்த சிலர் திடீரென அவள் மீது  பெட்ரோலை வீசி தீவைத்துள்ளனர்.

கடுமையான தீக்காயம் அடைந்த அம்மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து துடித்தாள்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவியால் காவல்துறையினருக்கு 100 எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கப் பட்டபின்னர் மாணவி மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். தற்பொழுது சப்தர்ஜங் மருத் துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மால்புரா காவல்நிலையத்தில் வழக் குப் பதிவு செய்யப்பட்டது. அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தாக்குதலுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பட்நாயக் கூறியதாவது:

“பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற் றோரிடம் விசாரணை செய்தபோதிலும் வழக்கில் முன்னேறிச் செல்ல முடிய வில்லை. தாக்குதலின் பின்னணியில் உள்ள  நோக்கத்தை தெளிவாக அறிய முடியவில்லை. தனிப்பட்ட வகையில் இங்கிவருகின்ற பல்வேறு குழுக்கள் பல்வேறு கோணங்களில் இப்பிரச்சி னையில் விசாரணை செய்து வருகின் றனர்’’ என்றார்.

பதேபுர்சிக்ரி தொகுதியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சீமா உபாத் யாயா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கலிச்சரம் சுமன் மற்றும் பீம் ஆர்மி அமைப்பினரும் பாதிக்கப்பட்ட மாண வியின் கிராமத்துக்குச் சென்று அவள் உறவினர்களை நேரில் சந்தித்து விசா ரணை செய்து வருகின்றனர்.  பீம் ஆர்மி அமைப்பினர் காவல்துறையினரி டமும், இப்பிரச்சினைகுறித்து விசாரித் துள்ளனர்.

ஆக்ரா பகுதியின் பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் அனில் கர்தம் கூறியதாவது:

“குற்றமிழைத்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்தி வரு கிறோம். இல்லையென்றால் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித் துள்ளோம்.  அந்த பெண்ணுக்கோ, அவள் குடும்பத்தினருக்கோ எதிரிகள் என்று எவரும் கிடையாது. இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என் கிற நோக்கத்திலேயே இதுபோன்ற சதிகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது’’ என்றார்.

உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதல்வர் அகிலேஷ் டிவிட்டர் சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்பிரச்சினை குறித்து தம்முடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர் டிவிட்டர் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:

“முதலாவது ஒரு பெண்மீதான பாலியல் வன்முறை முயற்சி, இரண் டாவது மாணவிமீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு ஆகிய இந்த இரண்டு நிகழ் வுகள் வாயிலாக எந்த அளவுக்கு சமூக விரோதிகள் துணிச்சல் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது. சமூக விரோதி களே இதைச் செய்கிறார்கள். அவர் களுக்கு அரசின்மீது அச்சமில்லை அல்லது அரசிடமிருந்து பாதுகாப்பை அவர்கள் பெறுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் தாக்கப்படுவது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்படுவது, அவற்றுக்கெல்லாம் ஆளும் பாஜக அரசு துணைநிற்பது, குற்றமிழைத்தவர்களை காப்பது போன்ற செயல்களால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
- விடுதலை நாளேடு, 21.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக