பக்கங்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

உ.பி. சாமியார் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சி!

எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்புகின்றன


லக்னோ, டிச.21 உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பணிகளில்  பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் நிலை குறித்து ஆராய, அம்மாநில அரசு நான்கு பேர் கொண்ட சமூக நீதிக் குழுவை அமைத்தது. பணி ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி ராகவேந்திரகுமார் தலைமை யில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆராய சமூகநீதிக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை உத்தரப்பிரதேச மாநில அரசிடம் கடந்த அக்டோபரில் அளிக்கப்பட்டது. அவ்வறிக்கை முறையாக வெளியிடப்படவில்லை. அம்மாநில சட்டமன்றத்திலும் வைக்கப்படவில்லை. இந் நிலையில் அக்குழுவின் அறிக்கை பரிந்துரைகள் கசிந்துள்ளன. ஆனால், இப்பிரச்சினைகுறித்து உத்தரப்பிர தேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் கருத்து எதுவும் வெளியிடாமல் அமைதி காத்து வருவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான் மையராக உள்ள வகுப்பினரான யாதவர்கள், குர்மிகள் ஆகியோருக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்கு குழு அறிக்கையில் பரிந்துரைத் துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் உத்தி


எதிர்வரும் 2019 தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணியை எதிர்கொள்ள, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை யாதவ வகுப்பினருக்கு எதிராக  திரட்டுகின்ற முயற்சியை தேர்தல் உத்தியை பாஜக முன் னெடுத்து வருகிறது.

குழுவின் அறிக்கை இன்னமும் வெளி யிடப்படவில்லை. சட்டமன்றத்திலும் வைக்கப் படவில்லை. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலேயே அரசிடம் அளிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில்,  கசிந்துள்ள குழுவின் அறிக்கை தகவலின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகின்ற 27 விழுக் காட்டை 3 பிரிவுகளாக வகைப்படுத்தி, பிற் படுத்தப்பட்டவர்களுக்கு  7 விழுக்காடு, அதிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 11 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 விழுக்காடு என்று பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் 79 ஜாதிப்பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக  9 ஜாதிகளும், அதிக (more) பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக 37 ஜாதிகளும், மிகவும் (most) பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக 33 ஜாதிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 7 விழுக்காடு அளிக் கப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனும் பிரிவில் யாதவ, குர்மி மற்றும் ஜாட்  ஜாதிப்பிரிவுகள் உள்ளன. இந்த ஜாதிகள் அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் கலாச் சார ரீதியில் வலிமையாகவும் அரசுப் பணிகளில் அவர்களுடையவிகிதாச்சாரத்தைவிடகூடுத லாகவாய்ப்புகள்பெற்றுள்ளதாகவும்அரசியல் பிரதிநிதித்துவத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாக வும் குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், சமூக ரீதியில் ஒடுக்கப்படவில்லை என்றும், அவர் களின் ஜாதியைச் சொல்லிக்கொள்வதில் பெரு மைப்படுபவர்களாக உள்ளனர் என்றும் குழுவின் 400 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜாதிவாரியாக 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்


குர்ஜார், குஷ்வாகா, மவுரியா, சாக்யா, பிரஜாபதி, கதேரியா பால், பாகெல், சாகு, கும்கார், தெலி மற்றும் லோத் உள்ளிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக குழு வகைப்படுத்தியுள்ளது. மேலும் இவ்வகுப்பினர் கலாச்சார ரீதியில் புறக்கணிப்புக்கு ஆளாகவில்லை என்றும், அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் பின்னடைவில் உள்ளதுடன், அவர்களின் விகிதாச்சாரப்படி பாதியளவில்கூட பணி வாய்ப்புகள் பெறவில்லை என்றும்  குழுவின் அறிக்கை கூறியுள்ளது. அவர்களில் குறிப்பிட்ட ஜாதியினர் அதிக பணி வாய்ப்புகளை பிற ஜாதியினருடன் ஒப்பிடுகையில், கூடுதலாகப் பெற்றிருக்கிறார்கள். அதன்மூலம் புதிய நடுத்தர வகுப்பு உருவாவதற்கு இடம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை குறிப்பிட்டள்ளது.

மூன்றாவது வகையினராக, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக உள்ளனர். மிகவும் வாய்ப்புகளைப் பெறாதவர்களாகவும், அனைத்து நிலைகளிலும் பெரும்பாலும் கீழ்நிலைகளில் குரூப் 3, குரூப்  4 பிரிவுக்கான பணியிடங்களில் மட்டுமே பெற்றுள்ளதுடன், அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில் உள்ளனர். அரசியல்ரீதியிலான அதிகாரங்களில் குறைவாக உள்ளனர். மல்லா, நிஷாத், கேவாட், காஷ்யப் மற்றும் காகர்  ஆகிய ஜாதிகள் இடம்பெற்றுள்ளன. பிந்த், ராஜ்பர், பார், லோனியா, சவ்கான், தீவார் மற்றும் கோஷி ஆகிய ஜாதிப்பிரிவுகள் மூன்றாவது வகைப்பாட்டில் உள்ளடக்கப்படவில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்ட ணியிலுள்ள அமைப்பாகிய சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் கோரிக்கையின்படி, அம்மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத் இடஒதுக்கீடு அளிக்கப்படுகின்ற பிற்படுத்தப்பட்டவர்களை வகைப்படுத்துவதற்காக குழுவை அமைத்தார்.

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலை வரும், உத்தரப்பிரதேச மாநில அமைச்சருமாகிய ஓம் பிரகாஷ் ராஜ்பர் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும்வரை போராட்டத்தை நடத்துவோம் என்கிறார்.

அவர் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக் கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரு டைய கட்சியின் சார்பில் 24.12.2018 அன்று மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தக்கோரி பரப்புரை நடை பெறுகிறது.

அகிலேஷ் கண்டனம்


மேனாள்முதல்வர் அகிலேஷ் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களை  தொடர்ச்சியாக சந்தித்து, ஒருங்கிணைத்து வருகிறார். 85 விழுக்காட்டினரை தவறாக வழிநடத்தக்கூடிய சதி என்று மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகளிலும் பாஜக தோல்வி அடைந்துவிட்டது. தற்பொழுது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது. பாஜக  பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மட்டுமே பேசி வருகிறது. அனைத்து வகுப்பினரின் எண்ணிக்கையையும் கணக் கெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். சப்கா சாத் சப்கா விகாஸ் என்று பாஜக கூறிவருகிறது.

அந்தந்த வகுப்பினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிக்கப்படுவதற்கும் உரிமைகள் பெறு வதற்கும் உரிமை உள்ளது. 2001ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் ஆட்சியில் இதேபோன்று அறிக்கை வெளியானது. அப்போதும் அவ்வறிக் கையின்மூலம்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை 3  வகையினராக பிரித்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 5 விழுக்காட்டினராக உள்ள யாதவ வகுப்பினரை தனித்து விட்டது. இப்போதும் அதுபோன்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவ்வறிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது ஏனென்றால், தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிடும். அதுமட்டுமன்றி நீதிமன்றத் தடையும் உள்ளது என்று செய்தி யாளர்களிடையே அகிலேஷ் தெரிவித்தார்.

- விடுதலை நாளேடு, 21.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக