பக்கங்கள்

திங்கள், 15 ஜூலை, 2019

வாரணாசி: பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 3 ஆவது மாநாடு

கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்கவேண்டும்!


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு




வாரணாசி, ஜூலை 15, உத்தரபிரதேசம் வாரணாசியில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு 13.7.2019 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நலசங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அமிர்தான்சு அனை வரையும் வரவேற்று குறிப்புரையையும் வழங்கினார்.

மாநாட்டில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி, அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் யூனியன் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தனது உரையில், சமுக நீதிக் களத்தில் தமிழகம் எத்தகைய முன் னேற்றம் அடைந்துள்ளது; தந்தை பெரியாரின் உழைப்பினாலும், போராட்டத்தாலும் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் உட்பட தற்போது 69 விழுக்காடு சட்டம் நிறைவேற்றியது வரை திராவிடர் இயக்கம், பெரியார் இயக்கம் செய்த மகத்தான சாதனைகளை, காணொ லியுடன் கோ.கருணாநிதி விரிவாக எடுத்துரைத்தார். வருகை தந்த அனைவரும் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.

தமிழர் தலைவர் எழுதிய நூல் அளிப்பு




சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுடன், திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியாரும் அம்பேத்கரும்'' எனும் ஆங்கில நூல் அளிக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரை முழு வதுமாக நிறைவேற்றப்பட வேண்டும், நீதித்துறை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு அரங்கத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சமுக நீதிக் காவலர் வி.பி.சிங், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரது கருத்துக்கள் பதாகைகளாக வைக்கப்பட்டன. தந்தை பெரியாரை முதன்மைப்படுத்தி, வட நாட்டில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற மாநாடு இது என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கை மனு


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலை வரிடம் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவின் சாராம்சம்




அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் சார்பில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வாரணாசிக்கு 13.7.2019 அன்று வருகை தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி அவர்களிடம், பிற்படுத்தப் பட்டோர் நலன் குறித்த கோரிக்கை மனுவினை, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அளித்தார்.

மண்டல் குழு பரிந்துரை முழு வதுமாக நிறைவேற்றப்பட்டு, பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீடு 52 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும்; கிரிமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும்; மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு; 2021- இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண் டும்; இணை செயலாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்படுவதில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் அந்தந்த மாநிலத்தில் உள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண் டும்; தமிழகத்தில் உள்ளது போல், இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற் றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கை கள் உள்ளடங்கிய மனு அளிக்கப் பட்டது.

- விடுதலை நாளேடு, 16.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக