பக்கங்கள்

சனி, 13 ஜூலை, 2019

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சந்தித்து கோரிக்கை மனு



சென்னை, ஜூலை 9- தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தலைவர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரசமைப்புப்படியான தகுதியும், அதிகாரமும், அரசமைப்புச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட பிறகு, அரசுப் பயணமாக முதன் முறையாக, ஆணையத்தின் தலைவர்கள் 8.7.2019 அன்று அய்தராபாத் வருகை தந்தனர். அய்தராபாத் லேக்வியூ தில்சுக் விருந் தினர் மாளிகையில் அரசு அதிகாரிக ளைச் சந்தித்த பின்னர், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் நிர் வாகிகளைச் சந்தித்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், தேசிய பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையத்தின் தலைவர் டாக்டர் பகவான் லால் ஷானி, துணைத்தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி, உறுப்பினர்கள் ஆசாரி தல்லோஜி, டாக்டர் சுதா யாதவ், ஷைலேந்திர சிங் பாடீல் ஆகியோர் ஆகியோரைச் சந் தித்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 52 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும், மண்டல் பரிந்துரையை முழுவதுமாக நிறைவேற்றி, பதவி உயர்வு, நீதித்துறை, தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும், பிற்படுத்தப்பட் டோர் நலனுக்காக தனியே பிற்படுத் தப்பட்டோர் துறை அமைக்க வேண்டும், கிரிமிலேயர் தொடர்பான நாடாளு மன்ற பிற்படுத்தப்பட்டோர் குழு அளித் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கிரிமிலேயர் முறையை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள ஓபிசி சான்றிதழ் பெறும் முறை சீரமைக்கப்பட வேண்டும், 2021இ-ல் சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய முக் கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப் பின் சார்பில் ஜெ.பார்த்தசாரதி, செயல் தலைவர், கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர், எஸ்.ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர், துணைத்தலைவர் கள் வி.தானாகர்னா சாரி, உ.சின்னையா, செயலாளர்கள் ஜி.ராம்ராஜ், ஜி.பாண்டு, ஆரோக்கிய ராஜ், பாங்க் ஆப் பரோடா, நாகேஷ்குமார், யூனியன் வங்கி, கணேஷ், காப்பீட்டுக் கழகம்,  மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆணையத்திற்கு அரசமைப்புப்படி யான தகுதியும், அதிகாரமும் அளிக் கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு புது தில்லியிலும், பல மாநிலங்களிலும் மாநாடுகள், கருத்தரங் கங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தி, வெற்றி பெற்றது என்பது குறிப் பிடத்தக்கது.

இவ்வாறு அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் -கோ.கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

-  விடுதலை நாளேடு, 9.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக